என் மலர்
ஆன்மிகம்
- நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும்.
- நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.
'நவ' என்பது ஒரு சிறப்பு வாய்ந்த சொல்லாகும். இதற்கு இரு பொருள்கள் உண்டு. ஒன்று ஒன்பது மற்றொன்று புதியது. எனவே நவராத்திரியை ஒன்பது ராத்திரி என்றும் சொல்லலாம். புதிய ராத்திரிகள் என்றும் சொல்லலாம்.
நவராத்திரி பூஜையானது முற்றிலும் சுமங்கலி பெண்களுக்குரியதாகும். காரணம், இதில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய மூன்று சிருஷ்டி, வரிசைப்படி பார்த்தால் முறையே சரஸ்வதி, லட்சுமி, துர்கை என்று தான் வரும். ஆனால் நவராத்திரியின் போது இவை மாற்றம் அடைந்து, துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்றாகிறது.
சிறப்புக்குரிய நவராத்திரி நாட்களில் பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான வழிபாடாகும். நவராத்திரி நாட்களில் பெண்கள் கன்யா பூஜை செய்வதால் சகல செல்வங்களையும் பெறலாம். நவராத்திரியின் ஒன்பது நாட்களும் பகலில் 1008 சிவ நாமாவளிகளை உச்சரித்து வழிபட்டால், மனதில் நினைக்கும் பலன்கள் கிடைக்கும். நவராத்திரி பூஜைக்கான சுலோகங்கள், மந்திரங்கள் எதுவும் தெரியவில்லையா? கவலையே வேண்டாம். 'ஓம் ஸ்ரீலலிதா தேவியே நம' என்பதை 108 தடவை சொன்னாலே போதும். நினைத்த பலன் கிடைக்கும்.
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் வாசலில் மாவிலை கட்டி பூஜை செய்தால், வீட்டில் செல்வச்செழிப்பு பெருகும்.

அப்படியான நவராத்திரி விழா தொடங்கி மூன்று நாட்கள் முடிந்து உள்ளது. சதுர்த்தி திதியில் வியாழக்கிழமையான இன்று நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவிக்கு அர்பணிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் மஞ்சள் நிற ஆடையை அணிய வேண்டும். ஏனெனில், இந்நிறம் மகிழ்ச்சியை குறிக்கிறது.
பக்தர்கள் மஞ்சள் நிறத்தை அணிந்து, மனதை நேர்மறை மற்றும் நம்பிக்கையின் ஒளியால் நிரப்புங்கள். மஞ்சள் நிறம் கொண்ட சாமந்தி பூவைக் கொண்டு வழிபாடு செய்யலாம்.
- கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார்.
- கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும்.
நவராத்திரியின் நான்காம் நாள் கூஷ்மாண்டா தேவியை துர்க்கையாக வழிபடும் நாள். கூஷ்மாண்டா தேவியை மகாலட்சுமியின் ரூபமாக வழிபடுகிறோம். இவர் நவதுர்க்கைகளில் ஒருவர். இன்று வீட்டுக்கு மகாலட்சுமியை வரவேற்கும் முதல் நாளாகும். இந்த நாளில் அம்பிகையை மகாலட்சுமியின் வடிவமாக வழிபட்டு, செல்வ செழிப்பிற்காக வேண்டிக்கொள்ளலாம்.
கூஷ்மாண்டா தேவி உலகத்தையும், பிரபஞ்சத்தையும் உருவாக்கிய தாயாகக் கருதப்படுகிறார். வடமொழியில் "கூ" (சிறியது), "உஷ்மா" (வெப்பம்), "அண்டா" (உருண்டை) என்ற சொற்களின் சேர்க்கையே கூஷ்மாண்டா என்பதாகும், இது "சிறிய வெப்பமான உருண்டை வடிவத்தில் இருக்கும் பிரபஞ்சத்தை உருவாக்கியவள்" என்று பொருள்படும்.
