என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    • ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முற்றிலும் புதிய 650 சீரிஸ் மோட்டார்சைக்கிள் விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
    • புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலின் வெளியீடு அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது.

    ராயல் என்பீல்டு நிறுவனம் தனது சூப்பர் மீடியோர் 650 மோட்டார்சைக்கிளை 2022 ரைடர் மேனியா நிகழ்வில் காட்சிப்படுத்தி இருந்தது. ரைடர் மேனியாவில் இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. மற்றவர்கள் இந்த மோட்டார்சைக்கிளை அடுத்த மாதத்தில் இருந்து முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    எனினும், புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீடியோர் 650 மாடலின் விலை விவரங்கள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய சூப்பர் மீடியோர் 650 மாடலின் வினியோகம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் துவங்கும் என கூறப்படுகிறது. டெலிவரி பற்றிய தகவல்கள் முன்பதிவு செய்யும் போது தெரிவிக்கப்படுகிறது.

    சூப்பர் மீடியோர் 650 மாடலில் 649சிசி பேரலல் ட்வின் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் கொண்ட மூன்றாவது மாடலாக சூப்பர் மீடியோர் 650 அறிமுகமாகி இருக்கிறது. இந்த குரூயிசர் மோட்டார்சைக்கிள் இண்டர்செப்டார் மாடலின் மேல் நிலை நிறுத்தப்படுகிறது. அந்த வகையில் இதன் விலையும் சற்று அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய தகவல்களின் படி சூப்பர் மீடியோர் 650 விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 30 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த மாடல் ஏராளமான அக்சஸரீக்களை கொண்டிருக்கிறது. 

    • இந்தியாவில் எலெக்ட்ரிக் வலாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் பலமுறை அரங்கேறி இருக்கின்றன.
    • தற்போது டாடா கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது தீப்பிடித்து எரிந்துள்ளது.

    வாகனம் அதன் ஸ்டாக் கண்டிஷனில் இருக்கும் போது தீப்பிடித்து எரிவது மிகவும் துயரமான சம்பவமாகவே இருக்கும். அந்த வகையில் குஜராத் மாநிலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டாடா ஹேரியர் கார் மாடல் தீப்பிடித்து எரிந்துள்ளது. கார் சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்க்பப்ட்டு இருந்த போது, தானாக தீப்பிடித்து எரிந்துவிட்டது என கார் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார்.

    குனல் போகாரா என்ற நபர் கடந்த ஜூலை மாத வாக்கில் டாடா ஹேரியர் டாப் எண்ட் மாடலை வாங்கி இருக்கிறார். கார் வாங்கியதில் இருந்து எந்த விதமான மூன்றாம் தரப்பு அக்சஸரீக்களையும் தனது வாகனத்தில் இவர் பயன்படுத்தவில்லை. எனினும், கார் வாங்கிய சில மாதங்களில் அதன் பேட்டரி முழுக்க சார்ஜ் தீர்ந்து போயிருக்கிறது. இதனால் காரை அவர் அருகாமையில் உள்ள சர்வீஸ் செண்டரில் கொடுத்து, பேட்டரியை மாற்றி இருக்கிறார்.

    புதிய பேட்டரி மாற்றிய மூன்றாவது நாளில் மீண்டும் அதே பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. மீண்டும் டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ சர்வீஸ் செண்டரில் கார் சரிசெய்யப்பட்டது. பின் போகாரா தனது காரை சீராக பயன்படுத்தி வந்துள்ளார். சம்பவத்தன்று 15 கிலோமீட்டர்கள் காரில் சென்று வந்த போகாரா நள்ளிரவு 1.30 மணி அளவில் காரை சாலையின் ஓரத்தில் பார்க் செய்தார். பார்க் செய்யப்பட்ட 15 நிமிடங்களில் கார் தீப்பிடித்து எரிந்தது.

    அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தப்படி, காரின் உரிமையாளருக்கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த கார் உரிமையாளர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்து, அவரும் காரில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த முயற்சித்தார். தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு வருவதற்குள் காரில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இதில் கார் முழுக்க தீப்பிடித்து எரிந்து விட்டது.

