search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "saral festival"

    • தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில்நேற்று பொதிகை பெருவிழா 6-ம் நாள் சாரல் திருவிழாவில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தை களுக்கான யோகா போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார்.

    மாணவி தீபிகா 2-மும் இடம் விஜயலட்சுமி 3-ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் உஷா, மாவட்ட சித்த மருத்துவர் அலுவலர், பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் சார்ந்த மரியா, துணை முதல்வர் சவுந்தர்ராஜன், மருத்துவர் ராஜேஷ் விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் சுதா விரிவுரையாளர் தாவரவியல் துறை, மருத்துவர் ஸ்ரீராம் விரிவுரை யாளர் குழந்தை மருத்துவம் துறை அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாளையங்கோட்டை, மருத்துவர் கலா, மருத்துவர் ஹரிஹரன் மற்றும் தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், யோகா தெரபிஸ்ட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.
    • சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் பொதிகை மலை சாரலில் மாவட்ட கலெக்டரின் முயற்சியால் சாரல் திருவிழா 2022 குற்றாலத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கொழு கொழு குழந்தை போட்டி

    நிகழ்வின் ஒரு வண்ணமாக ஒரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நேற்று "கொழு கொழு குழந்தை போட்டி" சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடைபெற்றது. அதில் 56 குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    அவர்களின் எடை, உயரம் மற்றும் இயக்க தசை செயல்பாடுகள் மூலம் முதல் மூன்று குழந்தைகளை மாவட்ட திட்ட அலுவலர் முத்துமாரியப்பன் தலைமையில், நடுவர்களாக மருத்துவ அலுவலர் சரவணன் மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், கடையநல்லூர் பர்கத் சுல்தானா ஆகியோரால் ஒருங்கிணைத்து தேர்வு செய்யபட்டது.

    இதில் கீழப்பாவூர் வட்டாரத்திற்குட்பட்ட மணிராஜ், முருகலட்சுமி தம்பதியினரின் குழந்தை சிவாத்மிகாதங்கம் முதல் பரிசு ரூ.10 ஆயிரமும், கடையநல்லூர் வட்டாரத்திற்குட்பட்ட சாமிதுறை-இசக்கியம்மாள் தம்பதியினரின் குழந்தை கோகுல் இரண்டாம் பரிசு ரூ.5 ஆயிரமும், செங்கோட்டை வட்டாரத்திற்குட்பட்ட சார்புதீன்-நஸ்ரின் பாத்திமா தம்பதியினரின் குழந்தை ஆபிக் அகமது மூன்றாம் பரிசு ரூ.2,500 பெற்றனர்.

    இன்றைய நிகழ்ச்சிகள்

    சாரல் திருவிழாவில் இன்று விளையாட்டு துறை சார்பில் பளுதூக்குதல், வலுதூக்குதல் மற்றும் ஆணழகன் போட்டி, யோகா போட்டி ஆகியவை நடைபெற்றது.

    மாலையில் மதுரை பனையூர் ராஜா குழுவினரின் தப்பாட்டம் நிகழ்ச்சியும், நெல்லை ஸ்ரீராம் நாட்டியாலயா வழங்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, சென்னை பாரதி திருமகன் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி,காவல்துறை இசை மேள அணிவகுப்பு, கேரள மாநில கலைஞர்களின் நிகழ்ச்சி, சங்கரன்கோவில் ஆனந்தராஜ் குழுவினரின் ஓயிலாட்டம், கலைமாமணி ஜெயக்குமார் வழங்கும் சாக்சபோன் நிகழ்ச்சி,திரைப்பட பின்னணி பாடகர் மற்றும் நடிகர் கானா பாலா கலந்துகொள்ளும் நெல்லை வானவில் திரை இசைக்குழு வழங்கும் இன்னிசை நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.

    • விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டனர்.
    • நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் உதயமான பின்னர் முதல் முறையாக குற்றாலத்தில் சாரல் விழா குற்றாலம் கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது.

    விழாவை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட கலெக்டர் ஆகாஷ் ஆகியோர் திருவிழாவின் லோகோ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டும் கேக் வெட்டியும் குத்துவிளக்கு ஏற்றியும் விழாவை தொடங்கி வைத்தனர்.

    விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில்,

    நீர்நிலைகளை கொண்டாடும் மரபில் வந்த நாம் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலத்தில் சாரல் விழா நடத்துகிறோம்.

    குற்றாலம் என்ற பெயர் பராந்தகச் சோழன் கல்வெட்டில் இருந்து வருகிறது,இலக்கிய காலத்தில் இருந்து செழுமை மிக்க வரலாற்று தொடர்புடைய ஊர் குற்றாலமாகும் இதனால் இவ்விழாவில் நான் கலந்துகொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

    பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தென்காசி மாவட்டம் தற்போது வளர வேண்டிய மாவட்டமாகும். இன்னும் அதிகப்படியான துறை அதிகாரிகள் இங்கு நியமனம் செய்யப்பட வேண்டியுள்ளது.

    அதுகுறித்து மாவட்ட கலெக்டருடன் கலந்து பேசி விரைவில் முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் அனைத்துத்துறை அதிகாரிகளும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    இவ்விழாவில் சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், பிரகாஷ், ரூபி மனோகரன், சிந்தனைச்செல்வன், காந்திராஜன், பழனிநாடார், சதன் திருமலைக்குமார், ராஜா, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி, மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர்கள் சிவபத்மநாதன், செல்லத்துரை, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் ஐவேந்திரன் தினேஷ்,செங்கோட்டை நகர்மன்ற தி.மு.க. செயலாளர் ரஹீம், இலஞ்சி முதல் நிலை பேரூராட்சி தலைவர் சின்னத்தாய், மேலகரம் முதல் நிலை பேரூராட்சி தலைவர் வேணி,பண்பொழி பேரூராட்சி தலைவர் ராஜராஜன், வல்லம் தொழிலதிபர் தி.மு.க. பாலகிருஷ்ணன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனி துரை, தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு வீராணம் சேக் முகமது, பெரியபிள்ளை வலசை ஊராட்சி மன்ற தலைவர் வேல்சாமி, உட்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ் நன்றி கூறினார் தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    திரைப்பட நடிகர் சூரி, சின்னத்திரை புகழ் நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்ட கலை பண்பா–ட்டுத்துறை சார்பில் பொள்ளாச்சி மகேந்திரன் குழு–வினரின் ஜிக்காட்டம் நடைபெற்றது.

    தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றால அருவிகளில் குளிக்க பொதுமக்கள் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தாலும் சாரல் திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவில் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகள் அனைத்தும் லேசர் வண்ண விளக்குகளால் ஒளிர்ந்தன.

    அதனை தென்காசி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் அருவி பகுதிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சமூக வலைதளங்களில் பரப்பி பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தி வருகின்றனர்.

    • கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.
    • குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் சாரல் திருவிழா கோலாகலமாக தொடங்குகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 3 ஆண்டுகளுக்கு பின்பு அரசு சார்பில் குற்றால சாரல் திருவிழா இந்த ஆண்டு நடத்தப்படுகிறது.

    சீசன் களை கட்டியது

    கடந்த 25 நாட்களுக்கு மேலாக குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சீசன் களை கட்டியது. இதனால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது

    கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக சாரல் திருவிழா எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த ஆண்டு அதுபோன்ற பாதிப்புகள் எதுவும் இல்லாததால் குற்றால சாரல் திருவிழா நடத்துவதற்கு சுற்றுலாப்பயணிகள் சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தன.

    மாவட்டத்தில் முதல்முறை

    அதனை ஏற்று மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசுக்கு சாரல் திருவிழா நடத்த அனுமதி வேண்டி அதற்கான கோப்புகளை அனுப்பி இருந்தது. அரசும் உடனடியாக அதற்கு செவிசாய்த்து ஆகஸ்ட் 5-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை சாரல் திருவிழா நடத்த அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து தென்காசி மாவட்டம் புதியதாக உதயம் ஆகிய பின்பு சாரல் திருவிழா முதன்முதலில் நடத்தப்பட இருக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் குற்றாலம் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அமைச்சர்கள் பங்கேற்பு

    குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் இன்று மாலை 4 மணி அளவில் கோலாகலமாக சாரல் திருவிழா தொடங்குகிறது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்குகிறார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன் வரவேற்று பேசுகிறார்.


    வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தொழில்துறை, தமிழ் ஆட்சி மொழி தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்கள். முடிவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ் நன்றி கூறுகிறார்.