கூஷ்மாண்டா தேவி
புராணங்களில் சொல்லப்பட்டபடி, காலத்தின் தொடக்கத்தில் எங்கும் இருள் மட்டுமே இருந்தது. சிருஷ்டி எதுவும் இல்லாமல், பிரபஞ்சம் வெறுமையாகக் காணப்பட்டது. அப்பொழுது, மகா சக்தியான ஆதி பராசக்தி தனது சிரிப்பின் ஒளியால் பிரபஞ்சத்தை உருவாக்கினாள்.
அவள் சிரித்தபோது வெளிப்பட்ட ஒளி, சூரிய மண்டலத்தின் ஒளியாக பரவியது. அந்த ஒளியிலிருந்தே உலகம் தோன்றியது.
கூஷ் என்றால் புன்சிரிப்பு என்றும், அண்டம் என்றால் உலகம் என்றும் பொருள். இவர், சூரியனின் மையப்பகுதியில் வசிப்பவர் என்றும், உலகத்திற்கு ஒளியையும், ஆற்றலையும் வழங்குபவர் என்றும் நம்பப்படுகிறது.
கூஷ்மாண்டா தேவி அஷ்டபுஜ (எட்டு கைகள்) உடையவள். கைகளில் கமண்டலம், தாமரை, அமிர்தக் கலசம், சங்கு, சக்கரம், அம்பு, வில் ஆகியவை உடையவள். இவரது வாகனம் சிங்கம். அவரது முகத்தில் எப்போதும் சிரிப்பு ஒளிர்கிறது. சூரிய மண்டலத்தின் நடுவில் திகழ்கிறாள்.
கூஷ்மாண்டா தேவியை வழிபட்டால், நோய்கள் நீங்கி உடல் வலிமை, மன உறுதி கிடைக்கும். பக்தர்களுக்கு ஆரோக்கியம், நீண்ட ஆயுள், செழிப்பு, ஆனந்தம் வழங்குகிறாள். படைப்பின் தெய்வமாக கருதப்படுவதால், அவர் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உரியவளாகக் கருதப்படுகிறார்.
ஸ்லோகம்:
'ஓம் தேவி கூஷ்மாண்டாயை நமஹ' என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
- தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி.
- தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு புரட்டாசி-9 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : திருதியை காலை 6.09 மணி வரை பிறகு சதுர்த்தி
நட்சத்திரம் : சுவாதி இரவு 7.03 மணி வரை பிறகு விசாகம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சதுர்த்தி விரதம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ராமர் மூலவருக்குத் திருமஞ்சனம்
இன்று சதுர்த்தி விரதம். மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்கார காட்சி. தல்லாகுளம் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் ஸ்ரீ கிருஷ்ணாவதார காட்சி. மிலட்டூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர், தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி பால் அபிஷேகம்.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சனம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணா மூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தனம்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-பயணம்
கடகம்-பரிசு
சிம்மம்-வரவு
கன்னி-களிப்பு
துலாம்- நிம்மதி
விருச்சிகம்-ஆதாயம்
தனுசு- அமைதி
மகரம்-கவனம்
கும்பம்-யோகம்
மீனம்-நிறைவு
- வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.
- வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும்.
நவராத்திரி மூன்றாம் நாளன்று அன்னை பராசக்கதி, வராகியாக வழிபாடு செய்யப்படுகிறாள். அம்பிகையின் படைத்தளபதியாக இருப்பவள். மங்கலமய நாராயணி என்றும் அழைக்கப்படுபவள். வராக நாதருக்கு வராக ரூபம் கொண்டு அன்னை காட்சி அளித்ததால் வராகி என்று அழைக்கப்படுகிறாள்.
அன்னை வராகியை வழிபாடு செய்ய அரிசி மாவைக் கொண்டு மலர்கள் உருவத்தில் கோலம் போட வேண்டும். 20 அகல் தீபம் ஏற்ற வேண்டும். இதற்கு தேங்காய் எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணெய் பயன்படுத்த வேண்டும். பலாப்பழம் மற்றும் கற்கண்டு சாதம் நிவேதனம் செய்ய வேண்டும். சம்பங்கி, மருக்கொழுந்து கொண்டு பூஜிக்க வேண்டும்.
