என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    • ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.
    • சீன வெர்ஷனில் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன் 50MP கேமரா கொண்டிருந்தது.

    சியோமி நிறுவனம் சீன சந்தையில் தனது ரெட்மி நோட் 14 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போன்களில் 50MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 200MP பிரைமரி கேமரா வழங்கப்படும் என தெரியவந்துள்ளது.

    இது குறித்து சியோமிடைம் வெளியிட்டுள்ள தகவல்களில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் சாம்சங்கின் ISOCELL HP3 கேமரா சென்சார் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சீன சந்தையில் விற்பனை செய்யப்படும் ரெட்மி நோட் ஸ்மார்ட்போன்களில் உள்ள 50MP பிரைமரி கேமரா சர்வதேச சந்தையில் விற்பனைக்கு வரும் ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படாது என கூறப்படுகிறது. இந்தியாவில் ரெட்மி நோட் 14 ப்ரோ சீரிஸில் எந்த மாற்றமும் செய்யப்படாது என தெரிகிறது.

    சர்வதேச சந்தையில் ரெட்மி நோட் 14 ப்ரோ மற்றும் ப்ரோ பிளஸ் மாடல்களில் 200MP சாம்சங் ISOCELL HP3 கேமரா சென்சார் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதே ஸ்மார்ட்போனின் சீன வெர்ஷனில் 50MP கேமரா தான் வழங்கப்பட்டு இருக்கிறது.

    • இந்த ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் புளூ, கிராஃபைட் மற்றும் மின்ட் என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.

    அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ சூப்பர் AMOLED இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், எக்சைனோஸ் 2400e பிராசஸர், 8 ஜிபி ரேம், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஓஎஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏழு ஓஎஸ் அப்டேட்கள், ஏழு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக சாம்சங் அறிவித்துள்ளது.

     


    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு லென்ஸ், 8MP டெலிபோட்டோ லென்ஸ், OIS, 10MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இத்துடன் IP68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. 4700 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போன் 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

    விலையை பொருத்தவரை கேலக்ஸி S24 FE ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 65 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், விற்பனை அக்டோபர் 3 ஆம் தேதி துவங்குகிறது. 

    • இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.

    சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் ஸ்மார்ட்போன்-ஐ அறிமுகம் செய்தது. முன்னதாக சாம்சங் நிறுவனம் ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்திய கேலக்ஸி M15 மாடலில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் புதிய மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    அதன்படி புதிய கேலக்ஸி M15 5ஜி மாடலில் 6.5 இன்ச் FHD+ 90Hz AMOLED இன்ஃபினிட்டி வி டிஸ்ப்ளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 8 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புகைப்படங்களை எடுக்க இந்த மாடலில் 50MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா வைடு லென்ஸ், 2MP மேக்ரோ கேமரா மற்றும் 13MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. புதிய கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் மாடலில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6 வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு அப்டேட்கள், ஐந்து ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களை வழங்குவதாக சாம்சங் தெரிவித்துள்ளது.

     


    இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுடன் சாம்சங் நிறுவனம் சார்ஜர் வழங்கவில்லை.

    புதிய சாம்சங் கேலக்ஸி M15 5ஜி பிரைம் எடிஷன் மாடல் புளூ டோபாஸ், செலஸ்டியல் புளூ மற்றும் ஸ்டோன் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13 ஆயிரத்து 499 என்றும் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 16 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு கூப்பன் சலுகை வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 10 ஆயிரத்து 999, ரூ. 11 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 13 ஆயிரத்து 499 என மாறுகிறது. இதன் விற்பனை அமேசான், சாம்சங் மற்றும் தேர்வு செய்யப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் நடைபெறுகிறது.

    • ஆடியோ அனுபவத்தை முழுமையாக பெற வழிவகை செய்கிறது.
    • இந்த இயர்பட்ஸ் சாட்ஜிபிடி இன்டகிரேஷன் கொண்டுள்ளது.

    நத்திங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய நத்திங் இயர் (ஓபன்) இயர்பட்ஸ் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது. இது நத்திங் நிறுவனத்தின் முதல் ஓபன் வியரபில் ஸ்டீரியோ (OWS) இயர்பட்ஸ் ஆகும். இந்த மாடல் நத்திங் நிறுவனத்தின் ஓபன் சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இது பயனர்களுக்கு வெளிப்புற சத்தத்துடன் ஆடியோ அனுபவத்தை முழுமையாக பெற வழிவகை செய்கிறது.

