என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராதாகிருஷ்ணன்"

    • மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
    • சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். 210 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆசிரியர் தின விழாவில் கடந்த ஆண்டும் கலந்து கொண்டேன். அப்போது சில கோரிக்கைகள் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டது. அதில் பல கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மீதி கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி காட்டுவார்.

    திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பெரியார் பகுத்தறிவு, சுய மரியாதைக்கான ஆசிரியர், அதனால் தான் அவருக்கு லண்டனில் உருவப்படத்தை திறந்து வைத்து பெரியார் உலகிற்கே சொந்தமானவர் என்பதை முதலமைச்சர் காட்டி இருக்கிறார்.

    கலைஞர் மாணவராக இருந்தபோதே பத்திரிகை ஆசிரியராக இருந்து அதன் பிறகும் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.

    அந்த தலைவர்கள் வழியில் தான் முதலமைச்சர் திராவிட மாடல் வளர்வதற்கு ஆசிரியராக பணியாற்றுகிறார். கிராமங்களுக்கு செல்லும் போது இது தான் வாத்தியார் வீடு என அடையாளம் காட்டுவார்கள். அப்படிபட்ட வாத்தியார்களால் தான் டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என பலரும் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

    சமூக மாற்றத்தை கல்வி மூலம் தான் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு புரட்சியாளர் தான். மாணவர்களிடம் பகுத்தறிவு சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்.

    மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    இரு மொழிக்கொள்கையே போதும் என்று அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் உழைப்பால் தான் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்கள். இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடங்களை நடத்தாதீர்கள், விளையாடும் நேரங்களில் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள், அது தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.

    ஆசிரியர் தின விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படுகிறது, விரைவில் அந்த சிலையை முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா, பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
    • ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது

    தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

    இந்நிலையில், தமிழ்நாட்டின் 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு செய்தித் தொடர்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்யகுமார் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம், மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் சத்யகுமாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

    • மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்.
    • சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    சென்னை:

    சென்னையில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தை நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் இந்த முகாம்களில் பங்கேற்கின்றனர்.

    இந்த நிலையில், முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தில் அனைத்து துறைகளும் இணைந்து செயல்படும் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது:-

    * சென்னையில் 15 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். ஒரு வட்டாரத்திற்கு 3 மருத்துவ முகாம்கள் வீதம் 1164 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும்.

    * ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.

    * மருத்துவ முகாம்களில் சோதனை முடிவுகள் அன்று மாலையே அளிக்கப்படும்

    * சுகாதாரத்துறை திட்டமாக இருந்தாலும் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட உள்ளன.

    * நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்பர் .

    * உப்பு, சர்க்கரை, எண்ணெயை சற்று குறை என்ற விழிப்புணர்வு நிகழ்வுகளும் முகாம்களில் நடத்தப்படும் என்றார்.

    • ஐஏஎஸ் தீரஜ் குமாருக்கு உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது
    • ஐஏஎஸ் அமுதாவுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்ட்டுள்ளது

    தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்பாளர்களாக ஐஏஎஸ் அதிகாரிகள் ராதாகிருஷ்ணன், ககன்தீப் சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா ஆகியோர் நியமனம். செய்யப்பட்டுள்ளனர்

    இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    தமிழ்நாடு அரசுத் துறைகளின் முக்கிய தகவல்கள், திட்டங்கள் ஆகியவற்றை செய்தி ஊடகங்கள் மூலமாக சரியான நேரத்தில் பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்கும், பிற அரசு துறைகளுடன் ஒருங்கிணைப்பதற்கும் 4 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.

    1. டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.

    2. திரு. ககன்தீப் சிங் பேடி, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

    3 திரு. தீரஜ் குமார். அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    4, திருமதி. பெ. அமுதா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் .வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    மேற்கண்ட அதிகாரிகள் எந்தெந்த துறை சம்மந்தமாக செய்திகள் வெளியிட வேண்டும் என முதல்வரின் ஆணைப்படி அவர்களுக்கு கீழ்க்காணுமாறு துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன:

    1. டாக்டர் ஜெ ராதாகிருஷ்ணன்

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு மின்சார வாரியம்.

    * எரிசக்தித் துறை

    * மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை

    * போக்குவரத்துத் துறை

    * கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை

    * வெளிநாடு வாழ் தமிழர் நலன்

    * பள்ளிக் கல்வித் துறை

    * உயர்கல்வித் துறை

    * கைத்தறி, கைத்திறன். துணிநூல் மற்றும் கதர்த் துறை

    * மனிதவள மேலாண்மைத் துறை

    2. திரு. ககன்தீப் சிங் பேடி

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை.

    * நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

    * ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை

    * கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை

    * வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை

    * நீர்வளத் துறை

    * சுற்றுச் சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை

    * குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

    * தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை

    * இயற்கை வளங்கள் துறை

    3. திரு தீரஜ் குமார்.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    * உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை

    4. திருமதி. பெ. அமுதா.

    அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    * வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

    * சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை

    * மாற்றுத் திறனாளிகள் நலத்துறை

    * தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

    * ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை

    * பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

    * வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை

    * நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை

    * சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத் துறை

    * சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

    அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் செயலாளர்கள், துறை சார்ந்த அறிவிப்புகள் மற்றும் சாதனைகளின் தகவல்களை அரசு செய்தி தொடர்பாளர்களுக்கு வழங்குவார்கள். அச்செய்திகளின் உண்மைத்தன்மையை உறுதி செய்தபின் தலைமைச் செயலாளரின் ஆலோசனையின் அடிப்படையில் அரசு செய்தி தொடர்பாளர்கள் செய்தி ஊடகங்களை சந்தித்து தகவல்களை துல்லியமாகவும், சரியாகவும் வெளியிடுவார்கள்.

    அரசின் திட்டங்கள் மற்றும் தகவல்களை வேகமாகவும், சரியான தகவல்களை உரிய நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்க்கவும் அரசு செய்தித் தொடர்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம்.
    • கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட கலெகடர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பகுதிகளில் நவீன மயமாக்கப்பட்ட நியாய விலை கடை மற்றும் சீர்காழி நகர கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட கலெக்டர் லலிதா ஆகியோர் பொருட்களின தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் சீர்காழி அருகே உள்ள செம்பதனிருப்பு கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பிற்காக தமிழக அரசால் கொள்முதல் செய்யப்படவுள்ள செங்கரும்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது விவசாயிகள், கடந்தமாதம் பெய்த கனமழை மற்றும் மாண்டஸ் புயலால் கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டு வழக்கமான செலவை விட இருமடங்கு செலவு செய்துள்ளோம். எனவே கூடுதல் விலைக்கு கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    அதனை கேட்டுக்கொண்ட அவர் விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். அப்போது தமிழக அரசால் கொள்முதல் செய்யப்பட உள்ள செங்கரும்பை கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்ததுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.ஆய்வில் மயிலாடுதுறை, சீர்காழி சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இதை தொடர்ந்து நிருபர்களை சந்தித்த கூடுதல் தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    பொங்கல் கரும்பு கொள்முதலில் இடைத்த ரகர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,

    கரும்பு கொள்முதல் பணியை கண்காணிக்க மாவட்ட கலெகடர் லலிதா தலைமையில் கண்காணிப்பு குழு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் லலிதா கூறுகையில், கடந்த மாதம் அதீத கனமழையால் பாதிக்கப்பட்ட 32 ஆயிரத்து 533 ஹெக்டேர் பயிர்களுக்கு, ஹெக்டேர் ஒன்றுக்கு 13500 நிவாரணம் அறிவிக்கபட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 43.92 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இந்த தொகை அடுத்த வாரம் வந்து சேரும்.உடனே பொங்களுக்குள் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கபடும் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.
    • கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன.

    மதுரை:

    மதுரை மாவட்டம் பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் இன்று கூட்டுறவு, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில், 4 ஆயிரத்து 453 தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் அடங்கும். கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் பல்வேறு நிலைகளிலான வங்கிகளில் கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 71 ஆயிரத்து 950 கோடி மதிப்பீட்டில் வைப்புத் தொகை ஈட்டப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மொத்தம் ரூபாய் 64 ஆயிரத்து 140 கோடி மதிப்பீட்டில் 17 விதமான கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    குறிப்பாக, 17.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.13 ஆயிரத்து 443 கோடி மதிப்பீட்டில் வேளாண் கடனுதவிகளும், 1.59 இலட்சம் ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு ரூபாய் 1 ஆயிரத்து 72 கோடி மதிப்பீட்டில் கடனுதவிகளும், 2.86 லட்சம் கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கு ரூபாய் 1 ஆயிர்த்து 339 கோடி மதிப்பீட்டில் கடனு தவிகள் வழங்கப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் மொத்தம் 35,941 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. அதில் 26,018 முழுநேரக் கடைகளும், 9,923 பகுதிநேர கடைகளும் அடங்கும்.

    கடந்த ஆண்டில் மட்டும் 5,784 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெறப்பட்டு உள்ளன. நடப்பாண்டில் கூடுதலாக 5 ஆயிரம் நியாய விலைக்கடைகளை புனரமைத்திடவும், கூடுதலாக 2 ஆயிரத்து 500 நியாயவிலைக் கடைகளுக்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் பெற்றிடவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வுகளின் போது கலெக்டர் அனீஷ் சேகர், இணை பதிவாளர்கள் குருமூர்த்தி (கூட்டுறவு சங்கங்கள்), பிரியதர்ஷினி (பாண்டியன் கூட்டுறவு பண்டகசாலை), மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்கு நர் ஜீவா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சென்னையில் தற்போது மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது.
    • தொழிலாளர்கள் வெயிலால் பாதிக்கப்படாத வகையில் இரவு நேரங்களில், மழை நீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகளை மேற் கொள்ளுமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் தற்போது கோடை வெயில் சுட்டெரிக்கிறது. சென்னையில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துகிறது.

    இதனால் பகல் நேரத்தில் பொதுமக்கள் வெயிலால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    சென்னையில் தற்போது மழை நீர் வடிகால் பணி நடந்து வருகிறது. இந்த பணி பகல் நேரத்தில் செய்யப்பட்டு வருகிறது. பகல் நேரத்தில் பணி நடப்பதால் வெயிலால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

    பகல் நேரத்தில் வெப்பம் அதிகரித்து வருவதால் தொழிலாளர்கள் வெயிலால் பாதிக்கப்படாத வகையில் இரவு நேரங்களில், மழை நீர் வடிகால் பணிகள், சாலைப் பணிகளை மேற் கொள்ளுமாறு அனைத்து ஒப்பந்ததாரர்களையும் சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

    இது தொடர்பாக சென்னை மாநகராட்சி சார்பில் சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. அதில், "இரவில் தொடங்கும் பணிகளை காலை 11 மணிக்குள் முடிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு எலக்ட்ரோல் பானம் வழங்க வேண்டும். வெப்ப அலை அதிகமாக இருக்கும் நேரத்தில் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு இடையிடையே போதிய ஓய்வு வழங்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    மேலும் இது தொடர்பாக அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் கூறியதாவது:-

    வெப்ப அலையால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க தனியார் கட்டுமான துறையினர் வேலை நேரத்தை மாற்ற வேண்டும். தொழிலாளர்களுக்கு குடிநீர், மோர், குளுக்கோஸ் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு வெயிலின் தாக்கத்தால் தலை சுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    மாநகராட்சியின் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் அது முறையாக அமல்படுத்தப்படுமா? என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது. காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தொழிலாளர்களுக்கு ஓய்வு தேவை. அனைத்து கட்டுமான தொழிலாளர்களுக்கும் இதற்கு உரிமை உண்டு. இல்லயென்றால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வாழ்வாதார இழப்புக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.
    • சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகிேயார் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் கேள்வி நேரம் மற்றும் நேரம் இல்லாத நேரத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகள் குறித்து கவுன்சிலர் பேசினார்கள்.