"வீற்றிருப்பாள்நவ கோணத்திலே நம்மை வேண்டும் என்று காத்திருப்பாள் கலி வந்தணுகாமல்என் கண்கலக்கம் பார்த்திருப்பாள் அல்லள் எங்கே என்றங்குச பாசம் கையில் கோத்திருப்பாள் இவளே என்னை ஆளும் குலதெய்வமே" என பாடி துதித்தால் வேண்டும் வரம் அருளுவாள்.
அன்னை வராகி ஆதிபத்தியம் கொண்ட கிரகம் சுக்கிரன். எனவே வராகியை வழிபட சுக்கிரதோஷம் நிவர்த்தியாகும். வாழ்க்கையில் உள்ள தடைகளை நீக்கி, வெற்றி, செல்வம், செழிப்பை தருவாள். குடும்பத்தில் இருக்கும் குழப்பங்கள், சண்டைகள் விலகி, அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும், கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் எந்த ஒரு காரியத்திலும் இறங்கினாலும் அந்த காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
- நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது.
- விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும்.
நவராத்திரியில் வரும் ஜேஷ்டா நட்சத்திர லட்சுமி பூஜை மிகவும் விசேஷமான பூஜையாகும். மூல நட்சத்திரத்திற்கு முதல் நாள் வரும். தமிழில் கேட்டை நட்சத்திரம் என்று சொல்வார்கள்.
சாதாரணமாக இந்த லட்சுமி பூஜை படம், படி அரிசி, குத்து விளக்கு, இதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து அதில் லட்சுமியை தியானித்து பூஜை செய்ய வேண்டும். இதனால் வறுமை அகலும் என்பது ஐதீகம். அன்று சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும். மகாலட்சுமியை குறித்து சொல்லும் சுலோகங்கள், அஷ்டோத்திரம், சகஸ்ர நாமம் சொல்லி குங்குமம், புஷ்பம், அட்சதைகளினால் அர்ச்சிக்கலாம்.
மூல நட்சத்திர தீபம்:
மூல நட்சத்திர தீபம் என்பது நவராத்திரி பூஜை சமயத்தில் சரஸ்வதி ஆவாகனம் செய்யும் மூல நட்சத்திரத்தன்று ஏற்றும் ஒரு அகண்ட தீபம் ஆகும். இந்த தீபமானது சரஸ்வதி பூஜை வரையிலும் அகண்டமாக அணையாமல் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இதை ஏற்றுவதற்கு நந்தாதீபம் போன்ற நாக்கு வைத்த விளக்கு அல்லது காமாட்சி விளக்கு உசிதமானது. மூலம் நட்சத்திரத்தன்று காலையில் குளித்து புதிய ஆடை அணிந்து கொண்டு சுவாமியின் முன் ஒரு இடத்தை சுத்தம் செய்து செம்மண் கோலம் போட்டு அலங்கரித்து அதன் மேல் ஒரு சிறிய மர பலகை அல்லது தட்டு வைத்து சிறிய அரிசியை பரப்பி அதன் மேல் விளக்கு வைத்து ஏற்றி பூக்களைப்போட்டு நமஸ்கரிக்க வேண்டும். பசு நெய் ஸ்ரேஷ்டம் ஆனால் மூன்று நாட்களும் எரிந்து கொண்டிருக்க வேண்டியதினால் அந்த அளவு நெய் கிடைப்பது கஷ்டம். ஆகையால் நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம்.
விளக்கு மலையேறாமல் அடிக்கடி எண்ணெய் ஊற்றி திரியை தூண்டிவிட வேண்டும். இரவில் படுப்பதற்கு முன்பு நிதானமாக திரியின் மேல் பாகத்தை சுத்தம் செய்து எண்ணெய் ஊற்ற வேண்டும். திரியை சுத்தம் செய்யும் பொழுது அணையாமல் இருக்க வேறு திரியை ஏற்றி விட்டு சுத்தம் செய்து பிறகு ஏற்ற வேண்டும்.
- பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
- 5-வது நாள் காலை மோகினி அவதார உற்சவம்.
