என் மலர்tooltip icon

    வழிபாடு

    weekly rasipalan 30.11.2025 to 06.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்
    X

    weekly rasipalan 30.11.2025 to 06.12.2025: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான வார ராசிபலன்கள்

    • கடகம் நன்மைகள் நடக்கும் வாரம்.
    • கன்னி நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.

    மேஷம்

    எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம்.ராசிக்கு 4-ம் மிடமான சுகஸ்தானத்தில் நிற்கும் அதிசார குரு பகவான் வக்ரகதியில் வெற்றி ஸ்தானத்திற்கு செல்கிறார். இதனால் தனவரவில் தன்னிறைவு உண்டாகும். ஆயுள் ஆரோக்கியம் சார்ந்த பயம் அகலும்.அறுவை சிகிச்சை வரை சென்ற நோய் பாதிப்பு சற்று குறையும். எதிர்பாராத சில பண வரவுகள் இருக்கும். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் நிலவும். எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். வாழ்க்கைத் துணை மற்றும் பிள்ளைகளால் ஏற்பட்ட மனச்சங்கடம் அகலும்.சுப மங்கள விசேஷங்கள் நடக்கும். புதிய தொழில் சிந்தனை அதிகரிக்கும்.இது ஏழரைச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்கு பிறகு புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுவது நல்லது. சிக்கனத்தை கடைபிடித்தால் வீண் விரயங்களை தவிர்க்க முடியும். மனக்கவலை மறந்து நிம்மதியாக தூங்குவீர்கள்.திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவ வழிபாடு செய்யவும்.

    ரிஷபம்

    நல்லவிதமான மாற்றங்கள் உருவாகும் வாரம்.ராசிக்கு 6-ல் ஆட்சி பலம் பெற்று நின்ற ராசி அதிபதி சுக்கிரன் வார இறுதியில் 7-ம் மிடத்திற்கு சென்று ராசியை பார்ப்பார். இது ரிஷப ராசியி னருக்கு இழந்த இன்பங்களை மீட்டு தரக்கூடிய அமைப்பாகும். எதையும் தைரியத்தோடு செய்யக் கூடிய மன பலம் அதிகரிக்கும். திறமையான பேச்சால் மற்றவர்களை வசீகரம் செய்யக்கூடிய தன்மை உருவாகும். திறமைகள் அதிகரிக்கும். செயல் திறன் கூடும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கடன் சுமைகள் படிப்படியாக குறையும். திருமண தடை அகலும்.காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் கிடைக்கும்.வேலைப்பளு குறையும்.புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். புத்திர பிராப்தத்தில் நிலவிய குறைபாடுகள் சீராகும். பூர்வீகச் சொத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் சீராகும்.அழகு ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பன்னீர் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.

    மிதுனம்

    மறைமுக எதிர்ப்புகள் குறையும். வாரம்.ராசிக்கு 5-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராசி அதிபதி புதன் வார இறுதி நாளில் வக்கிர நிவர்த்தி அடைகிறார். பூர்வீ கத்திற்கு சென்று வரும் எண்ணம் அதிகமாகும். பூர்வீக சொத்தால் ஏற்பட்ட பிரச்சிினைகள் குறையத் துவங்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் அகலும். இழுபறி யாக கிடந்த பணிகளை அறிவாற்றலால் சரி செய்வீர்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வருவீர்கள். முக்கிய பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் கூடும். திருமணம் குழந்தைப் பேரு போன்றவற்றில் ஏற்பட்ட தடைகள் விலகும்.தொழில் வியாபாரத்தில் லாபகரமான சூழ்நிலை இருக்கும். மேலதிகாரியிடம் பாராட்டுக்கள் கிடைக்கும்.தடைபட்ட பதவி உயர்வு இப்பொழுது சாதகமாகும். சிலர் நடந்ததை நினைத்து கற்பனை கவலைகள் பய உணர்வை அதிகரிப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து வில்வ அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்யவும்.

    கடகம்

    நன்மைகள் நடக்கும் வாரம்.ராசியில் குரு பகவானும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், சுக்கிரனும் பாக்கியஸ்தானத்தில் சனிபகவானும் சஞ்சரிப்பதால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. இது கடக ராசிக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய அமைப்பாகும். அஷ்டம ஸ்தானத்தில் ராகு நின்றாலும் ராகுக்கு வீடு கொடுத்த சனி பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.மனதில் நிலவிய கவலைகள் கஷ்டங்கள் விலகும். குறுக்கு வழியில் சம்பாதிக்கும் எண்ணம் தோன்றும்.அனைத்து செயல்களிலும் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதால் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.புதிய வீடு கட்டுதல் கட்டிய வீட்டை விரிவு செய்தல் போன்றது தொடர்பான சிந்தனைகள் இருக்கும்.கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். போட்டி பந்தயங்களில் அமோகமாக வெற்றி பெறுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வ அருளுடன் சகல பாக்கியங்களும் கைகூடும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து புனித நீரால் அபிஷேகம் செய்து சிவபெருமானை வழிபடவும்.

