search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்-  11 ஊர்களில் பொதுக் கூட்டம்
    X

    உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்- 11 ஊர்களில் பொதுக் கூட்டம்

    • பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.
    • கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத்துகிறது.

    உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும். இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் பாராளுமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 37 கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன.

    இதில் இன்று மட்டும் 11 ஊர்களில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது. அதில் பேசுபவர்கள் விவரம் வருமாறு:-

    ஸ்ரீபெரும்புதூர்-அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சிவகங்கை-ஐ.பெரியசாமி, திருநெல்வேலி-கனிமொழி எம்.பி., விழுப்புரம்-அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தூத்துக்குடி-பொன்முத்துராமலிங்கம், கடலூர்-எஸ்.எஸ்.சிவசங்கர், ஈரோடு-அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல்-தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கன்னியாகுமரி-திண்டுக்கல் லியோனி, மயிலாடுதுறை-சபாபதிமோகன், திருவண்ணாமலை-கோவி.செழியன்.


    சனிக்கிழமை (17-ந்தேதி) நடைபெறும் பொதுக் கூட்டங்கள் விவரம்:-

    கிருஷ்ணகிரி- அமைச்சர் துரைமுருகன், திருச்சி டி.ஆர்.பாலு எம்.பி., திருப்பூர்- அமைச்சர் கே.என்.நேரு, அரக்கோணம்-முன்னாள் அமைச்சர் பொன்முடி, மதுரை- ஆ.ராசா எம்.பி., விருதுநகர்- கனிமொழி எம்.பி., ராமநாதபுரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வேலூர்- அமைச்சர் எ.வ.வேலு, கள்ளக்குறிச்சி- அமைச்சர் மா.சுப்பிரமணியன், கோவை- அன்பில்மகேஸ் பொய்யாமொழி, திண்டுக்கல்- பொன்முத்துராமலிங்கம், சிதம்பரம்- கோவி.செழியன்.

    இதேபோல் 18-ந்தேதி (ஞாயிறு) திருவள்ளூர், தஞ்சாவூர், பெரம்பலூர், கரூர், புதுச்சேரி, பொள்ளாச்சி, காஞ்சிபுரம், தருமபுரி, நாகை, தேனி, நீலகிரி, தென்காசி, சேலம், ஆரணி ஆகிய இடங்களில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    Next Story
    ×