என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது.
    • இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது.

    பார்வதி திருமணம் நடைபெறும் சமயத்தில் தென் கோடியிலுள்ள மக்கள் அனைவரும் திருமண வைபவத்தை காண வடகோடியை நோக்கி சென்றனர்.

    அந்த சமயம் தென்கோடி உயர்ந்தும் வடகோடி தாழ்ந்தும் இருக்க, சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி நீ தென்கோடியில் பொதிகை நோக்கி சென்றடைவாய் என்று பணித்தார்.


    அதற்கு அகஸ்தியர், எல்லோரும் உங்கள் திருமண வைபவத்தை காண நான் மட்டும் தங்கள் திருமணத்தை காண கொடுத்து வைக்காதவனாக உள்ளேன் என்று சொன்னார். அதற்கு இறைவன், உனக்கு அங்கே திருமண வைபவ காட்சியளிக்கிறேன் என்றார்.

    எல்லோரும் வடதிசை நோக்கி வரும்போது அவர்கள் அனைவரும் பலம் உடையவர், அதனால் தான் நீ தென்திசை சென்றால் சமமாகும் எனக் கூறினார்.

    அதன்பின் தென்திசையை நோக்கி வரும்போது, இடும்பாசுரன் (சூரபத்மன் முதலான அசுரர்களின் தலைவன்), அகஸ்தியரை எதிர்கொண்டு அவரை நமஸ்கரித்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான். அகஸ்தியரும் இடும்பனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.

    இடும்பாசுரன் தங்களுக்குண்டான பணிவிடை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது, அகஸ்தியர் அவசரமாக தென்திசை நோக்கி வந்ததால் எனது சிவபூஜையை சென்று எடுத்து வருவாயாக என்று பணித்தார்.


    இடும்பாசுரன் வடதிசை நோக்கி சென்று மலையில் சிவபூஜை எங்கு உள்ளது என்பதை அறியாது சிவகிரி மற்றும் சத்யகிரி ஆகிய 2 மலைகளையும் காவடியாக எடுத்துக் கொண்டு தென் திசையை நோக்கி வரும்போது வழியறியாது சென்னிமலை வந்தடைந்தான்.

    அப்போது சென்னிமலை துவாபரயுகத்தில் புஷ்பகிரியாக இருந்தது. இடும்பாசுரன் பொதிகைக்கு வழி அறியாது இருக்கும்போது, முருகப் பெருமான் ராஜகுமாரனாக காட்சி அளித்து பொதிகைக்கு செல்ல இடும்பனுக்கு வழி காட்டிய இடம்தான் புஷ்பகிரி (சென்னிமலை) ஆகும்.

    சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் தற்போது பழனியம்பதியாக உள்ளது.

    • முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார்.
    • முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.

    எல்லாம் வல்ல சென்னிமலை முருகப்பெருமானுடைய திருத்தலத்திலே தைப்பூச தேர் திருவிழா தொன்று தொட்டு நடைபெற்று வருகின்றது. குன்று இருக்கும் இடம் மெல்லாம் குமரன் இருப்பான் என்று கோழையற்றோர் வந்து வழிபடும் திருத்தலத்திலேயே நமது சென்னிமலை முருகன் திருத்தலம் மிகவும் தொன்மையானதும், பல சிறப்புகளை கொண்டது ஆகும்.


    நமது சென்னிமலை திருத்தலம் சிரகிரி என்ற பெயரோடு ஆதிகாலத்திலேயே விளங்கியதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த மலை 4 யுகத்திலும் இருந்ததாகவும் சொல்லப்பட்டிருக்கின்றது.

    அப்படியாக ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு தேவர்கள் இப்படி எண்ணற்றோர் வந்து இங்கே வழிபாடு நடத்தி இருக்கிறார்கள் என ஸ்தல புராணங்களிலே குறிப்பிடப்பட்டு இருக்கின்றது.

    இந்த கலியுகத்தில் தேவேந்திரனால் பூஜிக்கப்பட்டதாகவும். சிரகிரி என்ற பெயரில் இருந்து தற்போது சென்னிமலை என்று வணங்கப்படுகின்றது. இங்கு, சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

    வைகாசி விசாக விழா, ஆடி மாதம் பாலாபிஷேக விழா, ஐப்பசியில் கந்தசஷ்டி விழா அடுத்தது கார்த்திகை மாதத்தில் தீபம் வைக்க கூடிய ஒரு நிகழ்ச்சி, மார்கழி பூஜை விழா, தை மாதம் பூச நட்சத்திரம் பிரம்மோற்சவம், அது 15 நாட்களுக்கு நடைபெறுகிறது.



