search icon
என் மலர்tooltip icon

    மகாராஷ்டிரா

    • மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
    • சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மும்பை:

    சமீபகாலமாக சிக்கன் சவர்மா உணவு வகை பிரபலமாகி இருக்கிறது. இருப்பினும் சிக்கன் சவர்மாவை சாப்பிட்டு பலர் நொந்து போன சம்பவங்களும் நடந்துள்ளன.

    தற்போது மும்பை கோரேகாவ் கிழக்கு, சந்தோஷ் நகரில் உள்ள ஓட்டலில் சம்பவத்தன்று சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் 9 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

    3 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல் நிலை மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. சிக்கன் சவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் மும்பை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள நாமக்கல்லில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவியும், கேரளாவில் ஒரு சிறுமியும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர்.
    • இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

    பிரதமர் மோடி இன்று வடக்கு மகாராஷ்டிரா மாவட்டமான சத்தாராவில் உள்ள கராத் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    நான், அமித் ஷா மற்றும் ஜே.பி. நட்டா போன்ற தலைவர்களின் மேற்கோள்களை சித்தரித்து சமூக முரண்பாடுகளை உருவாக்க எதிரிகள் AI-ஐப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி என்னுடைய குரலை வைத்து போலி வீடியோக்கள் உருவாக்குகின்றனர். இது அபாயத்தை ஏற்படுத்தும். போலி வீடியோவை பார்த்தீர்கள் என்றால், காவல்துறைக்கு தகவல் தெரிவியுங்கள்.

    அடுத்த ஒரு மாதங்களில் மிகப்பெரிய சம்பவத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். நான் இந்த குற்றச்சாட்டுகளை மிகவும் தீவிரமாக முன்வைக்கிறேன். சில அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் வகையில் சமூக பதற்றத்தை ஏற்படுத்த விளையாட்டுகள் நடத்தப்படுகின்றன.

    இதுபோன்ற போலி வீடியோக்களில் இருந்து சமூகத்தை காப்பாற்றுவது நமது பொறுப்பு. இதுபோன்ற போலி வீடியோக்களுக்கு பின்னணியில் உள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்தை கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    அமித் ஷா பேசியதாக ஒரு வீடியோவை சித்தரித்து தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன், ரேவந்த் ரெட்டிக்கு சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது

    • தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.
    • ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்த பேரணியின்போது பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் வருடத்திற்கு ஒரு பிரதமர் என 5 பிரதமர்களை உருவாக்க ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    இதற்கிடையே, பிரதமரின் கருத்துக்கு சிவசேனாவின் சஞ்சய் ராவத் பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    பிரதமரை தேர்ந்தெடுக்கும் உரிமை கூட்டணி கட்சிகளுக்கு உள்ளது. அவர்கள் ஒரு வருடத்தில் 2 அல்லது 4 பிரதமர்களை கூட உருவாக்குவார்கள். ஆனால் நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்ல விடமாட்டோம்.

    ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வாதிகாரியை விட கூட்டணி ஆட்சி சிறந்தது. யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது எங்கள் விருப்பம்.

    தற்போது முடிந்துள்ள இரு கட்டங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைந்து வருகிறது.

    வரும் ஜூன் 4 -ம் தேதி அன்று இந்தியா கூட்டணி 300 இடங்களைத் தாண்டி வெற்றி பெறும் என தெரிவித்தார்.

    • இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது.
    • அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது.

    பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிராவின் மேற்கு பகுதியில் உள்ள கோலாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

    கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை சுழற்சி முறையில் வழங்க முடிவு செய்துள்ளது. துணை முதல்வராக இருக்கும் நபரிடம் 2.5 ஆண்டுகள் கழித்து முதல்வர் பதவியை வழங்க திட்டமிட்டுள்ளது. சத்தீஸ்கர் மற்றம் ராஜஸ்தானில் இதே ஏற்பாட்டை செய்திருந்தனர்.

    கர்நாடகா மாநிலத்தின் மாடலான ஓபிசி இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களை சேர்த்ததை மற்ற இடங்களிலும் நீட்டிக்க காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்துள்ளது.

    காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பை மாற்றி மதம் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கி தலித் மற்றும் ஓபிசிக்களின் இடஒதுக்கீடு பயனை பறிக்க விரும்புகிறது. காங்கிரஸ் கட்சி ராமர் கோவிலுக்கு எதிராக மட்டும் இருக்கவில்லை. கும்பாபிஷேகத்திற்கான அழைப்பையும் நிராகரித்தது.

    கோலாபூர் கால்பந்து முனையம் என அறியப்படுகிறது. 2-வது கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டுள்ள காங்கிரஸ் கூட்டணி இரண்டு சுய கோல்களை (Self-Goals) அடித்துள்ளபோது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2-0 என முன்னிலை வகிக்கிறது என்பதை என்னால் சொல்ல முடியும்.

