search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் பாதை"

    • மழைக்காலங்களில் ரெயில் பாதையில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.
    • தற்போது 300 மீட்டர் தூரம் வரை தளர்வான பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரெயில் நிலையம் அருகில் பெங்களூரு முதல் தருமபுரி வழியாக சேலம் செல்லும் ரெயில் பாதை அமைந்துள்ளது.

    இந்த ரெயில் பாதையின் வழியாக தினசரி ரெயில்களும் வாராந்திர ரெயில்களும் டெல்லி, மும்பை, பூனே, பெங்களூரு, கன்னியாகுமரி, கேரள மாநிலம் வரை இயக்கப்படும் பிரதான ரெயில் பாதையாக தருமபுரிரெயில்வே பாதை உள்ளது.

    இந்த ரெயில் பாதையில் சிவாடி ரெயில் நிலையம் முதல் முத்தம்பட்டி ரெயில் நிலையம் வரை உள்ள பாதையில் இருபுறங்களிலும் மலைகளால் சூழப்பட்ட பகுதியாக உள்ளது. இப்பகுதிகளில் மழைக்காலங்களில் ரெயில் பாதையில் மண் சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழும் நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளது.

    கடந்த 2021-ம் ஆண்டு கன மழையின் காரணமாக அதிகாலையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் பாறைகள் ரெயில்வே தண்டவாளத்தில் சரிந்ததின் காரணமாக அந்த மார்கத்தில் வந்த ரெயில் விபத்தில் சிக்கியது. அப்போது ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    அப்போது முதல் தொடர்ந்து தளர்வாக உள்ள மலைப்பகுதியில் விரிசல்கள் அடைந்துள்ள பாறைகள், மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்டவற்றை தொடர்ந்து கண்டறிந்து முதற்கட்டமாக தற்போது 300 மீட்டர் தூரம் வரை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்த ரெயில் பாதை முழுவதும் மின்சார வழித்தடமாக மாற்றப்பட்டுள்ளதால் வரும் காலங்களில் ரெயில் பாதையில் மண் மற்றும் பாறைகள் சரிவு மற்றும் விபத்துக்கள் எதுவும் ஏற்படாத வண்ணம் அவற்றை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    • திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது.

    சென்னை:

    மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தில் புதிய வழித்தடங்களில் ரெயில் பாதை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புதிதாக 9 வழித்தடங்களில் ரெயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. ரூ.1057 கோடி செலவில் இந்த பாதைகள் அமைக்கப்படுகிறது.

    சென்னை எண்ணூர் துறைமுகமான அத்திப்பட்டில் இருந்து ஆந்திர மாநிலம் புத்தூருக்கு 88 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக பட்ஜெட்டில் ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா, ஆந்திரா மற்றும் எண்ணூர் துறைமுகத்துக்கு இரும்பு தாது மற்றும் நிலக்கரி கண்டெய்னர்களை கொண்டு செல்ல அத்திப்பட்டு-புத்தூர் வழித்தடம் அவசியமாகும்.

    தற்போது திருவள்ளூர்-புத்தூர் கோட்டம் நிரம்பியதால் கூடுதல் சரக்குகளை கையாள முடியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 70 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில்பாதை அமைக்கப்படுகிறது.

    இதற்காக ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திண்டிவனம்-திருவண்ணாமலை இடையே 8 ரெயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    திண்டிவனத்தில் இருந்து ஆரணி, வாலாஜா வழியாக நகரிக்கு 180 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம், புதுச்சேரி வழியாக கடலூருக்கு 155 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் நிலம் கணக்கெடுப்பு பணிகள் முடிக்கப்பட உள்ளது.

    மேலும் மொரப்பூரில் இருந்து தர்மபுரிக்கு 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    ஈரோட்டில் இருந்து பழனிக்கு 91 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரெயில் பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு 143.5 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரெயில் வழித்தடம் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.114 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கூடுவாஞ்சேரிக்கு 60 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.57.9 கோடி ஒதுக்கப்படுகிறது. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு 17.2 கிலோ மீட்டர் தொலைவுக்கு அமைக்கப்பட உள்ள புதிய ரெயில் பாதைக்கு ரூ.385.9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த புதிய ரெயில் பாதைகள் மாமல்லபுரம், புதுச்சேரி, ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மற்றும் தனுஷ்கோடியை தமிழகத்தின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும்.

    மேலும் தாம்பரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நேரடி ரெயில் இயக்குவதற்கும் வழிவகுக்கும்," என்றார்.

