என் மலர்
ஆன்மிகம்
- பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
- உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உண்டா?
மனிதராக பிறந்தவர்கள் அனைவரும் ஏழு பிறவிகளை எடுப்பார்கள் என்றும், கர்மம் தீரும் வரை பிறப்பு என்பது நிகழும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகிறது.
ஆனால், ஒரு பிறவிலேயே நாம் படாதபாடு படுகிறோம். இக்காலத்தில் யாரிடமாவது உனக்கு இன்னொரு பிறவி வேண்டுமா என்று கேட்டால் போதும்டா சாமி..! ஆளவிடுங்க என்று தெரித்து ஓடும் சூழல்தான் இருக்கிறது.
அதனால், மீண்டும் எனக்கு மனிதனாக பிறக்கவே வேண்டாம்.. பிறவா வரம் வேண்டும் என்பவர்கள் தான் நம்மில் ஏராளம்.
இப்படி பிறவா நிலையை வேண்டுபவர்கள், எந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள போகிறோம்.
முற்பிறவியில் செய்த பாவங்களுக்கான தண்டனைகளை அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்ந்து அனுபவித்து கொண்டே இருக்க வேண்டும். அந்த பிறவியிலும் பாவம் செய்தால், மீண்டும் பிறவி எடுக்க வேண்டும், இது தொடர்கதை ஆகும்..
எப்பிறவியில் பாவம் செய்யாமல், நேர்வழியில் பக்தி மார்க்கத்துடன் இணைந்து இருக்கிறானோ, அப்பிறவியில் அவனுடைய பிறவி முடிவடைகிறது.
இறைவனின் விழிகளில் இருந்து நம்மால் தப்பிக்க முடியாது. நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு ஏன் இந்த பிரச்சனை என்று கேட்க முடியுமா? அப்படி நீங்கள் கேட்பவராக இருந்தால், உங்கள் மனசாட்சிப்படி நீங்கள் நடப்பவராக இருந்தால் அடுத்த பிறவி உங்களுக்கு கிடையாது.
மறுபிறவி வேண்டாம் என்று நினைப்பவர்கள், 108 வில்வ இலைகளில், "ஓம் நமச்சிவாய" என்னும் ஆத்ம சக்தி வாய்ந்த சிவ மந்திரத்தை எழுதி, லிங்கத்திற்கு 108 முறை அர்ச்சனை செய்து வர வேண்டும்.
கண் குளிர சிவபெருமானை தரிசித்து, மனதார "இப்பிறவி போதும், இனி பிறவா நிலை வேண்டும்" என்று பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.
48 பிரதோஷங்கள் காளை மாட்டிற்கு அருகம்புல் தானம் செய்பவர்களுக்கு, பிறவா நிலை வரும். இப்பரிகாரங்களை செய்து வந்தால், அப்பிறவியிலேயே அவர்களுக்கு மோட்சம் பக்தி மூலமாக உண்டாகி, மறுபிறவி என்பதே கிடையாது என்பது ஐதீகம்.
- இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.
- அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள்.
- சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும்.
பல சிறப்புகளை உடைய மார்கழி, இறை வழிபாட்டுக்கு மிகவும் உதந்த மாதமாகும். பொதுவாக, மார்கழி மாதம் என்றாலே பெருமாள் வழிபாட்டுக்குரிய மாதமாக கருதுவார்கள். ஆனால் பெருமாளுக்கு மட்டுமின்றி சிவபெருமானுக்கும் உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது. மார்கழி மாதத்தில் பெருமாளுக்கு வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுவதை போல, சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.
