search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waterfalls"

    • கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்கள் பெரும்பாலும் இயற்கை காட்சிகளாக இருந்து வரக்கூடிய நிலையில் இங்குள்ள மலைப்பகுதிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரும் அழகுதான். இதனை கண்டு ரசிப்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகளும் வருகை தருகின்றனர்.

    இந்நிலையில் கடந்த 1 வாரமாக கொடைக்கானலை சுற்றியுள்ள மேல்மலை மற்றும் கீழ் மலை உள்ளிட்ட பல்வேறு கிராம பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் கொடைக்கானலில் 20 செ.மீ. மழை பதிவாகி உள்ளதால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

    இது மட்டுமல்லாது கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓட தொடங்கி உள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    இதுமட்டுமின்றி மலை சாலைகளில் திடீர் அருவிகளும் உருவாகி சுற்றுலா பயணிகளை வசீகரித்து வருகிறது. தொடர் மழையால் குளு குளு சீதோசனம் கொடைக்கானலில் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    படகு சவாரி, சைக்கிள், குதிரை சவாரி செய்தும், மலை முகடுகளில் தவழ்ந்து செல்லும் மேக கூட்டங்களை பார்த்தும் உற்சாகம் அடைந்து வருகின்றனர். விட்டு விட்டு சாரல் மழை பெய்தாலும் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்து வருகின்னர். இதனால் அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதி வருகிறது. 

    • பருவமழை காரணமாக மலைச்சாலை யின் ஓரங்களில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சி கள் புதிதாக உருவாகி யுள்ளன.
    • இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தமிழக-கேரள எல்லை பகுதியை இணைக்கும் முக்கிய வழித்தடமாக தேனி மாவட்டம் போடிமெட்டு மலைச்சாலை இருந்து வருகிறது. இந்த மலை ச்சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.

    மேலும் தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்த லமாக உள்ள மூணாறுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாகவும் போடி மெட்டு இருந்து வருகிறது.

    இந்நிலையில் போடி மெட்டு பகுதியில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக மலைச்சாலை யின் ஓரங்களில் ஆங்காங்கே 10க்கும் மேற்பட்ட நீர்வீழ்ச்சி கள் புதிதாக உருவாகி யுள்ளன. மலைச்சாலை வழியாக வாகனங்களில் செல்லும் சுற்றுலா பயணி கள் இந்த நீர்வீழ்ச்சிகளை கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்கின்றனர். மேலும் போடி மெட்டு மலைச் சாலையில் பனி மூட்டங்களுக்கு நடுவே சுற்றுலா பயணிகள் இயற்கை அழகை ரசித்த வாறு செல்கின்றனர்.

    • தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
    • இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    சேலம்:

    வடகிழக்கு பருவமழை காரணமாக சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு ஆகிய பகுதிகளில் பெய்து மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகிறது. இந்நிலையில் தொடர் மழையால் ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    மாவட்டத்தில் இன்று காலையும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தம்மம்பட்டி, மேட்டூர், கடையாம்பட்டி, ஏற்காடு, சங்ககிரி, ஆத்தூர், வீரகனூர், கரிய கோவில், ஆனைமடுவு ஆகிய பகுதிகளில் நேற்று மழை பெய்தது. தொடர் மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவி வருகிறது.

    சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    வீரகனூர் - 23, சங்ககிரி - 16.3, ஏற்காடு - 12.6, ஆத்தூர்-9, ஆனைமடுவு - 9, கரிய கோவில் - 5, பெத்தநாயக்கன்பாளையம் - 5, செங்கவல்லி - 5, மேட்டூர் -4.4, தம்மம்பட்டி - 4, எடப்பாடி - 3, கடையாம்பட்டி - 3, சேலம்- 2.4 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 101.70 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    • விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர்.
    • நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது.

    விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டும் கேக் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

    நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    குற்றாலம் என்ற பெயர் பராந்தகச் சோழன் கல்வெட்டில் இருந்து வருகிறது,இலக்கிய காலத்தில் இருந்து செழுமை மிக்க வரலாற்று தொடர்புடைய ஊர் குற்றாலமாகும் இதனால் இவ்விழாவில் நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

    பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தற்போது வளர வேண்டிய மாவட்டமாகும். இன்னும் அதிகப்படியான துறை அதிகாரிகள் இங்கு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    அதுகுறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி விரைவில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் அனைத்துத்துறை அதிகாரிகளும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இவ்விழாவில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், பிரகாஷ், ரூபி மனோகரன், சிந்தனைச்செல்வன், காந்திராஜன், பழனிநாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ்,செங்கோட்டை நகர்மன்ற தி.மு.க. செயலாளர் ரஹீம், இலஞ்சி முதல் நிலை பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், மேலகரம் முதல் நிலை பேரூராட்சி தலைவர் வேணி,பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வல்லம் தொழிலதிபர் தி.மு.க. பாலகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு வீராணம் சேக் முகமது, பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி, உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் நன்றி கூறினார் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திரைப்பட நடிகர் சூரி, சின்னத்திரை புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட கலை பண்பா–ட்டுத்துறை சார்பில் பொள்ளாச்சி மகேந்திரன் குழு–வினரின் ஜிக்காட்டம் நடைபெற்றது.

