search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்"

    • நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது.
    • கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது.

    இந்திய தேர்தல் ஆணையர் மற்றும் மற்ற தேர்தல் ஆணையர்கள் தேர்வு தொடர்பான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் செய்த நிலையிலும் மத்திய அரசு இந்த மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது.

    இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சதா கூறுகையில் "அரசு பில்டோசர் மூலம் ஜனநாயகத்தை கொலை செய்துள்ளது. அங்கே சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் ஆணையம் இல்லை என்றால் எப்படி சுதந்திரம், பாரபட்சமற்ற தேர்தல் இருக்க முடியும்.

    நாட்டில் தேர்தல் ஆணையத்தின் பங்கு முக்கியமானவை. தேர்தல் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்துவதை முடிவு செய்கிறது. கட்சிகளின் சின்னம், தேர்வு அட்டவணை உள்ளிட்ட அனைத்தையும் தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்கிறது. நாங்கள் இதுகுறித்து எங்களுக்குள் ஆலோசனை நடத்தி, சட்டப்பூர்வ ஆலோசனைகள் பெறுவோம். அதன்பின் உச்சநீதிமன்றத்தில முறையீடு செய்வோம்" என்றார்.

    தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கான 5 பேர் கொண்ட தேர்வு குழுவை தேர்ந்தெடுக்க மத்திய சட்ட மந்திரி தலைமையில் 3 பேர் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்படும். தேர்தல் கமிஷனர்களை தேர்வு செய்யும் குழுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பதிலாக மந்திரிசபை செயலாளர் இடம் பிடிப்பார் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×