கரூர் துயர சம்பவம் - தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை

நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.
கரூர் துயர சம்பவம் - தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை
Published on

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது.

கரூர் மாநகரில் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை. குறிப்பாக உயிர் இழப்புக்கு காரணமான வேலுச்சாமிபுரம் பகுதி ஆறாத சுவடுகளுடன் போர்க்களம் போல் இன்னமும் காட்சியளிக்கிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபர் ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருவதால், வேலுச்சாமி புரத்தில் தடயங்கள் சேதப்படாமல் இருக்க 60க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்ததையடுத்து தமிழ்நாடு அரசுக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் யோசனை தெரிவித்துள்ளார். அதில்,

* கரூர் நிகழ்வைப் போன்ற துயர சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்க எல்லோரும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

* இதில் நான்கு பக்கமும் தவறுகள் நடந்திருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது.

* எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அந்த யோசனையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் தெரிவித்திருக்கிறேன்.

* எல்லா யோசனைகளையும் பரிசீலித்து முடிவுகளை எடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு.

* அந்த முடிவுகளுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் கீழ்ப்படிந்து நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com