    3-வது கட்ட தேர்தலில் வாக்காளர்கள் அதுபோன்று கோல் அடிப்பார்கள் என நம்புகிறேன். அதன்மூலம் இந்தியா கூட்டணி தோற்கடிக்கப்படும். அடுத்தடுத்த கட்ட தேர்தல்களில் இந்தியா கூட்டணி தோல்வியை சந்திக்க வேண்டும்.

    காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 37 திரும்ப கொண்டு வரப்படும், சிஏஏ ரத்து செய்யப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மோடியின் முடிவை யாராலும் மாற்ற முடியுமா?, அப்படி செய்தால், அதன் பின் விளைவு என்ன என்பது அவர்களுக்கு தெரியுமா?.

    இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஐந்து ஆண்டுகளில் ஐந்து பிரதமர்கள் என முணுமுணுக்கப்படுகிறது. அவர்களால் மூன்று இலக்க இடங்களை பிடிக்க முடியாது அல்லது ஆட்சி அமைப்பதற்கான கதவை தட்ட முடியாது. இருந்தபோதிலும் அவர்கள் வாய்ப்பு பெற்றால் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு பிரதமர் என்ற திட்டத்தை வைத்துள்ளது.

    இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.
    • 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம்.

    ஒரு சில சமயங்களில் நமக்கு பிடித்த வேலையை பெறுவதற்காக பிடிக்காத வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அத்தகைய சூழல்களில் வெறுப்பாகவும், வேலையை முழு ஈடுபாடு இல்லாமலும் செய்ய நேரிடும். சில நேரங்களில் வேலை செய்யும் இடத்தில் என்னதான் சிறப்பாக பணிபுரிந்தாலும் அதற்கேற்ற அங்கீகாரம் கிடைக்காது போகும்.

    ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் ஒவ்வொரு ஆண்டும் எதிர்பார்ப்பது ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு. அதிலும் முக்கியமாக ஊதிய உயர்வு என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிப்பதால் அது கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்போம். அதிலும் 3 ஆண்டுகள் ஊதிய உயர்வு கிடைக்கப்பெறவில்லை என்றால் நாம் என்ன செய்வோம். ஆனால், இங்கு ஒருவர் செய்த செயல் பேசுபொருளாகியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்துள்ளார் அன்கேத். கடந்த 3 ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து வேலையை ராஜினாமா செய்துள்ளார். வேலையை ராஜினாமா தானே செய்துள்ளார் என்றால் சரி. அதனை கொண்டாடும் விதமாக இசைக்குழுவுடன் இணைந்து நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதால் தற்போது பேசுபொருளாகியுள்ளார்.

    ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அன்கேத், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைத்து அன்கேத், நிறுவனத்தின் மேலாளர் அலுவலகம் முடிந்து வெளியில் வந்த போது வாசல் முன்பு மகிழ்ச்சியுடன் மேளம் அடித்து ஆடிப்பாடி நடனம் ஆடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அன்கேத் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

    • கைது செய்யப்பட்ட கூலி படையினரிடமிருந்து கை துப்பாக்கி, போலி எண் பலகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • சம்பவம் நடந்த இடத்தில் உணவு வினியோக நிறுவனத்தின் பைகள் கிடந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புனே:

    புனேவை சேர்ந்தவர் தினேஷ் சந்திரா என்ற பாலா சாகேப் ஆர்கேட் (வயது65). ரியல் எஸ்டேட் அதிபர் இவரது மகன் தீரஜ் (வயது 38). தீரஜின் நடத்தையில் தினேஷ் சந்திரா சந்தேகப்பட்டார். இதனால் குடும்பத்தில் மகனுக்கும் தந்தைக்கும் சொத்து தகராறு ஏற்பட்டது.

    தீரஜின் நடவடிக்கையால் தனது ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்படும் என்று தினேஷ் சந்திரா கருதினார்.

    இதனால் மகனை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். இதற்காக கூலிப்படை உதவியை நாடினார். கூலிப்படைக்கு ரூ.75 லட்சம் பேரம் பேசி ரூ.20 லட்சம் முன்பணமாக கொடுத்துள்ளார்.

    கூலிப்படையினர் புனே ஜே.எம். சாலையில் தீரஜ் சென்ற போது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.

    இதில் குறி தவறியதால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். கொலை கும்பலிடமிருந்து தப்பிய தீரஜ் இது சம்மந்தமாக புனே போலீசில் புகார் செய்தார்.

    போலீஸ் கமிஷனர் அமிதேஷ்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் ஷபீர் சயித் கொலை முயற்சி நடந்த ஜே.எம். சாலையில் இருந்து கோத்ரூட்டில் உள்ள சுதர்தாரா வரை சுமார் 200 கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தார்.

