search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்காட்லாந்து"

    • சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.
    • விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.

    இங்கிலாந்து நாட்டுக்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி ஸ்காட்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் முன்தினம் கிளாஸ்கோ நகரில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான குருத்வாராவுக்கு சென்றார். ஆனால் அங்கு திரண்டிருந்த சீக்கிய வாலிபர்கள் சிலர் விக்ரம் துரைசாமியை குருத்வாராவுக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    அந்த வாலிபர்கள் விக்ரம் துரைசாமியின் காரை சூழ்ந்துகொண்டு, திரும்பி செல்லும்படி கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து விக்ரம் துரைசாமி அங்கிருந்து திரும்பி சென்றார்.

    இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம், இது தொடர்பாக ஸ்காட்லாந்து அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.
    • ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்த போட்டியில் கலந்து கொண்ட 10 அணிகளில் இருந்து ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஓமன், இலங்கை ஆகிய 6 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.

    இதில் இருந்து இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கு 2 அணிகள் தேர்வாகும்.

    இந்நிலையில், சூப்பர் 6 தொரின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ்- ஸ்காட்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன.

    இந்த ஆட்டத்திற்கான டாசை ஸ்காட்லாந்து வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால், வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது.

    இதில், வெஸ்ட் இண்டீஸ் 43.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 181 ரன் எடுத்தது.

    தொடர்ந்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஸ்காட்லாந்து ஆட்டத்தை தொடங்கியது.

    இந்த ஆட்டத்தின்போது பிரண்டன் மெக்முல்லன் மேத்யூ க்ராஸ் உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர்.

    இந்த ஆட்டத்தின் முடிவில் ஸ்காட்லாந்து அணி 43.3 ஓவர்களில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்தது.

    இதன்மூலம், ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றது.

    முன்னாள் சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து, கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக இந்தியாவில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்தது.

    • கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பதாக தகவல்
    • நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு பிரதமர் ரிஷி சுனக் நன்றி தெரிவித்தார்.

    லண்டன்:

    பிரிட்டனின் ஸ்காட்லாந்து மாநில முதல் மந்திரியாக பதவி வகித்து வருபவர் நிகோலா ஸ்டர்ஜன் (வயது 53). ஸ்காட்லாந்து முதல் மந்திரியாக பதவி வகித்த முதல் பெண் மற்றும் நீண்ட காலம் பணியாற்றிய முதல் மந்திரி என்ற பெருமை பெற்ற இவர், ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாக இன்று அறிவித்துள்ளார். ஆளுங்கட்சியான ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் நிகோலா ஸ்டர்ஜன் கூறியதாவது:-

    8 ஆண்டுகள் ஸ்காட்லாந்து தேசிய கட்சிக்கு தலைமை தாங்கிய பிறகு, பதவி விலகுவதற்கு சரியான நேரம் இது. இப்போது பதவி விலகுவதே எனக்கும், எனது கட்சிக்கும், நாட்டுக்கும் சரியானது. திருநங்கைகளின் உரிமைகள் பிரச்சனை பற்றி கட்சிக்குள் நிலவும் பிளவுகள் இருந்தாலும், இதன் காரணமாக பதவி விலகும் முடிவை எடுக்கவில்லை.

    கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் நீடிப்பேன். அத்துடன், 2026ல் பாராளுமன்ற தேர்தல் வரை ஸ்காட்லாந்து பாராளுமன்ற உறுப்பினராக இருப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முதல் மந்திரி நிகோலா ஸ்டர்ஜன் நாட்டிற்கு செய்த நீண்ட கால சேவைக்கு நன்றி தெரிவிப்பதாக பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கூறி உள்ளார். இதேபோல் மேலும் சில தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

    ஸ்காட்லாந்தில் ஆதிக்கம் செலுத்தும் ஸ்காட்லாந்து தேசிய கட்சியின் முக்கிய தலைவர் வெளியேறுவதால், கன்சர்வேடிவ் மற்றும் தொழிலாளர் கட்சிகள் இழந்த செல்வாக்கை பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

    ஸ்காட்லாந்தின் சுதந்திரத்திற்காக நிகோலா ஸ்டர்ஜன் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ×