என் மலர்
நீங்கள் தேடியது "ஹர்திக் பாண்ட்யா"
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஹர்திக் பாண்ட்யா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
- இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
தர்மசாலா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் மார்க்ரம் 61 ரன்கள் அடித்தார்.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ஷிவம் துபே தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் எடுத்த ஒரு விக்கெட்டையும் சேர்த்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்ட்யா இதுவரை வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது. இவர் ஏற்கனவே சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,939 ரன்களும் அடித்துள்ளார்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் என்ற உலக சாதனையை ஹர்திக் பாண்ட்யா படைத்துள்ளார்.
இதற்கு முன் சுழற்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களான ஷகிப் அல் ஹசன், முகமது நபி மற்றும் சிக்கந்தர் ராசா ஆகியோர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.
டி20 கிரிக்கெட்டில் 1,000+ ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
மேலும், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட் வீழ்த்திய 3-வது இந்திய வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார்.
- பும்ரா 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.
- அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
நியூ சண்டிகர்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில் 2-வது ஆட்டம் நியூ சண்டிகரில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
கட்டாக்கில் நடைபெற்ற முதல் போட்டியில் சூர்ய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 74 ரன்னில் சுருட்டி 101 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுக்கு பதிலடி கொடுத்து தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்யும் வேட்கையில் இருக்கிறது.
இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா 100 விக்கெட்டை வீழ்த்தும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 121 போட்டிகள் விளையாடி 99 விக்கெட் எடுத்துள்ளார். இன்றைய ஆட்டத்தில் ஒரு விக்கெட் கைப்பற்றினால் அவர் 100-வது விக்கெட்டை தொடுவார்.
100-வது விக்கெட்டை எடுக்கும் 3-வது இந்திய வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்ட்யா பெறுவார். கடந்த போட்டியின் போது பும்ரா 100 விக்கெட்டை தொட்டார். அவர் 81 போட்டியில் 101 விக்கெட்டை எடுத்து 2-வது இடத்தில் உள்ளார். அர்ஷ் தீவ் சிங் 107 விக்கெட்டுகளை (69 போட்டி) கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
முதல் 20 ஓவர் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங்கில் அதிரடியை வெளிப்படுத்தி அரை சதத்தை பதிவு செய்தார். அதோடு ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார். இதனால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.
கட்டாக்:
இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி கட்டாக்கில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன்கள் எடுத்தது. ஹர்திக் பாண்ட்யா பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார்.
திலக் வர்மா 26 ரன்னும், அக்சர் படேல் 23 ரன்னும் எடுத்து அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக ஆடி 28 பந்தில் 59 ரன்கள் குவித்தார். இதில் 4 சிக்சர், 6 பவுண்டரி அடங்கும்.
தென் ஆப்பிரிக்கா சார்பில் லுங்கி நிகிடி 3 விக்கெட்டும், லூதோ சிபம்லா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்குகிறது.
- ஹர்திக் காதலியான மஹைகா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார்.
- கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளார். அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
முன்னதாக ஹர்திக் பாண்ட்யா மற்றும் மாடல் அழகியான மகிஹா ஷர்மா ஆகிய இருவரும் காதலர்கள். கடந்த அக்டோபர் 2025ல், தனது பிறந்தநாளுக்கு முன்னதாக மகிஹாவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படங்களை பகிர்ந்து ஹர்திக் இந்த காதலை உறுதி செய்தார்.
இந்நிலையில் ஹர்திக் காதலியான மகிஹா சர்மா ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும் போது படிக்கட்டில் நடந்து வருவார். கவர்ச்சியான ஆடைகளில் வரும் அவரை கீழ் கோணத்தில் இருந்து தவறான கோணத்தில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி உள்ளனர்.
இதனை பார்த்த ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் காட்டமாக பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாங்கள் பொது வாழ்க்கையில் இருப்பதால் மக்கள் எங்களை கவனிப்பார்கள், போட்டோ எடுப்பார்கள் என்பதை நான் அறிவேன். அதை ஏற்கிறேன். ஆனால் இன்று நடந்த சம்பவம் எல்லை மீறிய ஒன்று. மகிஹா படிக்கட்டுகளில் சாதாரணமாகத் தான் இறங்கி வந்தார். ஆனால், எந்த பெண்ணையும் புகைப்படம் எடுக்கக்கூடாத ஒரு மோசமான கோணத்தில் அவரை படம் பிடித்துள்ளனர். ஒரு தனிப்பட்ட தருணத்தை வைத்து கேவலமான முறையில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார்கள்.
