என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை ஐகோர்ட்"
- ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தனி நீதிபதி உத்தரவிட்டார்.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
இந்நிலையில், ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வழக்கைத் திரும்பப் பெற்று, தணிக்கை குழுவின் ரிவைசிங் கமிட்டியை அணுக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிவைசிங் கமிட்டியிடம் செல்வதா அல்லது வழக்கை தொடர்வதா என்பது குறித்த இறுதி முடிவை பட தயாரிப்பு நிறுவனம் நாளை எடுக்கும் என்று கூறப்படுகிறது.
- தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
- தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது
நடிகர் விஜயின் 'ஜன நாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்று உடனே வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீடு வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.
நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ஜன நாயகனுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் மீண்டும் இவ்வழக்கு தனி நீதிபதியின் விசாரணை அனுப்பி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இரு நீதிபதிகள் உத்தரவை அடுத்து நீதிபதி ஆஷா மீண்டும் வழக்கை விசாரிக்கிறார்.
தனி நீதிபதி தீர்ப்புக்கு எதிராக தணிக்கை வாரியம் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகி இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
- இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர்.
- வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.
சென்னை:
தமிழகத்தில் சுற்றுலா மலைப்பகுதிகளில், மதுபான பாட்டில்கள் வீசப்படுவதை தடுக்க, ஒவ்வொரு பாட்டிலுக்கும் 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்து விட்டு, காலி பாட்டில்களை திரும்ப தரும் பட்சத்தில் 10 ரூபாயை திரும்ப அளிப்பது என்ற காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் என்.சுரேஷ்குமார், டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
பின்னர் இந்த திட்டத்தை மாநில முழுவதும் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்குகள் நீதிபதிகள் என். சதீஷ்கு மார், டி.பரதசக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழகம் முழுவதும் உள்ள 28 மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டு விட்டது.
3 மாவட்டங்களில் பாதி அளவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. 7 மாவட்டங்களில் இத்திட்டத்தை எதிர்த்து டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதால் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக இந்த திட்டம் அமல்படுத்தப்படும். இதே போல் கியூ ஆர் கோடுமுறை அமல்படுத்த மீண்டும் டெண்டர் கோரப்பட்டு உள்ளது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், பண்டிகை காலங்களில் டாஸ்மாக் விற்பனை ரூ.1000 கோடி என சாதனை படைக்கிறது. ஆனால் இந்த திட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவதில் என்ன பிரச்சனை? இனிமேல் கால அவகாசம் வழங்க முடியாது என்று எச்சரிக்கை செய்தனர். பின்னர், வழக்கு விசாரணையை பிப்ரவரி மாதம் தள்ளிவைத்தனர்.
- சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
- பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.
பா.ம.க. இரண்டாகப் பிளவுபட்டு கட்சியின் நிர்வாகிகள் ராமதாஸ், அன்புமணி என இரு தரப்பாகப் பிரிந்துள்ள நிலையில் சட்டசபை தேர்தலில் அன்புமணி அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளார். ராமதாஸ் தரப்பு இன்னும் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் பா.ம.க. சின்னம், கொடியை பயன்படுத்துவதில் குழப்பம் நீடிக்கிறது.
இதற்கிடையே ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் ஆதரவாக இருக்கிறது. இதற்கு எதிராக ராமதாஸ் டெல்லி ஐகோர்ட்டை நாடிய நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, சென்னை ஐகோர்ட்டில் ராமதாஸ் இன்று வழக்கு தொடர்ந்துள்ளார். பா.ம.க.விற்கு உரிமைகோரி சிவில் மற்றும் ரிட் வழக்குகளை ராமதாஸ் தரப்பு தாக்கல் செய்துள்ளது. மனுவில், பா.ம.க. தங்களுக்கே சொந்தம், கட்சியில் தனக்கே முழு அதிகாரம் என்று உத்தரவிடக்கோரி குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ரிட் மனுவில், பா.ம.க.வின் பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த அன்புமணி உள்ளிட்டோருக்குத் தடை விதிக்க வேண்டும், தேர்தல் மற்றும் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்க ராமதாசுக்கு அதிகாரம் என உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி உத்தரவிட்டார்.
