search icon
என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது.
    • அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ். டோனி, கேப்டன் பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிம் ஒப்படைத்து, அவரை வழிநடத்தி வருவதுடன் பேட்டிங்கில் இறுதிக் கட்டத்தில் களம் இறங்கி விளையாடி வருகிறார்.

    கடைசி ஓவர் அல்லது அதற்கு முந்தைய ஓவரில் களம் இறங்குகிறார். அவர் களம் இறங்கினால் சிக்ஸ் நிச்சயம் என்ற அளவிற்கு சந்திக்கும் பந்துகளை பவுண்டரி லைனுக்கு வெளியே பறக்க விடுகிறார். இதனால் அவர் முன்னதாக ஏன் களம் இறக்கப்படுவதில்லை? என்ற விமர்சனம் எழுந்த வண்ணம் உள்ளது. அவர் முன்னதாக களம் இறங்கினால் உடனே அவுட்டாகிவிடுவார் என்ற எதிர் விமர்சனமும் வைக்கப்படுகிறது.

    இந்த நிலையில் எம்.எஸ். டோனி ஏன் கடைசி நேரத்தில் பேட்டிங் செய்ய வருகிறார் என்பது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக பிளமிங்க் கூறியதாவது:-

    டோனிக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அவரால் நீண்ட நேரம் பேட்டிங் செய்ய முடியாது. அப்படி செய்தால், அவரால் விளையாடவே முடியாத சூழல் உருவாகலாம். அதனால்தான், போட்டியில் 2-4 ஓவர்கள் பேட்டிங் மற்றும் முழுவதுமாக கீப்பிங் செய்து புதிய கேப்டனுக்கு அறிவுரைகள் வழங்கி வருகிறார். அதைத் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.

    டோனிக்கு மாற்றாக வேறொரு கீப்பர் அணியில் உள்ளார். ஆனால் அவர் டோனி ஆகிவிட முடியாது. 9-வது இடத்தில் டோனி களமிறங்குகிறார் என்பதாலேயே அவரால் போட்டியில் தாக்கம் ஏற்படுத்த முடியாது என நினைத்து விடாதீர்கள்.

    இவ்வாறு பிளமிங் தெரிவித்துள்ளார்.

    • சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம்.
    • சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வம்.

    சர்வதேச விண்வெளி மையம் குறிப்பிட்ட பகுதியில் வானிலை தெரியும் நேரம் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டு வருகிறது.

    பொதுவாக அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் வான்வெளி தெளிவாக இருக்கும்போது மட்டும் சிறிய ஒளி புள்ளியாக விண்வெளி ஆய்வு மையத்தை காண முடியும்.

    அந்த வகையில், சென்னையில் இருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை இன்று இரவு வெறும் கண்களால் பார்க்கலாம் என நாசா அறிவித்துள்ளது.

    இதுபோல், சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலில் இருந்தும் விண்வெளி மையத்தை பார்க்கலாம். சென்னையில் இன்றிரவு, 7.09 மணியில் இருந்து 7 நிமிடங்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் தென்படும் என நாசா அறிவித்துள்ளது.

    சென்னையில் இருந்தே இந்த நிகழ்வு தெரியும் என்பதால் மக்கள் காண ஆர்வத்துடன் உள்ளனர்.

    • புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS உள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது.

    மோட்டோரோலா நிறுவனம் தனது மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போனினை அமெரிக்க சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய மிட் ரேஞ்ச் ஸ்மார்ட்போன் மிகமெல்லிய தோற்றம், வீகன் லெதர் ஃபினிஷ் மற்றும் பில்ட்-இன் ஸ்டைலஸ் கொண்டிருக்கிறது. இதனுடன் வரும் ஸ்டைலஸ் கொண்டு பயனர்கள் குறிப்பு எடுத்தல், டூடுல் உருவாக்குதல், புகைப்படங்களை எடிட் செய்தல் என ஏராளமான அம்சங்களை இயக்க முடியும்.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 6.7 இன்ச் Full HD+ pOLED 120Hz ஸ்கிரீன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், அட்ரினோ GPU, 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த மை யு.எக்ஸ். ஓ.எஸ். மற்றும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 13MP அல்ட்ரா வைடு கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3.5mm ஹெட்போன் ஜாக், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

    கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப் சி போர்ட் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்பட்டும் மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி மாடல் 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    புதிய மோட்டோ ஜி ஸ்டைலஸ் 5ஜி ஸ்மார்ட்போன் காரமெல் லேட் மற்றும் ஸ்கார்லெட் வேவ் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 399.99 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 20 ஆயிரத்து 450 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது.
    • பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் (அம்பானி மற்றும் அதானி) டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது

    கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் (சிபிஐ அமைச்சர்) அமைதி காத்தது ஏன்?

    விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
    • இடைக்கால ஜாமின் வழங்கக் கூடாது என அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் ஜெயலில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கதுறை கைது செய்தது செல்லாது என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான விசாரணையில் தேர்தலை கணக்கில் கொண்ட இடைக்கால ஜாமின் வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கக்கூடாது என அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்திருந்தது.

    இந்த நிலையில் இன்று கெஜ்ரிவால் தொடர்பான விசாரணையின்போது, உச்சநீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. ஜூன் 1-ந்தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது.

    • 'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'.
    • இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார்.

    'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.

    'ஸ்டார்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் படம் வெற்றி பெற நடிகர் சிம்பு நேற்று அவரது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அதில் அவர் ஸ்டார் படக்குழுவினர் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் இப்படம் தனது கனவுகளை துரத்திக் கொண்டு இருக்கும் அனைவரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டார். சமீபத்தில் சிம்பு நடித்து கொண்டு இருக்கும் தக் லஃப் படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
    • மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது.

    கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் படங்கள் வெளிவந்தாலும்  சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. அதனால் ரீரிலீஸ் திரைப்படங்களுக்கு மக்கள் அதிகம் செல்லத் தொடங்கினர். சமீபத்தில் வெளியான அரண்மனை-4 திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதைத் தொடர்ந்து இன்று 4 படங்கள் திரைக்கு வந்துள்ளது.

     

    1.ஸ்டார்

    இளன் இயக்கத்தில் கவின், லால், அதிதி போஹங்கர், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன் மற்றும் பலர் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கிய ஸ்டார் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. ஒரு நடுத்தர குடும்பத்து பின்னணியை வைத்துக் கொண்டு திரைத்துறையில் நடிகனாக சாதிக்க வேண்டும் என போராடும் இளைஞனின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்.

    2. ரசவாதி

    மௌன குரு, மகாமுனி போன்ற வெற்றி படங்களை இயக்கிய சாந்த குமாரின் அடுத்த படைப்பாக ரசவாதி உருவாகியுள்ளது. அர்ஜூன் தாஸ் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசவாதி திரைப்படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    3. உயிர் தமிழுக்கு

    தமிழில் பல வெற்றி படங்களை இயக்கியவர் அமீர், அதைத்தொடர்ந்து திரைப்படங்களில் துணை கதாப்பாத்திரத்திலும் மற்றும் முன்னணி கதாப்பாத்திரத்திலும் நடித்தார். அதைத் தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு உயிர் தமிழுக்கு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனரான ஆதாம் பாவா இயக்கியுள்ளார். இத்திரைப்படம் பொலிடிகல் திரில்லர் பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

     

    4. மாயவன் வேட்டை

    அறிமுக இயக்குனரான சிக்கல் ராஜேஷ் அவரே இயக்கி நடித்து இருக்கும் திரைப்படம் மாயவன் வேட்டை. மூவிலயா பிக்சர்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். சிக்கல் ராஜேஷ் மற்றும் திவ்ய பாரதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மாயவன் வேட்டை ஹாரர் திரைப்படமாக அமைந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் ‘பிரண்டு’தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ்.
    • தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் முன்பு உடல் முழுவதும் எரியும் நெருப்போடு ஓடிய காதல் ஜோடியை பார்த்து பஸ் பயணிகள் கதிகலங்கி போனார்கள்.

    மயிலாடுதுறை டவுன் ஸ்டேசன் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஆகாஷ் (24). பூம்புகாரில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    சிதம்பரம் அடுத்த புவனகிரி கச்சபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிந்துஜா (22). மயிலாடுதுறையில் உள்ள மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    ஆகாஷ் தினமும் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் இருந்து பூம்புகாருக்கு பஸ்சில் செல்வது வழக்கம். முதலாம் ஆண்டு படிப்பை எந்த இடையூறும் இல்லாமல் முடித்தார் ஆகாஷ்.

    2-ம் ஆண்டு படிப்பை தொடர்ந்த போது சிந்துஜா புவனகிரியில் இருந்து பஸ்சில் மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் வந்து இறங்கி கல்லூரிக்கு நடந்து சென்றார்.

    அப்போதுதான் அவர்களுக்குள் காதல் குறுக்கிட்டு உள்ளது. நேருக்கு நேர் சந்தித்த இருவருக்குள்ளும் காதல் பத்திக்கிச்சு, அவ்வளவுதான்.

