search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கண்ணகி நகர்"

    கண்ணகி நகரில் பெண்ணை வெட்டிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை சோழிங்கநல்லூரை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஒரு வழக்கில் 3 மாதங்களா புழல் சிறையில் இருந்தார். தன் மனைவி ஜெயிலில் வந்து பார்க்காததால் அவரது நடத்தையில் சந்தேகப்பட்டார்.

    ஜெயிலில் இருந்து வெளியே வந்த அவர் தனது நண்பர்களுடன் தனது மனைவியை வெட்டி கொலை செய்ய முயன்றார். திருவான்மியூர் போலீசார் விரைந்து வந்து சரண்யாவை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இது தொடர்பாக திரு வான்மியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திசென்னை கண்ணகி நகரை சேர்ந்த பிரபு, விக்கி, ஆட்டோ டிரைவர் விமல், சென்னை பெரியார் நகரை சேர்ந்த பார்த்தசாரதி ஆகிய 4 பேரை கைது செய்தனர். ராஜேஸ் உல்பட 2 பேரை தேடி வருகின்றனர்.


    சென்னை கண்ணகி நகரில் பெயிண்டர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோழிங்கநல்லூர்:

    சென்னை கண்ணகி நகர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் விமல் (வயது23). பெயிண்டராக வேலை செய்து வந்தார். கடந்த 6 வருடங்களாக அதே பகுதியில் வசித்து வந்தார்.

    சென்னை காரப்பாக்கத்தில் 2 நாட்களுக்கு முன்பு திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் விமல் பங்கேற்றார். அப்போது கண்ணகி நகரை சேர்ந்த வாலிபர்கள் சிலர் திருமண நிகழ்ச்சியில் குடிபோதையில் ஆட்டம் போட்டனர். அப்போது விமலுக்கும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

    நேற்று இரவு 8.30 மணியளவில் விமல் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் அவரை மது அருந்தலாம் என்று எழுப்பிச் சென்றார். இருவரும் அங்குள்ள ஏரிக் கரை பகுதிக்கு சென்றனர்.

    அப்போது திருமண வீட்டில் நடந்த மோதல் முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பல் விமல் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

    தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விமல் கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொலையாளிகளை தேடி வருகிறார்கள். #tamilnews

    ×