search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக பொதுக்கூட்டம்"

    • பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
    • கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

    உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    இதில் இன்று மட்டும் 11 ஊர்களில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்-அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவகங்கை-ஐ.பெரியசாமி, திருநெல்வேலி-கனிமொழி எம்.பி., விழுப்புரம்-அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி-பொன்முத்துராமலிங்கம், கடலூர்-எஸ்.எஸ்.சிவசங்கர், ஈரோடு-அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல்-தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.


    சனிக்கிழமை (17-ந்தேதி) நடைபெறும் பொதுக் கூட்டங்கள் விவரம்:-

    கிருஷ்ணகிரி- அமைச்சர் துரைமுருகன், திருச்சி டி.ஆர்.பாலு எம்.பி., திருப்பூர்- அமைச்சர் கே.என்.நேரு, அரக்கோணம்-முன்னாள் அமைச்சர் பொன்முடி, மதுரை- ஆ.ராசா எம்.பி., விருதுநகர்- கனிமொழி எம்.பி., ராமநாதபுரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர்- அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை- அன்பில்மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல்- பொன்முத்துராமலிங்கம், சிதம்பரம்- கோவி.செழியன்.

    இதேபோல் 18-ந்தேதி (ஞாயிறு) திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.
    • பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    பொள்ளாச்சி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 14-ந்தேதி மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.

    அவருக்கு தி.மு.க.வினர் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். இதை தொடர்ந்து கோவை ரெட்பீல்ட்ஸ்சில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு தங்கி ஓய்வெடுக்கிறார்.

    மறுநாள் காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள படகு துறையை திறந்து வைக்கிறார்.

    பின்னர் ஈச்சனாரி செல்லும் அவர் தனியார் கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா பேரூரையாற்றுகிறார்.

    அதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சிக்கு செல்கிறார். அங்கு மாலை 5 மணியளவில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் ஓர் ஆண்டு சாதனை விளக்க பொது கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த விழாவின் போது மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கிணத்துக்கடவு, வால்பாறை, பொள்ளாச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைய உள்ளனர்.

    மேலும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில், பிரமாண்ட பந்தலும் அமைக்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் பொதுக்கூட்ட மேடை அமைக்கப்பட உள்ள ஆச்சிபட்டி தனியார் மைதானத்தில், நேற்று மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து, ஏற்பாடுகள் குறித்து கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜனிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு வசதிகள், சுகாதார வசதிகள், வாகன நிறுத்தும் இடங்கள், போக்குவரத்து வசதி, பாதுகாப்பு பணிகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்டவகைள் குறித்து போலீஸ் அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

    பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு உடுமலை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந் தேதி அமராவதி நகர் சைனிக் பள்ளியில் நடைபெறும் விழாவில் பங்கேற்கிறார்.

    ×