27 நட்சத்திரங்களில் இரண்டு நட்சத்திரங்களுக்கு மட்டும்தான் 'திரு' என்ற சிறப்பு அடைமொழி வழங்கப்பட்டுள்ளன. ஒன்று திருமாலுக்கு உகந்த 'திருவோணம்' நட்சத்திரம். மற்றொன்று சிவபெருமானுக்கு உகந்த 'திருவாதிரை' நட்சத்திரம். இந்த சிறப்புமிக்க திருவாதிரை நாளில் தான் ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
அக்னி வடிவமான சிவபெருமானை குளிர்ச்சி மிகுந்த மார்கழி மாதத்தில் திருவாதிரை நாளில் ஆறு விதமான அபிஷேகம் செய்து குளிர்விக்கிறார்கள். இந்த அபிஷேகத்தை கண் குளிர காண்பதே 'ஆருத்ரா தரிசனம்' ஆகும். இதனை 'மார்கழி திருவாதிரை' என்றும் சொல்வார்கள்.
ஒரு சமயம் மகாவிஷ்ணு பாற்கடலில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருந்தார். கண்களை மூடியபடி இருந்த திருமால் திடீரென்று, ''ஆஹா! அற்புதமான காட்சி'' என்று மனமுருகி சத்தம் போட்டார். இதைக் கேட்ட ஆதிசேஷனும், மகாலட்சுமி தாயாரும் ஒன்றும் புரியாமல் திகைத்தனர். கண் விழித்து பார்த்த மகாவிஷ்ணுவிடம், ''தங்களின் பரவச நிலைக்கு காரணம் என்ன'' என்று ஆதிசேஷனும், மகாலட்சுமியும் கேட்டனர்.
அதற்கு, சிவபெருமான் ஆடிய ஆனந்தத் தாண்டவத்தை என்னுடைய ஞானக் கண்ணால் பார்த்தேன். அதைக் கண்டு மெய்சிலிர்த்ததால்தான் அவ்வாறு கூறினேன் என்றார் மகாவிஷ்ணு. மேலும், அவர் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தைப் பற்றி சொல்ல, ஆதிசேஷனுக்கும் சிவனின் ஆனந்தத் தாண்டவத்தை காண வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டது. ஆதிசேஷனின் மன ஓட்டத்தை புரிந்துகொண்ட மகாவிஷ்ணு, ''ஆதிசேஷா! உன் மனம் நினைப்பதை நான் அறிவேன். நீயும் சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவத்தை பார்க்க வேண்டுமானால், பூலோகத்தில் பிறந்து தவம் இயற்ற வேண்டும். அப்போது உனக்கும் அந்த அற்புத ஆனந்தத் தாண்டவ தரிசனம் கிடைக்கும்'' என்றார்.
அதன்படி ஆதிசேஷனும் பூலோகத்தில் பதஞ்சலி முனிவராக அவதரித்தார். அவரது உடல் இடுப்பு வரை மனித உடலும், இடுப்புக்குக் கீழே பாம்புத் தோற்றமும் கொண்டதாக இருந்தது. பதஞ்சலி முனிவர் பல காலம் பூமியில் தவம் இருந்தார். அதன் பயனாக, ஒருநாள் திருவாதிரை தினத்தன்று, சிதம்பரத்தில் சிவபெருமான் தன்னுடைய ஆனந்தத் தாண்டவ திருக்காட்சியை பதஞ்சலி முனிவருக்குக் காட்டி அருளினார். அந்த தினமே ஆருத்ரா தரிசனம் ஆகும். சிவபெருமானின் அற்புத நடன காட்சியை கண்ட பதஞ்சலி முனிவர், ''இறைவா, இந்த திருக்காட்சியை பூலோக மக்களுக்கும் காட்டி அருள வேண்டும்'' என வேண்டினார். அதன்படியே மார்கழி மாதத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது.
திருவாதிரை நோன்பு
தேவர்களின் அதிகாலைப் பொழுதாக கருதப்படும் மார்கழி மாதத்தை 'பிரம்ம முகூர்த்த நேரம்' என்றும் சொல்வார்கள். இந்த மாதத்தில் வரும் பவுர்ணமியுடன் கூடிய திருவாதிரை நாளில்தான் 'திருவாதிரை நோன்பு' கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து குளித்துவிட்டு, சிவ நாமத்தை உச்சரித்து உடலில் திருநீறு பூச வேண்டும். காலையில் உணவு அருந்துவதை தவிர்க்கவும்.
