என் மலர்
தொழில்நுட்பம்
- கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது.
- ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ, வோடஃபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை கடந்த ஜூன் மாதம் அதிரடியாக உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தன. இதனிடையே பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டது. இதனால் பலரும் பிஎஸ்என்எல்-க்கு மாறினர்.
இந்த நிலையில், ரீசார்ஜ் கட்டணத்தை மீண்டும் உயர்த்த ஏர்டெல் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஜூன் மாதம் கட்டண உயர்வுக்குப் பின் 2-வது காலாண்டில் ரூ. 3,593 கோடி நிகர லாபம் ஈட்டிய நிலையில் ஏர்டெல் நிறுவனம் மீண்டும் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தகவலால் அதிர்ச்சி அடைந்துள்ள ஏர்டெல் நிறுவன வாடிக்கையாளர்கள் அடுத்த எந்த மொபைல் நிறுவனத்திற்கு மாறலாம் என யோசிக்க தொடங்கி உள்ளனர்.
- ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் நிறுவனம் இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
- 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இது பயன்பாட்டில் உள்ளது
காண்டம் [Condom] என்பது கரு உருவாகாமல் இருக்க உடலுறவின் போது பயன்படுத்தப்படும் பாதுகாப்பு உறை ஆகும். ஆனால் தற்போது டிஜிட்டல் காண்டம் என்ற புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பல்வேறு பிரச்சனை மனிதர்களுக்குக் கொண்டு வந்தாலும் அதற்கான தீர்வும் அடுத்தடுத்து உருவாகி வருகின்றன. கேமராவில் ரகசியமாகப் படம் பிடித்து மிரட்டுவது உள்ளிட்ட அபாயங்கள் பெருகி வருவதால் அதை தடுக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட மென்பொருளே இந்த டிஜிட்டல் காண்டம்.
ஜெர்மனியைச் சேர்ந்த பில்லி பாய் என்ற நிறுவனம் உருக்காக்கியுள்ள கேம்டம் [Camdom] என்ற செயலி டிஜிட்டல் காண்டம் என்று குறிப்பிடப்படுகிறது. யாரேனும் அத்துமீறி வீடியோ பதிவு செய்தால் இந்த செயலியிலிருந்து அபாய Alarm அடிக்கும்.

அந்த வகையில் தம்பதிகள் பாதுகாக்கப்படுவதால் இது டிஜிட்டல் காண்டம் என்று அறியப்படுகிறது. இந்த செயலி தற்போதுவரை 30க்கும் மேற்பட்ட நாடுகளில்பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனம் சத்தமின்றி தனது C75 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்தது. போக்கோ சர்வதேச வலைதளத்தில் போக்கோ C75 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. போக்கோ C75 மாடலில் மீடியாடெக் ஹீலியோ ஜி81 அல்ட்ரா பிராசஸர், 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை 50MP பிரைமரி கேமரா, இரண்டாவது சென்சார், 13MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் ரேம் திறனை 16 ஜிபி வரை நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 5160 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. கனெக்டிவிட்டிக்கு டூயல் சிம் வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஹைப்பர் ஓஎஸ் கொண்டுள்ளது.
புதிய போக்கோ C75 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 9 ஆயிரத்து 164 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 10 ஆயிரத்து 845 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
- ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
- துபாயில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை வாங்கியுள்ளனர்
அதிக ஓடிடி தளங்களின் வருகையால் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் நிறுவனம் இந்தியாவில் தனது வாடிக்கையாளர்களை இழந்து வருவதால் மற்றொரு ஓடிடி தளத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டது. அதன்படி அம்பானியின் ரிலையன்ஸ் நடத்தும் ஜியோ சினிமாவுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் இணையும் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.
இந்த இரண்டு தளங்களும் இணைந்தால் அதற்கு ஜியோ ஹாட்ஸ்டார் என்று பெயர் வைக்கப்படும். ஹாட்ஸ்டார் ஜியோ சினிமாவுடன்தான் இணையும் என்பதை முன்கூட்டியே ஆராய்ந்து அறிந்த டெல்லியை சேர்ந்த மொபைல் அப்ளிகேஷன் டெவலப்பர் ஒருவர் ஜியோ ஹாட்ஸ்டார் [Jio- hotstar.com] என்ற இணையதள முகவரியை [domain] முன்கூட்டியே கண்டது வருடமே வாங்கி வைத்தார்.