    இதில் தீரஜை கொல்ல முயன்றவர்கள் அடையாளம் தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்தி கூலிப்படையாக செயல்பட்ட அசோக் தோம்ரா, பிரசாந்த் காட்ஜ், பிரவீன் குட்லே, யோகேஷ் ஜாதவ் மற்றும் சேட்டான் போக்லே ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் தீரஜ்ஜின் தந்தையான தினேஷ் சந்திரா மகனை கூலிப்படை ஏவி கொலை செய்ய முயன்ற தகவல் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரையும் கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட கூலி படையினரிடமிருந்து கை துப்பாக்கி, போலி எண் பலகை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்தில் உணவு வினியோக நிறுவனத்தின் பைகள் கிடந்தது. அதனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தினேஷ் சந்திரா தனது மகனை கண்காணிக்க அவரது காரில் ஜி.பி.எஸ். கருவியை பொருத்தியுள்ளார். அதன் மூலம் தீரஜ் எங்கு இருக்கிறார் என்பன உள்பட அவரது நடவடிக்கைகளை கண்காணித்து கூலிப்படை இந்த கொலை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்டது.

    இந்த சம்பவம் புனேவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.
    • திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம்.

    மகாராஷ்டிரா:

    இந்திய பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது.

    அந்தவகையில் கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், மணிப்பூர், திரிபுரா, காஷ்மீர் போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

    2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 2-ம் கட்டமாக 8 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க திருமண கோலத்தில் மணமகன் ஆகாஷ், அமராவதியின் வதர்புரா பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் கூறியபோது,

    திருமண விழா முக்கியமானது தான் ஆனால் வாக்களிப்பதும் முக்கியம். இன்று மதியம் 2 மணிக்கு திருமணம் நடைபெற உள்ளது என்று கூறினார். 


    • மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர்.
    • இந்த வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.

    மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் போபால் தொகுதி பா.ஜனதா எம்.பி. பிரக்யா சிங் தாகூர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய வேண்டும் என சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது.

    பலமுறை சம்மன் அனுப்பியும் பிரக்யாக சிங் ஆஜராகாமல் இருந்தார். தொடர்ந்து சம்மன் அனுப்பியும் ஆஜராக நிலையில், ஏப்ரல் 25-ந்தேதிக்குள் (இன்று) நேரில் ஆஜராக வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்தது.

    இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் இன்று ஆஜரானார். அப்போது தான் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவித்தார். மேலும், உள்ளங்கையால் கையெழுத்து போட முடியாததால் கைரேகை வைக்க அனுதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், கேள்வி- பதில் வடிவில் தனது அறிக்கையை தாக்கல் செய்தார். நீதிமன்றம் அதற்கு அனுமதி அளித்தது.

    பிரக்யா தாகூர் உள்ளிட்ட ஆறு பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அது தொடர்பாக விசாரணையை சந்தித்து வருகிறார்கள்.

    மலேகானில் மசூதிக்கு அருகே மோட்டார் சைக்களில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து ஆறு பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ந்தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் இந்த குண்டு வெடிப்பு நடைபெற்றது.

    முதலில் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வந்தது. அதன்பின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ)க்கு மாற்றப்பட்டது.

    • ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
    • ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி உத்தரவு.

    2023ம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகளை ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்ட விவகாரத்தில், நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    அதில், நடிகை தமன்னா நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப viacom நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

    ஆனால், தமன்னா ஃபேர்பிளே என்ற செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக viacom சார்பில் புகார் எழுப்பப்பட்டது.

    அதன்படி, ஏப்ரல் 29ம் தேதி அன்று தமன்னா நேரில் ஆஜராகும்படி மும்பை சைபர் கிரைம் சம்மன் அனுப்பியுள்ளது.

    • 2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
    • இந்த ஊழல் நடந்தபோது, மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குனராக இருந்தார்

    மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளுக்கு 5 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே முதற்கட்டத் தேர்தலின்போது 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.

    மகாராஷ்டிராவில் வி.ஐ.பி தொகுதியாகக் கருதப்படும் பாராமதியில் சரத் பவார் மகள் சுப்ரியா சுலேயும், துணை முதல் மந்திரி அஜித் பவார் மனைவி சுனேத்ர பவாரும் போட்டியிடுகின்றனர். இந்த பாராமதி தொகுதிக்கு மே 7ஆம் தேதி மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மனைவி சுனேத்ரா பவார் மீதான ₹25,000 கோடி கூட்டுறவு வங்கி மோசடி வழக்கில், அவர் மீது குற்றமில்லை என்றும் வங்கிகளுக்கு பணம் இழப்பே இல்லை என்றும் வழக்கை மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை மூடியுள்ளது.

    இதுகுறித்து உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தலைவர் ஆனந்த் துபே கருத்து தெரிவித்துள்ளார். அதில், "பிரதமர் மோடி இந்தக் குற்றச்சாட்டை எழுப்பி, இது ஊழல் குடும்பம் என்று கூறினார். ஆனால், இன்று அவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டு பாஜகவில் இணைந்த தலைவர்கள் அனைவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் எந்த குற்றச் செயலையும் பார்க்கவில்லை என மாநில பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது" என அவர் கூறினார்.

    2021-ம் ஆண்டு மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் நடந்த ரூ.25,000 கோடி ஊழல் தொடர்பாக விசாரிக்க, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்த ஊழல் நடந்தபோது, தற்போது மகாராஷ்டிரா துணை முதல்வராக இருக்கும் அஜித் பவார் உட்பட, தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் இயக்குநர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏக்நாத் ஷிண்டே கட்சியின் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.
    • மயங்கிய நிலையில் கட்கரியை மற்ற தலைவர்கள் தாங்கியபடி அழைத்துச் சென்றனர்.

    பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் நிதின் கட்கரி. இவர் மத்திய அமைச்சராகவும் இருந்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

    இவர் மகாராஷ்டிரா மாநிலம் யவாத்மல் என்ற இடத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி வேட்பாளருர் ராஜஸ்ரீ பாட்டிலுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தது. பேசிக்கொண்டிருந்தபோதே திடீரென மயங்கினார்.

    இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தலைவர்கள் அவரை தூக்கிக்கொண்டு சென்றனர். இந்த காட்சிகள் அடங்கிய வீடியோ வெளியேனதால் தலைவர்களும், தொண்டர்கள் நிதின் கட்கரிக்கு என்ன ஆனதோ, என கவலை அடைந்தனர்.

    ஆனால், மயக்க நிலைக்கு சென்ற நிதின் கட்கரி முறையாக சிகிச்சை பெற்று, பின்னர் மேடைக்கு வந்து தனது பேச்சை தொடர்ந்தார். ஆனால், துரதிருஷ்டவசமாக அவர் மயங்கிய நிலைக்கு சென்ற வீடியோ எக்ஸ் பக்கத்தில் பரவத் தொடங்கியுள்ளது.

    நிதின் கட்கரி 2014 மற்றும் 2019-ல் நாக்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    • டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார்
    • மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்

    சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 51 - வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு கிரிக்கெட் உலக வீரர்கள்,மற்றும் நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

    டெண்டுல்கர் 24- 4- 1973-ம் ஆண்டு மும்பையில் பிறந்தார். டெண்டுல்கருக்கு தற்போது 51 வயதாகிறது. கிரிக்கெட்டின் கடவுள் என்று சச்சின் அழைக்கப்படுகிறார்.சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை மற்றும் சாதனைகள் வருமாறு :-




    டெண்டுல்கர் 11 வயதில் கிரிக்கெட் விளையாட்டில் தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். அவரது மூத்த சகோதரர் அஜித் டெண்டுல்கர் அவரை ஊக்குவித்தார்.

    1988 -ல், 15 வயதில் சச்சின் டெண்டுல்கர், குஜராத்திற்கு எதிராக ரஞ்சி டிராபி ஆட்டத்தில் பம்பாய்க்காக முதல் தடவையாக கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இந்தப் போட்டியில் சதம் அடித்த அவர், முதல்தர போட்டியில் சதம் அடித்த இளம் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.




    ரஞ்சி டிராபி, இரானி டிராபி மற்றும் தியோதர் டிராபி ஆகிய 3 உள்நாட்டுப் போட்டிகளிலும் அறிமுகத்திலேயே சதம் அடித்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அறிமுகமான இளம் வீரர் இவர்.

    டெண்டுல்கர் 6 உலக கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடியவர் சச்சின் டெண்டுல்கர். அவர் 664 போட்டிகளில் ஆடியுள்ளார்.

    மொத்தம் 34,347 ரன்களை பதிவு செய்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச வரலாற்றில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் இவர் தான். 20 ஆண்டுகளுக்கு மேலாக தனது இணையற்ற பேட்டிங் நுட்பங்களால் கிரிக்கெட் உலகில் ஜொலித்தார்.



    இவரது சாதனைகளுக்காக இந்திய அரசு டெண்டுல்கருக்கு பல விளையாட்டு விருதுகளை வழங்கி கவுரவித்தது. 1994 -ல் அர்ஜுனா விருது, 1997 -ல் கேல் ரத்னா விருது, 1998 -ல் பத்மஸ்ரீ, 2008 -ல் பத்ம விபூஷன் ,2013 -ல் பாரத ரத்னா விருதுகளை பெற்றுள்ளார்.

    ×