என் மலர்
நீங்கள் தேடியது "சன்ரைசர்ஸ் ஐதராபாத்"
- கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
- தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். சீசனுக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் மாதம் 16-ந்தேதி அபுதாபியில் நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக அணிகள் தங்களுக்கு தேவையான வீரர்களை தக்க வைத்துக்கொள்ளவும், விடுவிக்க விரும்பும் வீரர்களை விடுவிக்கவும் கடந்த 15-ந்தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
அதன்படி, ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று விளையாடும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை தக்கவைத்தும், விடுவித்தும் உள்ளனர். இதனை தொடர்ந்து, அடுத்த சீசனில் தங்களது அணிக்கான பயிற்சியாளர்கள், உதவிப்பயிற்சியாளர்கள் மற்றும் புதிய கேப்டன்களை தேர்வு செய்யும் பணியில் அணி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஐ.பி.எல். சீசனில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (ஆஸ்திரேலியா) தொடருவார் என்று அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் பேட் கம்மின்ஸ் ரூ.20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த இரண்டு சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பேட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார். தற்போது மூன்றாவது முறையாக கேப்டனாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை வழிநடத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார்
- ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று பேசப்பட்டது.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
இதனையடுத்து நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. அதில், நடப்பு சீசனின் மிகசிறந்த கேட்சுக்கான விருதை ஐதராபாத் வீரர் கமிந்து மெண்டிஸ் பெற்றார்.
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டிவால்ட் பிரேவிஸ் அடித்த பந்தை அந்தரத்தில் பறந்து கமிந்து மெண்டிஸ் பிடித்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே இதுதான் மிகசிறந்த கேட்ச் இது தான் என்று அப்போது பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் வரலாற்றில் 3 ஆவது அதிகபட்ச ஸ்கோரை ஐதராபாத் அணி பதிவு செய்தது.
- ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்தது.
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் அடிக்கப்பட்ட 3 ஆவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.
இந்த போட்டியில் 278 ரன்கள் குவித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 அதிகபட்ச ஸ்கோர்களை பதிவு செய்த அணி என்ற சாதனையை ஐதராபாத் படைத்துள்ளது.
மேலும், ஒரு புதிய உலக சாதனையையும் ஐதராபாத் அணி படைத்துள்ளது. அதாவது, டி20 போட்டிகளில் அதிகமுறை 250க்கும் மேல் ரன்களை குவித்த அணி என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.
ஐதராபாத் அணி ஒரு இன்னிங்சில் 5 முறை (287, 286, 277, 266, 278) 250 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது. இந்தப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் இந்தியாவும், சர்ரி கவுன்டி அணியும் (தலா 3 முறை) உள்ளன.
- டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 278 ரன்கள் குவித்தது.
புதுடெல்லி:
ஐ.பி.எல். தொடரின் 68-வது லீக் போட்டி புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதரபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 278 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 39 பந்தில் 9 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 76 ரன்னும், அபிஷேக் சர்மா 16 பந்தில் 32 ரன்னும், இஷான் கிஷன் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 279 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நிற்காமல் விரைவில் அவுட்டாகினர்.
மணீஷ் பாண்டே 23 பந்தில் 37 ரன்னும், சுனில் நரைன் 16 பந்தில் 31 ரன்னும் எடுத்தார். ஹர்ஷித் ராணா 34 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில், கொல்கத்தா அணி 18.4 ஓவரில் 168 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 110 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 6-வது இடம் பிடித்தது.
- அதிரடியாக விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
- சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் சர்மா - டிராவிஸ் ஹெட் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தது. அதிரடியாக தொடங்கிய அபிஷேக் சர்மா 16 பந்துக்களில் 32 ரன்கள் அடித்து அவுட்டானார்.பொறுப்புடன் விளையாடிய ஹெட் 40 பந்துகளில் 76 ரன்கள் அடித்து அவுட்டானார்.
அடுத்ததாக ஜோடி சேர்ந்த கிளாசான் - இஷான் கிஷன் ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. சிறப்பாக விளையாடிய கிளாசான் 37 பந்துகளில் சதம் அடித்து விளாசினார்.
இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்களை குவித்தது.
- ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
- அடுத்த சுற்று வாய்ப்பை இந்த 2 அணிகளும் இழந்துவிட்டன
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் டெல்லியில் இன்றிரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட இந்த 2 அணிகளும் கடைசி ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி உள்ளது.
- ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு , பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றன.
தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்த ஆர்.சி.பி. அணியின் முக்கிய வீரரான ஜோஷ் ஹேசில்வுட் சில போட்டிகளில் விளையாடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில், காயத்தில் இருந்து குணமடைந்த ஹேசில்வுட் மீண்டும் பெங்களூரு அணியில் இருந்துள்ளார். இது தொடர்பான விடியோவை பெங்களூரு அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- 65-வது லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் நேற்று மோதின.
- இந்த போட்டியில் ஐதராபாத் அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி லக்னோவில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் பட்டிதாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மெதுவாக பந்து வீசியதாக ஐதராபாத் அணியின் கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. நடப்பு ஐபிஎல் தொடரில் இது முதல் முறையாக விதியை மீறியதால் ரூ. 12 லட்சம் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது. ஆர்சிபி கேப்டனுக்கு இது 2-வது முறை என்பதால் அவருக்கு ரூ.24 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆர்சிபி அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் எது குறைந்த கட்டணமாக பார்க்கப்படுகிறதோ அதை அபராதமாக வசூக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
- புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது.
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் பெங்களூரு - ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
சின்னசாமி மைதானம் அல்லாத மற்ற மைதானங்களில் நடந்த போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பெங்களூரு அணியை முதல்முறையாக ஐதராபாத் அணி தோற்கடித்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு பெங்களூரு அணி சரிந்துள்ளது
இப்போட்டியில் விராட் கோலி 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சருடன் 43 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் ஒரு அணிக்காக 800 பவுண்டரிகளை விளாசிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆர்சிபி வீரர் விராட் கோலி படைத்தார்.
- டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
லக்னோ:
ஐ.பி.எல். தொடரின் 65-வது லீக் போட்டி உத்தர பிரதேசத்தின் லக்னோவில் நடைபெற்றது. இதில் ஆர்சிபி, எஸ்ஆர்ஹெச் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.
இஷான் கிஷன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து 94 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அபிஷேக் சர்மா 34 ரன்னும், அனிகேட் வர்மா 26 ரன்னும், கிளாசன் 24 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிலிப்ஸ் சால்ட் அரை சதம் கடந்து 62 ரன்னில் அவுட்டானார்.
விராட் கோலி 43 ரன்னும், ஜிதேஷ் சர்மா 24 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், ஆர்சிபி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 42 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணி சார்பில் கம்மின்ஸ் 3 விக்கெட்டும், இஷான் மலிங்கா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
- இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருந்தபோதிலும் நீண்ட நேரம் நிலைத்து நின்று விளையாட முடியவில்லை. டிராவிஸ் ஹெட் 10 பந்தில் 17 ரன்களும், அபிஷேக் சர்மா 17 பந்தில் 34 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் பவர்பிளேயில் 71 ரன்கள் குவித்தது.
அடுத்து வந்த இஷான் கிஷன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் மறுபக்கம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழந்தன. கிளாசன், அனிகெட் வர்மா தலா 24 ரன்களும், நிதிஷ் ரெட்டி 4 ரன்னிகளிலும், அபிநவ் மனோகர் 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8.4 ஓவரில் 100 ரன்களையும், 12.3 ஓவரில் 150 ரன்னையும் தொட்டது. இஷான் கிஷன் 28 பந்தில் அரைசதம் அடித்தார்.
17 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்திருந்தது. 18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். அத்துடன் ஐதராபாத் 203 ரன்கள் குவித்தது.
19ஆவது ஓவரை லுங்கி நிகிடி வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஐதராபாத் 216 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசி ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 15 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 6 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் குவித்துள்ளது.
இஷான் கிஷன் 48 பந்தில் 94 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ரஜத் படிதார் இம்பேக்ட் பிளேயராக களம் வருவதால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.
- மயங்க் அகர்வால் படிதாருக்குப் பதிலாக களம் இறங்குகிறார்.
ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி லக்னோவில் நடைபெறுகிறது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூருவில் மழை அச்சுறுத்தல் இருப்பதால் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டுள்ளது.
இன்றைய போட்டியில் ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார் இம்பேக்ட் வீரராக விளையாடுகிறார். இதனால் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுகிறார். டாஸ் வென்ற ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி:-
டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, அபிநவ் மனோகர், கம்மின்ஸ், ஹர்ஷல் படேல், இஷான் மலிங்கா, ஜெய்தேவ் உனத்கட்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, டிம் டேவிட், குருணால் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயால், லுங்கி நிகிடி, சுயாஷ் சர்மா.