    • காரைக்குடி-தூத்துக்குடி ரெயில் பாதையை செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி.யிடம் வலியுறுத்தினர்.
    • வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனியிடம் பொது நலகமிட்டி தலைவர் பரமஞானம், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுசாமி, வேம்பார் ஒன்றிய கவுன்சிலர் செல்வமணி, செல்லப்பாண்டி, நரிப்பை யூர் வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் ஆகியோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காரைக்குடியில் இருந்து ராமநாதபுரம், கீழக்கரை, சாயல்குடி, வேம்பார், தருவைகுளம் வழியாக தூத்துக்குடிக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    தற்போது வரை அந்த பணிக்கான எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை. இந்த பகுதியில் ரெயில்வே பாதை அமையப்பெற்றால் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். வேலை வாய்ப்பு பெருகும் என்பதால் பாராளுமன்றத்தில் இந்த பகுதியில் ரெயில் பாதை அமைக்க வலியுறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை வருகிற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்துவதாக நவாஸ்கனி எம்.பி. தெரிவித்தார்.

    • ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளது.
    • வண்டி எண் 06663 மற்றும் 06664 ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும்.

    தென்காசி:

    தென்னக ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராஜபாளையம் - சங்கரன் கோவில் ரெயில்வே வழித்தடத்தில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் நாளை முதல் நடைபெற உள்ளதால் மதுரையில் காலை 11.30 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - செங்கோட்டை ரெயில் ( வண்டி எண் 06663 ) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்பட வேண்டிய செங்கோட்டை - மதுரை (06664) ஆகிய முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில்கள் நாளை (5-ந்தேதி) முதல் வருகிற 10 வரை 6 நாட்களுக்கு ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அகல ரெயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வந்தது.
    • நாகை ெரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை - வேளாங்கண்ணி இடையே சுமார் 10 கி.மீட்டர் நீளம் கொண்ட அகல ரயில் பாதை, கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி பயன்பாட்டுக்கு வந்தது. இப்பாதை அமைந்துள்ள பகுதிகளில் உள்ள மண் இறுகும் தன்மையற்றதாக இருந்ததால், இத்தடத்தில் 30 கி.மீட்டர் வேகத்துக்குள் மட்டுமே ரெயில்கள் இயக்கப்பட்டன. இதனால், 10 கி.மீட்டர் தொலைவைக் கடக்க சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆகியது.

    இந்நிலையில், இந்தப்பாதையின் தரத்தை மேம்படுத்தி, ரெயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்பது ரயில் பயன்பாட்டாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக இருந்து வந்தது. அதைத் தொடர்ந்து, நாகை - வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் மண் சரிவு ஏற்படாமல் தடுக்கும் வகையில், ரயில் பாதையின் இருபுறங்களிலும் தடுப்புச் சுவர்கள் அமைக்கும் பணியும், அகல ரயில் பாதையை மின் பாதையாக மாற்றும் பணியும் ரயில்வே நிர்வாகம் சார்பில் நடைப்பெற்று வந்தது.இந்த நிலையில், இத்தடத்திலான சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ரயில்வே நிர்வாகத்தின் தொழில்நுட்பப் பிரிவு மூலம் இரு முறை சோதனைகள் நடத்தப்பட்டன.

    இதனை தொடர்ந்து தெற்கு மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் தலைமையிலான 50 பேர் கொண்ட குழு நாகை ரயில் நிலையத்தில் இருந்து வேளாங்கண்ணி அகல ரயில் பாதையில் டிராலியில் பயணித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வேளாங்கண்ணியிலிருந்து அதிவேக ரயிலை இயக்கி வேக சோதனை மேற்கொள்ளும் வகையில் 110 கி.மீட்டர் வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. வேளாங்கண்ணியில் இருந்து புறப்படும் வேக சோதனை ரயில் அடுத்த 15 நிமிடங்களில் நாகையை வந்தடைந்தது.

    • செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலை தினமும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.
    • தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே ஜங்சன் ரெயில் நிலைய ம்ஆகும். மீட்டர் கேஜ் பாதையாக இருந்தபோது மானாமதுரையில் இருந்து திருச்சி, சென்னை, நெல்லை, கேரள மாநிலம் கொல்லம்வரை ரெயில் வசதி இருந்தது.