    92-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்கள் திலகர் பேசும்போது:- எனது வார்டில் குடிநீர் வாரிய இடம், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான இடங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன. அந்த இடங்களை ஆய்வு செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கிறிஸ்தவ கல்லறை பிரச்சினை பெரிதாக உள்ளது. அங்கு தனிநபர் ஒருவர் உடலை அடக்கம் செய்ய ரூ.10 ஆயிரம் வரை பணம் வசூலிக்கிறார். இந்து சுடுகாட்டில் ஆக்கிரமிப்பு உள்ளது. சுடுகாட்டில் பிணத்தை புதைக்க, எரிக்க ரூ.40 ஆயிரம், ரூ.50 ஆயிரம் கேட்பதாக புகார் வருகிறது.

    விதிமுறை மீறி வீடுகள் கட்டப்பட்டு இல்லாத உரிமையாளர்களிடம் சிலர் பணம் கேட்கிறார்கள்.

    இதேபோல் சாலையை வெட்டி கேபிள் போடுவதாக குடிநீர், மின்சார வாரிய அதிகாரிகள் எவ்வித தகவலும் இல்லாமல் ஈடுபடுகிறார்கள் என்று அ.தி.மு.க. கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.

    இதற்கு மேயர் பிரியா பதிலளித்து கூறியதாவது:-

    சின்ன சின்ன விஷயங்களை எல்லாம் மண்டல அளவில் சரி செய்து முடிக்க வேண்டும். மன்றத்திற்கு கொண்டு வரக்கூடாது கவுன்சிலர்கள் கூறும் புகார்களை அதிகாரிகள் உடனே சரி செய்ய வேண்டும்.

    திரும்ப திரும்ப மன்றத்தில் குற்றம் சாட்டுவது சரியாக இருக்காது. மாநகராட்சி சுடுகாடுகளில் புதைக்க, எரிக்க எவ்வித கட்டணமும் கிடையாது. முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

    ஆனால் ஒரு சில இடங்களில் பணம் வாங்குவதாக புகார் வருகிறது. உடல் அடக்கம், எரிப்பு தொடர்பான நடைமுறைகள் ஆன்லைன் வழியாக செயல்படுத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளது என்றார்.

    கூட்டத்தில் அடையார் காந்திநகர் கால்வாய்கரை சாலையில் புதிதாக அமைய உள்ள பூங்காவிற்கு கலைஞர் மு.கருணாநிதி பூங்கா என்று பெயர் சூட்டுவது, மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் 29 ஆயிரம் மாணவர்களுக்கு 4 வண்ண கலரில் டீ-சர்ட் வழங்குவது உள்ளிட்ட 66 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.
    • ஒவ்வொரு மாதமும் மதிப்பூதியத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் பிரியா தலைமையில் இன்று நடந்தது. துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல தலைவர் நேதாஜி கணேசன் பேசும் போது, 200 வார்டுகளிலும் பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.

    தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்றார்.

    அப்போது கமிஷனர் ராதாகிருஷ்ணன் குறுக்கிட்டு, பல் மருத்துவா நியமிப்பது நல்ல கோரிக்கை தான். எல்லா மருத்துவமனைகளிலும் பல் மருத்துவர் நியமிக்க பரிசீலிக்கப்படும். காலரா மருத்துவமனை உடனே ஆய்வு செய்யப்படும் என்றார்.

    இதே போல தி.மு.க. கவுன்சிலர் சதிஷ்குமார் பேசும்போது, குப்பை அள்ளும் பேட்டரி வாகனங்கள் சார்ஜர் இல்லாமல் வழியில் நின்று விடுகின்றன.

