search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி மாணவி கடத்தல்"

    • சின்னையன். மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
    • சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

    திருச்சி.

    திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது 16 வயது மகள் ஊட்டத்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். காலையில் வழக்கம் போல் பள்ளிக்குச் சென்ற அவர் மாலை நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    பெற்றோர் பல்வேறு இடங்களில் மகளை தேடி அலைந்தனர். இந்த நிலையில் ஊட்டத்தூர் பெட்ரோல் பங்க் அருகாமையில் ஊட்டத்தூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் சதீஷ் மற்றும் நான்கு பேர் கூட்டாக அந்த மாணவியை காரில் கடத்திச் சென்ற தகவல் தெரிய வந்தது.

    இதில் சதீஷ் அந்த மாணவியை காதலித்து வந்ததாக தெரிகிறது. ஆகவே அவர் நண்பர்கள் உதவியுடன் காதலியை திருமணம் செய்ய கடத்திச் சென்று இருக்கலாம் என கூறப்பட்டது. இது தொடர்பாக சின்னையன் சிறுகனூர் போலீசில் புகார் செய்தார்.

    அதில் கடத்தப்பட்ட தனது மகளை மீட்டு தருமாறு கூறியுள்ளார். இன்ஸ்பெக்டர் சுமதி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பிளஸ்-1 மாணவி காரில் கடத்தப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

    போடி அருகே பள்ளி மாணவியை கடத்திய தாய்-மகன் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி போடி சுப்புராஜ் நகரில் உள்ள விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

    இதே பகுதியைச் சேர்ந்த ராமன் மகன் சூர்ய பிரகாசுக்கு அந்த சிறுமியை திருமணம் செய்து வைக்க பெண் கேட்டுள்ளனர். ஆனால் இதற்கு சிறுமியின் தந்தை மறுத்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த சூரிய பிரகாஷ் மற்றும் அவரது தாய் சரவணம் ஆகியோர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால் போடி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மாணவியை கடத்திய சூரிய பிரகாஷ் அவரது தாய் சரவணம் மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    வெள்ளகோவிலில் பள்ளி மாணவி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வரகிறார்கள்.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    அதே பகுதியில் திருப்பூர் வீரபாண்டிபிரிவை சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி ராணி, 17 வயது மகனுடன் தங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மாணவியும், மணிகண்டனின் மகனும் பழகி வந்தனர்.

    இந்நிலையில் 6-ந்தேதி காலை கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. 

    இந்நிலையில் மணிகண்டனும் குடும்பத்துடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.

    இதனையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது 17 வயது மகனையும் தேடி வருகிறார்கள். பள்ளி சிறுமியை மீட்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

    ×