    சிம்மம்

    சாதகமான வாரம்.ராசி அதிபதி சூரியன் 4-ம்மிடமான சுகஸ்தானத்தில் சுகஸ்தான அதிபதி செவ்வாயுடன் சேர்ந்து இருக்கிறார். எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். தாராள தன வரவால் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.வீட்டிலும் வெளி இடத்திலும் உள்ள நிலைமைகளை சமாளித்து வளமான பலன்களை அடையக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும். புதிய சொத்துக்கள் சேரும். சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.பொறுப்புகள் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும்.உங்களின் ஆராய்ச்சி திறன் உயரும்.உயர் கல்வி வாய்ப்புகள் தேடி வரும்.தந்தையின் ஆசியுடன் குலதெய்வ அருள் கடாட்சம் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த சாதகமான பலன்கள் நடக்கும்.விவசாயிகளுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கும். 1.12.2025 அன்று இரவு 11.18 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாத நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சகவ்ய அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது.

    கன்னி

    நீண்ட கால லட்சியங்களும், குறிக்கோள்களும் நிறைவேறும் வாரம்.ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரே பத்தாம் அதிபதியாக இருப்பதால் தொழில் மூலமாக தன வரவு அதிகமாகும். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் உயரும்.இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சிினைகள் எல்லாம் சூரியனை கண்ட பணி போல் விலகும்.சிந்தனைகள் தெளிவாகும். தடைபட்ட கனவுகள் லட்சியங்களை நிறைவேற்ற உகந்த காலமாகும். நிதானமாக செயல்படுவீர்கள். புதிய வீடு வாங்குதல் வாகனம் வாங்குதல் போன்ற செயல்களில் ஆர்வம் கூடும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். அரசு மற்றும் அரசாங்க பணிகளால் ஆதாயங்கள் கிடைக்கும். சிலர் புதிய ஆயுள் காப்பீட்டு பாலிசி எடுப்பார்கள்.1.12.2025 அன்று இரவு 11.18 முதல் 3.12.2025 அன்று இரவு 11.14 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற ஆசைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் விபரீத விளைவுகளை தவிர்க்க முடியும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவபுராணம் படித்து சிவபெருமானை வழிபடவும்.

    துலாம்

    சங்கடங்கள் விலகும் வாரம்.ராசி அதிபதி சுக்கிரன் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி செவ்வாய் மற்றும் லாப ஸ்தான அதிபதி சூரியனுடன் சேர்க்கை பெறுகிறார். கடந்த காலங்களில் பட்ட கஷ்டத்திற்கு தற்போது பலன் கிடைக்கும். குடும்பத்தினரின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். வெளியே சொல்ல முடியாத பிரச்சினைகளில் இருந்து விடுபடுவீர்கள். சிலர் கடன் பெற்று புதிய வாகனம் சொத்துக்கள், வாங்குவார்கள். அலுவலக பணிச் சுமையும் அலைச்சலும் உங்களுக்கு சிரமம் தரும். எனினும் உத்தியோகத்தின் மீது முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பிரிக்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். 3.12.2025 அன்று இரவு 11.14 முதல் 5.12.2025 அன்று இரவு 10.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வார்த்தைகளில் வேகம் இருக்கும் ஆனால் விவேகம் இருக்காது.குடும்ப உறவினர்களை கடுமையான சொற்களால் பேசக்கூடாது. திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு சந்தன அபிஷேகம் செய்து வழிபடவும்.

    விருச்சிகம்

    திறமைகளால் மதிப்பு உயரும் வாரம்.ராசியில் சூரியன், செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை உள்ளது. ஆன்ம பலம், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். உடல் தேஜஸ் கூடும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். சுய திறமையால் நல்ல வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். அலைச்சல் மிகுந்த பயணங்கள் அதிகரிக்கும். இடப்பெயர்ச்சியால் சில நன்மைகள் ஏற்படும். நோய் தொந்தரவுகள் அகலும்.சில பெண்களை அச்சுறுத்திய மாதவிடாய் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். கடன்தர நிதி நிறுவனங்கள், வங்கிகள் தேடி வரும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.உயர் கல்வியில் நிலவிய தடைகள் அகலும்.5.12.2025 அன்று இரவு 10.15 முதல் 7.12.2025 அன்று இரவு 10.38 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நட்புகளிடம் விவேகமான வார்த்தைகளை பேச வேண்டும். நண்பர்கள், தொழில் கூட்டாளிகளிடம் கவனமாக பழகவும்.திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து வழிபட இன்னல்கள் விலகும்.

