search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்றுமதி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியாற்றிய  3 குடும்பத்தினர் மீட்பு - கலெக்டரிடம் பரபரப்பு புகார்
    X

    காேப்புபடம்

    ஏற்றுமதி நிறுவனத்தில் கொத்தடிமைகளாக பணியாற்றிய 3 குடும்பத்தினர் மீட்பு - கலெக்டரிடம் பரபரப்பு புகார்

    • ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
    • 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்று உள்ளது. கடந்த ஒரு மாத காலமாக அங்கு பணியாற்றி வந்த 3 குடும்பங்களை சேர்ந்த தம்பதி உள்ளிட்ட 6 பேர் அவிநாசிக்கு தப்பி வந்தனர்.

    நாம் தமிழர்கட்சியினர், உணவு கொடுத்து அவர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுத்தனர். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும், நாம் தமிழர் கட்சியினரும்திருப்பூர் கலெக்டர் வினீத்தை சந்தித்து இதுகுறித்து புகார் அளித்தனர். அப்போது ஆர்.டி.ஓ., விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் உறுதியளித்தார்.பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில்,கொத்தடிமைகளாக நாங்கள் அங்கு இருந்தோம். வேலையில் சேர்ந்த போது கூறியபடி, தினக்கூலி வழங்கவில்லை.வீட்டை பூட்டி வெளியே நிறுத்தி கொடுமை செய்தனர். மேலும் 10 குடும்பத்தினர் அங்கு சிக்கியுள்ளனர்.அவர்களையும் மீட்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×