search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uncle arrested"

    பள்ளி மாணவியை கடத்தி திருமணம் செய்த சித்தப்பாவை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு கைது செய்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி குருந்திரக்கோட்டையை சேர்ந்தவர் ஜோதிலட்சுமி. இவருக்கு ஊட்டி குன்னூரை சேர்ந்த கங்காதரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண், பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கங்காதரன் உயிரிழந்து விட்டார். இதனால் ஜோதிலட்சுமி குழந்தைகளுடன் குருந்திரக்கோட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வந்து விட்டார். அவரின் 15 வயது மகள் ராஜேந்திரபுரத்தில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் வழக்கம் போல் கடந்த 3-ந் தேதி பள்ளிக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு, தனது சைக்கிளில் சென்றுள்ளார். மாலை பள்ளி முடிந்து அனைத்து மாணவர்களும் வீடு திரும்பிய நிலையில் ஜோதிலட்சுமியின் மகள் வீடு திரும்பவில்லை. இதனால் உடன் படிக்கும் சக மாணவிகளிடம் விசாரித்தபோது மகள் குறித்தஎந்த தகவலும் கிடைக்கவில்லை. இதற்கிடையே ஊட்டி குன்னூரில் உள்ள உறவினர்கள் வீட்டில் மாணவி இருப்பதாக ஜோதிலட்சுமிக்கு தகவல் கிடைத்துள்ளது. மேலும் உறவினரான ரமணிதரன் (39) என்பவர் மாணவியை கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து ஜோதிலட்சுமி அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீசாரின் விசாரணையில் கிடைத்த தகவல்கள் பின்வருமாறு:-

    ஊட்டி குன்னூரை சேர்ந்த ரமணிதரன், ஜோதிலட்சுமியின் கணவரான கங்காதரனின் தம்பி என்பதும், தனது அண்ணனின் மகள் தனக்கும் மகள் என்ற உறவு பாராமல் ரமணிதரன் 15 வயதான பள்ளி மாணவி மீது காதல் வயப்பட்டது தெரியவந்தது. இதனால் அவரை எப்படி யாவது அடைந்துவிட வேண்டும் என திட்டம் தீட்டி வந்துள்ளார். அவரை கடத்தி கட்டாய திருமணம் செய்யவும் முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த 3-ந் தேதி மாணவி பள்ளிக்கு செல்லும் போது வழிமறித்து நலம் விசாரித்துள்ளார். மாணவியும் தனது சித்தப்பா என்பதால் சூழ்ச்சியை உணராமல் சாதாரணமாக பேசியுள்ளார். பின்னர் தன்னுடன் ஊட்டிக்கு வரவேண்டும் என அழைத்துள்ளார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவித்து தான் தாயுடன் இருப்பதாக கூறியுள்ளார். பின்னர் அவரை மிரட்டி குன்னூருக்கு கடத்தி சென்றார்.

    பின்னர் தனது பேச்சுக்கு உடன்படவில்லை என்றால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். மேலும் மாணவியை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து, குன்னூரில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்ததும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்ததும் தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்ட போலீசார், ரமணிதரன் மீது ஆள்கடத்தல், சிறுமியை மிரட்டி திருமணம் செய்தல், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
    ×