search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ப சிதம்பரம்"

    • பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.
    • மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 22-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. கூட்டத்தொடரின் 5-ம் நாளான இன்று பாராளுமன்ற மேல்-சபை காலையில் அவைத்தலைவர் ஜெகதீப் தங்கர் தலைமையில் கூடியது.

    அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாங்கள் கொடுத்த நோட்டீசை அவைத்தலைவர் நிராகரித்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே பட்டியலிடப்பட்ட அலுவல்களை ஒத்திவைத்து விட்டு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று விதி எண் 267-ன் கீழ் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.

    அந்த நோட்டீஸ்களை அவைத் தலைவர் நிராகரித்தார். இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்-சபையில் அமளியில் ஈடுபட்டனர். அவர்களை அமைதியாக இருக்கும்படி அவைத்தலைவர் வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நின்றபடி, தாங்கள் கொடுத்த நோட்டீசுகளை நிராகரித்து ஏன்? என்று கேள்வி எழுப்பியபடி இருந்தனர். காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் கூறும்போது, முக்கிய அலுவல் இருந்தால் மற்றொரு நாளில் விவாதிப்பதாக கூறலாம். ஆனால் நிராகரிப்பது ஏன்? அவை நிகழ்ச்சிகள் மாற்றப்பட்டுள்ளது என்றார்.

    தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பேசும்போது, மாநிலங்களவை தலைவருக்கு உள்ள அதிகாரத்தின்படி நீங்கள் நேரம் இல்லா நேரத்தில் ஆளும் தரப்பு கொடுக்கும் பிற விவகாரங்களை எடுத்து கொள்ளும்போது அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் கொடுக்கும் நோட்டீசுகளை ஏன் எடுத்துக் கொள்ளக்கூடாது.

    ஆளும் தரப்புக்கு நேரம் கொடுக்கும்போது எதிர்க்கட்சிகள் கொடுத்த நோட்டீசுகளை மற்றொரு நாளில் எடுத்து கொள்வீர்கள் என்று நம்புகிறோம் என்றார்.

    இதைத் தொடர்ந்து தங்களது மாநிலங்களின் முக்கிய பிரச்சனைகளை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர். இதனால் மேல்-சபையில் கூச்சல்-குழப்பம் நிலவியது.

    அதேபோல் மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், பல்வேறு விவகாரங்களை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என்று கோரினர். இதற்கு சபாநாயகர் அனுமதி மறுத்தார்.

    இதனால் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவர்களை அமைதியாக இருக்கையில் அமருமாறு சபாநாயகர் கேட்டுக் கொண்டார். ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். 

    • தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
    • மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

    மோடி தலைமையிலான மத்திய அரசு 3-வது முறையாக அமைந்த நிலையில் நாடாளுமன்றத்தில் முதலாவது மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.

    மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் இருந்து பெரும்பாலானவற்றை காப்பி அடித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்திருந்தது. மேலும் பட்ஜெட்டில் பல மாநிலங்கள் பெயர் குறிப்பிடப்படவில்லை எனவும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் பதவி நாற்காலியை பாதுகாப்பதற்கான பட்ஜெட் (ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ததை சுட்டிக்காட்டி) எனவும் விமர்சித்திருந்தது.

    இந்த நிலையில் இன்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்தார்.

    மாநிலங்களவையில் இன்று பேசும்போது ப.சிதம்பரம் கூறியதாவது:-

    தினசரி குறைந்த பட்ச ஊதியம் 400 ரூபாய் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகளான எம்.எஸ்.பி.-க்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க வேண்டும் அல்லது குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்க வேண்டும்.

    மார்ச் மாதம் வரையில் கட்டப்படாத கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும்.

    ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிவீர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

    நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை உரிமையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    மேலும், தயவு செய்து இன்னும் கொஞ்சம் காப்பி அடிக்கவும் என கிண்டல் செய்தார்.

    அத்துடன் வேலையாப்பின்மை மிகப்பெரிய சவாலாக உள்ளது. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம், 2024 ஜூனில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை 9.2 சதவீதமாக மதிப்பிட்டுள்ளது என தெரிவித்திருந்தார்.

    • காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.
    • ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    சென்னை:

    மத்திய பட்ஜெட் பற்றி முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

    தேர்தல் முடிவுகளுக்கு பிறகு காங்கிரஸ் தேர்தல் அறிக்கை 2024-ஐ நிதி மந்திரி படித்து இருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 30-ல் குறிப்பிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் பக்கம் 11-ல் பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

    ஏஞ்சல் வரியை ஒழிக்க பல ஆண்டுகளாக காங்கிரஸ் கெஞ்சியது. காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் ஏஞ்சல் வரி ஒழிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கை பக்கம் 31-ல் குறிப்பிட்டுள்ளோம். இப்போது ஏஞ்சல் வரியை ரத்து செய்வதாக அறிவித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும்.
    • தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறுகையில், நீட் தேர்வு ஒரு ஊழல், இதை நாங்கள் கடந்த 3-4 ஆண்டுகளாக கூறி வருகிறோம்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக்கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில அரசால் நடத்தப்படும் கல்லூரிகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுக்க ஒவ்வொரு மாநிலமும் அதன் சொந்த நுழைவு தேர்வை நடத்தும் உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்.

    அகில இந்திய அளவில் தேர்வு நடத்தினால், இந்த ஊழல்கள் கண்டிப்பாக நடக்கும். அகில இந்திய தேர்வை அரசு கைவிட்டு, மாநிலங்களை சேர்க்காமல் மத்திய அரசு நிறுவனங்களுக்கு மட்டும் நடத்த வேண்டும்

    இது மிகப் பெரிய நாடு, தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்கள் இந்த முறையை பயன்படுத்திக் கொள்வதில் பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.

    அமைப்பு மற்றும் அமைப்பில் உள்ள கசிவுகளுக்கு தர்மேந்திர பிரதான் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

    • குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று.
    • அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும்.

    மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களில், மாநில அளவில் திருத்தங்கள் மேற்கொள்ள ஓய்வுபெற்ற நீதியரசர் சத்யநாராயணன் தலைமையில் ஒருநபர் குழு அமைத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் வரவேற்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஜூலை 1, 2024 முதல் அமலுக்கு வந்த மூன்று குற்றவியல் சட்டங்களில் மாநிலத் திருத்தங்களை பரிந்துரைக்க ஒரு குழுவை நியமிப்பதற்கான தமிழக அரசின் முடிவை நான் வரவேற்கிறேன்.

    குற்றவியல் சட்டம் என்பது அரசியலமைப்பின் பொதுப்பட்டியலில் வரக்கூடிய ஒன்று. இதில் திருத்தங்கள் செய்ய மாநில சட்டமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.

    நீதிபதி (ஓய்வு) திரு கே.சத்தியநாராயணன் ஒரு நபர் குழுவாக நியமிக்கப்பட்டதையும் வரவேற்கிறேன்.

    நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறை, சட்ட ஆசிரியர்கள், வல்லுநர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என அனைவரிடமும் ஒருநபர் ஆணையம் ஆலோசனை பெற வேண்டும் என்று கூறியுள்ளார்.


    • பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது.
    • இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது.

    சென்னை:

    மத்திய அரசு புதிய 3 குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

    அரசியலமைப்புக்கு எதிரான, ஜனநாயகத்திற்கு விரோதமான இந்த 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. சட்டத் துறை சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் இதற்காக பந்தல் போடப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வக்கீல்கள் கலந்து கொள்ளும் வகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. தி.மு.க. சட்டத்துறை நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ தலைமை தாங்கினார். அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிர மணியன், தயாநிதி மாறன் எம்.பி., சட்டத்துறை தலைவர் இரா.விடுதலை, சட்டத்துறை இணை செய லாளர் இ.பரந்தாமன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டத்துறை இணை செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ. வுமான கே.எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார்.

    இந்த போராட்டத்தில் ஒன்றிய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொய்தீன், மூத்த பத்திரிகையாளர்கள் இந்து என்.ராம், ஏ.எஸ்.பன்னீர்செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேயக் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி., தி.மு.க. சட்டதிட்டத் திருத்தக்குழுச் செயலாளர் வழக்கறிஞர் இரா.கிரிராஜன் எம்.பி., மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், வழக்கறிஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    உண்ணாவிரதப் போராட்டத்தை பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    பா.ஜ.க. அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. அந்த சட்டத்தின் வார்த்தை வாயில் வராது. இதற்கு தான் ஆதியில் இருந்து இந்தியை நாம் எதிர்த்தோம். அதிகாரத்தில் இருக்கும் யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என பா.ஜ.க. நினைக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு இந்நேரம் இந்த சட்ட திருத்தங்களை குப்பை தொட்டியில் வீசி இருக்க வேண்டும்.

    சர்வாதிகாரத்தின் தொனியை திணிப்பதுதான் இந்த 3 சட்டங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த சட்டங்களின் பெயரை நீதிமன்றங்களில் உச்சரிக்க வேண்டும்.

    இந்தியை நுழைக்க வேண்டும் என்பதற்காக இது போன்று பா.ஜ.க. செய்துள்ளது. இந்த சட்ட திருத்தங்களை எதிர்த்து நியாயமான கருத்து கூறியிருக்க வேண்டியவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. ஆரம்பத்திலேயே ஒன்றிய அரசின் போக்கை கிள்ளி எறிய வேண்டும். சட்டக்குழு இந்த போராட்டத்தை கையில் எடுத்துள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    உண்ணாவிரதத்தில்முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    மத்திய அரசு புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளது. இதில் 90 முதல் 95 சதவீதம் வரை பழைய சட்ட திருத்தத்தை தான் கொண்டு வந்துள்ளார்கள். ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது, காப்பி அடித்து உள்ளார்கள். இதை சொன்னால் மத்திய அரசு மறுக்கிறது. விவாத்திற்கு தயாராக இருக்கிறார்களா? இது பற்றி பட்டிமன்றமே நடத்தலாம். அதில் பழைய பிரிவு, புதிய பிரிவு குறித்து விவாதிக்கலாம்.

    513 பிரிவுகளில் 46 பிரிவுகளில் கை வைத்து இருக்கிறார்கள். பொதுவாக திருத்தம் செய்ய வேண்டும் என்றால் திருத்தம் கொண்டு வரலாம். அதை போல் சட்டத்தை நீக்க வேண்டும் என்றால் நீக்கலாம். ஆனால் புதிய சட்டம் என்று கொண்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு 302 கொலை குற்றம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியும். அதை 203-க்கு மாற்றி இருக்கிறார்கள். அதனால் என்னவாகும் என்றால் சட்டத்தில் குழப்பம் வரும். எல்லாரும் மீண்டும் சட்டத்தை படிக்க வேண்டியது வரும். நீதித்துறையில் குழப்பம் ஏற்படும். முதலில் சட்டத்தை மாற்ற வேண்டும் என்றால் சட்ட கமிஷனுக்கு அனுப்பியிருக்க வேண்டும். பாராளுமன்ற நிலைக் குழுவில் எல்லாரும் விவாதித்து இருக்க வேண்டும்.

    ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளையும் வெளியேற்றி விட்டு நிறைவேற்றிருக்கிறார்கள். சட்ட கமிஷனிடம் ஆலோசனை நடத்தாதது தவறு. 3 சட்டப்பிரிவுகளை அவர்கள் நிறைவேற்றியிருக்கிறார்கள் என்றால், இது மோசமான அரசு தானே. தற்போது வந்துள்ள சட்டத்தால் ஜாமின் பெறுவது கடினமாக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஒரு நாளைக்கு 100 ஜாமின் மனுக்கள் வருகிறது. அங்கு போய் எல்லாரும் ஜாமின் வாங்க முடியாது. ஜாமின் கிடைப்பது என்பது சிறிய குற்றத்துக்கு 60 முதல் 90 நாட்கள் வரை ஆகலாம். அதை போல போலீஸ் காவல் முறையிலும் அவர்கள் சட்டத்தால் குழப்பம் ஏற்படும்.

    ஒவ்வொரு மாநிலங்களும் புதிய சட்டங்களை எதிர்த்து சட்டசபைகளில் தீர்மானம் கொண்டு வரலாம். அதில் எதை மத்திய அரசு எடுக்கும் என்று சொல்ல முடியாது. மாநிலங்களுக்கு சட்டங்களில் திருத்தம் கொண்டுவர அதிகாரம் உண்டு. ஆனால் மத்திய அரசு அதை ஏற்காது. இந்த சட்டத்தால் மக்களுக்கு குழப்பம் தான் ஏற்படும். எனவே, இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து சட்ட கமிஷனுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இறுதியாக தி.மு.க. துணைப் பொதுச்செய லாளர் ஆ.ராசா எம்.பி, நிறைவுரையாற்றுகிறார்.

    • மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.
    • இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய தண்டனைச் சட்டம் (IPC) தற்போது பாரதீய நியாய சன்ஹிதா (BNS) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது. குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக (CrPC) பாரதீய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) என்ற சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்திய சாட்சியச் சட்டம் (IE Act) பாரதீய சாக்ஷிய அதினியம் (BSA) என்ற சட்டமாக மாற்றப்பட்டுள்ளது.

    மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்களும் ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறை சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    இப்போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    போராட்டத்தில் பேசிய துரைமுருகன், ''ஒன்றிய அரசு 3 சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விழா நடத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷிய அதினியம் என்று சட்டங்களுக்கு பெயர்கள் சூட்டப்பட்டிருக்கிறது. நாக்கில் தர்ப்பைப் புல்லை தேய்த்தாலும் இந்த வார்த்தைகள் வாயில் வராது. இந்த கொடுமை வேண்டாம் என்பதற்காகதான் ஆதியிலிருந்து இந்தியை நாம் எதிர்க்கிறோம்" என்று பேசினார்.

    இதனையடுத்து பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், "பிரிட்டிஷ் காலனிய சட்டங்களை தூக்கி எறிவதாக சொல்லித்தான் இச்சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள். உண்மையில் காலனிய சட்டங்களை இயற்றிய மெக்காலேவுக்கும் சர் ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜேம்ஸ் ஸ்டீஃபன்ஸுக்கும் இவர்கள் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். 90 முதல் 95 சதவிகிதம் வரை அந்தச் சட்டங்களிலிருந்து copy அடித்து இதில் ஒட்டி வைத்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தார்.

    • தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
    • தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    சென்னை:

    முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாணவர்களுக்கு அரசு வழங்கிய இலவச சைக்கிள்களின் தரக்குறைவு குறித்து மாணவர்களும் ஆசிரியர்களும் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

    இந்த தரமில்லாத சைக்கிள்களை வேறு வழியில்லாமல் விற்க வேண்டிய கட்டாயம் மாணவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    சைக்கிள்களை தயாரித்து அளித்த நிறுவனங்கள் எவை? 3-4 நிறுவனங்களுக்கு மேல் இருக்க முடியாதே?

    இந்தத் தரமில்லாத சைக்கிள்களைத் திரும்பப் பெற்று அவற்றுக்கு மாற்றாக தரமான சைக்கிள்களை அந்த நிறுவனங்கள் தர வேண்டும் என்று சட்டப்படியான நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என கூறயுள்ளார்.


    • 50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள்.
    • எந்த ஒரு மனிதரும், ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர்.

    18-வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்குவதற்கு முன்பாக பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், 50 ஆண்டுகளுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட அவசர நிலை பிரகடனம் -எமர்ஜென்சியை சுட்டிக்காட்டி இருந்தார்.

    இந்திய ஜனநாயகத்தில் ஒரு இருண்ட அத்தியாயம் எழுதப்பட்டதுடன் 50-ம் ஆண்டு நாளை (இன்று) தொடங்குகின்றது. அரசியலமைப்புச் சட்டம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, கிழித்தெறியப்பட்டு, ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்டதை இந்தியாவின் புதிய தலைமுறை மறந்துவிடக் கூடாது என கூறினார்.

    இதற்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "50 ஆண்டுகால எமர்ஜென்சியை எங்களுக்கு நினைவூட்டுகிறீர்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகால அறிவிக்கப்படாத எமர்ஜென்சியை மறந்துவிட்டீர்கள். நாங்கள் மக்களுக்காக, மக்களவையிலும், தெருக்களிலும் அனைவருக்கும் முன்பாக குரல் (கோஷம்) எழுப்புவோம். அரசியலமைப்பை பாதுகாப்போம்" என்று பதிலடி தந்துள்ளார்.

    இந்த நிலையில், பிரதமர் மோடியின் பேச்சுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் இன்று எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அரசியலமைப்பை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை எமர்ஜென்சி காலம் நமக்கு உணர்த்தியதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். உண்மைதான். இன்னொரு விஷயம் என்னவென்றால் மற்றுமோர் எமர்ஜென்சியை தடுக்க வேண்டும் என அரசியலமைப்பு மக்களுக்கு நினைவுபடுத்தியது.

    பா.ஜ.க.வின் எண்ணங்களுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் 18-வது மக்களவைத் தேர்தலில் மக்கள் வாக்களித்துள்ளனர். எந்த ஒரு மனிதரும், ஆட்சியாளரும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பை மாற்றக்கூடாது என மக்கள் கூறியுள்ளனர். இந்தியா ஜனநாயக, மதச்சார்பற்ற, முற்போக்கு கொள்கைகள் கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக தொடர்ந்து நீடிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

    • மைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர்.
    • பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. நரேந்திர மோடி மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருடன் மொத்தம் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் 61 பேர் பா.ஜ.க. எம்.பி.க்கள் ஆவர்.