இந்த முகவரியை சொந்தமாக்கினால் மட்டுமே தற்போது ஒருங்கிணைத்து ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உருவாக்க உள்ள ஓடிடி அந்த பெயரில் செயல்பட முடியும். இந்நிலையில் அந்த முகவரியை அவர் ரிலையன்ஸிடம் நல்ல விலைக்கு விற்கவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது. அந்த முகவரிக்கு ரூ.1 கோடி வரை அந்த டெவலப்பர் விலை வைத்திருந்தார் என்ற தகவல்களும் வெளியாகின.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் ஜியோ ஹாட்ஸ்டார் துபாயை சேர்ந்த இருவருக்கு டெல்லி டெவலப்பர் ரூ.1 கோடிக்கு விற்பனை செய்துள்ளார். அந்த இருவரும் குழந்தைகள் என்பது இந்த விவகாரத்தை அதிக சுவாரஸ்யமாகியுள்ளது. துபாயில் உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜைனம் மற்றும் ஜீவிகா என்ற சகோதர சகோதரி இரட்டையர் அந்த முகவரியை ரூ.1 கோடிக்கு வாங்கியுள்ளனர்.
இவர்கள் இருவரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகளுக்குக் கல்வி ரீதியாக உதவி செய்யும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அவர்கள் வாங்கி உள்ள ஜியோ ஹாட்ஸ்டார் இணைய முகவரியை அதற்கு பயன்படுத்த உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
- இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.
- வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுகிறது.
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் ஓடிபி [OTP] எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்டுகள் முக்கிய பங்கு வகிக்கிறது. வங்கி சேவைகள், டெலிகாம் சேவைகள் என பல துறைகளில் ஓடிபி இன்றியமையாததாக உள்ளது. இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஓடிபி மெசேஜ் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.கடந்த ஆகஸ்ட் மாதம் இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) புதிய விதி ஒன்றை அறிமுகப்படுத்தியது.

ஆன்லைன் மோசடிகளை தடுக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்ட அந்த அந்த விதிப்படி எல்லா ஓடிபி மெசேஜ்களையும் டிராய் கண்காணிக்கும். அப்படி டிராக் செய்யப்பட்ட ஓடிபிகள் அங்கீகரிக்கப்படாத நிறுவனங்கள் மூலம் பயனர்களுக்கு சென்றால் அது தடுத்து நிறுத்தப்படும்.
இதனால் தங்களுக்கு அனுப்பும் ஓடிபிகளை பயனர்களால் பார்க்க முடியாது. வங்கிப் பரிவர்த்தனை, டெலிவரி அப்டேட்கள், பணப் பரிவர்த்தனை அலெர்ட்கள் போன்ற அனைத்திற்கும் ஓடிபி பயன்படுத்தப்படும் நிலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த ஓடிபிகளை நேரடியாக அல்லாமல் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் மூலம் ஓடிபி எண்களை அனுப்புகிறது.
எனவே அவ்வாறு செயல்படும் டெலி மார்க்கெட்டிங் நிறுவனங்கள் வங்கியால் அங்கீகரிக்கப்படாத, அடையாளம் காணக்கூடியதாக இல்லாவிட்டால், அந்த மெசேஜ்கள் தடைபடும். தற்போதுள்ள பல டெலிமார்க்கெட்டிங் நிறுவனங்களுக்கு இந்த சிக்கல் உள்ளது.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடாஃபோன் - ஐடியா ஆகிய நிறுவனங்கள் சார்ந்திருக்கும் டெலி மார்கெட்டிங்கில் இந்த சிக்கல் உள்ளதால் அந்த அவற்றின் ஓடிபி சேவைகள் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புள்ளது. எனவே இதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று இந்நிறுவனங்கள் டிராய் இடம் கோரிக்கை வைத்துள்ளது.
- இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.
- இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபைண்ட் X8 சீரிஸ்- X8 மற்றும் X8 ப்ரோ மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்தது. இரு மாடல்களிலும் மீடியாடெக் டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர்ஓஎஸ் 15 உள்ளது. முதற்கட்டமாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள X8 சீரிஸ் மாடல்கள் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று ஒப்போ தெரிவித்துள்ளது.
அம்சங்களை பொருத்தவரை ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 6.59 இன்ச் 1.5K AMOLED LTPO பேனல், 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. ஃபைண்ட் X8 ப்ரோ 6.78 இன்ச் 2K மைக்ரோ எல்இடி AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டுள்ளது. இரு மாடல்களிலும் 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொண்டுள்ளது.