அருகில் உள்ள சிவன் கோவில்களுக்கு சென்று, அங்குள்ள நடராஜரையும், சிவகாமி அம்மையாரையும் தரிசிக்க வேண்டும். ஆலயத்தில் நடைபெறும் தாண்டவ தீபாராதனையை கண்டு வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபெருமானுக்குரிய பாடல்கள், சிவபுராணம், தேவாரம், திருவாசக பாடல்கள் போன்றவற்றை பாராயணம் செய்து வேண்டி கொள்ளுங்கள். பின்பு இரவில் எளிமையான உணவை உண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்த திருவாதிரை நோன்பை, மாதந்தோறும் வரும் திருவாதிரை நட்சத்திர நாளிலும் மேற்கொள்ளலாம். தொடர்ச்சியாக ஒரு வருடம் திருவாதிரை நோன்பு இருப்பவர்களுக்கு இனிமையான வாழ்க்கை அமையும், கயிலாயத்தில் வாழும் பேறும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் நல்ல கணவன் அமைவர், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும், பாவங்கள் நீங்கும், அறிவு, ஆற்றல் பெருகும். மேலும் எண்ணற்ற பலன்களை பெறலாம்.
- ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
- கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-18 (வெள்ளிக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சதுர்த்தசி இரவு 6.43 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம் : மிருகசீர்ஷம் இரவு 8.16 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3.00 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்
ஆருத்ரா அபிஷேம். திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம். இரவு வெள்ளி ரதத்தில் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு.
லால்குடி ஸ்ரீ பெருந்திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஷ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை. மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. கரூர் தான்தோன்றி ஸ்ரீ கல்யாண வேங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலை சிறப்பு பாலபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பெருமை
ரிஷபம்-பக்தி
மிதுனம்-செலவு
கடகம்-இன்பம்
சிம்மம்-வரவு
கன்னி-ஆதாயம்
துலாம்- அன்பு
விருச்சிகம்-ஜெயம்
தனுசு- லாபம்
மகரம்-சுகம்
கும்பம்-மகிழ்ச்சி
மீனம்-உண்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவு திருப்தி தரும் நாள். ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் பணிபுரிவீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.
ரிஷபம்
சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழும் நாள். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். செல்வாக்கு அதிகரிக்கும். ஆபரணச் சேர்க்கை உண்டு.
மிதுனம்
மகிழ்ச்சி கூடும் நாள். உறவினர்களால் ஏற்பட்ட மனக் கலக்கங்கள் அகலும். நண்பர்கள் மகிழ்ச்சிக்குரிய செய்தியைக் கொண்டு வந்து சேர்ப்பர். உத்தியோக உயர்வு உண்டு.
கடகம்
சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும் நாள். சொத்துக்களால் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகளுக்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். வரவு திருப்தி தரும்.
சிம்மம்
யோகமான நாள். வீட்டிற்குத் தேவையான விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களை அதிகாரிகள் ஏற்றுக் கொள்வர்.
கன்னி
உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நாள். பல நாட்களாக வசூலாகாத கடன் இன்று வசூலாகலாம். வீட்டைச் சீரமைப்பதில் அக்கறை காட்டுவீர்கள். உத்தியோக நீடிப்பு உண்டு.
துலாம்
காலையில் கலகலப்பும், மாலையில் சலசலப்பும் ஏற்படும் நாள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் உண்டு. கூட்டாளிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிர்பாராத விதத்தில் விரயங்களைச் சந்திக்க நேரிடலாம். அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.
தனுசு
வெளிவட்டாரப் பழக்க வழக்கம் விரிவடையும் நாள்.. மூத்தவர்களால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.
மகரம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். இனிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். தொழில் வளர்ச்சி திருப்தி தரும்.
கும்பம்
நெருக்கடி நிலை அகலும் நாள். அத்தியாவசியப் பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் புதிய பங்குதாரர்களைச் சேர்த்துக் கொள்வீர்கள்.
மீனம்
வளர்ச்சி கூடும் நாள். பணியில் இருந்த தொய்வு அகலும். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும்.
- ஒரு நாள் பெரும் மழை பெய்ததால், விறகுகள் மழையில் நனைந்து, விற்க முடியாமல் போனது.
- சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானின் வாய்ப்பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக் கொண்டிருந்தது.
மார்கழி மாதத்தில் பவுர்ணமியும் திருவாதிரை நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் ஆருத்ரா தரிசனம் நடத்தப்படுகிறது. அன்றைய தினம், அனைத்து சிவாலயங்களிலும் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். ஆனால், மற்ற ஆலயங்களில் இல்லாத சிறப்பாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் மட்டும் நடராஜருக்கு முக்கிய நைவேத்தியமாக களி படைக்கப்படுகிறது. அதன் பின்னால் பக்திபூர்வமான ஒரு கதையும் உள்ளது.
முன்பொரு காலத்தில் சிதம்பரத்தில் சேந்தன் என்ற சிவ பக்தன் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டும் தொழில் செய்து வந்த அவர், அதில் கிடைக்கும் சிறிய வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தார். ஏழ்மையில் இருந்தாலும், தினமும் ஒரு சிவனடியாருக்கு உணவளித்த பிறகே உணவருந்தும் பழக்கத்தை அவர் கொண்டிருந்தார்.
ஒரு நாள் பெரும் மழை பெய்ததால், விறகுகள் மழையில் நனைந்து, விற்க முடியாமல் போனது. அன்றைய தினம் சேந்தன் வீட்டிற்கு ஒரு சிவனடியார் வந்தார். அவருக்கு எப்படி உணவு அளிப்பது என்று யோசித்த சேந்தன் கவலை அடைந்தார். அவரது மனைவி, வீட்டில் சிறிது அரிசி மாவும், வெல்லமும் இருப்பதாக கூறினார். அதைக்கொண்டு சிவனடியாருக்கு களி செய்து படைத்தார்.
அதைச் சாப்பிட்ட சிவனடியார், மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். அன்றைய தினத்திற்கு மறுநாள் திருவாதிரை நாளாகும். அதனால் நடராஜரை தரிசிக்க வேண்டி சேந்தனும், அவர் மனைவியும் சிதம்பரம் சென்றனர். சிதம்பரத்தில் உள்ள சிவபெருமானின் வாய்ப்பகுதியில் களி உண்டதற்கான அடையாளமாக சிறிது களி ஒட்டிக் கொண்டிருந்தது. இதைப் பார்த்த அவர்கள், அதிசயித்து போயினர்.
தன் வீட்டிற்கு சிவனடியாராக வந்து களி உண்டது சிவபெருமான் என்பதை அறிந்ததும் சேந்தனும், அவரது மனைவியும் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். பின்பு, இந்த அற்புத நிகழ்வை அறிந்த ஊர் மக்கள், சேந்தனின் பக்திக்கு தலை வணங்கினர். மேலும், அன்று முதல் திருவாதிரை தினத்தன்று இறைவனுக்கு முக்கிய நைவேத்தியமாக களி படைக்கப்படுகிறது.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-17 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திரயோதசி இரவு 8.57 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 9.48 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : மரணயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
சிவன் கோவில்களில் இன்று சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி
இன்று பிரதோஷம். திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேதஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அராளகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர், திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி. சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீ வர்கீஸ்வரர் புறப்பாடு சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திரரத வல்லப் பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.
ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலை சாற்று வைபவம். குறுக்குத்துறை முருகப் பெருமானுக்கும் தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பாலாபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உற்சாகம்
ரிஷபம்-பொறுப்பு
மிதுனம்-மேன்மை
கடகம்-தாமதம்
சிம்மம்-தெளிவு
கன்னி-உறுதி
துலாம்- நிறைவு
விருச்சிகம்-உண்மை
தனுசு- புத்துணர்ச்சி
மகரம்-கவனம்
கும்பம்-கடமை
மீனம்-பயிற்சி
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். முக்கியப் புள்ளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலைபேசி வழியில் நல்ல தகவல் வந்து சேரும்.
ரிஷபம்
ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும் நாள். சொன்ன சொல்லைக் காப்பாற்றி மகிழ்வீர்கள். தொகை வரவு திருப்தி தரும். செய்தொழிலில் மேன்மையும், உயர்வும் கிட்டும்.
மிதுனம்
அச்சுறுத்தும் நோய்கள் அகன்று ஓடும் நாள். இறை வழிபாட்டில் ஆர்வம் கூடும். உத்தியோகத்தில் உங்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
கடகம்
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். அயல்நாட்டு முயற்சியில் அனுகூலம் ஏற்படும். வீடு, இடம் சம்பந்தமாக எடுத்த முடிவு வெற்றி பெறும்.
சிம்மம்
தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். கல்யாணக் கனவுகள் நனவாகும்.
கன்னி
சிறப்புகள் வந்து சேர சிவாலய வழிபாட்டில் கவனம் செலுத்தும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும்.
துலாம்
எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு குறையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.
விருச்சிகம்
சான்றோர்களின் சந்திப்பால் சந்தோஷம் கூடும் நாள். ஆலய வழிபாட்டில் ஆர்வம் கூடும். கடமையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். பணவரவு திருப்தி தரும்.
தனுசு
இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டிய நாள். விருப்பங்கள் நிறைவேறும். சகோதரர்கள் உங்களின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவர்.
மகரம்
நலங்கள் வந்து சேர நந்தியெம்பெருமானை வழிபட வேண்டிய நாள். பிறருக்காக பொறுப்புகள் சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை வந்து சேரும்.
கும்பம்
வளர்ச்சி கூடும் நாள். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள். தொழில் நலன் கருதிப் புதிய கூட்டாளிகளைச் சேர்ப்பீர்கள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மீனம்
ஆனந்த வாழ்விற்கு அடித்தளம் அமையும் நாள். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். தற்காலிகப் பணி நிரந்தரப் பணியாக மாறலாம்.
திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இறுதி நாளில் திருப்படி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
மலை கோவிலுக்கு செல்லும் பாதையில் ஒரு ஆண்டை குறிக்கும் வகையில் உள்ள 365 படிக்கட்டுகளில் பக்தர்கள் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்வார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான படித்திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. திருத்தணி மலையடிவாரத்தில் உள்ள முதல் படிக்கட்டில் சிறப்பு பூஜைகள் நடத்தி விழா தொடங்கப்பட்டது.
திருப்புகழ், தேவாரம், திருவாசகம் மற்றும் பக்தி பாடல்கள் பாடியபடி பக்தர்கள் ஒவ்வொரு படிகட்டுகளின் வழியாக நடந்து சென்று சுவாமியை வழிபடுகின்றனர்.
திருப்படித்திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருத்தணி கோவிலில் இன்று இரவு முழுவதும் நடை திறந்திருக்கும். நள்ளிரவு புத்தாண்டு சிறப்பு தரிசனம் நடைபெறுகிறது. பக்தர்கள் விடியவிடிய சாமி தரிசனம் செய்யலாம்.
இன்று காலை உற்சவர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் தேர்வீதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
நன்மைகள் நடைபெறும் நாள். தேகநலன் சீராகும். அடிப்படை வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும்.
ரிஷபம்
சங்கடங்கள் அகலும் நாள். தனவரவு திருப்தி தரும். பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்திணைவர். குடும்பத்தினர் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வர்.
மிதுனம்
நல்லவர்களின் தொடர்பால் நலம் காணும் நாள். பொதுவாழ்வில் புகழ் கூடும். லாப நோக்கத்தோடு பழகியவர்களை இனம் கண்டு கொள்வீர்கள்.
கடகம்
யோகமான நாள். பக்குவமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துகொள்வீர்கள். சேமிப்பை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும்.
