search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் எம்எல்ஏ"

    • எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
    • அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல்.

    அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ்.அன்பழகன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    கடந்த 2001- 2006 வரையில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் தொகுதி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.எஸ். அன்பழகன். இவர் எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.

    இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஏ.கே.எஸ் அன்பழகன் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சியினர் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    • திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.
    • வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ். இவருடைய உறவினர் நவீன் குமார் (வயது 42).

    இவர் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி எதிரே உள்ள காந்திபேட்டை திருநாத முதலியார் தெருவில் வசித்து வருகிறார்.

    திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் டிஜிட்டல் ஸ்டுடியோ பேனர் கடை வைத்துள்ளார். மேலும் திருமண மண்டபம் பைனான்ஸ் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டு வருகிறார்.

    நேற்று இரவு வருமானவரி துறை அதிகாரிகள் நவீன் குமார் வீட்டிற்குள் அதிரடியாக புகுந்தனர். அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரித்தனர்.

    மேலும் நவீன் குமார் வீட்டில் கட்டுக்கட்டாக ரூ.40 லட்சம் வரை பணம் கைப்பற்றியதாக கூறப்படுகிறது. வீட்டில் இருந்த பணம் மற்றும் ஆவணங்களை வருமானவரி துறையினர் எடுத்துச் சென்றனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட பணம் யாருடையது என்பது குறித்து வருமான வரி துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் திருப்பத்தூர் சுற்றுலா மாளிகையில் 10-க்கும் மேற்பட்ட வருமானவரி துறையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • 1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார்.
    • எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தனின் மருமகள் ஸ்ருதி நேற்று கணவர் குடும்பத்தினர் மீது வரதட்சனை புகார் அளித்திருந்த நிலையில், இன்று கணவர் சதீஷ் குமார் டிஜிபி அலுவலகத்தில் ஸ்ருதிக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.

    1000 சவரன் நகை கேட்டு துன்புறுத்துவதாக மனைவி ஸ்ருதி புகார் அளித்திருந்த நிலையில் சதீஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். 

    அந்த புகாரில், "எந்தவித ஆதாரமும் இல்லாமல் தன் மீது பொய்யான புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.

    தன்னிடம் பணத்தை பறிப்பதற்காகவே இதுபோன்ற பொய்யான புகாரை தனது மனைவி கொடுத்துள்ளார் என சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    மேலும், "கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021ம் ஆண்டு தாங்கள் பிரிந்த நிலையில், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தன் மீது பொய்யான புகார் தெரிவித்து வரும் ஸ்ருதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் மனுவில் சதீஷ் குமார் கூறியுள்ளார்.

    ×