என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இருக்கிறது.
    • இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இரு எலெக்ட்ரிக் கார் விவரங்களை மெர்சிடிஸ் பென்ஸ் அறிவித்துள்ளது.

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் முற்றிலும் புதிய GLB மற்றும் EQB மாடல்களை டிசம்பர் 2 ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. மேலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களுக்கான முன்பதிவுகளும் துவங்கி நடைபெற்று வருகிறது. இவற்றுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. முன்பதிவு மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா வலைதளம் மற்றும் விற்பனை மையங்களில் நடைபெறுகிறது.

    MFA2 பிளாட்பார்மில் உருவாகி இருக்கும் புதிய GLB மாடல் அளவில் 4634mm நீளம், 1834mm அகலம், 1658mm உயரம், 2829mm வீல்பேஸ் கொண்டுள்ளது. புதிய பென்ஸ் EQB மாடல் அளவில் 4748mm நீளம், 1667mm உயரம் கொண்டிருக்கிறது. இதன் வீல்பேஸ் மற்றும் அகலம் அதன் ICE மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய பென்ஸ் GLB மற்றும் EQB மாடல்களில் ஏராளமான புது அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    இதில் எல்இடி ஹெட்லைட்கள், ரியர் லைட்கள், பானரோமிக் சன்ரூப், 10.25 இன்ச் டிரைவர் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் இன்போடெயின்மெண்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, மல்டி-ஜோன் டெம்ப்பரேச்சர் கண்ட்ரோல் உள்ளிட்டவை அடங்கும். இந்த இரு எலெக்ட்ரிக் கார் மாடல்களும் சில மேற்கத்திய சந்தைகளில் ஐந்து மற்றும் ஏழு இருக்கை அமைப்புகளில் கிடைக்கின்றன.

    சர்வதேச சந்தையில் பென்ஸ் GLB மாடல் ஏராளமான வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த கார் 1.3 லிட்டர், 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றின் செயல்திறன் நிச்சயம் வேறுபடும். எனினும், இவற்றின் சில வேரியண்ட்களில் ஆல்-வீல் டிரைவ் வசதி வழங்கப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • இந்திய வெளியீட்டுக்கு முன் இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தேனேசியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய எம்பிவி மாடல் இந்தியாவில் அறிமுகமாகும் முனஅ இந்தோனிசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய ஸ்பை படங்களில் உள்ள இன்னோவா மாடல் உற்பத்திக்கு தயார் நிலையில், இருப்பது போன்றே காட்சியளிக்கிறது. மேலும் இந்த கார் இன்னோவா செனிக்ஸ் ஹைப்ரிட் என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய சந்தையில் இதே கார் இன்னோவா ஹைகிராஸ் பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

    ஸ்பை படத்தில் இன்னோவா ஹைகிராஸ் மாடலின் முன்புறம் தெளிவாக காட்சியளிக்கிறது. இதில் ஹெக்சகோனல் கிரில், க்ரோம் அக்செண்ட்கள், மெல்லிய ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறை இன்னோவா மாடலில் ஆல்-எல்இடி லைட்டிங் வழங்கப்படலாம். தோற்றத்தில் இந்த கார் தற்போதைய மாடலை விட அதிக பிரம்மாண்டம் மற்றும் கம்பீரமாக காட்சியளிக்கிறது.

    இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பானரோமிக் சன்ரூப் கொண்டிருக்கும் என்றும் இந்த கார் அதிநவீன மோனோக் ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது டொயோட்டாவின் புது குளோபல் ஆர்கிடெக்ச்சரின் மற்றொரு வெர்ஷன் ஆகும்.