    புன்னியஸ்தலமாக உள்ள ராமேசுவரத்திற்க்கு மானாமதுரையில் இருந்து தான் ரெயில் வசதி உள்ளது. தற்போது அகல ரெயில் பாதை வந்தபின் பல மாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மானாமதுரையில் நின்று செல்கிறது. ஆனால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயணிகள் தென்மாவட்ட ஊர்களுக்கு செல்ல போதுமான ரெயில் வசதி இல்லை. குறிப்பாக புதுக்கோட்டை மாவட்ட பயணிகள் தென்மாவட்டங்களுக்கு செல்ல வேண்டுமானால் திருச்சி சென்றால்தான் ரெயில் வசதிஉள்ளது. சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பயணிகள் தென்மாவட்டம் மற்றும் கேரளா செல்ல வேண்டுமானால் மதுரை செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது தென்மாவட்டங்களுக்கு செல்லும் சரக்கு ரெயில்கள் மதுரை செல்லாமல் மானாமதுரை வழியாக குறைவான பயண தூரத்தில் செல்கிறது. சென்னையில் இருந்து செங்கோட்டை வரை மானாமதுரை வழியாக வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே எக்ஸ்பிரஸ் ரெயில் செல்கிறது. இந்த ெரயிலை புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்ட பயணிகள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த ரெயில் சேவை 3 நாட்கள் மட்டுமே உள்ளதால் பயணிகள் கூட்ட நெரிசலுடன் செல்லும் நிலை உள்ளது. சென்னையில் இருந்து அருப்புக்கோட்டைக்கு இந்த ஒரு ரெயில்மட்டுமே உள்ளது. தினமும் இயக்கப்பட்டால் 4 மாவட்ட பயணிகள் பெரிதும் பயன் பெற வாய்ப்பு உள்ளது.

    5 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் இருந்து செங்கோட்டை வரை அந்தியோதயா சிறப்பு ரெயில் விடப்பட்டது. நல்ல வரவேற்பு பெற்ற அந்த ரெயில் எவ்வித முன்னறிவிப்பின்றி நிறுத்தப்பட்டதால் மானாமதுரை வழியாக செங்கோட்டை -சென்னை மார்க்கத்தில் தினசரி ரெயில் சேவை இல்லாமல் உள்ளது. நிறுத்தப்பட்ட அந்தியோதயா சிறப்பு ரெயிலை தாம்பரத்தில் இருந்து கொல்லம் வரை இயக்கவேண்டும். இதனால் 10 மாவட்ட மக்களுக்கும் பயன்உள்ளதாக இருக்கும்.

    சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களை சேர்ந்த எம்.பி.க்கள் நடைபெற உள்ள மழைக்கால பாராளுமன்ற கூட்டத்தொடரில் தென்மாவட்டங்களுக்கு கூடுதல் ரெயில்கள் இயக்க வலியுறுத்த வேண்டும். சென்னை-செங்கோட்டை ெரயிலை தினசரி ரெயிலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். என பொதுமக்கள் ரெயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.

    • மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது.
    • மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும்

    மதுரை

    மதுரை கோட்டம் சார்பில் 67-வது ெரயில்வே வாரவிழா நடந்தது. இதில் கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றிய 165 ஊழியர்களுக்கும், அலுவலர்களுக்கும் சான்றிதழும், 21 குழு விருதுகளும் வழங்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மதுரை கோட்ட ெரயில்வே மேலாளர் பத்மநாபன் அனந்த் கூறியதாவது:-

    மதுரை கோட்ட ெரயில்களில் கடந்த ஆண்டு 14.02 மில்லியன் பேர் பயணித்தனர்‌. இதன் மூலம் ரூ.403.37 கோடி வருவாய் கிடைத்து உள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் ரூ.265.19 கோடி அதிகம்.அடுத்தபடியாக 2.18 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டதன் மூலம் போக்குவரத்து வருவாயாக ரூ.237.28 கோடி ஈட்டப்பட்டு உள்ளது. கடந்த நிதியாண்டில் மதுரை கோட்டத்தின் ஒட்டு மொத்த வருமானம் ரூ.700.10 கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை காட்டிலும் 62 சதவீதம் அதிகம்.

    மதுரை கோட்டத்தில் 98 சதவீத பயணிகள் ெரயில்கள் காலம் தவறாமல் இயக்கப்பட்டது. சரக்கு ெரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு தற்போது மணிக்கு 49 கி.மீ. வேகத்தில் இயக்கப்படுகிறது. மதுரை கோட்டத்தில் 247 கி.மீ. ெரயில் பாதை மின்மயம் ஆக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு 922 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டு உள்ளன. 94 ஓய்வூதியர்களின் குறைகள் களையப்பட்டு, ரூ.7.08 லட்சம் பணப்பயன்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஊழியர்களின் குறைகளை அலைபேசி வாட்ஸ்அப், டெலிகிராம் செயலிகள் மூலம் உடனடியாக தீர்க்க தொலைபேசி உதவி எண்கள் பயன்பாட்டில் உள்ளது என்றார்.

    விழாவில் கூடுதல் கோட்ட மேலாளர் தண்ணீரு ரமேஷ்பாபு, முதுநிலை கோட்ட ஊழியர் நல அதிகாரி சுதாகரன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ×