என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சுடுகாட்டில் துப்புரவு பணி செய்த சென்னை மாநகராட்சி ஆணையர்
- 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
- மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.
சென்னை:
சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை சுடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
சென்னையில் 42 மயானங்கள் உள்ளன. இவற்றை தூய்மையாக வைக்க துப்பரவு பணி செய்து வருகிறோம். செடி கொடிகள் குப்பைகளை அகற்றி வருகிறோம். கிருஷ்ணாம்பேட்டை மயான பூமியில் மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளில் ஊக்கம் அளிக்கும் வகையில் நாங்களும் இணைந்து தூய்மை பணிகளை மேற்கொண்டோம். 37 மயானங்களில் தூய்மை பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் 358 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை அதிகரிக்க இருக்கிறோம்.
சென்னையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்