    ஆகாஷ் ஆகாயத்தில் பறந்தார். சிந்துஜா காதல் சிந்து பாட தொடங்கினார். இருவரும் தினமும் பஸ் நிலையத்தில் சிறிது நேரம் காதல் மொழி பேசிவிட்டுத் தான் கல்லூரிக்கு படிக்க செல்வார்கள்.

    இப்படியே இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்த காதல் அவர்களுக்குள் நெருக்கத்தை அதிகரித்தது.


    அப்போது ஒருநாள் சிந்துஜா கண்ட காட்சி அவர் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தியது. தான் உயிருக்கு உயிராக காதலிக்கும் ஆகாசுடன் வேறொரு பெண் சிரித்து பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜாவால் ஜீரணிக்க முடியவில்லை.

    யார் அந்த பெண்? என்று நேரடியாகவே கேட்ட சிந்துஜாவிடம் 'பிரண்டு'தான் என்று சமாளித்து இருக்கிறார் ஆகாஷ். ஆனால் சிந்துஜாவுக்கு சந்தேகம் வலுத்து கொண்டே வந்தது. அதற்கு காரணம் ஆகாஷின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம்தான். இருவரது நெருக்கத்திலும் ஏற்பட்ட விரிசல் சிந்துஜாவுக்கு சந்தேகத்தை அதிகரித்து வந்தது.

    இதனால் 'என்னை ஏமாற்றிவிடாதே' என்று காதலுடன் கெஞ்சி இருக்கிறார். அதை கேட்டதும் 'உன்னை ஏமாற்றுவேனா?' என்று சொல்லி சிந்துஜாவை நம்ப வைத்துள்ளார் ஆகாஷ்.

    ஆனால் மறுநாளே அந்த பெண்ணும் ஆகாஷும் தனியாக பேசிக் கொண்டிருந்ததை சிந்துஜா பார்த்து உள்ளார். அதை பார்த்ததும் ஆத்திரம் அடைந்த சிந்துஜா ஆகாஷை தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு முன்னுக்குப்பின் முரணாக பேசி இருக்கிறார்.

    அதை கேட்டதும் சிந்துஜாவுக்கு புரிந்துவிட்டது. ஆகாஷுக்கு நம் மீதான காதல் கசிந்துவிட்டது. புதுஆளை பிடித்துவிட்டான் என்று வேதனைபட்டு உள்ளார்.

    எனக்கு கிடைக்காத ஆகாஷ் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது. என்னை ஏமாற்றிய ஆகாஷ் இன்னொருத்தியுடன் வாழக் கூடாது. அதற்கு என்ன வழி? என்று யோசித்த சிந்துஜா கையில் ஒரு பாட்டிலில் பெட்ரோலை வாங்கி கைப்பையில் வைத்து கொண்டு அடிக்கடி இருவரும் அமர்ந்து பேசும் பூம்புகாருக்கு போவோம் என்று அழைத்துள்ளார். ஆகாஷும் சரி என்று பைக்கில் அழைத்து சென்று உள்ளார்.

    தனது திட்டத்தை நிறைவேற்ற ஏனோ தருணம் வாய்க்காததால் திரும்பி வந்த போது ஆகாஷிடம் மீண்டும் அந்த பெண்ணை பற்றி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மயிலாடுதுறை பஸ் நிலையம் வந்ததும் பைக்கை விட்டு இறங்கிய சிந்துஜா, ஆகாஷ் மீது பெட்ரோலை ஊற்றி மின்னல் வேகத்தில் கொளுத்தி விட்டு தன் மீதும் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

    உடலில் பற்றி எரிந்த நெருப்போடு காவிரி ஆற்றுக்குள் ஆகாஷ் ஓடி இருக்கிறார். ஆனால் தண்ணீர் இல்லாததால் தரையில் விழுந்து உருண்டு இருக்கிறார்.

    சிந்துஜா ரோட்டில் ஓடியதை பார்த்ததும் அருகில் இருந்த கடைக்காரர் போர்வையை தூக்கி போட்டு தீயை அணைத்து உள்ளார்.

    காதலர்கள் இருவரும் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    பஸ் நிலையத்தில் மலர்ந்த காதல் அதே பஸ் நிலையத்தில் கருகியதை பார்த்து சக மாணவ-மாணவிகள் வேதனைப்பட்டார்கள்.

    • வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ்விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும்.
    • முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிருப்பதாவது:-

    தி.மு.க. அரசின் வனத்துறை 29.4.2024 அன்று யானை வழித்தடம் குறித்த ஒரு வரைவு அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை செயல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் வனப்பகுதிகளில் காலம் காலமாக வாழும் மலைவாழ் மக்களின் வாழ் விடமும், வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய நிலைமை ஏற்படும். குறிப்பாக, நீலகிரி மாவட்டம், கூடலூரில் வாழும் பல்லாயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

    இந்த வரைவு அறிக்கை 161 பக்கங்களைக் கொண்டு ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மலைவாழ் மக்கள், சாமான்ய மக்கள் இந்த அரசு வெளியிட்டுள்ள ஆங்கில வரைவு அறிக்கையைப் படித்து, அதன்மீது தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்கான சாத்தியக் கூறு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள இந்தச் சூழ்நிலையில் வரைவு அறிக்கைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடுவதற்கான வாய்ப்புகளும் முடக்கப்பட்டுள்ளன.

    இந்த வரைவு அறிக்கையினால் தமிழகத்தின் பல்வேறு வனப்பகுதிகளில் வாழும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் அச்சத்திற்கும், பதட்டத்திற்கும் உள்ளாகி உள்ளனர்.

    ஒரே வருடத்தில் யானை வழித் தடங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி, அதை செயல்படுத்த முனைப்பு காட்டும் தி.மு.க. அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்த அரசு, யானை வழித்தடங்களை அறிவிக்கும் முன்பு, தமிழில் விரிவான வரைவு அறிக்கையினை வெளியிட்டு, மலைவாழ் மக்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளை பதிவு செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கி, முறையான யானை வழித்தடத் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.
    • 5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    டெல்லியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடி போதைப் பொருட்களை கடத்தியதாக கைது செய்யப்பட்ட தி.மு.க. அயலக அணி முன்னாள் நிர்வாகி ஜாபர்சாதிக் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிறையில் வைத்து இன்று 3-வது நாளாக வாக்குமூலத்தை பதிவு செய்தனர். நேற்று வாக்குமூலம் வாங்கிய போது ஜாபர்சாதிக் தாக்கப்பட்டு மிரட்டியதாக பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    இது தொடர்பாக டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் ஜாபர்சாதிக் தரப்பில் அவரது வக்கீல் பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அமலாக்கத்துறை விசாரணையின் போது ஜாபர் சாதிக் அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். விசாரணையின் போது வெற்று காகிதங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அதற்கு அவர் மறுத்ததால் அடித்து உள்ளனர்.

    5-வது குற்றவாளியான சதானந்தத்துக்கு சர்க்கரை நோய் உள்ளதால் அவர் மயக்கம் அடைந்துள்ளார். அவரையும் அதிகாரிகள் அடித்து துன்புறுத்தியுள்ளனர்.

    இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதை தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு அமலாக்கத் துறையினருக்கு பாட்டியாலா கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    • வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    • ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார்.

    கமுதி:

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி காவிய ஜனனி 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

    அவர் ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்களும், தமிழ் பாடத்தில் மட்டும் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    கமுதி தாலுகா பேரையூரை சேர்ந்த தர்மராஜ்-வசந்தி தம்பதியின் மகளான மாணவி காவிய ஜனனிக்கு பள்ளி ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தினர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

    • மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, ​​உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
    • போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள்.

    மும்பை:

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    என்னைப் பொறுத்தவரை, பழங்குடியினருக்கு சேவை செய்வது எனது குடும்பத்திற்கு சேவை செய்வது போன்றதாகும். ஆதிவாசிகளின் நலன் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.

    மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது அளவிட முடியாத பாவம். இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.

    உங்களது ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைக்கப்பட்ட செயல்திட்டம். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டேன்.

    மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள், கொள்கைகளுக்கு எதிரானது. கடந்த 17 நாட்களாக காங்கிரசுக்கு நான் சவால் விடுத்து வருகிறேன். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டை துண்டு துண்டாக வெட்டி முஸ்லிம்களுக்கு ஒரு துண்டாக கொடுக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.

    ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு காவலன். மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?

    வளர்ச்சியில் மோடியுடன் போட்டியிட முடியாது என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே இந்த தேர்தலில் பொய்களின் தொழிற்சாலையை அவர்கள் திறந்துள்ளனர். இந்து நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் இளவரசரின் (ராகுல்காந்தி) குரு சாம் பிட்ரோடா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.

    போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள். இது காங்கிரசுடன் இணைவதற்கு போலி தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முடிவெடுத்திருப்பதற்கான அறிகுறி ஆகும்.

    இவ்வாறு மோடி பேசினார்.


    ×