    சார்ஜர் பயன்பாடுகள் அதிகரிக்க வேண்டும். கூடுதலாக வாகனங்கள் பயன்படுத்த வேண்டும். அரசின் திட்டங்களை இந்த வாகனங்கள் மூலம் மக்களுக்கு வீதி வீதியாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

    அதற்கு கமிஷனர் பதிலளித்து கூறும் போது, 350 பேட்டரி வாகனங்கள் விரைவில் பயன்படுத்தப்படும். அதன் மூலம் மாநகாட்சி செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பேட்டரி வாகனங்கள் 10 நாட்களில் வரும் என்றார்.

    கூட்டத்தில் மேயருக்கு ரூ.30 ஆயிரம், துணை மேயருக்கு ரூ.15 ஆயிரம், மாமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பூதியம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    ஜூலை மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 9 மாதத்திற்கு மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது.

    ஒவ்வொரு மாதமும் மதிப்பூதியத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    6 நிலைக்குழு தலைவர்களுக்கும் இன்னோவா கார் வாங்குவதற்கு அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

    மேலும் சொத்து உரிமையாளர்கள் உரிய காலத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்ய வேண்டும். இதில் சுய விவர படிவம் தாக்கல் செய்யாத உரிமையாளர்களுக்கு ரூ. 2ஆயிரம் அபராதம் அல்லது சொத்து வரியில் 5 சதவீதம் சட்டத் திருத்தம், சொத்துவரி நிலுவை வைக்கும் நபர்களுக்கு ஒரு சதவீதம் தனி வட்டி வசூலிக்கப்படும் என்பது உள்பட 54 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.
    • சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பப் பதிவு சிறப்பு முகாம்கள் மூன்று கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் நடத்தப்படுகிறது.

    மொத்தம் உள்ள 1428 நியாய விலைக்கடைகளில், முதல் கட்டமாக 704 நியாய விலைக் கடைகளுக்கு 24-ந் தேதி முதல் அடுத்த மாதம் 4-ந் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக 724 நியாயவிலைக் கடைகளுக்கு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையிலும், மூன்றாம் கட்டமாக விடுபட்டவர்களுக்கு அடுத்த மாதம் 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரையிலும், சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக 704 நியாய விலைக் கடைகளில், 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு சிறப்பு முகாம் என்ற கணக்கில் 1730 சிறப்பு முகாம்கள் செயல்பட்டு வருகிறது.

    சென்னையில் நேற்று வரை 3,73,022 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. தேதி வாரியாக வருமாறு:- 24.7.2023-ந் தேதி 56,590 விண்ணப்பங்கள், 25-ந் தேதி 72,380 விண்ணப்பங்கள், 26-ந் தேதி 72,080 விண்ணப்பங்கள், 27-ந் தேதி 69,934 விண்ணப்பங்கள், 28-ந் தேதி 58,753 விண்ணப்பங்கள், 29-ந் தேதி (நேற்று) 43,285 விண்ணப் பங்களும் பெறப்பட்டுள்ளன. இந்த தகவலை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

    • 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
    • மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    சென்னையில் 42 மயானங்கள் உள்ளன. இவற்றை தூய்மையாக வைக்க துப்பரவு பணி செய்து வருகிறோம். செடி கொடிகள் குப்பைகளை அகற்றி வருகிறோம். கிருஷ்ணாம்பேட்டை மயான பூமியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளில் ஊக்கம் அளிக்கும் வகையில் நாங்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டோம். 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.

    சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் 358 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.

    சென்னையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.

    • சென்னையில் இன்று பிற்பகல் முதலே பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
    • பல பகுதிகளில் மழை பெய்து வருவதை அடுத்து மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு.

    சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று பிற்பகல் முதல் மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு பெய்யும் கனமழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. 

    தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று மாலை முதலே மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகி 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

     

    இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்த இருக்கிறது. 

    ×