    காரின் பொனெட்டில் தான் முதலில் தீப்பிடிக்க துவங்கியது என பாதுகாப்பு ஊழியர் தெரிவித்து இருக்கிறார். தனது காரில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்று டாடா மோட்டார்ஸ் விளக்கம் தர வேண்டும் என குனல் கோரிக்கை விடுத்துள்ளார்.

    Source: Cartoq

    • மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது Eeco மாடலை அப்டேட் செய்து இருக்கிறது.
    • 2022 மாருதி சுசுகி Eeco மாடல் ப்ரிஸ்க் புளூ எனும் புதிய நிறத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் புதிய Eeco மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய 2022 மாருதி சுசுகி Eeco மாடலின் விலை ரூ. 5 லட்சத்து 13 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த கார் பெட்ரோல் மற்றும் CNG வெர்ஷன்களில் கிடைக்கிறது. புதிய Eeco மாடலில் 1.2 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின், டூயல் ஜெட் மற்றும் டூயல் VVT தொழில்நுட்பத்தில் கிடைக்கிறது.

    இத்துடன் 2022 மாருதி சுசுகி Eeco மாடல் புதிதாக ப்ரிஸ்க் புளூ நிறத்தில் கிடைக்கிறது. பெட்ரோல் ஆப்ஷனில் இந்த கார் 80 ஹெச்பி பவர், 104.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இதே என்ஜின் CNG மோடில் 71 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் வேரியண்ட் லிட்டருக்கு 20.2 கிலோமீட்டரும், CNG வேரியண்ட் லிட்டருக்கு 27.05 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை 2022 மாருதி சுசுகி Eeco மாடலில் புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், ஏர் பியூரிஃபயர், ரிக்லைனிங் முன்புற இருக்கைகள், புதிய ஸ்டீரிங் வீல், மேனுவல் ஏசி-க்கு ரோடரி கண்ட்ரோல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாதுகாப்பு பிரிவில் இந்த கார் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், இலுமினேட் செய்யப்பட்ட ஹசார்டு ஸ்விட்ச், சைல்டு லாக் வழங்கப்பட்டுள்ளது.

    விலை விவரங்கள்:

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 5 லட்சத்து 13 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 7-சீட்டர் ஸ்டாண்டர்டு மாடல் விலை ரூ. 5 லட்சத்து 42 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஏசி மாடல் விலை ரூ. 5 லட்சத்து 49 ஆயிரம்

    மாருதி சுசுகி Eeco 5-சீட்டர் ஏசி CNG மாடல் விலை ரூ. 6 லட்சத்து 44 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் தார் எஸ்யுவி மாடல் அதன் ஆஃப் ரோடிங் அம்சங்களுக்கு பெயர் பெற்ற கார் ஆகும்.
    • அதிக மாற்றங்கள் கொண்ட புதிய தார் மாடலை மஹிந்திரா சமீபத்தில் அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா நிறுவனத்தின் தார் மாடலை வாங்கி பயன்படுத்தி வந்த நபர் ஆறு மாதங்கள் சிறை தண்டனைக்கு ஆளாகி இருக்கிறார். காஷ்மீரை சேர்ந்த ஆதில் ஃபரூக் பட் என்ற நபர் தனது தார் மாடலை சட்டவிரோதமாக மாடிஃபை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆதில் ஃபரூக் பட்-க்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து ஸ்ரீநகர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

    இதோடு தார் மாடலில் மேற்கொள்ளப்பட்டு இருந்த மாடிஃபிகேஷன்கள் அனைத்தையும் திரும்ப பெறவும், காரின் முந்தைய நிலைக்கே அதனை மீண்டும் மாற்ற சம்பந்தப்பட்ட போக்குவரத்து அலுவலகங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்படும் வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் கூடுதல் இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இதையடுத்து மாநிலம் முழுக்க சட்டவிரோதமாக மாடிஃபை செய்யப்பட்டு இருக்கும் வாகனங்களை பிடிக்க காவல் துறை சார்பில் புதிதாக செக்போஸ்ட்கள் அமைக்கப்பட உள்ளன. சட்டவிரோதமாக கார் மாடிஃபை செய்த ஆதில் ஃபரூக் பட் கைதாவதை தவிர்க்க ரூ. 2 லட்சத்திற்கு பிராமண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். பின் இரண்டு ஆண்டுகளுக்கு எந்த விதமான சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

    இரண்டு ஆண்டுகள் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடாமல் நன்னடத்தையை நிரூபிக்கும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் பட் மீது பதியப்பட்ட வழக்கு முழுமையாக ரத்து செய்யப்படும். எதிர்காலத்தில் ஏதேனும் தவறு செய்யும் பட்சத்தில் ஆதில் ஃபரூக் கைது நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

    • லேண்ட் ரோவர் நிறுவனத்தின் புதிய ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் கிராஷ் டெஸ்ட் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
    • தற்போது இரு கார்களின் கிராஷ் டெஸ்ட் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன.

    லேண்ட் ரோவர் நிறுவனத்தின் ரேன்ஜ் ரோவர் மற்றும் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல்கள் யூரோ NCAP கிராஷ் டெஸ்டில் ஐந்து நட்சத்திர குறியீடுகளை பெற்று அசத்தியுள்ளன. கிராஷ் டெஸ்டில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 16 கார்களில் ஒரு காரும் ஐந்து நடசத்திர குறியீடுகளை பெறவில்லை.

    ரேன்ஜ் ரோவர் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் 84 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.1 புள்ளிகளையும், சிறியவர்கள் பயணிக்கும் போது 87 சதவீத புள்ளிகளையும் பெற்றது. இதில் 49-க்கு 43 புள்ளிகளை பெற்றது. பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீதம் பெற்றது. இதில் 16-க்கு 13.2 புள்ளிகள் வழங்கப்பட்டன. 2022 ரேன்ஜ் ரோவர் மாடல் ஆபத்தான சாலைகளில் 72 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 54-க்கு 39.1 புள்ளிகளை பெற்றது.

    யூரோ NCAP டெஸ்டில் கலந்து கொண்ட ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் பெரியவர்கள் பயணிக்கும் போது 85 சதவீத புள்ளிகளை பெற்றது. இதில் 38-க்கு 32.4 புள்ளிகளை பெற்றது. சிறுவர்கள் பயணிக்கும் போது நடத்தப்பட்ட டெஸ்டிங்கிலும் 85 சதவீத புள்ளிகளை பெற்றுள்ளது. இதில் 49-க்கு 42 புள்ளிகளை பெற்றுள்ளது.

    காரில் உள்ள பாதுகாப்பு சிஸ்டம்களை பொருத்தவரை 82 சதவீத புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில் 16-க்கு 13.2 புள்ளிகளை ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் பெற்றது. ஆபத்தான சாலைகளில் பயணிக்கும் போது நடத்தப்பட்ட சோதனையில் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மாடல் 69 சதவீத புள்ளிகளை பெற்று இருக்கிறது. இதில் 54-க்கு 37.5 புள்ளிகளை பெற்றுள்ளது.

    • இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வாகனங்கள் மீது தனி பிரியம் கொண்டவர்.
    • தனது இல்லத்தில் ஏராளமான பைக் மற்றும் கார்களை வாங்கி கரேஜ் ஒன்றை எம்எஸ் தோனி வைத்திருக்கிறார்.