    புதிய ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் e-CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இதில் 2.0 லிட்டர் அல்லது 2.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் மற்றும் சிறிய பேட்டரி, எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும் என கூறப்படுகிறது. புதிய இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி மாடலில் ஆல் வீல் டிரைவ் வசதியும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

    Photo Courtesy: Kompas Otomotif

    • மாருதி சுசுகி நிறுவனம் தனது கார் மாடல்களுக்கு நவம்பர் மாதத்திற்கான சிறப்பு சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது.
    • பெட்ரோல், டீசல் மாடல்கள் மட்டுமின்றி மாருதி சுசுகி CNG கார்களுக்கும் இந்த முறை சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    மாருதி சுசுகி நிறுவனம் தனது அரினா மாடல்களுக்கு ரூ. 57 ஆயிரம் வரையிலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இவை தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ், மற்றும் கார்ப்பரேட் பலன்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. இந்த முறை ஆல்டோ K10, ஆல்டோ 800, செலரியோ, எஸ் பிரெஸ்ஸோ, வேகன் ஆர், டிசையர் மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    அந்த வகையில் மாருதி சுசுகி ஆல்டோ K10 மாடலை வாங்குவோருக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. ஆல்டோ K10 AMT வேரியண்ட்களுக்கு ரூ. 7 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி செலரியோ மாடலின் VXi மேனுவல் வேரியண்டிற்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. மேனுவல் வேரியண்ட்களான LXi, ZXi மற்றும் ZXi+ வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 41 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் CNG வேரியண்ட்களுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது.

    புதிய எஸ் பிரெஸ்ஸோ ஹேச்பேக் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 6 ஆயிரம் கார்ப்பரேட் பலன்கள், ரூ. 15 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இதன் AMT வேரியண்ட்களுக்கு ரூ. 46 ஆயிரமும், CNG வேரியண்ட்களுக்கு ரூ. 35 ஆயிரம் மதிப்பிலான பலன்கள் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி வேகன்ஆர் மாடல் மேனுவல் வேரியண்ட்களுக்கு ரூ. 41 ஆயிரம் வரையிலான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் AMT மாடலுக்கு ரூ. 21 ஆயிரமும், CNG வெர்ஷனுக்கு ரூ. 40 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. ஆல்டோ 800 வாங்குவோருக்கு ரூ. 36 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    மாருதி சுசுகி டிசையர் AMT மாடலை வாங்குவோருக்கு ரூ. 32 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். மேனுவல் டிரான்ஸ்மிஷன் வேரியண்ட்களை வாங்கும் போது ரூ. 17 ஆயிரத்திற்கான சலுகைகள் வழங்கப்படுகிறது. மாருதி சுசுகி ஸ்விப்ட் ஹேச்பேக் காரை வாங்கும் போது ரூ. 30 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    • கியா செல்டோஸ் பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் தனது காரில் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி வந்தார்.
    • பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத விரக்தியில் கோபமுற்ற வாடிக்கையாளர் தனது காரை தீ வைத்து எரித்தார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரை சேர்ந்த நபர் தனது கியா செல்டோஸ் காரை தீ வைத்து எரித்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கியா சர்வீஸ் தனக்கு திருப்திகரமாக இல்லை என்ற விரக்தியில் இருந்த நபர் கோபத்தில் இவ்வாறு செய்து இருக்கிறார். பின் கியா சர்வீஸ் செண்டர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் காரை எரித்த வாடிக்கையாளரை கைது செய்தனர்.

    கியா செல்டோஸ் காரை வாங்கி பயன்படுத்தி வந்த நபருக்கு கடந்த இரண்டு ஆண்டுகவாகவே காரின் என்ஜினில் குறைபாடு ஏற்பட்டு வந்ததாக அதன் வாடிக்கையாளர் குற்றம்சாட்டி வருகிறார். என்ஜின் குறைபாடை சரி செய்ய அந்த நபர் சர்வீஸ் செண்டர் சென்றுள்ளார். காரில் ஏற்படும் புகார்களை சர்வீஸ் செண்டர் மேலாளரிடம் தெரிவித்து இருக்கிறார். பின் சர்வீஸ் செய்யும் ஊழியர், மேலாளர் மற்றும் வாடிக்கையாளர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    வாக்குவாதம் முற்றியதில் கோபமுற்ற வாடிக்கையாளர் தான் எடுத்து வந்த பெட்ரோல் கேனை திறந்து, தனது கியா செல்டோஸ் முழுக்க ஊற்றினார். கார் சர்வீஸ் செண்டரின் உள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையிலேயே அவர் தனது காருக்கு தீ வைத்து எரித்தார். தீ வைத்ததும் கார் முழுக்க தீ மளமளவென பரவியது. இதைத் தொடர்ந்த கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயணைப்பானை எடுத்து வந்து தீயை கட்டுப்படுத்தினார்.

