search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லையில் பள்ளி மாணவி காரில் கடத்தல்
    X

    நெல்லையில் பள்ளி மாணவி காரில் கடத்தல்

    நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த பள்ளி மாணவியை காரில் கடத்திய 4 பேர் குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் சங்கரசுப்பு. இவரது மகள் சுகன்யா(வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10-வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சங்கரசுப்பு மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்றார். வீட்டில் சுகன்யா மட்டும் தனியாக இருந்தார். இந்நிலையில் மாலையில் திரும்பிவந்து பார்த்தபோது சுகன்யாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிய போது 4 பேர் காரில் கடத்திசென்றதாக கூறினர்.

    இதையடுத்து சங்கரசுப்பு டவுண்போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×