சிம்மம்
வசதிகள் பெருகும் நாள். வருங்கால நலன்கருதி சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி ஆதரவு உண்டு. போன்மூலம் பொன்னான தகவலொன்று வந்து சேரும்.
கன்னி
வாய்ப்புகள் வாயிற்கதவைத் தட்டும் நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். உடல் நலத்தில் கவனம் தேவை.
துலாம்
சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு பொறுப்பு சொல்வதைத் தவிர்ப்பது நல்லது. அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது.
விருச்சிகம்
தொட்ட காரியங்கள் வெற்றி பெறும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். பணத்தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். தொழில் முன்னேற்றம் உண்டு.
தனுசு
தன்னம்பிக்கை தேவைப்படும் நாள். வாங்கல் கொடுக்கல்களில் விழிப்புணர்ச்சி தேவை. இடமாற்றம், ஊர்மாற்றம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.
மகரம்
புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள். இல்லம் தேடி இனிய செய்தி வந்து சேரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.
கும்பம்
வாழ்க்கைத் தரம் உயர வழிவகை செய்து கொள்ளும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும்.
மீனம்
ஆதாயம் அதிகரிக்கும் நாள். அடுத்தவர் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். வருமானம் உயரும்.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-16 (புதன்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : துவாதசி இரவு 11.16 மணி வரை பிறகு திரயோதசி
நட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.26 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை
இன்று கார்த்திகை விரதம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். நவநிதி மகாதீர்த்தம். ஸ்ரீரங்கம் கோவிலில் காயத்ரி மண்டபத்துக்குள் மூலஸ்தானத்தைச் சுற்றி திருவண்ணாழி பிரதட்சணம், நாச்சியார் திருக்கோலம். எம்பெருமான் தெப்பம். ஆவுடையார் கோவிலில் ஸ்ரீ மாணிக்கவாசர் எல்லாம்வல்ல சித்தராய் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்மருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.
ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவகோட்டை அரங்கநாதர் ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் ஸ்ரீ பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ விஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீ திருமறைக்காடர் கோவில்களில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமி பாலகர் ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூர் அமராவதி நதியின் வடகரையில் முத்தான சயனத்தில் அபயப்பிரதான ஸ்ரீ ரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சிறப்பு
ரிஷபம்-பயணம்
மிதுனம்-தேர்ச்சி
கடகம்-கண்ணியம்
சிம்மம்-முயற்சி
கன்னி-பயிற்சி
துலாம்- உறுதி
விருச்சிகம்-கடமை
தனுசு- விவேகம்
மகரம்-உண்மை
கும்பம்-நட்பு
மீனம்-நன்மை
- பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம்.
- ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
நம் வாழ்க்கையில் என்ன செய்தாலும், எத்தனை நல்லவை செய்திருப்பினும், எவ்வளவு அல்லவை செய்திருந்தாலும், அரங்கனை, ரங்கநாதனை, ரங்கநாதப் பெருமாளை இறுதியில் சரணடைந்துவிட்டால் மோட்சம் நிச்சயம்; வைகுண்டத்தில் சொர்க்கவாசல் நமக்குத் திறக்கப்படும் என்று புராணம் சொல்லிவைத்த மாபெரும் விஷயத்தை மிக எளிதாக உணர்த்தியிருக்கிறார்கள்,
இத்தனை பெருமை மிக்க ஸ்ரீரங்கம், ஒருகாலத்தில் அழகிய தீவு போல் அமைந்திருந்ததாகச் சொல்கிறது புராணம். காவிரி - கொள்ளிடம் ஆறுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், இன்றைக்கும் தன் அழகுடன், தனியழகுடன், மிகுந்த சாந்நித்தியத்துடன் அமைந்திருக்கிறது. சயனித்த திருக்கோலத்தில் இருந்தபடி, இந்த உலகுக்கும் உலக மக்களுக்கும் விடியலைத் தந்து சேவை சாதித்துக் கொண்டிருக்கிறார் ரங்கநாதப் பெருமாள். வைகுண்டத்தை திருநாடு என்று போற்றுவார்கள். அந்தத் திருநாட்டிற்குச் செல்பவர்கள் எப்போதும் பெருமாளைத் தரிசிக்கும் பாக்கியம் பெறுவர். அவர்களுக்கு நித்யசூரிகள் என்று பெயர். இவர்களுக்கு பசி, தாகம், உறக்கம் எனும் எந்த உணர்வும் இருக்காது. பேரானந்தத்தில் மூழ்கி இருப்பார்களாம்.