    கியா சர்வீஸ் செண்டர் ஊழியர் தீயை கட்டுக்குள் கொண்டுவரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக கியா சர்வீஸ் செண்டர் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காரை தீ வைத்து எரித்த வாடிக்கையாளர் மற்றும் அவருடன் வந்த மற்றொரு நபரை காவல் துறையினர் கைது செய்தனர். பின் கைது செய்யப்பட்டவர்கள் பினையில் விடுதலை செய்யப்பட்டனர்.

    • ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகளை அறிவித்துள்ளது.
    • புது சலுகைகள் கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

    ஜப்பான் நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ஹோண்டா நவம்பர் மாதத்திற்கான சலுகை விவரங்களை அறிவித்து இருக்கிறது. கார் மாடல், வேரியண்ட் மற்றும் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வேறுபடும். புதிய சலுகைகள் நவம்பர் 30 ஆம் தேதி வரை பொருந்தும்.

    நவம்பர் மாத சலுகைகளை பொருத்தவரை ஹோண்டா WR-V மாடலுக்கு அதிகபட்ச பலன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஹோண்டா WR-V வாங்குவோர் ரூ. 63 ஆயிரத்து 144 வரையிலான பலன்களை பெறலாம். இதில் ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 36 ஆயிரத்து 144 மதிப்புள்ள இலவச அக்சஸரீக்கள், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, கூடுதலாக ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா சிட்டி 5th Gen மாடலுக்கு ரூ. 59 ஆயிரத்து 292 வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதன் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 32 ஆயிரத்து 292 மதிப்புள்ள இலவச அக்ச்ஸரீக்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் வழங்கப்படுகிறது. இதுதவிர ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    இதன் பெட்ரோல் சிவிடி மாடலுக்கு ரூ. 20 ஆயிரம் எக்சேன்ஜ் சள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ், பழைய கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 7 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா ஜாஸ் மாடலை வாங்கும் போது ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் கார் எக்சேன்ஜ் செய்யும் போது ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 7 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ், ரூ. 3 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது.

    ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி அல்லது ரூ. 11 ஆயிரத்து 896 மதிப்பிலான அக்சஸரீக்கள், ரூ. 5 ஆயிரம் லாயல்டி போனஸ் மற்றும் ரூ. 3 ஆயிரம் மதிப்பிலான கார்ப்பரேட் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா சிட்டி 4th Gen வாங்கும் போது ரூ. 5 ஆயிரம் லாயல்டி பலன்கள் மட்டும் வழங்கப்படுகிறது. இதுதவிர வேறு எந்த பலன்களும் இந்த மாடலுக்கு வழங்கப்படவில்லை.

    • ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் புது மைக்ரோ எஸ்யுவி மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    • புது மைக்ரோ எஸ்யுவி ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஹூண்டாய் ஹேச்பேக் மாடலை தழுவி உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    டாடா பன்ச் மைக்ரோ எஸ்யுவி-க்கு போட்டியை ஏற்படுத்தும் புது காரை ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி மாடல் 2023 வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இந்த கார் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் உருவாக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதன் வெளியீடு அடுத்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம்.

    ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மில் சப்-4 மீட்டர் காம்பேக்ட் கார்களான கிராண்ட் ஐ10 நியோஸ் ஹேச்பேக் மற்றும் ஆரா காம்பேக்ட் செடான் மாடல்கள் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் கிராண்ட் ஐ10 பிளாட்பார்மை பயன்படுத்தும் மூன்றாவது கார் மாடல் என்ற பெருமையை பெறும். இந்த கார் Ai3 எனும் குறியீட்டு பெயரில் உருவாக்கப்பட்டு வருகிறது.

