search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Old Coutralam"

    • ஹரிணி அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாள்
    • தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி பழைய குற்றால அருவியில் நேற்று சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்த பொழுது அருவி தடாகத்தில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட ஹரிணி என்ற 4 வயது சிறுமியை விளாத்திகுளத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற வாலிபர் பத்திரமாக மீட்டார்.

    இந்நிலையில் அருவிப் பகுதியில் இருந்து தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் துவாரம் இருந்ததால் சிறுமி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலை உடனடியாக அருவிக் கரையில் நேரில் பார்வையிட்டு தடாகத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையில் இருந்த துவாரத்தில் உடனடியாக இரவோடு இரவாக இரும்பு தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணியில் ஊழியர்களுடன் சேர்ந்து ஈடுபட்டார்.

    துரிதமாக செயல்பட்டு தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுத்த ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் சுடலைக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழையினால் பழையகுற்றாலம், மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. #OldCoutralam
    தென்காசி:

    தமிழகத்தில் பல்வேறு பகுதியில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. எனினும் நெல்லை மாவட்டத்தில் இன்னும் பருவமழை முழுமையாக பெய்யவில்லை. ஏற்கனவே தென்மேற்கு பருவமழையின் போது அணைகள், குளங்கள் நிரம்பின. இதனால் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்யும் பட்சத்தில் மேலும் அணைகள், குளங்களுக்கு தண்ணீர் வரும் என விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கடந்த 2 மாதமாகவே வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யவில்லை. இதனிடையே இன்று அதிகாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 8 மணி வரை நீடித்தது.

    குற்றாலம் மலைப்பகுதியில் பெய்த மழையினால் அங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. பழைய குற்றால அருவியில் திடீரென கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயினருவி, ஐந்தருவியில் அதிகளவு தண்ணீர் விழுந்தது.



    இதே போல் பாபநாசம் மலைப்பகுதியில் கனமழை பெய்ததால் அகஸ்தியர் அருவியிலும் அதிகளவில் தண்ணீர் கொட்டியது. மணிமுத்தாறு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. #OldCoutralam

    ×