    இந்திய கிரிக்கெட் அணி வீரர்களில் கார் மற்றும் பைக் மீது அதீத மோகம் கொண்டவர் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. உலக கிரிக்கெட்டில் ஏராளமான சாதனைகளுக்கு பெயர் பெற்ற எம்எஸ் தோனி தனது வீட்டில் ஏராளமான பழைய மற்றும் அதிநவீன கார், பைக் வாங்கி சேகரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இந்த வரிசையில், எம்எஸ் தோனி கரேஜில் புதுவரவு வாகனமாக கியா EV6 சேர்ந்து இருக்கிறது. இது எம்எஸ் தோனி வாங்கி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் வாகனம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கும் வீடியோவில், எம்எஸ் தோனி கியா EV6 மாடலில் கிரிக்கெட் வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோருடன் அமரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    கிரெ நிறம் கொண்ட கியா EV6 மாடல் முற்றிலும் புதிதாக காட்சியளிப்பதோடு, தற்காலிக பதிவு எண் கொண்டிருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கியா EV6 விலை உயர்ந்த முழுமையான எலெக்ட்ரிக் வாகனம் ஆகும். இந்த கார் சிபியு முறையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது. மேலும் கியா EV6 மாடல் குறுகிய எண்ணிக்கையிலேயே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து கியா EV6 மாடல் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதன் காரணமாக காரின் எண்ணிக்கையை அதிகப்படுத்த கியா இந்தியா முடிவு செய்துள்ளது. இதுவரை இந்திய சந்தையில் மட்டும் சுமார் 200-க்கும் அதிகமான கியா EV6 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

    இந்திய சந்தையில் கியா EV6 விலை ரூ. 59 லட்சத்து 95 ஆயிரம் என துவங்குகிறது. இதில் 2 வீல் டிரைவ் வசதி, முன்புறம் மவுண்ட் செய்யப்பட்ட ஒற்றை மோட்டார் உள்ளது. இது 229 ஹெச்பி பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதே கார் வெவ்வேறு பேட்டரி மற்றும் சார்ஜிங் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    • மஹிந்திரா நிறுவனத்தின் XUV400 எலெக்ட்ரிக் கார் உற்பத்தி பற்றிய புது தகவல் வெளியாகி உள்ளது.
    • இந்திய சந்தையில் மஹிந்திரா XUV400 மாடல் சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது.

    மஹிந்திரா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல்- XUV400-ஐ இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மஹிந்திரா XUV400 மாடலின் உற்பத்தி அடுத்த மாதம் துவங்கும் என அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. மேலும் இந்த காருக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவு மற்றும் வினியோகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்கும் என மஹிந்திரா அறிவித்துள்ளது.

    புதிய மஹிந்திரா XUV400 மாடலில் 39.4 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் 150 ஹெச்பி பவர், 310 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த காருடன் 50 கிலோவாட், 7.2 கிலோவாட் AC மற்றும் 3.3 கிலோவாட் AC சார்ஜர்கள் வழங்கப்படுகின்றன.

    ஸ்டைலிங்கை பொருத்தவரை புதிய மஹிந்திரா XUV400 மாடல் தோற்றத்தில் XUV300 போன்றே காட்சியளிக்கிறது. இதில் பிளான்க்டு-அவுட் முன்புற கிரில், புதிய 15 இன்ச் அலாய் வீல்கள், ஸ்மோக்டு எல்இடி டெயில் லைட்கள், டூயல் டோன் நிற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

    மஹிந்திரா XUV400 மாடலில் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், கலர்டு MID, எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் ராப் செய்யப்பட்ட ஸ்டீரிங் வீல், லெதர் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரின் விலை டாடா நெக்சான் EV மேக்ஸ் மற்றும் எம்ஜி இசட்எஸ் EV போன்ற மாடல்களுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படலாம்.

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
    • அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறும் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் எம்ஜி காம்பேக்ட் EV அறிமுகம் செய்யப்படலாம்.

    எம்ஜி நிறுவனம் ஏர் EV மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக சமீபத்தில் தான் அறிவித்தது. இந்த நிலையில், புதிய எம்ஜி ஏர் EV மாடல் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஸ்பை படங்களை மோட்டார்பீம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    புதிய ஏர் EV மாடல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெற இருக்கும் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய சந்தையில் எம்ஜி நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் வாகனமாக இருக்கும் என தெரிகிறது. தற்போது இதே மாடல் வுலிங் ஏர் EV பெயரில் இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்தியாவில் சோதனை செய்யப்படும் மாடலின் தோற்றம் அதன் இந்தோனேசிய வேரியண்ட் போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் மாற்றம் செய்யப்படும் என தெரிகிறது. இந்த சிறிய EV மாடலின் வீல்பேஸ் 2010mm ஆகும். இந்த காரின் நீளம் 2.9 மீட்டர்கள் ஆகும். இதில் 20 கிலோவாட் ஹவர் முதல் 25 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்படலாம்.