    புதிய மைக்ரோ எஸ்யுவி மாடல் காம்பேக்ட் யுடிலிட்டி வாகனமாக நிலை நிறுத்தப்படும். இது எஸ்யுவி பிரிவில் குறைந்த விலை மாடலாக இருக்கும். பட்ச் ஸ்டைலிங் மற்றும் அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்டவை ஹூண்டாய் மைக்ரோ எஸ்யுவி காரின் முக்கிய அம்சங்களாக இருக்கும். தோற்றத்தில் இந்தகார் கேஸ்பர் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    புதிய கேஸ்பர் மாடலை ஹூண்டாய் நிறுவனம் சர்வதேச சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஹூண்டாய் நிறுவனத்தின் குறைந்த விலை எஸ்யுவி மாடலாக புதிய மைக்ரோ எஸ்யுவி இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இதே என்ஜின் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஆரா மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய இன்னோவா கார் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
    • புது இன்னோவா மாடலில் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

    டொயோட்டா நிறுவனம் முற்றிலும் புது இன்னோவா ஹைகிராஸ் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்கிறது. இதனை டொயோட்டா அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்த (நவம்பர்) மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கிறது.

    இந்திய வெளியீட்டுக்கு முன் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாக்கப்பட்டு இருக்கும் இன்னோவா ஹைகிராஸ் மாடல் பெட்ரோல் ஹைப்ரிட் பவர்டிரெயின் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

    முந்தைய பாடி ஆன் லேடர் ஆர்கிடெக்ச்சருக்கு மாற்றாக புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் மோனோக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. இதில் முன்புற டிரைவ் வசதி கொண்ட ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் ஏற்கனவே இன்னோவா டீசல் என்ஜின் கொண்ட வேரியண்ட் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த வகையில், டீசல் என்ஜினுக்கு மாற்றாக 2.0 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் ஹெக்சகோனல் முன்புற கிரில், மெல்லிய எல்இடி ஹெட்லேம்ப்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட எல்இடி டிஆர்எல்கள் வழங்கப்படுகின்றன. இத்துடன் முன்புறம் மற்றும் பின்புற பம்ப்பர்கள், அலாய் வீல்கள் ரி-டிசைன் செய்யப்பட்டு இருக்கும் என தெரிகிறது. மேலும் பானரோமிக் சன்ரூப் இந்த எம்பிவி மாடலில் முதல் முறையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    புதிய ஹைகிராஸ் மாடலின் இண்டீரியர் பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. எனினும், இது தற்போது விற்பனை செய்யப்படும் மாடலை விட மேம்பட்ட அம்சங்கள் மற்றும் வசதிகளை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதில் பெரிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜிங் பேட், வெண்டிலேட் செய்யப்பட்ட முன்புற இருக்கைகள் வழங்கப்படலாம்.

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது CNG மாடல்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருகிறது.
    • மாருதி சுசுகி செலரியோ, வேகன் ஆர் மற்றும் இக்னிஸ் மாடல்களை ரிகால் செய்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனம் வேகன்ஆர், செலரியோ, இக்னிஸ் கார்களின் 9 ஆயிரத்து 925 யூனிட்களை ரிகால் செய்வதாக அறிவித்து இருக்கிறது. ஆகஸ்ட் 3, 2022 முதல் செப்டம்பர் 1, 2022 வரையிலான காலக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட யூனிட்கள் ரிகால் செய்யப்படுகின்றன.

    ரிகால் செய்யப்படும் கார்களின் ரியர் பிரேக் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அசெம்ப்லி பின் உடைந்து, வித்தியாசமான சத்தம் எழுவதற்கான வாய்ப்புகள் அதிகம் ஆகும். வேகன்ஆர் மற்றும் செலரியோ மாடல்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார்கள் ஆகும். இக்னிஸ் மாடல் மட்டும் நெக்சா பிராண்டிங்கில் விற்பனை செய்யப்படுகிறது.