- தலைமை நீதிபதி அமர்வில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.
இதையடுத்து, ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது. மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
தலைமை நீதிபதி அமர்வில் மத்திய தணிக்கை வாரியம் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் முறையீடு செய்தார்.
தாங்கள் தாக்கல் செய்யும் மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என தணிக்கை வாரியம் முறையீடு செய்தது.
மனுவாக தாக்கல் செய்துவிட்டு தெரிவிக்கவும், அதனை விசாரணைக்கு எடுப்பது குறித்து பிற்பகலில் பரிசீலிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.
- தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது.
- ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க மறுப்பு தெரிவித்த தணிக்கை வாரியம் அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்தது.
இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பை இன்று வழங்கப்பட்டது. தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஜன நாயகன் படத்தை சென்சார் போர்டு மறுஆய்வுக்கு அனுப்பியது தவறானது என்று தெரிவித்துள்ளது. ஜன நாயகன் திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்து, ஐகோர்ட் நீதிபதி P.T.ஆஷா உத்தரவிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கும் உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்துள்ளது.
மத்திய தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒரு நபர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
- சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவதாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், தணிக்கை சான்றிதழை உடனே வழங்க தணிக்கை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதுதொடர்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில், படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் படத்திற்கு சான்றிதழ் வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர். அதே நேரம் படத்தை பார்த்த உறுப்பினர்களில் ஒரு நபர் சான்றிதழ் வழங்க எதிர்ப்பு தெரிவித்தார்.
நீதிமன்றத் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
முன்கூட்டியே எட்டப்பட்ட உடன்பாடு: 22.12.2025 அன்று தணிக்கை குழு (CBFC) படக்குழுவுக்கு அனுப்பிய கடிதத்தில், குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் சான்றிதழ் வழங்குவதாக ஒப்புக்கொண்டது.
விதிமீறல் வாதம்: தணிக்கை குழு பரிந்துரைத்த திருத்தங்களை படக்குழு மேற்கொண்ட பிறகு, மீண்டும் படத்தை மறு ஆய்வுக்கு (Re-examination) உட்படுத்துவதாகக் கூறுவது தணிக்கை குழுவின் தவறான நடைமுறை என நீதிபதி சுட்டிக்காட்டினார்.
யு/ஏ (U/A) சான்றிதழ் உறுதி: 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் பார்க்கும் வகையிலான 'U/A' சான்றிதழ் வழங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட நிலையில், ஜனவரி 6-ம் தேதி மீண்டும் மறுஆய்வு செய்ய எடுத்த முடிவு சட்டப்படி செல்லாது.
தணிக்கை வாரியத்தின் புகார் நிராகரிப்பு: 'ஜன நாயகன்' படத்திற்கு எதிராக தணிக்கை வாரியம் முன்வைத்த புகார்கள் நிலைக்கத்தக்கவை அல்ல என்று நீதிமன்றம் கருதியது.
இறுதி உத்தரவு: தணிக்கை குழு ஒப்புக்கொண்டபடி, 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- சென்னை ஐகோர்ட்டில் கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
- தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை வாரியம் மறுத்துள்ளது. அந்த படத்தை மறுஆய்வு குழு பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் அந்த திரைப்படத்தை தயாரித்துள்ள கே.வி.என். புரொடக்சன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, பாதுகாப்பு படை தொடர்பான சின்னங்கள் இடம் பெற்றுள்ளதால், அதுகுறித்து ஆய்வு செய்ய பாதுகாப்பு துறை நிபுணர்களை நியமிக்க வேண்டியதுள்ளது. தணிக்கை சான்று வழங்கும் வரை இதுபோல வழக்கு தொடர முடியாது என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது. இதற்கு மனுதாரர் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதனிடையே இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு நீதிபதி பிறப்பிக்க உள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், 'ஜன நாயகன்' படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
- அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம்.
சென்னை:
கரூரில் த.வெ.க. விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளுடன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, ரோடு ஷோ உள்ளிட்ட அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக்கோரி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டது.