    எம்ஜி ஏர் EV மாடல் முழு சார்ஜ் செய்தால் 150 முதல் 200 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இதன் முன்புற வீல் டிரைவ் கொண்ட மாடல் 40 ஹெச்பி எலெக்ட்ரிக் பவர்டிரெயின் மற்றும் ஒற்றை மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் பேட்டரி பேக் டாடா ஆட்டோகாம்ப் வழங்கும் என கூறப்படுகிறது.

    இரண்டு கதவுகள் கொண்ட எம்ஜி ஏர் EV மாடலில் நான்கு பேர் அமரும் இருக்கை அமைப்பு வழங்கப்படுகிறது. இதன் டேஷ்போர்டில் டூயல் 10.25 இன்ச் ஸ்கிரீன்கள் உள்ளன. இவற்றில் ஒன்று இன்போடெயின்மெண்ட் சிஸ்டமாகவும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் போன்றும் செயல்படுகின்றன.

    இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஏர் EV மாடலின் விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. நகர பயன்பாட்டுக்காக புது கார் வாங்குவோரை குறிவைத்து இந்த கார் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் வர்த்தக பிரிவிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Photo Courtesy: MotorBeam

    • ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பெயரில் மோசடி செய்த வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து ஏராளமான மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் களமிறங்கியதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் ஒலா எலெக்ட்ரிகி நிறுவனம் சிக்கித் தவிக்கிறது. வாகன முன்பதிவில் துவங்கி, வாகனங்களில் தீப்பிடித்து எரிந்த சம்பவங்கள் என ஒலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை சுற்றி பரபரப்பு தகவல்கள் அடிக்கடி வெளியாகி வருகின்றன.

    அந்த வரிசையில், ஒலா எலெக்ட்ரிக் நிறுவனம் மற்றொரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறது. இம்முறை நடந்த பிரச்சினையில் நாடு முழுக்க சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வந்த டெல்லி சைபர் செல் பிரிவு அதிகாரிகள் மோசடியில் ஈடுபட்ட கும்பலை கைது செய்துள்ளனர். இந்த கும்பல் நாடு முழுக்க மக்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண மோசடி செய்து இருக்கிறது.

    பீகாரை சேர்ந்த ஒருவர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இந்த வலைதளத்தில் பணம் செலுத்தி இருக்கிறார். எனினும், அவருக்கு ஸ்கூட்டர் டெலிவரி செய்யப்படாமல் இருந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நபர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒலா எலெக்ட்ரிக் பெயரில் போலி வலைதளம் உருவாக்கி, மக்களை ஏமாற்றி வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

    மேலும் பாதிக்கப்பட்ட நபர் கொடுத்த மொபைல் நம்பரையும் கண்காணித்தனர். இதில் மோசடியில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பெங்களூரை சேர்ந்த இரண்டு பேர் இந்த மோசடிக்கு தேவையான போலி வலைதளத்தை உருவாக்கி இருக்கின்றனர். போலி வலைதளத்தை நம்பி பலர் அதில் தங்களின் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

    பின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் விவரங்களை கொண்டு பயனர்கள் ஒவ்வொருத்தருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக போலி வலைதளம் மட்டுமின்றி கால் செண்டர் ஒன்றும் நடத்தப்பட்டு இருக்கிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க முயற்சித்த பயனர்கள் இந்த வலைதள விவரங்களை நம்பி அதிகபட்சம் ரூ. 70 ஆயிரம் வரை கட்டணமாக செலுத்தி உள்ளனர்.

    ஸ்கூட்டர் கட்டணம், போக்குவரத்து, காப்பீடு என பல்வேறு பெயர்களில் கட்டணம் செலுத்த வலியுறுத்தி, ஒவ்வொரு கட்டணத்தையும் தெளிவான ஆன்லைன் டிரான்ஸ்ஃபர் செய்ய இந்த மோசடி கும்பல் வலியுறுத்தி இருக்கிறது.