    கூட்டணி கட்சிகளை சேர்ந்த 11 பேருக்கு மந்திரி சபையில் இடமளிக்கப்பட்டு இருக்கிறது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு தலா 2 பதவிகளும், மீதமுள்ள 7 கட்சிகளுக்கு தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்நிலையில், "அமைதிக்காக மணிப்பூர் மக்கள் ஓராண்டுக்கும் மேல் காத்திருக்கின்றனர். இவ்விவகாரத்தில் முன்னுரிமை எடுத்து அரசு செயல்பட வேண்டும்" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பக்வத் பேசியிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மூத்த காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "நாளை முதல் வரும் 14ம் தேதி வரை பிரதமர் மோடி ஆந்திரா, ஒடிசா மற்றும் ஜி7 மாநாட்டிற்காக இத்தாலி என பல இடங்களுக்கு செல்ல உள்ளார். மேலும் அவருக்கு வாக்களித்த வாரணாசி மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளார்.

    இவை எல்லாம் நல்லதுதான். ஆனால், கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு மோடி எப்போது செல்வார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    • நிர்மலா சீதாராமன், குமாரசாமி உள்பட 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர்.
    • பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    புதுடெல்லி:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பா.ஜ.க. தனித்து 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. ஆட்சி அமைக்க தேவையான 272 இடங்கள் எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. எனவே பா.ஜ.க. இந்த முறை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உரிமை கோரியது.

    இதையடுத்து, ஜானதிபதி மாளிகையில் நேற்றிரவு நடைபெற்ற விழாவில் மோடி 3-வது முறையாக பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். நிர்மலா சீதாராமன், குமாரசாமி உள்பட 71 மத்திய மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலக தலைவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ப.சிதம்பரம் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தியக் குடிமகன் என்ற முறையில் நேற்றுப் பொறுப்பேற்ற நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான புதிய மத்திய அரசுக்கு என் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பாராளுமன்ற ஜனநாயக நெறிகளைக் கடைப்பிடித்து நல்லாட்சி தருக! என பதிவிட்டுள்ளார்.

    • நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.
    • நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ராஷ்டிரீய ஜனதா தளம் சார்பில் எம்.பி. வீரேந்திரகுமார் நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. அதில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் 'உள்ளடக்கிய வளர்ச்சி கட்டுக்கதையும், யதார்த்தமும்' என்ற தலைப்பில் ப.சிதம்பரம் பேசியதாவது:-

    ஒருவருக்கொருவர் பிரதிபலிக்கும் பொருளாதார மற்றும் சமூக படிநிலைகளை நாம் புரிந்து கொண்டு நமது கொள்கைகளை அடிமட்டத்தில், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு மாற்றியமைக்காவிட்டால் நம்மை சமத்துவ சமூகம் என்று அழைக்க முடியாது. சமத்துவ சமுதாயத்தை உருவாக்குவதன் மூலம் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சாத்தியமாகும்.

    தற்போதைய சமூகம் சமமானதாகவோ நியாயமானதாகவோ இல்லை. முதலாளித்துவ மற்றும் பணக்கார நாடுகள் சமத்துவ சமூகங்களை உருவாக்கியுள்ளன. சுகாதாரம் மற்றும் கல்வியை உலகளாவியதாகவும், இலவசமாகவும் மாற்றுவதன் மூலம் சமத்துவ சமூகங்களை உருவாக்க முடியும்.

    பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் மழலையர் பள்ளி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி, சிறிய நோய் முதல் பெரிய அறுவை சிகிச்சை வரை இலவசம். எனவே நமது கொள்கைகள் ஏழைகளை நோக்கியதாக மாற்றுதவன் மூலம் சமத்துவ சமுதாயத்தை உருகாக்க முடியும்.

    ஆனால் நமது நாட்டின் பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் கொள்கைகள் ஏழைகளுக்கு ஆதரவாக இல்லை. உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்கள் ஏழைகளுக்கு வழங்கப்படவில்லை. நடுத்தர வர்க்கத்தினருக்கே வழங்கி உள்ளனர். நம் நாட்டின் கொள்கைகள் ஏழைகளுக்கு முன்னோடியாக இல்லை என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும். இது போன்று பல உதாரணங்களை கூற முடியும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

    ×