என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாபர் அசாம்"

    • ஜிம்பாப்வேவுக்கு எதிரான இன்றைய போட்டியில் பாபர் அசாம் டக்அவுட் ஆனார்.
    • இது அவரின் 9வது டி20 டக்அவுட் ஆகும்.

    பாகிஸ்தான், இலங்கை, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. இன்றைய போட்டியில் ஜிம்பாப்வே- பாகிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன.

    முதலில் விளையாடிய ஜிம்பாப்வே 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. சாஹிப்சதா பர்ஹான் (16) ஆட்டமிழந்ததும், பாபர் அசாம் களம் இறங்கினர். இவர் 3 பந்துகளை சந்தித்த நிலையில் எவன்ஸ் பந்தில் டக்அவுட் ஆனார்.

    டி20 கிரிக்கெட்டில் பாபர் அசாமின் 9ஆவது டக் இதுவாகும். இதன் மூலம் அதிக முறை டக்அவுட் ஆன பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் ஷாகித் அப்ரிடியை பின்னுக்குத் தள்ளி 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

    • இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தார்.
    • பாபர் அசாம் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்துள்ளார்.

    ராவல்பிண்டி:

    பாகிஸ்தான்- இலங்கை அணிகள் மோதிய 2-வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 288 ரன் குவித்தது. ஜெய்ந்த் லியானகே 54 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்), கமிந்து மெண்டீஸ் 44 ரன்னும் (4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹாரிஸ் ரவூப், அப்ரார் அகமது தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள்.

    பின்னர் ஆடிய பாகிஸ்தான் 48.2 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 289 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் ஆசம் சதம் அடித்தார். அவர் 102 ரன்னும் (8 பவுண்டரி), பகார் ஜமான் 78 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    இந்த வெற்றி மூலம் பாகிஸ்தான் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் போட்டியில் அந்த அணி 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 3-வது மற்றும் கடைசி ஆட்டம் நாளை நடக்கிறது.

    இந்த போட்டியில் பாபர் அசாம் சதம் அடித்தன் மூலம் 807 நாட்கள் மற்றும் 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்து அசத்தியுள்ளார். இதே போல இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி பல போட்டிகளில் தடுமாறினார். அதன்பிறகு 83 இன்னிங்ஸ்களுக்கு பிறகு சதம் அடித்தார். அதேபோல பாபர் அசாமும் சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவரில் 288 ரன்கள் எடுத்தது.

    ராவல்பிண்டி:

    இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    கடந்த 11-ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இலங்கையை 6 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 288 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 289 ரன்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய பாகிஸ்தான் அணி 48.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 289 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை பாகிஸ்தான் 2-0 என கைப்பற்றியது. சதமடித்து அசத்திய பாபர் அசாம் ஆட்ட நாயகன் விருது பெற்றார். கடைசி ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது.

    • பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார்.
    • முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் உள்ளனர்.

    ஐசிசி தரவரிசைப் பட்டியலின் புதிய பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. இதில் ஒருநாள் பேட்டர் தரவரிசையில் டாப் 10-ல் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    அதன்படி முதல் இடத்தில் ரோகித் சர்மாவும் 4-வது இடத்தில் சுப்மன் கில்லும் 9-வது இடத்தில் ஷ்ரேயாஸ் ஐயரும் தொடர்கிறார்கள். மற்றொரு இந்திய வீரரான விராட் கோலி 1 இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.

    பாபர் அசாம் தொடர்ந்து மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதால் 2 இடங்கள் பின் தங்கினார். இதனால் 5-வது இடத்தில் கோலியும் 6-வது இடத்தில் சரித் அசலங்காவும் முன்னேறியுள்ளனர்.

    இலங்கைக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம் பாகிஸ்தான் வீரரான சல்மான் ஆகா 14 இடங்கள் முன்னேறி 16 இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் பாபர் அசாம் 29 ரன்னில் ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார்.
    • பாபர் அசம் 130 டி20 போட்டியில் 4234 ரன் எடுத்துள்ளார்.