    "பாட்னாவில் போலி கால் செண்டர் நடத்தி வந்த கும்பலை கண்டுபிடித்து, இதுவரை 16 பேரை கைது செய்து இருக்கிறோம். இவர்களிடம் இருந்து 114 சிம் கார்டுகள், 60-க்கும் அதிக மொபைல் போன்கள், ஏழு லேப்டாப்கள், ரூ. 5 கோடி அளவுக்கு பணப்பரிமாற்றம் அடங்கிய 25 வங்கி கணக்குகளை மீட்டு இருக்கிறோம். இந்த மோசடியில் நாடு முழுக்க ஆயிரம் பேர் ஏமாற்றப்பட்டு உள்ளனர்," என டெல்லி வடக்கு பகுதிக்கான துணை போலீஸ் கமிஷனர் தேவேஷ் மஹ்லா தெரிவித்தார்.

    • மாருதி சுசுகி நிறுவனம் அதிக மைலேஜ் கொண்ட கார்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
    • புதிய ஸ்விப்ட் மாடல் லிட்டருக்கு அதிகபட்சம் 35 கிலோமீட்டர் மைலேஜ் வழங்கும் என கூறப்படுகிறது.

    மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் ஹைப்ரிட் பிரிவில் அதிக கவனம் செலுத்த துவங்கி உள்ளது. இந்தியாவில் தனது முதல் ஸ்டிராங் ஹைப்ரிட் கார் - கிராண்ட் விட்டாரா மாடலை தொடர்ந்து ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்களை அறிமுகம் செய்ய மாருதி சுசுகி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இரு கார்களின் அடுத்த தலைமுறை மாடல்கள் வெளியாக இருக்கும் நிலையில், மாருதி சுசுகி ஹைப்ரிட் வேரியண்ட்களையும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது. ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அதிக மைலேஜ் கொண்ட ஹேச்பேக் மற்றும் செடான் மாடல்கள் என்ற பெருமையை பெறும் என தெரிகிறது.

    ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களின் ஸ்டிராங் ஹைப்ரிட் வேரியண்ட்கள் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் வெளியீடு 2024 முதல் காலாண்டு வாக்கில் நடைபெறும் என தெரிகிறது. புதிய ஹைப்ரிட் வெர்ஷனில் முற்றிலும் புதிய என்ஜின் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Z12E எனும் குறியீட்டு பெயரில் அழைக்கப்படும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் தற்போதைய K12C என்ஜினை போன்று இருக்காது. இந்த எனிஜினுடன் டொயோட்டா நிறுவனத்தின் ஸ்டிராங் ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம். இதே தொழில்நுட்பம் தான் கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடல்களிலும் வழங்கப்பட்டது.

    • வால்வோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய எலெக்ட்ரிக் எஸ்யுவி மாடல் அறிமுகமானது.
    • புதிய வால்வோ EX90 மாடல் ஏராளமான பாதுகாப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

    வால்வோ நிறுவனம் ஏராளமான டீசர்களை தொடர்ந்து புதிய EX90 மாடலை அறிமுகம் செய்தது. வால்வோ ஏற்கனவே விற்பனை செய்து வரும் XC90 காருக்கு இணையான எலெக்ட்ரிக் வடிவம் தான் புதிய EX90. இந்த கார் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. மேலும் இதில் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு தொழில்நுட்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    தோற்றத்தில் புதிய EX90 மாடல் வால்வோ பாரம்பரியத்திலேயே காட்சியளிக்கிறது. இதில் உள்ள லைட்டிங் மற்றும் டிசைன் அம்சங்கள் வால்வோ வழக்கப்படி மிக கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் உருவாகி இருப்பதால், வால்வோ EX90 மாடல் முழுக்க முழுக்க எலெக்ட்ரிக் வாகனத்திற்கான டிசைன் பெற்று இருக்கிறது. இதே பிளாட்பார்மில் எதிர்கால வால்வோ கார்களும் உருவாக்கப்படும்.