    இந்த இயர்பட்ஸ் மாடலில் 14.2mm டைனமிக் டிரைவர், கனெக்டிவிட்டிக்கு ப்ளூடூத் 5.3, AAC, SBC கோட், கூகுள் ஃபாஸ்ட் பேர், மைக்ரோசாப்ட் ஸ்விப்ட் பேர், டூயல் கனெக்ஷன் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 120ms லோ லேக் மோட், அழைப்புகளின் போது நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, மூன்று மைக்குகள் வழங்கப்பட்டுள்ளன.


     

    இத்துடன் சாட்ஜிபிடி இன்டகிரேஷன் வசதி, வாட்டர் ரெசிஸ்டண்ட், பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ்-ஐ பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் இரண்டு மணி நேரம் வரை பயன்படுத்த முடியும். இதில் உள்ள பேட்டரி அதிகபட்சம் எட்டு மணி நேரத்திற்கும் சார்ஜிங் கேஸில் உள்ள பேட்டரி அதிகபட்சம் 30 மணி நேரத்திற்கும் பேட்டரி பேக்கப் வழங்குகிறது.

    நத்திங் நிறுவனத்தின் இயர் இயர்பட்ஸ் மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இதன் விற்பனை அக்டோபர் 1 ஆம் தேதி துவங்க உள்ளது. விலையை பொருத்தவரை இந்தியாவில் புதிய நத்திங் இயர் மாடல் ரூ. 17 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • வீடியோ எடிட் செய்வதை எளிமையாக மாற்றும்.
    • ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    கூகுள் நிறுவனம் தனது கூகுள் போட்டோஸ் செயலியின் வீடியோ எடிட்டரில் புதிய சேவைகளை சேர்த்துள்ளதாக அறிவித்து இருக்கிறது. புதிய சேவைகள் வீடியோ எடிட் செய்வதை எளிமையாகவும், அதிக பயனுள்ளதாகவும் மாற்றும்.

    இதுவரை இல்லாத அளவுக்கு வீடியோ எடிட் செய்வதை எளிமையாக்கவே புதிய வசதிகள் வழங்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. புது அப்டேட் மூலம், கூகுள் போட்டோஸ் செயலியில் அப்டேட்டெட் ட்ரிம் டூல் (Updated Trim Tool), ஆட்டோ என்ஹன்ஸ் பட்டன் (Auto Enhance Button), ஸ்பீடு (Speed Tool) போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இதுதவிர ஏஐ சார்ந்த பிரீசெட் அம்சங்கள் வழங்கப்படுகிறது. இவை எடிட்டிங்கில் லைட்டிங் அட்ஜஸ்ட் செய்வது, ஸ்பீடு கண்ட்ரோல், வீடியோக்களை மேம்படுத்தும் எஃபெக்ட்கள் வழங்குகின்றன. புதிய அம்சங்கள் அடங்கிய அப்டேட் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் இந்த அம்சங்கள் அனைவருக்கும் வழங்கப்படும்.

    • புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி M சீரிசில் இடம்பெற்றுள்ளது.
    • இந்த ஸ்மார்ட்போன் இருவித நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் முற்றிலும் புதிய கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அம்சங்களை பொருத்தவரை 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்பளே, ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. மெமரியை பொருத்தவரை அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

    மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சாம்சங் ஒன் யுஐ 6.1 கொண்ட புது சாம்சங் ஸ்மார்ட்போன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2MP மேக்ரோ கேமரா, எல்இடி ஃபிளாஷ், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

    இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் கொண்டிருக்கும் புது சாம்சங் ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி ஆடியோ, டால்பி அட்மோஸ் கனெக்ட்விட்டி கொண்டுள்ளது. இத்துடன் 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைபி சி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

    விலையை பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் தண்டர் பிளாக் மற்றும் கோரல் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை செப்டம்பர் 26 ஆம் தேதி துவங்குகிறது.

    • ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது.
    • இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

     



    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.

    இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 விற்பனை தொடங்கியுள்ள நிலையில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள ஐபோன் ஷோரூம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மொபைலை வாங்கி செல்கின்றனர்.