இத்துடன் இரு மாடல்களிலும் மீடியாடெகி டிமென்சிட்டி 9400 சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. ஃபைண்ட் X8 மாடலில் 50MP வைடு ஆங்கில் கேமரா, 50MP ஹேசில்பிலாடு போர்டிரெயிட் கேமரா, 50MP அல்ட்ரா வைடு லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோ மாடலில் கூடுதலாக 50MP டெலிபோட்டோ கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 32MP செல்ஃபி கேமரா உள்ளது.
ஒப்போ ஃபைண்ட் X8 மாடலில் 5630 எம்ஏஹெச் பேட்டரி, X8 ப்ரோ மாடலில் 5910 எம்ஏஹெச் பேட்டரியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் 100 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் மேக்னடிக் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் மாடல்கள் ஆண்ட்ராய்டு 15 சார்ந்த கலர் ஓஎஸ் 15 கொண்டுள்ளன.
இரு மாடல்களிலும் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், IP69 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, வைபை 7, யுஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் என்எஃப்சி வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ஃபைண்ட் X8 சீரிஸ் விலை இந்திய மதிப்பில் ரூ. 49,615 என துவங்குகிறது.
- ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் சலுகைகளில் மாற்றம் செய்துள்ளது.
- மூன்று ரீசார்ஜ்களில் இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ஏர்டெல். அவ்வப்போது பிரீபெயிட் சலுகைகளை மாற்றியமைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதுவகை ரிசார்ஜ் சலுகைகளை அறிவித்து இருக்கிறது.
ஏர்டெல் அறிவித்து இருக்கும் புதிய சலுகைகளுடன் விபத்து காப்பீடு வசதி வழங்கப்படுகிறது. இதற்காக ஏர்டெல் நிறுவனம் ஐசிஐசிஐ லாம்பார்டு உடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் நிறுவனம் ரூ. 239, ரூ. 399 மற்றும் ரூ. 999 சலுகைகளில் விபத்து காப்பீடு வசதி வழங்குகிறகு.
இதில் ரூ. 239 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ரூ. 399 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 28 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும்.
ரூ. 999 சலுகையில் தினமும் 1.5 ஜிபி டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. இத்துடன் வழங்கப்படும் விபத்து காப்பீடு திட்டத்தில் உயிரிழப்புக்கு ரூ. 1 லட்சம், ரீசார்ஜ் செய்த 30 நாட்களுக்குள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதில் சலுகையின் வேலிடிட்டி 80 நாட்கள், காப்பீடுக்கான வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும்.
ஏர்டெல் விபத்து காப்பீடு பயன்பெறுவது எப்படி?
விபத்து காப்பீடுகளில் பயன்பெற 48 மணி நேரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும்.
இதற்கு முதலில் ஏர்டெல் வலைதளம் சென்று அக்கவுண்டில் சைன்-இன் செய்ய வேண்டும். அடுத்து இங்கிருந்தே விபத்து காப்பீடு தொடர்பான கோரிக்கையை எழுப்ப முடியும். ஒருவேளை அதில் ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை 121 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி.
- தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் முற்றிலும் புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லோகோவுடன் ஏழு புது சேவைகள் பி.எஸ்.என்.எல்.-இல் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய லோகோவில் "கனெக்டிங் இந்தியா" நீக்கப்பட்டு "கனெக்டிங் பாரத்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.
புதிய லோகோ அறிமுகம் செய்யப்பட்டதோடு ஸ்பேம்-இல்லா நெட்வொர்க், தேசிய அளவில் வைபை ரோமிங் சேவை, பி.எஸ்.என்.எல். ஹாட்ஸ்பாட் மூலம் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி அதிவேக இணைய வசதி வழங்கப்படுகிறது.
இத்துடன் ஃபைபர் சார்ந்த இன்ட்ராநெட் டிவி சேவை வழங்கப்படுகிறது. இதில் 500 நேரலை டிவி சேனல்கள், FTTH பயனர்களுக்கு பே டிவி ஆப்ஷன் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படுகிறது. மேலும் டிவி ஸ்டிரீமிங் FTTH டேட்டாவில் கழிக்கப்படாது.