    கேபினில் பெரிய 14.5 இன்ச் கூகுள் சார்ந்த செங்குத்தான டச் ஸ்கிரீன் செண்டர் கன்சோல் உள்ளது. இது என்விடியா டிரைவ் ஏஐ பிளாட்பார்ம்களான சேவியர் மற்றும் ஒரின் மூலம் இயங்குகிறது. இதில் உள்ள குவால்காம் ஸ்னாப்டிராகன் காக்பிட் பிளாட்பார்ம் முன்பை விட அதிகளவு மேம்பட்டு இருக்கின்றன. இதன் டிரைவர் டிஸ்ப்ளே மெல்லியதாகவும், அளவில் சிறியதாகவும் இருக்கிறது. இதன் விண்ட்ஸ்கிரீன் மீது ஏராளமான ரேடார்கள், லிடார்கள், கேமரா மற்றும் பாதுகாப்பு சென்சார்கள் உள்ளன.

    இவை EX90 மாடலை இதுவரை உருவாக்கப்பட்டதில் மிகவும் பாதுகாப்பான வால்வோ கார் என்ற பெருமையை பெற்று இருக்கிறது. இதில் பைலட் அசிஸ்ட், தானியங்கி வசதி மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இந்த காரில் 111 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனுடன் வழங்கப்பட்டு இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் 370 கிலோவாட் திறன் கொண்டுள்ளது.

    இதில் உள்ள பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 600 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் உள்ள பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 30 நிமிடங்களே ஆகும். புதிய வால்வோ EX90 மாடலில் பை-டைரெக்‌ஷனல் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வந்ததும், இந்த கார் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும்.

    • இந்திய இருசக்கர வாகன சந்தையில் யமஹா மோட்டார் இந்தியா முன்னணி நிறுவனமாக இருக்கிறது.
    • இருசக்கர வாகனம் மட்டுமின்றி சமூக நல்லிணக்க செயல்களிலும் யமஹா அவ்வப்போது தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு வருகிறது.

    சமூக வளர்ச்சியை வளர்க்கவும் அவர்களின் நல்வாழ்வுக்கு பங்களிப்பை வழங்குவதற்கும் சமூகப் பொறுப்பின் ஒரு பகுதியாக, இந்திய இரு சக்கர வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார் (IYM) ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை வழங்கி இருக்கிறது.

    தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் மற்றும் பண்ருட்டியில் உள்ள பொது சுகாதார மையங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகளில் இரத்த அணுக் கவுண்டர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் மற்றும் செமி அனலைசர் இயந்திரத்தின் இரண்டு அலகுகள் உள்ளன.

    இம்முயற்சியைக் குறிக்கும் வகையில், யமஹாவின் சிரேஷ்ட மருத்துவ உறுப்பினர்கள் முன்னிலையில் உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தலைவர் திரு. ஈஷின் சிஹானா, இயக்குநர் திரு. மசடோ டகேயாமா மற்றும் துணைத் தலைவர் (HR மற்றும் ER) திரு. P S கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில், பொது சுகாதார மையங்கள் (வல்லம் மற்றும் பண்ருட்டி) சார்பில், பொது சுகாதாரத் துறை (டிபிஎச்) துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஷியாம் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடையை பெற்றுக் கொண்டனர். இரண்டு மையங்களிலும் மருத்துவப் பரிசோதனைகளை விரைவுபடுத்த நன்கொடை நிச்சயமாக பயனுள்ளதாகவும் முக்கியமானதாகவும் இருக்கும்.

    IYM தனது செயல்பாடுகளின் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சமூக மற்றும் சுற்றுச்சூழல் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடந்த காலங்களிலும் இதேபோன்ற முயற்சிகளை எடுத்துள்ளது. சுகாதாரம், கல்வி, சாலைப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் நன்கொடைகள் மற்றும் பிற முயற்சிகள் மூலம் பிந்தையவர்களின் நலனுக்காக, நிர்வாகம் மற்றும் சமூகங்களுடன் நிறுவனம் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றும்.

    ×