தமிழகத்தில் ஸ்ரீரங்கம், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய மூன்று திவ்யதேசங்களில் மட்டும் வைகுண்ட ஏகாதசியையொட்டி அரையர் சேவை நடக்கிறது. வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய பத்துநாட்களை பகல் 10 என்றும், (மார்கழி அமாவாசைக்கு அடுத்த பிரதமை முதல் தசமி வரை) வைகுண்ட ஏகாதசிக்கு பிறகு வரும் 10 நாட்களை (ஏகாதசி முதல் பஞ்சமி வரை) ராப்பத்து நாட்களாகவும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் மார்கழி மாதம் மட்டுமின்றி, ஆடி மற்றும் தை மாதங்களிலும் அரையர் சேவை உண்டு.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மேல்கோட்டை ஸ்ரீநரசிம்ம பெருமாள் கோவிலில், அபிநயம் இல்லாமல் தாளத்தோடு மட்டும் அரையர் சேவை இன்றைக்கும் நடந்து வருகிறது.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களைத் தொகுத்தவர் நாதமுனிகள். இதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் எனப்படுகிறது. இவர் ஒருமுறை கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் மீதான 'ஆராவமுதே' என்று தொடங்கும் திவ்யபிரபந்த பாசுரத்தை சிலர் பாடக்கேட்டு அதில் மெய்மறந்து போனார்.
அதில் 'ஓராயிரத்துள் இப்பத்தும்' எனும் அடி வந்தது. அவர்களிடம், ''நீங்கள் பாடிய பாடலின் பொருள்படி, ஆயிரத்தில் பத்து பாடல் போக மீதி 990 பாடல்கள் எங்கே?'' என்று கேட்டார். ஆனால், அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே நாதமுனிகள் ஆழ்வார் திருநகரி சென்று இந்தக் கேள்வியை மதுரகவி ஆழ்வாரின் வம்சாவளியினரிடம் கேட்டார்.அவர்கள் பாசுரங்களைப் பெறுவதற்கு ஒரு வழியைக் கூறினர். மதுரகவி ஆழ்வாரின் பாசுரங்களை 12 ஆயிரம் முறை யார் ஒருவர் பாடுகிறாரோ, அவர் முன் ஆழ்வாரே தோன்றி அருள் செய்வார். அவரிடம் விபரம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். நாதமுனிகளும் 12 ஆயிரம் முறை மதுரகவி ஆழ்வாரின் பாசுரத்தைப் படித்தார்.
ஆழ்வாரின் அருளால் ஆழ்வார்கள் பாடிய அனைத்துப் பாசுரங்களையும் பெற்றார்.
அந்தப் பாடல்களுக்கு தமிழ்ப்பண் அமைப்பில் இசையமைத்து திவ்ய பிரபந்தம் என்று பெயரிட்டார். தனது சீடர்களான உய்யக்கொண்டார், குருகைக்காவலப்பன், மேலையகத்தாழ்வான் மூலம் அந்தப் பாசுரங்களை திவ்யதேசங்கள் எங்கும் பாடச் செய்தார் என்கிறது ஸ்ரீரங்கம் புராணம்.
மார்கழி மாதத்தில் ஏதேனும் ஒருநாளில், திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு வந்து ஸ்ரீரங்கரையும் ரங்கநாயகித் தாயாரையும் ஒருமுறை வழிபட்டாலே, நம் பாவங்கள் அனைத்தும் விலகும்; பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். அரங்கனின்சந்நிதிக்கு வருவோம்.
அவனின் பேரருளைப் பெறுவோம்!