இதுதவிர சிம் கியோஸ்குகளையும் பி.எஸ்.என்.எல். அறிமுகப்படுத்துகிறது. இதை கொண்டு பயனர்கள் எளிதில் சிம் வாங்குவது, போர்ட் செய்வது தொடர்பான சேவைகளை பயன்படுத்த முடியும். இதுதவிர சி-டி.ஏ.சி. மற்றும் பி.எஸ்.என்.எல். இணைந்து தனியார் 5ஜி நெட்வொர்க் சேவையை வழங்க உள்ளன. இதனை மைனிங்கிற்காக பயன்படுத்தலாம்.
இந்த நெட்வொர்க் மேம்பட்ட ஏ.ஐ., ஐ.ஓ.டி. செயலிகளை சப்போர்ட் செய்யும். இறுதியில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் டி2டி கனெக்டிவிட்டி சொல்யூஷன் வழங்கப்படுகிறது. இது செயற்கைக்கோள் மற்றும் டெரஸ்ட்ரியல் மொபைல் நெட்வொர்க்குகளை ஒருங்கிணைக்கிறது.
- புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன.
- இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 13 இன் வெளியீட்டு தேதி மற்றும் அதன் வடிவமைப்பு, வண்ணங்கள் குறித்த அறிவிப்பை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13 வருகிற 31-ந்தேதி அன்று சீனாவில் வெளியிடப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் அதற்கு முந்தைய ஒன்பிளஸ் 12 போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. ஆனால் சிறிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
ஒன்பிளஸ் 13: வடிவமைப்பு மற்றும் வண்ண விருப்பங்கள்
ஒன்பிளஸ் 13 மைக்ரோ-குவாட்-கர்வ்டு டிஸ்ப்ளே, பின்புறம் வட்ட வடிவ கேமரா மாட்யுல் உடன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டுள்ளது. முந்தைய மாடல்களைப் போல் இல்லாமல், புதிய ஸ்மார்ட்போனில் வட்ட வடிவம் கொண்ட கேமரா ஐலேண்ட் தனியாக இடம்பெற்றுள்ளது. இதில் மூன்று லென்ஸ்கள், சதுரங்க வடிவத்தால் ஆன எல்இடி ஃபிளாஷ் உள்ளது.
புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனிலும் ஹேசில்பிலாடு பிரான்டு கேமராக்களே வழங்கப்படுகின்றன. இதை குறிக்கும் பிரான்டிங் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இடம்பெற்று இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை டான், அப்சிடியன் பிளாக் மற்றும் ப்ளூ மொமென்ட் ஆகிய மூன்று வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கும் என்பதையும் ஒன்பிளஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
ஒன்பிளஸ் 13 மாடலில் குவால்காம் நிறுவனத்தின் சமீபத்திய ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்ட முதல் சாதனங்களில் ஒன்றாக இருக்கும். இந்த புதிய சிப், குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் உச்சிமாநாட்டில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் 6000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் 100 வாட் வயர்டு சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
புகைப்படங்களை எடுக்க ஒன்பிளஸ் 13 மாடலில் சோனியின் 50MP LYT-808 சென்சார், f/1.6 பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா-வைடு லென்ஸ், 3x ஆப்டிகல் ஜூம் வசதி, 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா வழங்கப்படும் என தெரிகிறது.
- 90W வயர் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி.
- 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ். 6.36 இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே.
சியோமி ஸ்மார்ட்போனின் 15 சீரிஸ் மாடல்கள் விரைவில் சீனாவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அந்த ஸ்மார்ட்போனின் சிறப்பும்சங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. சியோமி 15 ப்ரோ மற்றும் 15 அல்ட்ரா மாடல்கள் வெளியாக உள்ளது. இது 2023-ல் வெளியான சியோமி 14-ன் தொடர்ச்சியாக இருக்கும்.
சியோமி 15 ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் கொண்டதாகவும், 6.36 இன்ச் பிளாட் AMOLED டிஸ்பிளே கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1.5K resolution மற்றும் refresh rate of 120Hz கொண்ட டிஸ்பிளே. OmniVision OV50H sensor உடன் 50 மெகா பிக்சல் கேமரா வசதி, 50-megapixel ultra-wide angle lens மற்றும் 50-megapixel 3.2x telephoto வசதி உள்ளடக்கியதாகவும் இருக்கும்.
ஹைப்பர் ஓ.எஸ். 2.0 அடிப்படையிலான அண்ட்ராய்டு 15 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கக் கூடியதாகும். 90W வயர் மற்றும் 50W வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி கொண்டது. 16GB ரேம் மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி கொண்ட போனாக இருக்கும். கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும்.
- இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய ஐபேட் மினி மாடல் 3 மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபேட் மினி மாடலை அப்டேட் செய்துள்ளது. புதிய ஐபேட் மினி மாடலில் ஏ17 ப்ரோ சிப்செட், ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மாடலில் 8.3 இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மினி மாடல் 128 ஜிபி, 256 ஜிபி மற்றும் 512 ஜிபி மெமரி வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த டேப்லெட் மாடல் ஐபேட் ஓ.எஸ். 18 கொண்டிருக்கிறது. இத்துடன் 12MP பிரைமரி கேமரா, ட்ரூ டோன் ஃபிளாஷ், 12MP அல்ட்ரா வைடு செல்பி கேமரா, ரெட்டினா ஃபிளாஷ், டூயல் மைக்ரோபோன்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன.

டச் ஐடி சென்சார் கொண்டிருக்கும் புதிய ஐபேட் மினி மாடலில் கனெக்டிவிட்டிக்கு 5ஜி, ஜிகாபிட்-கிளாஸ் எல்டிஇ, வைபை 6, ப்ளூடூத் 5.3, யுஎஸ்பி 3 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 19.3 வாட் பேட்டரி வங்கப்பட்டு இருக்கிறது.
புதிய ஐபேட் மினி மாடல் ஸ்டார்லைட், ஸ்பேஸ் கிரே, புளூ மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 128 ஜிபி விலை ரூ. 49 ஆயிரத்து 900 என்றும் 128 ஜிபி வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 64 ஆயிரத்து 900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதன் 256 ஜிபி மெமரி மாடல் விலை 59 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 512 ஜிபி வைபை 79 ஆயிரத்து 900 என்றும் வைபை + செல்லுலார் மாடல் விலை ரூ. 94 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேம்பட்ட ஐபேட் மினி மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை அக்டோபர் 23 ஆம் தேதி துவங்குகிறது.
- குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.
- இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.
இந்திய டெலிகாம் சந்தையில் முன்னணி நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. சமீபத்தில் தனது ரீசார்ஜ் கட்டணங்கள் விலையை உயர்த்திய ஜியோ நிறுவனம் இடையில், புதிய சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிதாக சர்வதேச (ISD) ரீசார்ஜ் பேக்குகளை அறிவித்துள்ளது.
ஜியோ நிறுவனத்தின் புதிய ISD ரீசார்ஜ் சலுகைகளின் விலை ரூ. 39 முதல் துவங்கி அதிகபட்சம் ரூ. 99 வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ஐஎஸ்டி மினிட் பேக் என அழைக்கப்படும் புதிய சலுகைகள் பயனர்களுக்கு எவ்வித கூடுதல் பலன்களும் இன்றி குறிப்பிட்ட நிமிடங்களுக்கு சர்வதேச அழைப்புகளை பேச அனுமதிக்கிறது.

குறுகிய காலக்கட்டத்திற்கு சர்வதேச அழைப்புகளை மேற்கொள்வோருக்காக இந்த ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ. 39 விலையில் கிடைக்கும் சலுகையில் 30 நிமிடங்கள் வரை அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் உள்ள எண்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதே போன்று வங்கதேசத்திற்கு ரூ. 49 விலையில், 20 நிமிடங்கள் வரை பேசலாம்.
சிங்கப்பூர், தாய்லாந்து, ஹாங் காங் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள 15 நிமிடங்களுக்கு ரூ. 49 செலுத்த வேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு பேச 15 நிமிடங்களுக்கு ரூ. 69 செலுத்த வேண்டும்.
பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு அழைப்பு மேற்கொள்ள 10 நிமிடங்களுக்கு 79 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சீனா, ஜப்பான் மற்றும் பூடானுக்கு 15 நிமிடங்கள் பேச ரூ. 89 ரீசார்ஜ் செய்ய வேண்டும். ரூ. 99 ரீசார்ஜ் செய்யும் போது ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, துருக்கி, குவைத் மற்றும் பஹ்ரைனுக்கு பத்து நிமிடங்கள் அழைப்புகளை மேற்கொள்ளலாம்.
இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்கள் ஜியோ பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இவற்றின் வேலிடிட்டி ரீசார்ஜ் செய்ததில் இருந்து ஏழு நாட்கள் ஆகும்.






