என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வெள்ளகோவிலில் பள்ளி மாணவி கடத்தல்
வெள்ளகோவில்:
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியில் திருப்பூர் வீரபாண்டிபிரிவை சேர்ந்த மணிகண்டன் தனது மனைவி ராணி, 17 வயது மகனுடன் தங்கி அம்மிக்கல், ஆட்டுக்கல் கொத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மாணவியும், மணிகண்டனின் மகனும் பழகி வந்தனர்.
இந்நிலையில் 6-ந்தேதி காலை கடைக்கு செல்வதாக கூறிச்சென்ற மகள் பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை அக்கம் பக்கம் மற்றும் உறவினர், தோழிகள் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.
இந்நிலையில் மணிகண்டனும் குடும்பத்துடன் மாயமாகிவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து பெண்ணின் தாய் வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார்.
இதனையடுத்து போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவரது மனைவி ராணி மற்றும் அவர்களது 17 வயது மகனையும் தேடி வருகிறார்கள். பள்ளி சிறுமியை மீட்க போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்