என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்திய அணி"

    • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது.
    • இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான பந்தயத்தில் இந்தியா நீடிக்க வேண்டும் என்றால் அடுத்து வரும் 9 போட்டிகளில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை இந்திய அணி 9 போட்டிகள் விளையாடி உள்ளது. இதில் ஒரு போட்டி டிரா, 4 வெற்றி, 4 தோல்வியடைந்துள்ளது. இதன் வெற்றி சதவீதத்தின் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது.

    இன்னும் இந்திய அணிக்கு 9 போட்டிகள் உள்ளது. இதில் குறைந்த பட்சம் 7 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    இந்திய அணி இந்த 9 போட்டிகளில் ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கையில் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் 2 போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. கடைசியாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

    நியூசிலாந்து, இலங்கை அணிகளுக்கு எதிராக முடிந்த அளவுக்கு இந்தியா போராடி வெற்றி பெற்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெறுமா என்பது சந்தேகமாக உள்ளது. சொந்த மண்ணில் இந்திய அணி தொடர்ந்து தடுமாறும் நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ஆச்சரியபட ஒன்றும் இல்லை.

    • இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    இதில் இந்தியா, 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இன்று 10-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டுள்ளது. மழை காரணமாக இந்த போட்டி தாமதமாக தொடங்கியது.

    இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 252 ரன்களை வெற்றி இல்லாக்க இந்தியா நிர்ணயித்துள்ளது.

    முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 49.5 ஓவர்கள் முடிவில் 250 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரிச்சா கோஷ் 77 பந்துகளில் 94 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

    தொடர்ந்து, இந்திய அணி தரப்பில் பிரதீகா ராவல் 37, சினேகா ரானா 33 மற்றும் ஸ்மிருதி மந்தனா 23 ரன்களும் எடுத்தன.

    • சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான ஆல் டைம் லெவன் அணியை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.

    அதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு இடம் அளிக்கவில்லை.

    இந்த அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம் எஸ் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.

    தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.

    மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-

    ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.

    • இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
    • சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.

    ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்தொடரில் முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஓமன் அணி 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தோல்வியின் மூலம் ஓமன் அணி தொடரில் இருந்து வெளியேறியது. இதன்மூலம், குரூப் A சுற்றில் உள்ள இந்திய அணி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.

    இந்திய அணி விளையாடிய 2 போட்டிகளிலும் வென்று +4.793 நெட் ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. சூப்பர் 4 வாய்ப்பை இழந்த ஓமன் அணியுடன் வரும் 19ம் தேதி இந்தியா மோதுகிறது.

    • முதலில் பேட்டிங் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
    • இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அமீரகம் அணி 13.1 ஓவரில் 57 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி வெற்றி பெற்றது.

    எமிரேட்ஸ் அணியை 57 ரன்னில் முடக்கிய இந்திய அணி அந்த இலக்கை 4.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் இந்தியா அதிவேகமாக விரட்டிப்பிடித்த இலக்கு இது தான். இதற்கு முன்பு 2021-ம் ஆண்டு இதே இடத்தில் நடந்த ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6.3 ஓவர்களில் இலக்கை எட்டியதே இந்தியாவின் துரித சேசிங்காக இருந்தது.

    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது.
    • வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற வருகிற செப்டம்பர் 9-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடர் 20 ஓவர் போட்டி முறையில் நடக்கிறது.

    இதில் 8 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இப்பிரிவில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் ஆகிய அணிகள் உள்ளன.

    இந்தியா தனது தொடக்க ஆட்டத்தில் 10-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்சுடன் மோதுகிது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14-ந்தேதி நடக்கிறது. இத்தொடரில் பங்கேற்கும் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணி 4-ந்தேதி துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது. இதற்கு முன்பு வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி புறப்பட்டு செல்வார்கள்.

    ஆனால் இந்த முறை சில வீரர்கள் மட்டும் துபாய்க்கு புறப்படுவார்கள். மற்ற வீரர்கள் அவர்கள் இடங்களில் இருந்து துபாய்க்கு புறப்பட்டு வருவார்கள். வீரர்களின் பயண வசதியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "அனைத்து வீரர்களும் 4-ந்தேதி மாலைக்குள் துபாய்க்கு வருவார்கள். முதல் வலைப்பயிற்சி 5-ந் தேதி ஐ.சி.சி அகாடமியில் நடைபெறும். பயண வசதியைக் கருத்தில் கொண்டு, வீரர்கள் அந்தந்த நகரங்களில் இருந்து துபாய்க்கு விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். சிலர் மும்பையில் இருந்து பயணம் செய்வார்கள்.

