search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தடிமை"

    • கொத்தடிமை தொழிலாளர் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
    • அலுவலர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்க ளுக்கான ஒருநாள் பயிற்சி நடந்தது. கலெக்டர் விஷ்ணு சந்திரன் கலந்து கொண்டு பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் பேசுகை யில், மாவட்டத்தில் கொத்த டிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து கொத்தடிமை முறை (ஒழிப்பு) சட்டம் 1976-ன் படி போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் கொத்தடிமைத் தொழிலாளர் முறை இருந்து வருகிறதா? என்பதை மாவட்ட தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை, சமூக நலத்துறை மற்றும் பிற துறைகளும் ஒருங்கிணைந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். கொத்தடிமைத் தொழிலாளர் முறை முற்றிலும் தவிர்க்கப்பட்டது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    அதற்கேற்ப அலுவ லர்கள், பணியாளர்கள் உரிய பயிற்சிகளை பெற்று களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

    தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் ராஜா, ஜப பிரின்ஸ், எசக்கியேல், மலர்விழி ஆகியோர் பணியாளர்களுக்கு கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு குறித்த பயிற்சி வழங்கினர்.

    • வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது.
    • சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    வருசநாடு:

    தேனி மாவட்டத்தின் பெரும்பகுதி விவசாயம் சார்ந்த தொழிலாகவே உள்ளது. இங்குள்ள மக்கள் விவசாயிகள், விவசாய கூலித்தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள நபர்களை குறிவைத்து குழந்தைகள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. சிறுவயதில் பள்ளிக்கு செல்லாத 18 வயதுக்கு குறைவாக உள்ள குழந்தைக்கு ரூ.10ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விலைபேசி வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச்செல்கின்றனர்.

    வறுமையில் உள்ள பெற்றோருக்கு அந்த தொகை மிகப்பெரிய பணமாக தெரிவதால் பலர் தங்கள் குழந்தையை விற்றுவிடுகின்றனர். இதுபோல விற்பனை செய்யப்படும் குழந்தைகள் அவர்களின் கொடுமை தாங்காமல் அங்கிருந்து தப்பிவிடுகின்றனர். மொழி தெரியாத மாநிலத்திற்கு செல்லும் குழந்தைகள் அங்கிருந்து தப்பி குற்றசெயல்களில் ஈடுபட்டு சிறைக்கு செல்லும் அவலமும் நடந்து வருகிறது.

    ஆண்டிபட்டி அருகில் உள்ள வேலப்பர் கோவில் பகுதியை சேர்ந்த ரவி மகன் தமிழரசன்(14), வேல்முருகன் மகன் ஞானவேல், பட்டவராயன்(17) ஆகிய 3 பேரை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த ஒருவர் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு அழைத்துச்சென்றார். சில மாதங்கள் அவர்கள் தங்கள் பெற்றோருடன் பேசி வந்த நிலையில் அதன்பிறகு எவ்வித தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.

    அவர்களது செல்போன் இணைப்பு கிடைக்கவில்லை. இதுகுறித்து வேலைக்கு அழைத்துச்சென்ற உசிலம்பட்டியை சேர்ந்த ஏஜென்டிடம் கேட்டபோது அவர்கள் 3 பேரும் ஓட்டலில் திருடிவிட்டனர். அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பே அவர்களை வேலையில் இருந்து நிறுத்திவிட்டோம் என்று பொறுப்பில்லாமல் பதில் அளித்துள்ளார். 18 வயதுக்கு குறைந்த சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதே குற்றம் என்று தொழிலாளர் நலத்துறை அறிவுறுத்தி வரும் நிலையில் சிறுவர்களை கொத்தடிமையாக வேலைக்கு அழைத்துச்சென்று தற்போது அவர்கள் எங்கே உள்ளனர் என தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர்கள் ராஜதானி போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் சத்யபிரபா, சப்-இன்ஸ்பெக்டர் முஜிபுர்ரகுமான் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆண்டிபட்டி அருகில் உள்ள கடமலைக்குண்டு கரட்டு காலனியை சேர்ந்த 2 சிறுவர்கள் வெளிமாநிலத்திற்கு வேலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களது நிலையும் தற்போது என்ன ஆனது என தெரியாமல் அவர்களது பெற்றோர் அதிர்ச்சியில் உள்ளனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இதுபோன்ற குழந்தை விற்பனை நடைபெற்று வருகிறது. ஒருபுறம் மைனர் பெண்குழந்தைகளுக்கு திருமணம் நடத்திவரும் ஏழை பெற்றோர் வறுமை காரணமாக தங்கள் ஆண்குழந்தைகளை விற்பனைக்காக வெளிமாநிலத்திற்கு விற்று வருகின்றனர்.

