search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lal"

    • தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லால்.
    • இவர் பணகஷ்டத்தால் ரம்மி விளம்பரத்தில் நடித்தேன் என்றும் இதற்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

    ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்துள்ளனர். இந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தப்படுகிறது. ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்த வில்லன் நடிகர் லால், நடிகை தமன்னா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், விளையாட்டு வீரர்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. இந்த நிலையில் பண நெருக்கடியால் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்து விட்டேன் என்று லால் வருத்தம் தெரிவித்து உள்ளார். இவர் தமிழில் சண்டக்கோழி, மருதமலை, ஆழ்வார், தீபாவளி, தோரணை, கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

    லால்

    லால்

    லால் கூறும்போது ''எனக்கு கொரோனா பரவல் ஊரடங்கின்போது நிறைய பணக் கஷ்டம் ஏற்பட்டது. அப்போது ஆன்லைன் ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடிக்க அழைப்பு வந்தது. நான் நிறைய யோசித்தேன். அதில் நடிப்பதற்கு முன்னால் அரசு அனுமதி வழங்கி இருக்கிறது என்று நினைத்தேன். அப்போது இந்த விளம்பரம் மூலம் பெரிய பிரச்சினை வரும் என்றோ ரம்மி விளையாட்டு பலரை தற்கொலைக்கு கொண்டு செல்லும் என்றோ நினைக்கவில்லை. ரம்மி விளையாட்டு விளம்பரத்தில் நடித்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இனிமேல் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்'' என்றார்.

    ஜெகன் ராஜ்சேகர் இயக்கத்தில் நட்டி நட்ராஜ் - லால் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், படத்திற்கு காட் ஃபாதர் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. #GodFather
    நட்டி நட்ராஜ் நடிப்பில் சதுரங்க வேட்டை பெயர் சொல்லும் படமாக அமைந்தது. அவரது நடிப்பில் கடைசியாக வெளியான போங்கு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில், அவரது அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

    ஜெகன் ராஜ்சேகர் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். காட் ஃபாதர் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் நட்டியுடன் நடிகர் லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நட்டி - லாலின் பாதி முகங்கள் இடம்பெற்றிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதில் அதியமானாக நட்டியும், மருது சிங்கமாக லாலும் நடிக்கிறார்கள்.

    பர்ஸ்ட் கிளாப் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜி.எஸ்.ஆர்ட்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு நவீன் ரவிந்திரன் இசையமைக்க, என்.சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பையும், அருண்சங்கர் துரை கலை பணிகளையும் மேற்கொள்கின்றனர்.

    படத்தின் டிரைலர் மற்றும் இசை ஏப்ரல் மாதம் ரிலீசாக இருக்கிறது. #GodFather #Natty #Lal

    லால், ரேகா, நிஷாந்த், விஷாலி நடிப்பில் குட்டி குமார் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘ஆண்டனி’ படத்தின் விமர்சனம். #Antony #AntonyReview
    கொடைக்கானலில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் லால், தனது மனைவி ரேகாவிற்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், அவருக்கு துணையாக இருக்க போலீஸ் பணியை விட்டு அவருடன் இருந்து வருகிறார். இவர்களின் ஒரே மகன் நிஷாந்த். இவருக்கு போலீஸில் வேலை கிடைக்கிறது.

    நிஷாந்த் நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். மேலும் நாயகி விஷாலியை காதலித்து வருகிறார். இந்த காதல் விஷயம் அம்மா ரேகாவிற்கு பிடிக்கவில்லை. ஆனால், இவர்கள் காதலுக்கு அப்பா லால் துணையாக நிற்கிறார்.

    இதனால், லால் துணையுடன் நிஷாந்தும் விஷாலியும் ரேகாவிற்கு தெரியாமல் பதிவு திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கிறார்கள். அதன்படி காலையில், விஷாலியும், அப்பா லாலுவும் பதிவு திருமண அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். ஆனால், நிஷாந்த் சொன்ன நேரத்தில் வரவில்லை. நிஷாந்த் செல்லும் வழியில் நிலச்சரிவு ஏற்பட்டு மண்ணுக்குள் புதைந்து உயிருடன் சிக்கிக் கொள்கிறார்.



    நீண்ட நேரம் ஆகியும் நிஷாந்த் வராததால், அவருக்கு என்ன ஆனது என்று லால் தேட ஆரம்பிக்கிறார். நிஷாந்த் வேலை செய்யும் இடத்தில் பிரச்சனையா, யாராவது எதிரி இருக்கிறார்களா என்ற கோணத்தில் விசாரித்து தேடி வருகிறார். 

    இறுதியில், லால் தனது மகனை கண்டுபிடித்தாரா? மண்ணுக்குள் சிக்கி இருக்கும் நிஷாந்த் உயிருடன் வெளியில் வந்தாரா? நாயகியுடன் சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிஷாந்த், திறமையாக நடிக்க முயற்சித்திருக்கிறார். போலீசாக கம்பீரமாகவும், மண்ணுக்குள் சிக்கிக் கொண்டு தவிக்கும் இளைஞனாகவும் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் விஷாலி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.



    நாயகனின் அப்பாவாக நடித்திருக்கும் லால், மகனுக்கு என்ன ஆனது? எப்படி கண்டுபிடிப்பது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகனை தேடுவதற்கு இவர் சிகரெட் பிடித்து இறந்து விடுவாரோ என்று திரையில் பார்க்கும் போது பயம் ஏற்படுகிறது. சிகரெட் பிடிப்பதை குறைத்திருக்கலாம். அம்மாவாக நடித்திருக்கும் ரேகா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

    கொடைக்கானலில் ஏற்படும் நிலச்சரிவை மையமாக வைத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் குட்டி குமார். நல்ல கதையை கையில் எடுத்தாலும் அதை படமாக்கிய விதம் சற்று சரிவை ஏற்படுத்தி இருக்கிறது. மண்ணுக்குள் போராடும் நாயகன் மீது பரிதாபம் ஏதும் ஏற்படவில்லை. மாறாக படத்தின் முக்கிய காட்சி எந்தவித உணர்வையும் ஏற்படுத்தாதது பலவீனமாக அமைந்திருக்கிறது. 

    சிவாத்மிகா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையையும் ஒரளவிற்கு ரசிக்க முடிகிறது. பாலாஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் ‘ஆண்டனி’ சுமாரானவன்.
    ×