    மற்றவர்களை மும்பைக்கு அழைத்து வந்து பின்னர் துபாய்க்கு செல்ல சொல்வது அர்த்தமற்றது. துபாய் என்பது மற்ற சர்வதேச விமானங்களுடன் ஒப்பிடும்போது ஒரு குறுகிய கால பயணமாகும். எனவேதான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

    • இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது.
    • வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும்.

    இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது உடற்தகுதியை நிரூபிக்க யோ-யோ என்ற சோதனை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் யோ-யோ சோதனையுடன் பிரான்கோ என்ற மேலும் ஒரு சோதனையை புதிய அளவுகோலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு அந்த சோதனையில் தேர்ச்சி பெறுவதும் ஒரு அளவுகோலாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பிரான்கோ சோதனை ஏற்கனவே நடைமுறையில் உள்ள யோ யோ சோதனையைவிட கடினமானது. இந்த சோதனையில் 20 மீட்டர், 40 மீட்டர், 60 மீட்டர் என்ற 3 கட்டங்கள் உள்ளன. ஒரு தொகுப்பில் 3 தூரங்களிலும் ஓட வேண்டும்.

    இதில் வீரர்கள் ஓய்வு இல்லாமல் 5 தொகுப்புகளை தொடர்ச்சியாக முடிக்க வேண்டும். அந்த 5 கட்டங்களையும் வீரர்கள் 6 நிமிடத்திற்குள் முடித்தால் தேர்ச்சியடைந்ததாக கருதப்படுவார்கள். சமீபத்திய இங்கிலாந்து தொடரில் முகமது சிராஜை தவிர மற்ற இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முழுமையாக விளையாட முடியாததால் இந்த புதிய சோதனை கொண்டு வரப்படுவதாக கூறப்படுகிறது.

    • ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.
    • ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தர் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    புதுடெல்லி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் தொடங்குகிறது. ஆசிய கோப்பைக்கான (டி20) இந்திய அணி சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தொடருகிறார். துணை கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    ஸ்ரேயாஸ் அய்யர், ஜெய்ஸ்வால், வாஷிங்டன் சுந்தருக்கு இடம் இல்லாதது விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில், ஆசிய போட்டிக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    இந்த இந்திய அணியை கொண்டு ஆசிய கோப்பையை வேண்டுமென்றால் வெல்லலாம். ஆனால் இந்த வீரர்களைக் கொண்டு டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பில்லை.

    இந்த அணியை உலகக் கோப்பைக்கு எடுத்துச்செல்ல போகிறீர்களா? 6 மாதத்தில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான தயாரிப்பு பணிகள் இதுதானா?. இது இந்திய அணியை பின்நோக்கி எடுத்துச் செல்கிறது.

    துணை கேப்டன் பதவியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டுள்ளார். ரிங்கு சிங், ஷிவம் துபே, ஹர்ஷித் ராணா எப்படி அணியில் இடம் பிடித்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

    ஐ.பி.எல். தொடரே அணி தேர்வுக்கான முக்கியமானது. ஆனால் தேர்வாளர்கள் அதற்கு முன்பு வீரர்கள் செயல்பட்டதை கருத்தில் கொண்டதாக தெரிகிறது என தெரிவித்தார்.

    10-வது டி20 உலகக் கோப்பை போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
    • ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகள் இடம் பெற்றுள்ளன.

    புதுடெல்லி:

    12-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகார் மாநிலம் ராஜ்கிர் நகரில் வருகிற 29-ந்தேதி முதல் செப்டம்பர் 7-ந்தேதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, சீனா, ஜப்பான், கஜகஸ்தான் அணிகளும், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் தென்கொரியா, மலேசியா, வங்காளதேசம், சீனதைபே அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் சீனாவுடன் மோதுகிறது.

    இந்த போட்டியில் மகுடம் சூடும் அணி அடுத்த ஆண்டு நெதர்லாந்து, பெல்ஜியத்தில் நடக்கும் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாகிஸ்தான் அணி இந்தியா வர மறுத்து விட்டது.