    நடிகர், நடிகைகளின் நிகழ்ச்சிகள்

    அதனைத்தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை நடிகர் சூரி, நடிகை ரம்யா பாண்டியன் ஆகியோர் கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பொள்ளாச்சி மகேந்திரன் குழுவினரின் ஜிக்காட்டம் நிகழ்ச்சி, மும்பை நரேஷ் பிள்ளைவழங்கும் நாட்டிய நிகழ்ச்சி, விக்கிரமசிங்கபுரம் கல்ப வர்ஷா குழுவினரின் பரத நாட்டியமும் நடைபெறுகிறது.

    புத்தகத்திருவிழா

    மேலும் குற்றாலம் பராசக்தி பெண்கள் கல்லூரி வளாகத்தில் புத்தக திருவிழாவையும் அமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர். இரவில் பேராசிரியர் ராமச்சந்திரன் குழுவினரின் சிறப்பு பட்டிமன்றமும் முதல் நாள் நிகழ்ச்சியாக நடத்தப்பட இருக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    தென்காசி தனி மாவட்டமாக உதயம் ஆகிய பின்பு நடத்தப்படும் முதல் குற்றால சாரல் திருவிழா என்பதால் மாவட்ட நிர்வாகத்துடன் சேர்ந்து தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலரும் நன்கொடைகளை வழங்கி சாரல் திருவிழா சிறப்பாக நடத்திட துணை புரிந்துள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.
    • புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    தென்காசி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றாலத்தில் சாரல் திருவிழா நடத்தப்படாமல் இருந்துவந்தது.

    8 நாட்கள் சாரல் திருவிழா

    இந்நிலையில் தற்பொழுது குற்றாலத்தில் குளுகுளு சீசன் நிலவி வருவதால் இந்த ஆண்டு சாரல் திருவிழா நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு சுற்றுலா பயணிகளிடம் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆகாஷ் நேற்று மாலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    வருகிற 5-ந் தேதி முதல் 12 -ந் தேதி வரை 8 நாட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குற்றால சாரல் திருவிழா குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் வைத்து நடைபெற உள்ளது.

    இதையொட்டி புத்தகத் திருவிழா குற்றாலம் பராசக்தி கல்லூரியில் வைத்து நடத்தப்பட உள்ளது. சாரல் திருவிழாவை வருகிற 5-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தொடங்கிவைக்கிறார்.

    அரங்குகள்

    பல்வேறு அரசுத் துறையின் சார்பில் கலைவாணர் அரங்கத்தின் வெளிப்பகுதியில் அரங்குகள் அமைக்கப்படும். சாரல் திருவிழாவில் தினமும் கலை நிகழ்ச்சிகள், கச்சேரி, ஆணழகன் போட்டி, நாய்கள் கண்காட்சி, பழமை வாய்ந்த கார்கள் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புத்தகத் திருவிழாவில் மாணவ -மாணவிகள் கலந்து கொள்ளும் இலக்கியம் சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளது.

    மலர் கண்காட்சி

    ஐந்தருவியில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவில் 3 நாட்கள் மலர்க்கண்காட்சி, பழக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இந்த விழா நிகழ்ச்சிகளுக்கு அரசு சார்பில் ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்த தகவல்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலரின் தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது.
    • தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. சாரல் விழாவுடன் புத்தக கண்காட்சியும் நடைபெற உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைக்கப்பட உள்ளது. புத்தக கண்காட்சிக்கான சின்னம் வடிவமைப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் சின்னத்தை வடிவமைத்து tenkasibookfair@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 30-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

    தேர்வு செய்யப்படும் சின்னத்தை வடிவமைத்த வருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் குற்றாலம் சாரல் திருவிழா நடத்துவதற்கு அரசு சார்பில் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • நடத்துவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடர்ந்து பெய்ததன் காரணமாக அனைத்து குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.

    இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா காரணமாக குற்றால சாரல் திருவிழா நடைபெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது சீசன் களைகட்டி உள்ளதால் குற்றாலம் சாரல் திருவிழா நடத்துவதற்கு அரசு சார்பில் முழு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக சாரல் திருவிழா குற்றாலத்தில் நடத்தப்படும் இடமான கலைவாணர் கலையரங்கம் புதுப்பொலிவு பெற்று வருகிறது. அங்குள்ள ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் வேலை பார்க்கப்பட்டு அரங்கம் முழுவதும் வர்ணம் தீட்டும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இன்னும் ஓரிரு தினங்களில் சாரல் திருவிழா நடத்துவதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


    ×