இதன்படி, தமிழ்நாடு அரசு அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி, வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியது. இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
இதில் அரசு விதித்துள்ள நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் ஜனநாயகத்துக்கு விரோதமாக இருப்பதாக அ.தி.மு.க.வும், த.வெ.க.வும் பதில் மனுக்களை தாக்கல் செய்தன.
பின்னர் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட ஐகோர்ட்டு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் கொண்ட முதல் பெஞ்ச் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தது.
இந்தநிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளை பரிசீலித்து விரைவில் இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட வேண்டும். அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஜனவரி 5-ம் தேதிக்குள் அரசிதழில் வெளியிட வேண்டும்.
அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஆட்சேபனை இருந்தால் அவற்றை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்தனர்.
- ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
- வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார்.
சென்னை:
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ.36 கோடியே 56 லட்சம் வருமான வரி பாக்கி வைத்துள்ளதாக கூறி அதனை 7 நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என அவரது சட்டப்பூர்வமான வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஜெ.தீபா வழக்கு தொடர்ந்து, வருமான வரித்துறை நோட்டீசுக்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றார்.
இதையடுத்து, நோட்டீசை திரும்ப பெற்ற வருமான வரித்துறை, ரூ.13 கோடியே 69 லட்சம் வரி பாக்கியை செலுத்தும் படி புதிய நோட்டீசை அனுப்பியது.
இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ஜெ.பிரதாப், 'வரி பாக்கியில் தனது பங்கை தீபக் தவணை முறையில் செலுத்த தொடங்கிவிட்டார். எனவே, வரி பாக்கித் தொகையை செலுத்த முடியாது என தீபா கூற முடியாது' என்றார்.
ஜெ.தீபா சார்பில் ஆஜரான வக்கீல் சத்தியகுமார், 'ஜெயலலிதா வருமான வரிப்பாக்கி தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதலில் ரூ.46 கோடி வரி பாக்கி என தெரிவித்த வருமான வரித்துறை, பின்னர் ரூ.36 கோடியாக குறைத்தது.
தற்போது, ரூ.13 கோடியே 69 லட்சம் என கூறுகிறது. உண்மையிலே எவ்வளவு வரி பாக்கி உள்ளது என்பதை வருமான வரித்துறை தெளிவாக கூறவில்லை' என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, 'ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கி எவ்வளவு? என்பது குறித்து வருமான வரித்துறை விரிவான பிரமாண மனுவை தாக்கல் செய்யவேண்டும்' என உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 12-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.
- இவ்வழக்கு தொடர்பாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
- ஞானசேகரனின் தாயார் கங்காதேவி வழக்கு தொடர்ந்தார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக கோட்டூர்புரத்தை சேர்ந்த ஞானசேகரனை போலீசார் கைது செய்தனர்.
கைதான ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு புழல் அறையில் அடைக்கப்பட்டார். மேலும் இவ்வழக்கில் ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஞானசேகரன் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஞானசேகரனின் தாயார் கங்காதேவி தொடர்ந்த வழக்கில், வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
- டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
சென்னை:
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தெருநாய்களுக்கு கருத்தடை செய்து, அவற்றுக்கு 'மைக்ரோ சிப் பொருத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு கால்நடைகள் அபிவிருத்தி முகமை 2 லட்சத்து 40 ஆயிரம் மைக்ரோ சிப்களை கொள்முதல் செய்ய டெண்டர் விடப்பட்டது.
இந்த மேக்ரோ சிப்களை வழங்கும் டெண்டர், 'எக்ஸ்ஹீலர் இன்னோவேடிவ் சொல்யூசன்ஸ்' என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. பின்னர், அந்த டெண்டரை திடீரென ரத்து செய்து விட்டு கடந்த நவம்பர் 26-ந்தேதி வேறு ஒரு நிறுவனத்தை டெண்டர் வழங்கப்பட்டது.
இந்த டெண்டரை எதிர்த்து 'எக்ஸ்ஹீலர்' நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, "டெண்டரில் பல்வேறு குளறுபடிகள், விதிமீறல்கள் நடந்துள்ளன எனக்கூறி அந்த டெண்டருக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.