    லாகூர்:

    தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 இருபது ஓவர் தொடரில் ராவல்பிண்டியில் நடந்த முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா 55 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது போட்டி லாகூரில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 19.2 ஓவரில் 110 ரன்னில் சுருண்டது. பின்னர் ஆடிய பாகிஸ்தான் 13.1 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 112 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசம் 11 ரன் எடுத்தார். 9-வது ரன்னை எடுத்தபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் அதிக ரன் எடுத்த ரோகித் சர்மா சாதனையை முறியடித்தார். பாபர் அசம் 130 ஆட்டத்தில் 4234 ரன் எடுத்து முதல் இடத்தில் உள்ளார். ரோகித் சர்மா 4231 ரன்னுடன் (159 போட்டி) 2-வது இடத்தில் உள்ளார்.

    ஆண்கள் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியல்:-

    பாபர் அசாம் -130 போட்டிகளில் 4232*

    ரோகித் சர்மா - 159 போட்டிகளில் 4231

    விராட் கோலி - 125 போட்டிகளில் 4188

    ஜோஸ் பட்லர் - 144 போட்டிகளில் 3869

    • தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் பாபர் அசாம் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 டி20, 3 ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- இமாம் களமிறங்கினர். இதில் இமாம் 17 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து கேப்டன் மசூத் - அப்துல்லா இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான விளையாடி அரை சதம் அடித்தனர். அப்துல்லா 57 ரன் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாபர் அசாம் களமிறங்கினார். சற்று தடுமாறினாலும் பின்னர் சிறப்பாக ஆடினார். அவர் 16 ரன்கள் எடுத்த போது மகாராஜ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவர் அவட் ஆனதும் சுற்றியிருந்த ரசிகர்கள் கவலையுடன் சோகத்துடன் காணப்பட்டனர்.

    அவர் டெஸ்டில் சதம் அடித்து கிட்டத்தட்ட 1000 நாட்கள் மேல் ஆகிவிட்டது. பாபர் அசாம் டெஸ்ட் போட்டியில் கடைசியாக சதம் அடித்தது 2022 டிசம்பர் 26 அன்று, நியூசிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடந்த போட்டியில் 161 ரன்கள் எடுத்தார்.

    அன்றிலிருந்து அவர் டெஸ்ட் சதம் அடிக்கவில்லை. 2025 அக்டோபர் வரை அவரது அதிகபட்ச ஸ்கோர் 81 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.
    • டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. இதில் முன்னணி வீரர்களான பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரில் பாபர் அசாம் இடம் பெறாதது குறித்து பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மைக் ஹேசன் விளக்கம் அளித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பாபர் அசாம் நல்ல வீரர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அவருடைய பேட்டிங்கில் சில விஷயத்தில் அவர் மாற்றிக்கொள்ள வேண்டும். சில விஷயங்களில் அவர் முன்னேற்றம் அடைய வேண்டும். குறிப்பாக சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவருடைய பேட்டிங் தடுமாற்றத்தை காண்கிறது.

    டி20 கிரிக்கெட்டில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருக்கின்றது. இந்த விஷயத்தில் பாபர் அசாம் கடுமையாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். அதையும் அவர் செய்து வருகின்றார். தற்போது பாபர் அசாம் போன்ற வீரர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக் பாஸ் லீக் தொடரில் பங்கு பெற்று அங்கு விளையாட வேண்டும். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் அவர் முன்னேற்றம் அடைவார் என்று நான் நம்புகிறேன்.

    டி20 கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டும் என்றால் ரன் ரேட் என்பது மிகவும் முக்கியம். நாம் பேட்டிங் செய்து ஒரு நல்ல இலக்கை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் போட்டியில் வெற்றி பெற முடியும்.

    என்று மைக் ஹேசன் கூறியுள்ளார்.

    • ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
    • ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

    டி20 வடிவில் நடைபெறும் இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

    தலா 4 அணிகள் என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்று நடக்கிறது. இதில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். இந்தச் சுற்றில் முதல் 2 இடம் பிடிக்கும் அணிகள் 28-ம்தேதி பைனலில் மோதும்.

    ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா வரும் 14-ம் தேதி பாகிஸ்தானுடன் துபாயில் மோதுகிறது

    இந்நிலையில், ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சல்மான் அகா தலைமையில் ஃபகர் சமான், ஷாஹீன் அஃப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராஃப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

    • வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.
    • இதன் காரணமாக 2ஆவது இடத்தில் இருந்து 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார்.

    ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் பேட்டர்களுக்கான தரவரிசையில் ரோகித் சர்மா 3ஆவது இடத்தில் இருந்து 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரையடுத்து ஐசிசி தரவரிசையை வெளியிட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பாபர் அசாம் 3 போட்டிகளில் 56 ரன்கள் மட்டுமே அடித்தார்.

    இதனால் 751 புள்ளிகளுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளார். ரோகித் சர்மா 756 புள்ளிகளுடன் 2ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். சுப்மன் கில் 784 புள்ளிகளுடன் முதல் இடத்தில் நீடிக்கிறார். விராட் கோலி 4ஆவது இடத்தில் உள்ளார்.

    ஷ்ரேயாஸ் அய்யர் 8ஆவது இடத்தையும், கே.எல். ராகுல் 15ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

    • பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார்.
    • 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    லாகூர்:

    பிக்பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிட்னி சிக்சர்ஸ் அணியில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனான பாபர் அசாம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

    பாபர் அசாம் 2022-ல் ஐசிசி சிறந்த ஆடவர் கிரிக்கெட் வீரர் என்ற விருதினை வென்றார். அதேபோல் 2021, 2022-ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் என்ற விருதையும் தட்டிச்சென்றார்.

    பாபர் அசாம் ஏற்கனவே பாகிஸ்தான் சூப்பர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் உள்ளிட்ட தொடர்களில் ஆடி வருகிறார்.

    இதுதொடர்பாக, பாபர் அசாம் கூறுகையில், சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் இணைவதில் பெருமை கொள்கிறேன். உலகின் சிறந்த டி20 அணிகளில் ஒன்றான சிட்னி சிக்சர்ஸ் உடன் இணைவது உற்சாகம் அளிக்கிறது. அணியின் வெற்றிக்குப் பங்களிப்பதை எதிர்நோக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

    • உலகக் கோப்பையில் பாபர் ஆசம் ஆட்டம் மோசமாக இருக்கிறது.
    • மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க விமர்சகர்கள் வலியுறுத்தல்.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமின் ஃபார்ம் முக்கிய காரணம்.

    மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார்.

    பாபர் ஆசம் குறித்து சதாப் கான் கூறுகையில் ''பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால், அவரும் ஒரு மனிதன்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருந்தாலும், அவர் எங்களுடைய கேப்டன். அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். அவர் எங்களுக்கு ஆதராவாக உள்ளார். இதனால், தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகள் மட்டும். அதனால் யாரும் அவருடைய ஃபார்ம் குறித்து கவலைப்பட வேண்டாம். அவர் உலகத் தரம் வாய்ந்த வீரர்.

    அவர் ஃபார்ம்-க்கு வருவதற்கு ஒரு ஷாட் மட்டுமே தேவை. ரிஸ்வான் போன்று ரன்கள் குவிக்க தொடங்கி விடுவார். ஆகவே, பாபர் ஆசம் அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களுக்கு அடுத்த போட்டி மிகப்பெரியது. ஆகவே, அவர் அணிக்காக ரன்கள் குவிப்பார்'' என்றார்.

    பாகிஸ்தான் நாளை தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    • டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
    • 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.

    இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

    இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.

    ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி)

    சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள் முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள் டெவோன் கான்வே - 788 புள்ளிகள் பாபர் ஆசம் - 778 புள்ளிகள் ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள் டேவிட் மாலன் - 719 புள்ளிகள் கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள் ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள் ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள் பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்

    ×