இது யார் எடுத்தது, என்ன தலைப்பு கொடுத்தார்கள் என்பதல்ல பிரச்சனை. இது அடிப்படை மரியாதை சம்பந்தப்பட்டது. பெண்களுக்கு கண்ணியம் உள்ளது. அனைவரும் எல்லைகளை மதிக்க வேண்டும். பத்திரிகை நண்பர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன். எப்போதும் ஒத்துழைப்பு தருகிறேன். ஆனால் தயவு செய்து கொஞ்சம் மனிதத்தன்மையுடன் நடந்துகொள்ளுங்கள். எல்லாவற்றையும் படம் பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
என பாண்ட்யா கூறியுள்ளார்.
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.
மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர்
- ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவிற்கு ஒருநாள் தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தனது காதலி மஹைகா சர்மா உடன் ஜிம்மில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹார்டிக் பாண்ட்யா - நடாசா ஸ்டான்கோவிச் ஜோடி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரிவதாக அறிவித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஒரு மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.
- காயத்தில் இருந்து குணமடைந்த ஹர்திக் பாண்ட்யா வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 22-ந் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தொடங்க உள்ளது. அந்த தொடர் நவம்பர் 30-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் அந்த தொடரில் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா விளையாட தயாராகி வருகிறார். இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த தொடருக்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்கும் தயாராகும் வகையில் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆசிய கோப்பை தொடரின் போது ஹர்திக் பாண்ட்யாவுக்கு காயம் ஏற்பட்டது.
- காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பாண்ட்யா விளையாடவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. இவர் நடப்பு ஆண்டில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரின் போது காயமடைந்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது இவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் இறுதிப்போட்டியில் விலகினார். இருப்பினும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.
காயத்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் அவர் விளையாடவில்லை. தற்போது காயத்தில் இருந்து மீண்ட ஹர்திக் பாண்ட்யா, வரும் 26-ம் தேதி தொடங்கவுள்ள சயத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில் பரோடா அணிக்காக விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது.
- அக்டோபர் 14-ந் தேதியில் இருந்து பிசிசிஐ-யின் சிறப்பு மையத்தில் பாண்ட்யா மறுவாழ்வு பெற்று வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
இதனையடுத்து இந்தியா- தென் ஆப்பிரிக்காவுடன் 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்பதற்காக தென் ஆப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடர் நவம்பர் மாதம் 14-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 19-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் காயம் காரணமாக இடம் பெறாத அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் விளையாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் அக்டோபர் 14 அன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சிறப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டு மறுவாழ்வு பெற்று வருகிறார். பெங்களூருவில் உள்ள CoE-யில் நான்கு வாரங்கள் தங்கி இந்தியா -தென்னாப்பிரிக்கா தொடருக்காக உடற்தகுதியை மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்திய அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
- ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனையடுத்து இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த தொடர் அக்டோபர் 14-ந் தேதியுடன் முடிவடைகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
முதலில் ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் போட்டி அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக விலகி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ஆசிய கோப்பை தொடரின் போது காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் கடைசி 2 போட்டிகளில் பாண்ட்யா விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் இம்பேக்ட் பிளேயர் விருதை ஹர்திக் பாண்ட்யா வென்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- ஓமன் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 188 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே எடுதது. இதனால் இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பீல்டிங் செய்த இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு இம்பேக்ட் பிளேயர் விருது வழங்கப்பட்டது. அவர் பதக்கத்தை உதவி பயிற்சியாளரான தயானந்த் கரனியிடம் வழங்கினார், அவர் ஃபீல்டிங் பயிற்சிகளின் போது அவருக்கு நிறைய உதவியுள்ளார் எனவும் ஹர்திக் பாண்ட்யா கூறினார்.
ஓமன் வீரர் அமீர் கலீம் அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகில் இருந்து பாண்ட்யா சிறப்பாக கேட்ச் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.
- பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் இணையத்தில் வைரலானது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.18 கோடி மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா வைத்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம் என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.






