search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொளத்தூர்"

    • மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.
    • அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற 127 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

    அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி கொளத்தூர் தொகுதியை எடுத்துக்காட்டு தொகுதியாக மாற்றியுள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் முன்னேற்றத்தை இலக்காக கொண்டு பயணிக்க வேண்டும்.

    பெண்கள் சமூதாயத்தில் முன்னேற்றம் அடைய ஊக்கம் அளிக்கும் நாள் மார்ச் 8.

    மகளிர் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் அரசு பல திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறது.

    அரசின் திட்டங்களால் தமிழகம், பெண்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டை வஞ்சிக்காத மதிக்கின்ற மத்திய அரசு அமைய வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.
    • இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூரை சேர்ந்தவர் 32 வயது வாலிபர்். இவருக்கு பகுதி நேர வேலை ெதாடர்பாக வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தது. அதில் தொடர்பு கொண்ட போது மறுமுனையில் பேசிய மர்ம நபர் ஒரு லிங்கை அனுப்பி அதில் பணத்தை முதலீடு செய்தால் அதிக கமிஷன் பெறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறினர்.

    இதனை நம்பிய அவர் 7 தவணைகளாக ரூ.6 லட்சத்து 71 ஆயித்து 241 - ஐ அவர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். ஆனால் அவர் கூறிய படி கமிஷன் கொடுக்கவில்லை. இது தொடர்பாக அந்த நபரை மீண்டும் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றம் அடைந்த அவர் சம்பவம் குறித்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அவர் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    • கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது.
    • வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூரில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை நாளன்று கால்நடை வார சந்தைக்கு சுற்றுவட்டார கிராமப் பகுதியில் இருந்தும் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகளும், விவசாயிகளும் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.

    இந்த நிலையில் நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை வருவதை முன்னிட்டு இன்று கொளத்தூரில் நடைபெற்ற கால்நடை வார சந்தையில் வெள்ளாடு, செம்மறிஆடு, குரும்பை ஆடு விற்பனை சூடு பிடித்தது. வெள்ளாடு கிடாய் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோன்று செம்மறியாடு ரு.7 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

    இதன் காரணமாக கொளத்தூர் கால்நடை வார சந்தையில் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் கால்நடை விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகளவில் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வந்ததால் ஆடுகளின் விலை கிலோ ஒன்றுக்கு 1,200 ரூபாய் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டது.

    • கொளத்தூரில் மாணவ - மாணவிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலவச சைக்கிள்கள் வழங்கினார்.
    • ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சென்னை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை கொளத்தூரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அரசு விழாவில் தொன் போஸ்கோ மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1546 மாணவ-மாணவிகள், தொகுதியில் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கினார்.

    இதில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேகர்பாபு, மேயர் பிரியா,கமிஷனர் ககன் தீப்சிங்பேடி, எம்.பி.க்கள் கிரிராஜன், கலாநிதி வீராசாமி, ஐ.சி.எப்.முரளி, தேவஜவகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து கொளத்தூர் அருள்மிகு கபாலீஸ்வரர் கலைக்கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    மேலும் பள்ளிசாலையில் புதிதாக கட்டப்பட உள்ள சுகாதார மற்றும் ஆரோக்கிய மையம் மற்றும் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பள்ளி சாலையில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளி சிங்காரச் சென்னை 2.0 நிதியில் புனரமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    200 அடி சாலையில் இருந்து தணிகாசலம் நகர் கால்வாயில் இணைக்கும் மழைநீர் வடிகால்வாய் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    நீர்வள ஆதாரத் துறையின் மூலம் கொளத்தூர் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர் வாரி ஆழப்படுத்தி அகலப்படுத்தி அழகுபடுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    சீனிவாசா நகர் சென்னை ஆரம்ப பள்ளியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தார். ஜி.கே.எம்.பிரதான சாலை, 33-ஆவது தெரு சந்திப்பில், புதியதாக கட்டப்பட உள்ள 16-ம் நாள் காரியக் கூடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

    பெரியார்நகர் புறநகர் அரசு பொது மருத்துவமனையில் புதியதாக அமைக்கப்பட்டு உள்ள 4 அறுவை அரங்கம் மற்றும் ஆய்வகத்தினை திறந்து வைத்து பிராணவாயு உற்பத்திக்கலனை தொடங்கி வைத்தார்.

    ×