    தனுசு

    எதிர்கால வாழ்க்கை பற்றிய புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம்.ராசி அதிபதி குரு பகவான் வார இறுதியில் வக்கிர கதியில் சம சப்தமஸ்தானம் செல்கிறார்.திடீர் வருமானம், பெயர், புகழ் என யோகமான நிலை உண்டாகும். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் காணாமல் போவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி வணிகத்தினர் தொழிலில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிப்பார்கள். பணவரவு நன்றாக இருக்கும். பங்குச் சந்தை மற்றும் யூக வணிகம் உங்களுக்கு அதிர்ஷ்ட லட்சுமியை கண்ணில் காட்டும். உடல் ஆரோக்கி யத்தில் சிறிய பாதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். ஆன்லைன் வர்த்தகர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். திருமணத் தடை அகலும். வரவு செலவு சீராக இருக்கும். தம்பதிகளிடையே இணக்கமான சூழல் நிலவும். பெண்களுக்கு அழகிய நவீன பொருட்கள் சேர்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்து வழிபட அனைத்தும் சுப பலன்களும் வந்து சேரும்.

    மகரம்

    வெற்றி மேல் வெற்றி வந்து சேரும் வாரம்.ராசி அதிபதி சனி பகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.சிலர் தொழில், வேலைக்காக இடம் பெயரலாம். விரும்பிய அரசு, தனியார், வெளிநாட்டு வேலை கிடைக்கும். விவசாயிகளுக்கு வறண்ட நிலம் செழிப்பாகும். வீடு, வாகன பராமரிப்பு செலவு மிகுதியாகும். சொத்து விசயத்தில் இருந்த வழக்குகள் சாதகமாகும். கொள்கை பிடிப்போடு செயல்படுவீர்கள். அரசு ஊழியர்கள், அரசியல் வாதிகள் செல்வாக்கு உயரும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். இதுவரை வராமல் இருந்த தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் சீராகும்.கடன் சுமை குறைய புதிய வழி பிறக்கும்.பெண்களுக்கு கருவுருதலில் இருந்த பிரச்சினைகள் நீங்கி புத்திர பிராப்தம் உண்டாகும். வயோதிகர்களுக்கு தாத்தா, பாட்டி யோகம் உண்டு. ஆன்மீக ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், முன்னோர்களின் நல்லாசியும் கிடைக்கும். திருமணம் மற்றும் சுப காரியங்களுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. திருக்கார்த்திகை அன்று விரதம் இருந்து சிவனுக்கு புனுகு சாற்றி வழிபடவும்.

    கும்பம்

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம்.தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.ராசியில் உள்ள ராகுக்கு குரு பார்வை கிடைக்கிறது. வாக்கு வன்மை பெருகும்.எதிர்பார்த்த அனைத்து வகையிலும் வருமானம் உண்டாகும்.வரா கடன்கள் வசூல் ஆகும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீடு வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஆர்வம் கூடும். சொந்த வீட்டை விட்டு வாடகை வீட்டிற்குச் சென்றவர்கள் மீண்டும் சொந்த வீட்டிற்குச் சென்று குடிபுகுவீர்கள். அடமானச் சொத்து மற்றும் நகைகளை மீட்பீர்கள்.மருமகனால் ஏற்பட்ட நிம்மதியின்மை சீராகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமா வார்கள். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு தொழிலுக்கு சிக்கலை ஏற்படுத்தாமல் உண்மையாக உற்சாகமாக, உழைக்க வேண்டும்.ஆரோக்கியத்தை பேணுவது அவசியம். உடன் பிறந்தவர்களின் திருமணத்தை நடத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருக்கார்த்திகை நாளில் விரதம் இருந்து சிவனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம் செய்து வழிபடவும்.

    மீனம்

    தடை தாமதங்கள் அகலும் வாரம். ஜென்ம ராசியில் நின்ற சனிபகவான் வக்ர நிவர்த்தி அடைகிறார்.எடுக்கும் முயற்சியில் வெற்றி மேல் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். விலகிச் சென்ற உறவுகள் வந்து இணைவார்கள். திடீர் அதிர்ஷ்டம் உங்களை வழிநடத்தப் போகிறது. எந்த தொழிலாக இருந்தாலும் ஏற்றமும் வருமானமும் அதிகரிக்கும். வியாபாரத்திலும் தொழிலிலும் புதிய சாதனை படைப்பீர்கள். கழுத்தை நெரித்த கடன்களை கவனமாக அடைப்பீர்கள். பொய்யான கெட்ட வதந்திகளால் ஏற்பட்ட அவமானம் அகலும். மனதை வருத்திய கோர்ட், கேஸ் பிரச்சினை சுமூகமாகும்.பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கும்.சிலருக்கு அரசின் நலத்திட்டத்தில் வீடு, மனை கிடைக்கும். தாய்மாமன் உதவியால் தாய் வழிச் சொத்தில் நிலவிய குழப்பங்கள் சுமூகமாகும். தந்தையின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.ஓய்வு, நிம்மதியான தூக்கம், சந்தோஷம் என இந்த வாரத்தை மகிழ்ச்சியாக கடப்பீர்கள். பெண்களுக்கு மாமியார், மாமனாரின் ஒத்துழைப்பால் மன நிம்மதி உண்டாகும். திருக்கார்த்திகை நன்னாளில் விரதம் இருந்து சிவனுக்கு இளநீர் அபிஷேகம் செய்து வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    Next Story
    ×