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவ விழாவின் முதல் நாள்: மாலை 6 மணிக்கு வேதகோஷங்கள் முழங்க, தங்கக் கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்படும். இரவு பெரிய சேஷவாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வருவார்.
2-வது நாள்: காலை- சின்ன சேஷவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளுவார். இரவு- அம்ஸ (அன்னப்பறவை) வாகனத்தில் வெண்பட்டு அணிந்து, கைகளில் வீணையேந்தி பவனி வருவார்.
3-வது நாள்: காலை- பொன்மயமான சிம்மவாகனத்தில் மலையப்பசாமி எழுந்தருளி உலா வருவார். இரவு- முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி உலா வருவார்.
4-வது நாள்: காலை- கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசாமி எழுந்தருளி வீதிஉலா. இரவு- சர்வ பூபால வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக மலையப்பசாமி வலம் வருவார்.
மோகினி அவதாரம்-கருட சேவை
5-வது நாள்: காலை மோகினி அவதார உற்சவம். அப்போது பெருமாள், அழகிய மங்கை வேடமேற்று உலா வருவார். இரவு கருடசேவை நடைபெறும். அப்போது ஏழுமலையான் கருட வாகனத்தில் அமர்ந்து மாடவீதிகளில் வீதிஉலா வருவார்.
6-வது நாள்: காலை- 'சிறிய திருவடி' என போற்றப்படும் அனுமந்த வாகனத்தில் மலையப்பசாமி, பச்சை பட்டாடை அணிந்து, தங்ககிரீடம் சூடி, கையில் வில்லேந்திய ராமப்பிரானாக வலம் வருகிறார். மாலை- தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி மாட வீதிகளில் உலா வருகிறார். இரவு கஜ வாகன வீதிஉலா நடக்கிறது.
7-வது நாள்: காலை- ஏழு குதிரைகள் இழுக்க தங்கமயமாக ஜொலிக்கும் சூரியபிரபை வாகனத்தில், மலையப்பசாமி மட்டும் எழுந்தருளுகிறார். இரவு- சந்திரபிரபை வாகனத்தில் சர்வ அலங்காரத்தில் மலையப்பர் சேவை சாதிக்கிறார்.
தேரோட்டம்
8-வது நாள்:- காலை தேரோட்டம். அதிகாலையிலேயே ஸ்ரீதேவி, பூதேவியரோடு மலையப்பசாமி தேரில் எழுந்தருளி பவனி வருவார். இரவு- குதிரை வாகனத்தில் எழுந்தருளி உலா வருகிறார்.
9-வது நாள்: கோவில் தெப்பக்குளமான புஷ்கரணியில் தீர்த்தவாரி (சக்கரஸ்நானம்) நடைபெறும்.
பின்னர் கொடியிறக்கம் (த்வஜாவரோகணம்) நடைபெற்று திருவிழா இனிதே நிறைவுபெறும்.
பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்
பிரம்மோற்சவ விழா நேரத்தில் வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பிரேக் தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆந்திர மாநில அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருப்பதியில் இருந்து திருமலைக்கு தினமும் 435 முறை பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் தினமும் சுமார் 1 லட்சத்து 60 ஆயிரம் பக்தர்கள் திருமலைக்கு அழைத்து வரப்பட்டு, மீண்டும் திருப்பதியில் கொண்டு விடப்படுவார்கள்.
திருப்பதியில் பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 23 வாகன நிறுத்துமிடங்கள் தயாராக உள்ளன.
கோவிலின் நான்கு மாடவீதிகளில் உள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்கள் வரை அமர வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மாடவீதிகளில் தரிசிக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக 35 அகண்ட ஒளித்திரைகள் நிறுவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
- பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நவம்பர் மாதம் 21-ந் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 7-ந் தேதி நிறைவு பெறுகிறது.
திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள இன்று காலை பந்தக்கால் முகூர்த்த விழா நடைபெற்றது. அதிகாலை சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதனை தொடர்ந்து பந்தக்காலிற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பின்னர் பஞ்ச மூர்த்திகளின் தேர்கள் முன்பு பந்தக்கால் வைத்து பூஜை செய்யப்பட்டது.