    இந்த நிலையில் ஆசிய போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. கேப்டனாக ஹர்மன்பிரீத் சிங் தொடருகிறார். நடுகள வீரர் ரஜிந்தர்சிங், முன்கள வீரர்கள் ஷில்லானந்த் லக்ரா, தில்பிரீத் சிங் இடத்தை தக்க வைத்துள்ளனர்.

    அணியின் தலைமை பயிற்சியாளர் கிரேக் புல்டான் கூறுகையில், 'ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான தகுதி சுற்று என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. பொறுமை, சரிவில் இருந்து மீளும் மனவலிமை, களத்தில் எப்படி திறமையை வெளிப்படுத்துவது என்பதை அறிந்த வீரர்கள் தான் தேவை. அப்படிப்பட்ட வீரர்களைத் தான் அணிக்கு எடுத்துள்ளோம். சரியான கலவையில் தரமான அணியாக அமைந்திருப்பது திருப்தி அளிக்கிறது. தற்காப்பு, நடுகளம், தாக்குதல் ேபான்ற ஒவ்வொரு வரிசைக்கும் எங்களிடம் தலைவர்கள் உள்ளனர். இந்த கூட்டு வலிமை தான் என்னை உற்சாகப்படுத்துகிறது. இந்த அணி ஒருங்கிணைந்து விளையாடும் விதம் எங்களது வலுவான சொத்தாக இருக்கும்' என்றார்.

    ஆசிய ேபாட்டிக்கான இந்திய அணி வருமாறு:-

    கோல் கீப்பர்கள்: கிருஷ்ணன் பதாக், சுராஜ் கர்கெரே,

    தற்காப்பு ஆட்டக்காரர்கள்: சுமித், ஜர்மன்பிரீத் சிங், சஞ்சய், ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோகிதாஸ், ஜூக்ராஜ் சிங்.

    நடுகள வீரர்கள்: ரஜிந்தர் சிங், ராஜ்குமார் பால், ஹர்திக் சிங், மன்பிரீத் சிங், விவேக் சாகர் பிரசாத்.

    முன்கள வீரர்கள்: மன்தீப் சிங், ஷில்லானந்த் லக்ரா, அபிஷேக், சுக்ஜீத் சிங், தில்பிரீத் சிங்.

    மாற்று வீரர்கள்: நிலம் சஞ்ஜீப் செஸ், செல்வம் கார்த்தி.

    • ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.
    • வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

    5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட ஆயுஷ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் 14 வயது வைபவ் சூரியவன்ஷி U19 இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.

    இந்திய U19 அணி வீரர்கள்:

    ஆயுஷ் மத்ரே (கேப்டன்), வைபவ் சூரியவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சாவ்தா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணை கேப்டன் & WK), ஹர்வன்ஷ் சிங் (WK), ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலான் படேல், ஹெனில் படேல், யுதாஜித் குஹா, ராவ் ராகவேந்திரா, முகமது ஏனான், ஆதித்யா சிங், அன்மோலி ரனா

    • விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார்.
    • இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்தியா 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற்றுள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

    இந்திய அணி அடுத்த மாதம் (ஜூன்) 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது. இந்த தொடரில் விளையாட கோலி விரும்பி இருந்தார். ஆனால் முன்னதாகவே தனது ஓய்வு முடிவை அறிவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

    இந்நிலையில், "விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்று நினைப்பதை நான் அவமானமாக கருதுகிறேன்" என்று மெசேஜை கோலிக்கு அனுப்பியதாக இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

    இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவில் பேசிய ஸ்டோக்ஸ், "இந்த முறை விராட் கோலிக்கு எதிராக விளையாட முடியவில்லை என்பது எனக்கு அவமானமாக இருக்கும் என்று நான் அவருக்கு மெசேஜ் அனுப்பினேன். கோலிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்தில் நாங்கள் ஒரே மாதிரியான மனநிலையை கொண்டிருப்பதால் நாங்கள் எப்போதும் போட்டியை ரசித்திருக்கிறோம்" என்று தெரிவித்தார். 

    • இலங்கையில் அடுத்த மாதம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.
    • செப்டம்பர் மாதம் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது

    அடுத்த மாதம் இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும், செப்டம்பரில் ஆடவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரும் நடைபெற உள்ளன.

    இந்நிலையில், இந்த 2 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் விலக பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் அமைச்சர் மோசின் நக்வி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×