    இதுகுறித்து சமூகநலத்துறை அதிகாரிகள் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளை விலை கொடுத்து வாங்கிச்செல்லும் ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.
    • மீட்கப்பட்டவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    திருப்போரூர்:

    கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சியில் கொத்தடிமைகளாக மரம் வெட்டும் தொழில் செய்து வந்த 11 சிறுவர்கள், 6 பெண்கள், உள்பட 27 பேர் திருப்போரூர் வட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர்.

    அவர்கள் அனைவரும் திருத்தணி அருகே கிருஷ்ணாபுரம், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மரம் வெட்டும் வேலை உள்ளதாக அழைத்து வந்து கொத்தடிமைகளாக பல வருடங்களாக வேலை வாங்கி வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை சொந்த ஊருக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    • கொத்தடிமை தொடர்பாக புகார் தெரிவிக்க புதிய தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது.
    • குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மதுரை

    குழந்தை தொழிலாளரை பணி அமர்த்துவது, வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்துவது, தொழிலாளரை கொத்தடிமையாக நடத்துவது ஆகியவை சட்டப்படி குற்றம். தமிழகத்தில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற, அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக புகார் தெரிவிக்க ஏற்கனவே 1800 4252 650 தொலைபேசிஎண் பயன்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில் பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் வகையில் புதிய கட்டணமில்லா தொலைபேசிஎண்: 155214 உருவாக்கப்பட்டு உள்ளது. எனவே பொதுமக்கள் மேற்கண்ட தொலைபேசி எண்களில் கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் தெரிவித்துள்ளார்.

    • கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.
    • கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கொத்தடிமைத் தொழில் முறை ஒழிப்பினை சிறப்பாக நடைமுறைபடுத்திடும் வகையில், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆண்டு, மாநில அளவிலான கட்டுப்பாட்டு மையம் சென்னையில் அமைக்கப்பட்டது. கொத்தடிமைத் தொழிலாளர் தொடர்பான புகார் அளிக்க இலவச செல்போன் எண் 1800 4252 650 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை பதிவு செய்யலாம்.

    தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலா ளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்க, பொதுமக்கள் எளிதில் நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில், பிஎஸ்என்எல் மூலம் 155214 என்ற டோல் ஃப்ரீ எண் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

    எனவே கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர் குறித்த புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் , கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகாரர்களை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமை-குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.
    • புகார்களை தெரிவிக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாட்டை கொத்த டிமை தொழிலாளர் இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான கொத்தடிமை கண்காணிப்பு குழு செயல்பட்டு வருகிறது.

    தற்போது கொத்தடிமை தொழிலாளர்களை கண்டறிய மற்றும் அவர்கள் தொடர்பான விவரங்களை புகாராக அளித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல் களின்படி, கட்டணமில்லா தொலை பேசி உதவி எண் (1800 4252 650) ஏற்கனவே அறிமுக ப்படுத்தப்பட்டுள்ளது.

    அதனைத்தொடர்ந்து தற்போது கொத்தடிமை மற்றும் குழந்தை தொழி லாளர் குறித்த புகார்களை தெரிவிக்க பொது மக்கள் எளிதில் நினைவில் வைத்துக்கொள்ளும் பொருட்டு, கட்டணமில்லா தொலைபேசி எண் 155214 என்ற எண் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது.

    கொத்தடிமை மற்றும் குழந்தை தொழிலாளர்கள் குறித்த புகார்களை தெரி விக்க ஏற்கனவே உள்ள 1800 4252 650 என்ற எண்ணிலும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ள 155214 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களது புகார்களை பதிவு செய்ய லாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர்.
    • துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது.

    புதுடெல்லி:

    லிபியா நாட்டில் நல்ல சம்பளத்துடன் வேலை வாங்கித்தருவதாக ஒரு முகவர் ஆசைவார்த்தை கூறியதை நம்பி, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 12 பேர் அவருடன் சென்றனர். சட்டவிரோதமாக அழைத்து செல்லப்பட்ட அவர்கள், அங்கு போனவுடன் தனியார் நிறுவனங்களில் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வைக்கப்பட்டனர். கொத்தடிமையாக நடத்தப்பட்டனர். உணவும் வழங்கப்படவில்லை. அடித்து சித்ரவதை செய்யப்பட்டனர். 2 மாதங்களாக இதே நிலை நீடித்தது.

    அவர்களை மீட்குமாறு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் இக்பால்சிங் லால்புராவிடம் சில பஞ்சாப் பிரமுகர்கள் மனு அளித்தனர். அவர் அதை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.

    துனிஷியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவி நாடப்பட்டது. தூதரகத்தின் உதவியால், முதலில் 4 பேர், அடுத்தபடியாக 8 பேர் என 12 பேரும் மீட்கப்பட்டு இந்தியா அழைத்துவரப்பட்டனர்.

    • கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் பிப்ரவரி 9-ந் தேதி அன்று அனுசரிக்க அரசாணை வெளியிடப்பட்டது.இதையடுத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் ஆணையின்படி மதுரை மாவட்டத்தில் கலெக்ட்ர் அனீஷ்சேகர் தலைமையில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பு நீதிபதி தீபா, தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், துணை ஆணையர் லிங்கம்,, உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) மலர்விழி மற்றும் கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள், "ONE STOP CRISIS TEAM" உறுப்பினர்கள் ஆகியோர் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    மதுரை மாவட்ட கலெக்டர் தலைமையில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரம் வெளியிடப்பட்டு, பொது மக்கள் அதிகம் கூடும். இடங்களான கலெக்டர் அலுவலக வளாகம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், கடைவீதிகள் மற்றும் ெரயில் நிலையம் ஆகிய இடங்களில் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக 30.1.2023 முதல் 4.2.2023 வரை வருவாய் கோட்டாட்சியர்களின் தலைமையில் தொழிலாளர் துறை மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், கொத்தடிமை தொழிலாளர் கண்காணிப்புக் குழு உறுப்பினர்கள் அடங்கிய குழுக்களால் செங்கல் சூளைகள் மற்றும் அரிசி ஆலைகளில் கூட்டாய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகள் மதுரை மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகங்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது இடங்கள், ெரயில்வே மற்றும் பஸ் நிலையங்கள், கடைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் பார்க்கும் வகையிலும் காட்டிவைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள். தன்னாட்சி அமைப்புகள், பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்க ளிடையே கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    மேலும் உள்ளுர் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு வாசகம் மற்றும் உதவி எண் குறித்து தற்போதைய செய்தியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் எவரேனும் பணிக்கு அமர்த்தப்பட்டது கண்டறியப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கையுடன், 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கபட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    மேற்கண்ட தகவலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்/ கொத்தடிமை தொழிலாளர்) ஒருங்கிணைப்பு அலுவலர் மைவிழிச்செல்வி தெரிவித்துள்ளார்.

    • செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
    • கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல்சூளை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொத்தடிமையாக பணிபுரிந்து மீட்கப்பட்டவர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் கடந்த ஆண்டு திருத்தணி அருகே வீரகநல்லூர் பகுதியில் கொத்தடிமை முறையில் இருந்து மீட்கப்பட்ட 80 குடும்பங்களைச் சேர்ந்த 300 பேர் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, சிறகுகள் செங்கல் சூளை ஆரம்பிக்கப்பட்டது.

    அது தற்போது வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதனால் அங்கு வேலைபார்த்து வருபவர்களின் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும், கொத்தடிமை தொழில் முறையில் இருந்து மீட்கப்பட்ட 40 குடும்பங்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக "சிறகுகள் செங்கல் சூளை-2" கடம்பத்தூர் ஒன்றியம் பிஞ்சிவாக்கம் பகுதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த செங்கல் சூளையை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இதில் 54 மீட்டெடுக்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு ரூ.4.5 லட்சம் மதிப்பீட்டில் 27 மீன் பிடிக்கும் வலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு தேவையான பொருட்கள், தலா ரூ.10 ஆயிரம் காசோலைகளை கலெக்டர் வழங்கினார். நிகழ்ச்சியில் பயிற்சி கலெக்டர் கேத்ரின் சரண்யா, மகளிர் திட்ட அலுவலர் மலர்விழி, வளர்ச்சி அலுவலர் லதா, ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஊராட்சி மன்ற தலைவர் உமா மணிகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது, 'கொத்தடிமையில் இருந்து மீட்கப்பட்ட நாங்கள் புதிய தொழில் தொடங்கி உள்ளோம். இதற்கு உதவிய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி. நாங்கள் இந்த செங்கல் சூளையை சிறப்பாக நடத்தி எங்களது வாழ்வில் முன்னேறுவோம்' என்றனர்.

    • ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அங்கு பணியாற்றி வந்த 3 குடும்பங்களை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 6 பேர் அவிநாசிக்கு தப்பி வந்தனர்.

    நாம் தமிழர்கட்சியினர், உணவு கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும்திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,கொத்தடிமைகளாக நாங்கள் அங்கு இருந்தோம். வேலையில் சேர்ந்த போது கூறியபடி, தினக்கூலி வழங்கவில்லை.வீட்டை பூட்டி வெளியே நிறுத்தி கொடுமை செய்தனர். மேலும் 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.அவர்களையும் மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    ×