search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்திரபாபு நாயுடு"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
    • ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    திருப்பதி:

    ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.

    இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.

    வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.

    ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.

    ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
    • நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    திருப்பதி:

    ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    பின்னர் ஜாமீனில் வெளிய வந்தார். சந்திரபாபு நாயுடு நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.

    தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

    ஏழுமலையான் காலடியில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவன் நான். கஷ்டம் வரும் காலங்களில் காப்பாற்றுவார்.


    அலிபிரியில் தன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

    உலகில் இந்தியா முதல் இடத்திலும் தெலுங்கு இனம் உலகின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை தர வேண்டும் என சாமியிடம் வேண்டிக் கொண்டேன். தனது செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பதியில் நேற்று 58,278 பேர் தரிசனம் செய்தனர். 17,220 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.




    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
    • ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.

    இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.

    இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த செப்டம்பர் மாதம் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்
    • பொது கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள தடை

    ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வர் என். சந்திரபாபு நாயுடு (73), தெலுகு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர சட்டசபை எதிர்கட்சி தலைவருமாவார்.

    கடந்த ஆட்சி காலத்தில் ஆந்திர பிரதேச திறன் மேம்பாட்டு கழகத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் நடந்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இது குறித்து தீவிர விசாரணைக்கு சி.ஐ.டி. பிரிவினருக்கு தற்போதுள்ள ஆந்திர அரசு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

    அந்த விசாரணையை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 10 அன்று, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார்.

    இதையடுத்து விஜயவாடாவில் உள்ள ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

    இதனையடுத்து ராஜமுந்திரி சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

    சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், அவருக்கு கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது.

    எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31 அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.

    ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார்.

    இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.

    இதனை வழங்கிய ஆந்திர உயர் நீதிமன்ற நீதிபதி, இடைக்கால ஜாமினில் விதிக்கப்பட்டுள்ள உத்தரவுகளை அவர் கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசியல் நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்களில் சந்திரபாபு நாயுடு கலந்து கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.
    • கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல் மந்திரிமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய ஜாமீன் வழங்க வேண்டும் என ஆந்திரா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

    இதையடுத்து ஆந்திரா ஐகோர்ட்டு சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்கியது.

    இந்த நிலையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சந்திரபாபு நாயுடுக்கு 2 மணி நேரம் வலது கண் ஆபரேசன் நடந்தது.

    கண் ஆபரேசன் நடந்த ஆஸ்பத்திரி முன்பாக கட்சி தலைவர்கள் தொண்டர்கள் குவிந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    கண் ஆபரேசன் முடிந்த பிறகு சந்திரபாபு நாயுடு ஜூப்ளி ஹில்சில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தியாகராஜா என்பவர் சந்திரபாபு நாயுடுக்கு 60 அடியில் கட் அவுட் வைத்து உள்ளார்
    • சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும் 60 அடியில் கட் அவுட் தயார் செய்யப்பட்டு வந்தது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு திட்டத்தில் ஊழல் செய்ததாக கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அவருக்கு கடந்த வாரம் ஆந்திர ஐகோர்ட்டு இடைக்கால ஜாமீன் வழங்கியது. சந்திரபாபு நாயுடு ஜாமீனில் வெளியே வந்ததை அவரது கட்சித் தலைவர்கள் தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    இந்த நிலையில் கார்வேட் நகரை சேர்ந்த கொண்டூர் தியாகராஜா என்பவர் சந்திரபாபு நாயுடுக்கு 60 அடியில் கட் அவுட் வைத்து உள்ளார். இதேபோல் சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷுக்கும் 60 அடியில் கட் அவுட் தயார் செய்யப்பட்டு வந்தது. பாதி பணிகள் முடிவடைந்த நிலையில் கட் அவுட் வைக்க பஞ்சாயத்து அலுவலகத்தில் அனுமதி வழங்காததால் பணிகள் நிறுத்தப்பட்டதாக தியாகராஜா தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
    • மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.

    இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.

    மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

    பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-

    எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.

    எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
    • ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.

    ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

    ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
    • அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

    அமராவதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.

    இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, பைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது.

    இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில ஐகோர்ட்டு, அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.

    இந்நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திரா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு ஆணை ஜெயிலில் வழங்கப்பட்டதும் சந்திரபாபு நாயுடு ஜெயலில் இருந்து வெளியே வருவார் என தெரிவித்துள்ளனர்.

    .

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.

    திருப்பதி:

    தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்கு மேலாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.

    சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்திரபாபுநாயுடு சட்ட விரோத கைதை கண்டித்தும், உறங்கிக் கொண்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி கண்களை திறப்பதற்காக எனக் கூறி இன்று இரவு 7 மணிக்கு தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புத் துணியால் கண்களை கட்டிக்கொண்டு சாலைகள், வீட்டு மாடிகள், பால்கனிகளில் நின்று 5 நிமிடங்கள் ஜெகன்மோகன் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டம் நடத்த உள்ளனர்.

    இதேபோல் ஸ்ரீகாகுளத்தில் காளி செட்டி என்பவர் தலைமையில் 50 மீட்டர் நீளம் உள்ள கருப்பு துணியை கையில் பிடித்தபடி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.