    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் அனைத்தும் லேசர் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.

    அதனை தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அருவி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனர்.

    மியான்மர் நீர் வீழ்ச்சியின் உச்சியில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்த 2 இளம்பெண்கள் கீழே தவறி விழுந்து பலியானார்கள். #Myanmar #Waterfalls
    யங்கோன்:

    மியான்மரின் தென்கிழக்கு பகுதியில் கியான் மாகாணத்தின் காவ்கரியேக் நகரில் டாவ் நாவ் என்ற நீர்வீழ்ச்சி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இளம்பெண்கள் 10 பேர் சுற்றுலா வந்தனர். 19 வயதான 2 பெண்கள் நீர் வீழ்ச்சியின் உச்சிக்கு சென்றனர். அவர்களில் ஒரு பெண் நீர் வீழ்ச்சியின் உச்சியில் நின்றுகொண்டு செல்போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் இடறியது. உடனே அவரது தோழி அவரின் கையை பிடித்துக்கொண்டு காப்பற்ற முயன்றார்.

    ஆனால் இருவரும் நீர்வீழ்ச்சியின் உச்சியில் இருந்து 60 மீட்டர் ஆழத்தில் தரையில் விழுந்தனர். இதில் பாறைகளில் மோதியதில் இருவருக்கும் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

    இதில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொரு பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார்.  #Myanmar #Waterfalls 
    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #OldCoutralam
    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவு தண்ணீர் விழுந்தது.



    இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam

    நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் கபினி அணையில் இருந்து காவிரியில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இம்மாத இறுதியில் மேட்டூர் அணை திறப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. #KabiniDam #CauveryRiver
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்குகிறது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    தொடர்மழை காரணமாக கர்நாடக மாநிலத்தின் முக்கிய அணைகளான கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.), கபினி மற்றும் ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தபடி உள்ளது.

    கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நேற்று 22ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று இது 28ஆயிரத்து 383கனஅடியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    அணையின் மொத்த கொள்ளளவு 124.80 அடியாகும். நேற்று முன்தினம் 82.80 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 86.60 அடியாக உயர்ந்தது. இன்று காலை இது 90.80 அடியாக உயர்ந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் நீர்மட்டம் 8 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து 394 கனஅடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது.

    இதேபோல் மைசூர், குடகு மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் கபினி அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.

    இந்த அணைக்கு நேற்று முன்தினம் 17ஆயிரத்து 500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 23ஆயிரத்து 487 கனஅடியாக அதிகரித்தது. இன்று காலை 22ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் நீர்மட்டம் 77.05 அடியாக உயர்ந்து உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 84 அடியாகும்.


    இன்னும் அணை நிரம்ப 7 அடியே உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால் இன்னும் 3 அல்லது 4 நாட்களில் கபினி அணை முழுவதும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கபினி அணை நிரம்பி வருவதால், பாதுகாப்பு கருதி அந்த அணையிலிருந்து உபரிநீர் காவிரியில் திறந்து விடப்பட்டு உள்ளது. நேற்று 100கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இன்று இது 1000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. நீர்திறப்பு படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதால் காவிரியில் தண்ணீர் அதிகளவு வரத்தொடங்கி உள்ளது.

    கபினியில் திறக்கப்பட்ட தண்ணீர் 4 நாட்களில் தமிழக, கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு மற்றும் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேரும். இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு முன்னதாகவே மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்ற ஆண்டு பருவமழை தவறியதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததாலும், குறித்த காலமான ஜூன் 12-ந்தேதி தண்ணீர் திறக்க முடியாமல் போய்விட்டது. இதனால் கால தாமதமாக அக்டோபர் மாதம் 2-ந்தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் காவிரி டெல்டா மாவட்டங்களில் 4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. பயிர்கள் அனைத்தும் கருகியது. ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதமே கர்நாடக அணைகள் நிரம்பி வருவதால், அங்கிருந்து திறக்கப்படும் உபரிநீர் மூலம் இந்த ஆண்டு, இம்மாதம் இறுதியில் அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்தில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு தமிழக டெல்டா விவசாயிகள் மத்தியில் எழுந்து உள்ளது.


    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 39.94 அடியாக இருந்தது. இன்று இது 39.96 அடியாக உயர்ந்து உள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது 743 கனஅடியாக உயர்ந்து உள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு குறைவாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் கொஞ்சம், கொஞ்சமாக உயர்ந்து வருகிறது.

    ஒகேனக்கல்லில் தற்போது 1,500 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கபினி அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. காவிரியில் வரும் நீர்வரத்தை தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்பாசனத்துறை அதிகாரிகள் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர்.

    மேட்டூர் அணையில் இருந்து கடந்த 7 ஆண்டுகளாக போதுமான தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

    இந்த ஆண்டும் அதேபோல் நேற்று முன்தினம் தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த ஆண்டைப்போல இல்லாமல் இந்தாண்டு காவிரியில் திறக்கப்படும் உபரிநீரால் குறுவை சாகுபடி செய்யலாம் என்ற எதிர்பார்ப்பில் டெல்டா விவசாயிகள் உள்ளனர்.  #KabiniDam #CauveryRiver #MetturDam #SouthwestMonsoon
    ×