பின்பு ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார் பி.டி.சங்கர் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க பந்தக்கால் நடப்பட்டது.
இதில் கலெக்டர் தர்ப்பகராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் ராம்பிரதீபன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, அருணாசலேஸ்வரர் கோவில் தக்கார் மீனாட்சி சுந்தரம், இணை ஆணையர் பரணிதரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல.
- ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
திருமலை வேறு, திருமால் வேறு என்பது அல்ல... திருமலையே திருமால். திருமாலே திருமலை. எனவே ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பது வாழ்வில் 'திருப்பம்' தரும் என்பது ஐதீகம். பிரம்மோற்சவத்தின்போது அவரை தரிசித்தால் திருப்பம் மட்டுமல்ல... வேங்கடவன் பேரருளுடன் வற்றாத செல்வமும் வந்து சேரும் என்கிறார்கள்.
"ஏழுமலை வாசா... வேங்கடரமணா... கோவிந்தா... கோவிந்தா..!" என்ற பக்தர்களின் பக்தி கோஷம் திருமலையில் மட்டுமல்ல.. நாடெங்கும் எதிரொலிக்கும்.
- ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
- ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
மஹாளய அமாவாசைக்குப் பிறகு தொடங்கும் நவராத்திரி ஒன்பது நாட்களுக்கு கொண்டாப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்கை அம்மனை ஒன்பது வடிவங்களாக பாவித்து வணங்குவர்.
அதுபோல், ஒன்பது நவராத்திரிக்கும் நைவேத்தியங்களும், பிரசாதங்களும் தெய்வங்களுக்கு படைக்கப்படுகிறது.
அதன்படி, நவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பச்சை பயறு சுண்டல், எலுமிச்சை சாதம் மற்றும் ரவை கேசரி செய்து துர்கைக்கு படைக்கலாம். முதலில், பச்சை பயறு சுண்டல் எப்படி செய்வது என்று பார்ப்போம்..
பச்சை பயறு சுண்டல்:
தேவையான பொருட்கள்:
பச்சை பயறு - 1 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சில இலைகள்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
* பச்சை பயறை நன்கு கழுவி, போதுமான தண்ணீர் சேர்த்து 6 முதல் 8 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்கவும்.
* ஊறிய பயறை உப்பு மற்றும் பெருங்காயம் சேர்த்து பிரஷர் குக்கரில் வேக வைக்கவும்.
* வெந்த பச்சை பயறில் உள்ள தண்ணீரை முழுவதுமாக வடித்து, தனியாக வைக்கவும்.
* வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பிறகு உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
* இப்போது கறிவேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
* வடித்து வைத்துள்ள பச்சை பயறை வாணலியில் சேர்த்து நன்கு கிளறவும். கடைசியாக துருவிய தேங்காயை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
எலுமிச்சை சாதம்:
தேவையான பொருட்கள்:
சாதம் - 2 கப் (வேகவைத்து, ஆறவைத்தது)
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1.5 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1.5 டீஸ்பூன்
வேர்க்கடலை - ½ கப்
கறிவேப்பிலை - 1 கொத்து
பச்சை மிளகாய் - 1-2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை - ½

செய்முறை:
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து தாளிக்கவும்.
கடுகு வெடித்ததும், வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
பின்னர், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
அடுத்து, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் கலந்து, அடுப்பை அணைத்துவிட்டு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கிளறவும்.
இந்தக் கலவையை ஆறவைத்த சாதத்துடன் சேர்த்து கிளறி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்.
நவராத்திரியின் மூன்றாம் நாள் பிரசாதமாக வழங்கலாம்.
ரவை கேசரி
தேவையான பொருட்கள்:
ரவை - 1 கப்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி மற்றும் திராட்சை
சர்க்கரை அல்லது பனை வெல்லம்
தண்ணீர் அல்லது பால்
ஏலக்காய் தூள்

செய்முறை:
* ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு சூடாக்கி, முந்திரி மற்றும் திராட்சையை வறுத்து எடுக்கவும்.