    மும்பை ஷோரூமில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்கியவர் கூறும்போது, ஐஓஎஸ் 18-ஐ விரும்பியதால், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கியுள்ளேன். ஜும் கேமராவின் தரம் சிறப்பாக உள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

    மற்றொருவர் வரிசையில் காத்திருந்து 5 ஐபோன்களை வாங்கினார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாங்கியதாக அவர் கூறினார்.

    • விவோ V40e 5G -யில் 50 MP Sony IMX882 பிரதான சென்சார் 8 MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    • விவோ V40e 5G தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.

    விவோ V40 மற்றும் V40 Pro வெளியிட்ட பிறகு, தற்போது விவோ V40e-ஐ அறிமுகப்படுத்த விவோ நிறுவனம் தயாராகி வருகிறது. இது செப்டம்பர் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    SmartPrix இன் படி, இது V40 சீரிஸ் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும். சில நாட்களுக்கு முன்பு, விவோ T3 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது, இது V40 இன் அதே வடிவமைப்பைபுடன் ஆனால் சக்திவாய்ந்த பிராசஸர் கொண்டுள்ளது.

    V40e வடிவமைப்பு மற்றும் முக்கிய அம்சங்களில் சமரசம் செய்யாமல் பட்ஜெட்டுக்கு ஏற்ப வழங்குவதை விவோ நோக்கமாகக் கொண்டுள்ளது. விவோ V40e 5G ஆனது 6.78 இன்ச் வளைந்த AMOLED டிஸ்ப்ளேவை 120 Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது முந்தைய மாடல்களில் காணப்பட்ட அதே பிரீமியம் டிஸ்ப்ளே தரத்தை வழங்குகிறது. இது 4,500 Nits பீக் பிரைட்னஸ் மற்றும் 1,200 Nits ஹை பிரைட்னஸ் (HBM), மென்மையான ஸ்க்ரோலிங் ஆகியவற்றை உறுதி செய்யும். விவோ V40e 5ஜி மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் வழங்கப்படுகிறது.

    இது ஒப்போ ரெனோ 12 போன்ற சாதனங்களில் காணப்படும் திறன் வாய்ந்த போன்றதாக இருக்கும். விவோ V40e 5ஜி-யை ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவோ V40e 5G -யில் 50MP Sony IMX882 பிரதான சென்சார் 8MP அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

    5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புது ஸ்மார்ட்போன் மெல்லிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும். சரியான சார்ஜிங் வேகம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், IP65 மதிப்பீட்டைக் கொண்டிருக்கும். இது தண்ணீர் மற்றும் தூசிக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 கொண்டிருக்கும் என தெரிகிறது.

    விவோ V40e மான்சூன் கிரீன் (Monsoon Green) மற்றும் ராயல் ப்ரோன்ஸ் (Royal Bronze) ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. விவோ V40e 5G ஆனது 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி-யில் கிடைக்கிறது. இது OPPO F27 Pro+ மற்றும் Reno 12 போன்ற போட்டியாளர்களை எதிர்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    • இந்த ஸ்மார்ட்போன் 50MP செல்பி கேமரா கொண்டிருக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது.

    சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை வருகிற 23 ஆம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்து இருக்கிறது. இது அந்நிறுவனத்தின் கேலக்ஸி M55 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M55s மாடலில் 6.7 இன்ச் FHD+ 120Hz AMOLED டிஸ்ப்ளே, 50MP பிரைமரி கேமரா, OIS,8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 50MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் 7.8mm அளவில் மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கும் என சாம்சங் தெரிவித்துள்ளது. மேலும் இது கோரல் கிரீன் மற்றும் தண்டர் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்றும் இதன் பின்புறம் பேட்டன் டிசைன் வழங்கப்படும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    புதிய கேலக்ஸி M சீரிஸ் ஸ்மார்ட்போனிலும் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் வழங்கப்படும் என்றும் இந்த ஸ்மார்ட்போன் 12 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் தெரிகிறது. இதன் விலை மற்றும் விற்பனை விவரங்கள் அறிமுகத்தை ஒட்டி அறிவிக்கப்படும்.

    • இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.
    • 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.

    இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் முடங்கியுள்ளன. நாட்டின் சில பகுதிகளில் மட்டும் ஜியோ சேவைகள் இயங்குவதாக கூறப்படும் நிலையில், மும்பையில் ஜியோ சேவைகள் இயங்கவில்லை என்று பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    இதுதொடர்பாக டவுன் டிடெக்டர் வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஜியோ நெட்வொர்க் கோளாறு காரணமாக சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று மதியம் 12.15 மணி முதல் ஜியோ சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டது.

    கிட்டத்தட்ட 65 சதவீதம் பேருக்கு சிக்னல் கிடைக்கவில்லை என்று பிரச்சினையும், 19 சதவீதம் பேருக்கு மொபைல் இண்டர்நெட் பயன்படுத்த முடியாத சூழலும் உருவாகி இருக்கிறது. மேலும் 16 சதவீதம் பேருக்கு ஜியோஃபைபர் நெட்வொர்க் சரியாக இயங்கவில்லை.

    நெட்வொர்க் கோளாறு தவிர்த்து மைஜியோ செயலி கூட இயங்கவில்லை என்று சிலர் குற்றம்சாட்டினர். நெட்வொர்க் கோளாறு தொடர்பாக ஜியோ சார்பில் இதுவரை எந்த தகவலும் அளிக்கப்படவில்லை. 

    • நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது.
    • இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய நார்டு பட்ஸ் 3 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. நார்டு சீரிசில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் புதிய இயர்பட்ஸ் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ப்ளூடூத் 5.4, டூயல் கனெக்ஷன் என ஏராளமான அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இந்த இயர்பட்ஸ் கூகுள் ஃபாஸ்ட் பேர், 12.4mm டைட்டானியம் டைனமிக் டிரைவர், பாஸ்வேவ் 2.0 போன்ற வசதிகள் உள்ளன. பெபிள் வடிவம் கொண்டுள்ள புதிய இயர்பட்ஸ் செவ்வக வடிவிலான கேஸ் மற்றும் கிளாஸி ஃபினிஷ் வழங்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் டச் கண்ட்ரோல் வசதி, IP55 தர சான்று வழங்கப்பட்டு உள்ளது.

     


    நார்டு பட்ஸ் 3 மாடலின் இயர்பட் ஒவ்வொன்றும் 4.2 கிராம் எடை கொண்டுள்ளது. குறைந்த எடை காரணமாக இவற்றை நீண்ட நேரம் பயன்படுத்த முடியும். இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் 43 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது. ANC பயன்படுத்தாத போது, இதனை 12 மணி நேரம் வரை பயன்படுத்தலாம்.

    இதில் உள்ள ஃபிளாஷ் சார்ஜ் வசதி கொண்டு பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 11 மணி நேரம் (கேஸ்+ ANC ஆஃப்) பயன்படுத்தலாம். புதிய நார்டு பட்ஸ் 3 மாடல் டியுவி ரெயின்லாந்து பேட்டரி ஹெல்த் சான்று பெற்ற உலகின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும்.

    புதிய ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 3 மாடல் ஹார்மோனிக் கிரே மற்றும் மெலோடிக் வைட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 299 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை அமேசான், ப்ளிப்கார்ட், ஒன்பிளஸ் வலைதளம், செயலி மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் நடைபெற உள்ளது. விற்பனை செப்டம்பர் 20 ஆம் தேதி துவங்குகிறது.

    • ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் தனது முற்றிலும் புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. அறிமுகத்தோடு புதிய ஐபோன் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இதுவரை நடைபெற்றுள்ள முன்பதிவுகளின் படி ஐபோன் 16 பிளஸ் மாடலை வாங்க அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடலை வாங்குவதற்கான முன்பதிவுகள் குறைவாகவே இருந்துள்ளன. ஆப்பிள் நிறுவனம் ப்ரோ சீரிஸ் விற்பனை அதிகளவில் இருக்கும் என்ற கணிப்பில் அதிவேக டெலிவரி மற்றும் அதிக யூனிட்களை தயார் நிலையில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

     


    இது குறித்து ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியூ வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஐபோன 16 மற்றும் ஐபோன் 16 பிளஸ் மாடல்கள் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, அதிக யூனிட்கள் முன்பதிவாகி உள்ளன. முன்பதிவு துவங்கிய முதல் ஒருவார காலத்தில் ஐபோன் 16 வாங்க 10 சதவீதத்திற்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

    பிளஸ் மாடல்களை வாங்க கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 48 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். புதிய ஐபோன் 16 சீரிஸ் மாடல்கள் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 16 சதவீதம் யூனிட்கள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 12.7 சதவீதம் குறைவு ஆகும். 

    ×