    "ரியர் அசெம்ப்லி பின் பாகத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தவறும் பட்சத்தில் அசெம்ப்லி பின் உடைந்து வித்தியாசமான சத்தம் எழ வாய்ப்புகள் உண்டு. நாளடைவில் காரின் பிரேக்கிங் திறன் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் அதிகம் ஆகும். வாடிக்கையாளர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, நிறுவனம் சார்பில் பாதிக்கப்பட்ட யூனிட்களை ரிகால் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பாதிக்கப்பட்ட கார்கள் ரிகால் செய்யப்பட்டு இலவசமாக சரி செய்யப்படும்," என மாருதி சுசுகி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    ரிகால் செய்யப்படும் கார்களில் புதிதாக வழங்க மாற்று பாகங்கள் தயாராகி வருகின்றன. அதிகாரப்பூர்வ விற்பனை மையங்கள் சார்பில் பாதிக்கப்பட்ட கார்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளப்படுவர். அதன் பின் கார் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, பிரச்சினைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக சரி செய்யப்படும்.

    • கேடிஎம் நிறுவனம் தனது 1290 சூப்பர் டியூக் மாடலை அப்டேட் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் நேக்கட் ஸ்டிரீட் மோட்டார்சைக்கிள் மாடல் ஆகும்.

    கேடிஎம் நிறுவனம் 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இது கேடிஎம் நிறுவனத்தின் பிளாக்‌ஷிப் நேக்கட் ஸ்டிரீட் பைக் ஆகும். இந்த ஆண்டு மே மாதம் முதல் 1290 சூப்பர் டியூக் மாடல் டெஸ்டிங் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், 2023 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் மாடலின் புது ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. முந்தைய ஸ்பை படங்களை போன்றே, தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களிலும் புது பைக்கின் டிசைன் தெளிவாக தெரிகிறது. வழக்கமான ஹெட்லேம்ப் மற்றும் கிளாஸ் ஸ்கிரீனுக்கு பதில் இந்த மோட்டார்சைக்கிளில் ஆங்குலர் காண்டர் செய்யப்பட்ட முன்புற கௌல், எல்இடி ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு உள்ளது.

    இதன் பியூவல் டேன்க் பகுதியில் கூர்மையான மற்றும் மஸ்குலர் எக்ஸ்டென்ஷன்கள் உள்ளன. இந்த பைக்கின் பின்புறமும் அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது. இந்த மாற்றங்கள் மட்டுமின்றி தொழில்நுட்ப ரீதியில் அதிக அம்சங்களை புதிய 1290 சூப்பர் டியூக் பெறும் என கூறப்படுகிறது. புதிய சூப்பர் டியூக் மாடலின் என்ஜின் கேசிங்கில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    டெஸ்டிங் செய்யப்படும் யூனிட்களில் எக்சாஸ்ட் ஹெடரில் சென்சார்கள் பொருத்தப்பட்டு இருந்தன. இதன் காரணமாக 1308சிசி, LC8, வி ட்வின் என்ஜினில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் என எதிர்பார்க்கலாம். 2023 கேடிஎம் சூப்பர் டியூக் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    Photo Courtesy: carspymedia

    • இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • தீபாவளி பண்டிகையை மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு உண்டு கொண்டாடினர்.

    தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பது வழக்கமான காரியம் தான். சில தினங்களுக்கு முன் இந்தியாவில் தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், ஆமதாபாத்தில் இளைஞர்கள் வித்தியாசமாக பட்டாசு வெடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து காவல் துறை இந்த சம்பவத்திற்கு என்ன செய்தது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    சமூக வலைதளங்களில் வைரல் ஆன வீடியோவில் இளைஞர்கள் ஓடிக் கொண்டிருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு வானில் வெடிக்கும் பட்டாசுகளை வெடிக்கும் பரபர காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. இது தவிர காரின் பக்கவாட்டு பகுதியில் ஜன்னலின் வெளியில் தொங்கிக் கொண்டு செல்கின்றனர்.

    வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து ஆமதாபாத் காவல் துறை ஆபத்தான முறையில் நடந்து கொண்ட இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சட்டப்படி அவர்களை கைது செய்யவில்லை என்ற போதிலும், தவறு செய்த இளைஞர்களை பொது வெளியில் தோப்புக்கரணம் போட செய்தனர். மேலும் இளைஞர்கள் தோப்புக்கரணம் போடும் வீடியோ ஆமதாபாத் காவல் துறை ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    பட்டாசுகள் சரியாக கையாளப்படவில்லை எனில் வெடி விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் அபாயகரமானவை ஆகும். இவற்றை கொண்டு சாகசம் செய்வது தீ விபத்தை ஏற்படுத்துவதற்கு சமம் ஆகும். முன்னதாக பட்டாசு வெடித்து பலமுறை தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளன.

    • உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.
    • முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த துவங்கியுள்ளன.

    ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனம் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. எனினும், இந்த மோட்டார்சைக்கிள் அறிமுகமாக பல ஆண்டுகள் ஆகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்து தற்போது வெளியான தகவல்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருவதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    மேலும் ஆரம்பகட்ட எலெக்ட்ரிக் வாகன ப்ரோடோடைப் மாடல்களை இந்தியாவில் சோதனை செய்ய ராயல் என்பீல்டு துவங்கி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலகளவிலும் இந்த எலெக்ட்ரிக் ப்ரோடோடைப் மாடல் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனை துவங்கி உள்ள நிலையில், தற்போது விற்பனை செய்து வரும் சில மாடல்களின் எலெக்ட்ரிக் வெர்ஷனை ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    எலெக்ட்ரிக் வாகன பிரிவில் கடந்த ஆறு முதல் எட்டு மாத காலமாக முதலீடு செய்து வருவதாக ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது. இதற்காக ப்ரிட்டன் மற்றும் இந்தியாவில் இருந்து புது திறமையாளர்களை பணியில் சேர்த்து இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை முழுமையாக அறிந்து கொள்ளும் முன் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் விரைவில் அறிமுகம் செய்யப்பட மாட்டாது என ராயல் என்பீல்டு தெரிவித்து இருக்கிறது.

    இந்திய சந்தையில் எண்ட்ரி லெவல் பிரிவில் எந்த மாடல்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்யவில்லை. அந்த வகையில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் களமிங்கும் இந்திய நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு இணைய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொருத்தவரை ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக வாடிக்கையாளர்களை கவரும் மாடல்களை எதிர்பார்க்கிறது. எனினும், ராயல் என்பீல்டு இந்த பிரிவில் எந்த மாடலையும் கொண்டிருக்கவில்லை.

    • சமீப காலங்களில் வாகனம் வாங்க காயின் மூலம் பணம் செலுத்தும் வழக்கம் வைரலாகி வருகிறது.
    • இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பலமடங்கு அதிகரித்தாலும், ஆங்காங்கே இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன.

    இந்தியாவில் யுபிஐ மூலம் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் ஒவ்வொரு நாளும் பலமடங்கு அதிகரித்து வருகிறது. இளம் தலைமுறையினர் பரவலாக இந்த முறையில் பரிவர்த்தனை செய்து வரும் நிலையில், முதியவர்கள் தொடர்ந்து ரொக்கம் மற்றும் சில்லறை காயின்களை பயன்படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில், நபர் ஒருவர் தான் விரும்பிய ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை முழுக்க ரூ. 10 காயின்களாக கொடுத்து இருக்கிறார். ருத்ராபூரை சேர்ந்த நபர் முற்றிலும் புதிய டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரை வாங்க ரூ. 50 ஆயிரம் தொகையை 5 ஆயிரம் ரூ. 10 காயின்களாக கொடுத்து பணம் செலுத்தி இருக்கிறார். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

    பெரிய தொகையை காயின்களாக கொடுக்கும் முறை ஏற்கனவே சிலர் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக காயின்களை மூட்டை மற்றும் பெட்டிகளில் எடுத்து வந்து செலுத்திய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காயின் மூலம் பணம் செலுத்துவது சட்டப்பூர்வமான ஒன்று தான் என்ற போதிலும், காயின்களை முழுமையாக எண்ணி முடிக்க அதிக நேரம் ஆகும். இதன் காரணமாக அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை காயின்களாக செலுத்த டீலர்கள் வரையறை வைத்துள்ளனர்.

    இந்தியாவில் டிவிஎஸ் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் விலை ரூ. 69 ஆயிரத்து 900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 85 ஆயிரத்து 246 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த நபர் ஜூப்பிட்டர் ஸ்கூட்டரின் எந்த வேரியண்டை தேர்வு செய்தார் என்ற தகவல் மர்மமாகவே உள்ளது.

    ×