* அதே நெய்யில் ரவையைச் சேர்த்து, நிறம் மாறாமல் நன்றாக வறுக்கவும்.
* தண்ணீரை கொதிக்க வைத்து, வறுத்த ரவையுடன் சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்.
* ரவை வெந்ததும், சர்க்கரை அல்லது பனை வெல்லத்தைச் சேர்த்து நன்கு கிளறவும்.
* கடைசியாக, வறுத்த முந்திரி, திராட்சை மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பரிமாறலாம்.
- சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
- நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளுக்கும் உரிய 9 துர்கை தெய்வங்களின் மந்திரங்கள், ஸ்லோகங்கள் மற்றும் போற்றிகள் அந்தந்த தெய்வங்களின் அருளைப் பெற உதவும்.
ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட துர்கை ரூபத்தை வழிபட்டு, அவர்களின் சிறப்பு மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம் நவராத்திரி விரதத்தை நிறைவு செய்யலாம்.
நவதுர்க்கை எனப்படும் ஒன்பது வடிவங்களில் துர்க்கை தேவி தன்னை வெளிப்படுத்துகிறாள்.
அதன்படி, நவராத்திரியின் 3ம் நாளான இன்று சந்திரகாந்தா தேவியை வழிப்படுகிறது.
சந்திரகாந்தா மந்திரம் என்பது நவதுர்கைகளில் மூன்றாவதான சந்திரகாந்தா தேவியை துதிக்கும் சக்திவாய்ந்த மந்திரங்களாகும்.
சந்திரகாந்தா தேவிக்கு உகந்த மந்திரங்கள் குறித்து பார்க்கலாம்..
மந்திரங்கள்:
*ஓம் தேவி சந்திரகாந்தாயை நமஹ.
* பிண்டஜ ப்ரவராரூடா சண்டகோபாஸ்த்ரகைர்யுதா பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகந்தேதி விஸ்ருதா
* யா தேவி சர்வபூதேஷு மாம் சந்திரகண்ட ரூபேண சம்ஸ்திதா நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ
விளக்கம்:
இந்த மந்திரம், துர்காதேவியின் ஒரு வடிவமான சந்திரகாந்தா தேவியை சரணடைவதாகவும், அவளுடைய அருள், தைரியம், பாதுகாப்பு, மற்றும் தடைகளை நீக்கும் வலிமையைக் கோருவதாகவும் பொருள்படும்.
இந்த மந்திரங்கள் தேவியின் அருளைப் பெறவும், தடைகளை நீக்கவும், ஞானம் மற்றும் பலத்தை பெறவும் உச்சரிக்கப்படுகின்றன.
- மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
- கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெறும்.
கடந்த 2015, 2018-ம் ஆண்டுகளில் 2 பிரம்மோற்சவங்கள் நடந்தன. அதன்பிறகு 2023-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவங்கள் நடைபெற்றன. அதன்படி 2026-ம் ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் கொண்டாடப்பட இருக்கிறது.
- லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார்.
- திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
பிரம்மோற்சவம்
திருமலையில் வேங்கடநாதனுக்கு, 'படைத்தல்' கடவுளான பிரம்மனே முன்னின்று நடத்திய விழாதான் 'பிரம்மோற்சவம்'.
புரட்டாசி மாதம் வரும் திருவோணம் நட்சத்திர நாளே, உலகின் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையானின் பிறந்தநாளாக கருதப்படுகிறது.
இந்த நாளுக்கு முன்பாக 9 நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாதான் 'பிரம்மோற்சவம்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதனை 'திருக்கொடி திருநாள்' என தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன.
இந்த விழா கொண்டாடப்படுவதற்கான காரணங்கள் குறித்து புராணங்களில் கூறப்படுவதாவது:-
பிரம்மோற்சவம் பிறந்த கதை
லட்சுமி தேவியை பிரிந்த மகாவிஷ்ணு, பூலோகத்தில் சீனிவாசனாக அவதரித்தார். அப்போது அவர், சேஷாசலம் என போற்றப்படும் திருமலையில் இருந்த ஒரு புற்றினுள் அமர்ந்து தவம் செய்தார். அப்போது முனிவர்களுக்கும், மக்களுக்கும் அரக்கர்கள் பெருந்துன்பம் செய்து வந்தனர்.
இதனால் துயருற்ற முனிவர்கள், புற்றினுள் தவம் இருந்த திருமாலை சந்தித்து தங்கள் குறை தீர்க்க வேண்டினர். இதைக்கேட்ட திருமால், அந்த அரக்கர்களை அழித்து வருமாறு, தமது கையில் இருந்த சக்கரத்தாழ்வாரான சுதர்சனருக்கு கட்டளையிட்டார்.
அவரும், வீரபுருஷனாக உருக்கொண்டு 4 திசைகளுக்கும் பறந்து சென்று எல்லா அரக்கர்களையும் அழித்து வெற்றிக்கொண்டார்.
பின்னர், திருமால் முன்னால் வந்து நின்ற சுதர்சனருக்கு, பரிசளிக்க விரும்பிய பெருமாள், உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார்.
பிரம்ம ரதம்
உடனே சுதர்சனர், "பகவானே, தாங்கள் வீற்றிருக்கும் இத்திருத்தலத்தில் தங்களுக்கு பெரியதொரு உற்சவம் நடத்தி காண விரும்புகிறேன்" என்று வேண்டினார்.
தனக்கென எதுவும் கேட்காத சுதர்சனரின் வேண்டுகோளுக்கு திருமால் இணங்க, பிரம்மதேவர் உரிய ஏற்பாடுகளைச் செய்தார். ஒரு புரட்டாசி மாதத்தில், சுதர்சனரின் வேண்டுகோளின்படி பிரம்மதேவனால் திருமலையில் கோலாகலமாக உற்சவம் நடத்தப்பட்டது. அன்று முதல் திருமலையில் பிரம்மோற்சவம் நடந்து வருவதாக அந்த கதை கூறுகிறது.
அதனால்தான், இன்றளவும் திருமலையில் தேர்த்திருநாளன்று பெருமாளுடைய திருத்தேர் முன்பு பிரம்ம ரதம் இழுத்துச் செல்லப்படுகிறது.
அதேபோல பிரம்மோற்சவ விழா நாட்களில் நடைபெறும் வாகனசேவைகளின்போது, சக்கரத்தாழ்வார் முன்னே செல்வது வழக்கமாக இருக்கிறது.
9 நாட்கள் உற்சவம்
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் திருவோண (சிரவணம்) நட்சத்திரமும், நவராத்திரி கொண்டாட்டமும் இணைந்தே வரும். இச்சமயத்தில் திருமலையில் ஒரு பிரம்மோற்சவம் நடைபெறும்.
சில ஆண்டுகளில் புரட்டாசி மாதத்தில் இரண்டு திருவோண நட்சத்திர நாட்கள் வரும். அப்போது முதல் திருவோண நாளில் ஆகம முறைப்படி கொடியேற்றத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ பெருவிழா எடுப்பார்கள். பின்னர், இரண்டாவது திருவோண நாளில் 'லவுகீக' முறைப்படி நவராத்திரி பிரம்மோற்சவம் நடைபெறும். இரண்டு உற்சவங்களும் சிரவண தீர்த்தவாரியுடன் (சக்கரஸ்நானம்) நிறைவடையும்.
பிரம்மோற்சவம் நடைபெறும் முந்தைய நாள் ஏழுமலையான் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வாசனை திரவியங்கள் பூசப்படும். தொடர்ந்து, ஏழுமலையானின் சேனாதிபதியாக கருதப்படும் விஸ்வசேனருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இந்த ஆண்டு இன்று 24-ந்தேதி (புதன்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வரும் உற்சவரான மலையப்ப சாமியை காண, கண்கள் கோடி வேண்டும்.
ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தின்போது, திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக கருடசேவை, தங்கத் தேரோட்டம், தீர்த்தவாரி ஆகியவை நடைபெறும் நாட்களில், மலையா... பக்தர்களின் தலையா எனும் அளவுக்கு திருமலையே கோலாகலமாக இருக்கும்.