    பூச நட்சத்திரத்திலே மகர லக்கனத்தில் முருகப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி எல்லோருக்கும் 2 நாட்கள் அருளாசியை செய்வார். தைப்பூச விழா ரேவதி நட்சத்திரம் சப்தமி திதியில் கொடி ஏற்றம் நடைபெற்று அதற்கு பிறகு காலை, மாலை 2 நேரமும் பல்வேறு மண்டப கட்டளைகள் ஒவ்வொரு மண்டபத்திற்கும் சாமி எழுந்தருளி அந்தந்த மண்டபத்திலே பூஜைகள் எல்லாம் நடைபெற்று ஒவ்வொரு கிராமத்தைச் சார்ந்தவர்கள், ஒவ்வொருத்தரும் வந்து சாமியை அந்த மண்டபத்திற்கு அழைத்து செல்வார்கள்.

    அங்கு பூஜை ஒன்பது நாட்களும் மிகச் சிறப்பாக நடைபெறும். 9 நாட்களுக்கு பிறகு தேரோட்டம் நிறைவு பெற்று தேர் நிலை சேர்த்தல் அடுத்ததாக பரிவேட்டை என்று சொல்லக்கூடிய ஒரு நிகழ்ச்சி அடுத்து மார்க்கண்டே தீர்த்தம் என்று அடிவாரத்தில் இருக்கக்கூடிய தீர்த்தத்திலே முருகப்பெருமான் மார்க்கண்டே தீர்த்தத்தில் எழுந்தருளி தெப்போற்சவம் நடக்கும்.

    15-ம் நாளிலே தச்சாவரம் என்று சொல்லக்கூடிய மகா தரிசனம் அன்று காலையில் மகாபிஷேகம் நடைபெற்று பின்பு இரவு நான்கு ரத வீதிகளிலும் எழுந்தருளி மிகப் பெரிய தரிசன விழா மிகச்சிறப்பான முறையிலே நடக்கும்.

    சென்னிமலை தரிசனம் என்று சொன்னால்தான் எல்லோருக்கும் ஒரு பெரிய சிறப்பு. அந்த காலத்தில் இருந்தே மகாதரிசனத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர்.

    தைபூச விழா நாட்களில் பக்தர்கள் எல்லோரும் கிராமங்களில் இருந்தும் காவடி எடுத்து வந்து முருகப்பெருமானை வணங்கி செல்வர். இப்படி பல சிறப்புகளை பெற்றது சென்னிமலை முருகப்பெருமானுடைய ஸ்தலம்.


    சென்னிமலையில் கருவறையில் சுப்ரமணியரை சுற்றிலும் 8 கிரகங்கள் இருக்கின்றது செவ்வாய் நீங்களாக. இங்கு முருகப்பெருமான் நடுநாயகமாக செவ்வாய் அம்சமாக அருளாட்சி செய்கின்றார். இங்கு செவ்வாய்க்கிழமை வழிபாடு செய்வது மிக சிறப்பு.

    என்ன வியாதிகள் இருந்தாலும் இங்கு ரத்தம் சிந்தியாக்கப்பட்டு நோய்கள் சீரடையும், இங்கே வந்து செவ்வாய்கிழமை அங்காரகப் பெருமானை வழிபாடு செய்யும் பொழுது எண்ணற்ற சிறப்புகள் கிடைக்கும் என்று பெரிய சான்றோர்கள் எல்லாம் சொன்னது.

    செவ்வாய்க்கிழமை தோறும் வந்து முருகனை தரிசனம் செய்யலாம். இங்கே தேவியர் வள்ளி, தேவசேனா இருவரும், உண்ணும் நேரம், உறங்கும் நேரம் போக மத்த நேரங்களில் முருகப்பெருமானை எல்லா நேரமும் நினைச்சுட்டு இருந்தார்கள் என்று புராணங்கள் எல்லாம் சொல்லப்பட்டுள்ளது. முருகப்பெருமானை அடைய அமிர்த வள்ளி, சுந்தரவல்லி ஆக இருந்து இங்கே தவமிருந்ததாக சொல்லப்படுகின்றது.

    அப்பேர்பட்ட சிறப்பான திருத்தலத்தில் தை பூச நாளில் நான்கு ரத வீதிகளிலும் வலம் வரும் அதில் எண்ணற்ற அடியார்கள் எல்லோரும் காவடி எடுத்து விரதமிருந்து இங்கே வந்து முருகப்பெருமானுக்கு பிரார்த்தனையை செலுத்தி தரிசனம் பண்ணுவர். 

    • இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.
    • குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பல பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை இருக்கும்போது அரசாங்க பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மட்டும் ஏன் மும்மொழிக்கொள்கை மறுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டில் எத்தனை பள்ளிகளில் மும்மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களுக்கு சொல்லுங்கள்.

    உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் நடத்தும் பள்ளிகள், தனியார் பள்ளிகள், பிரபலங்கள் நடத்தும் தனியார் பள்ளிகள் எல்லாவற்றிலும் மும்மொழிக்கொள்கை இருக்கிறது. இந்தி இருக்கிறது. நான் இந்தி என்று சொல்லவில்லை. 3-வது ஒரு இந்திய மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்று தான் சொல்கிறோம். அதை 8 வயதிற்குள் கற்றுக்கொள்ள ஆரம்பித்தால் மொழியை அதிகம் கற்றுக்கொள்ளலாம்.

    மாறி வரும் உலகத்தில், சாவல் நிறைந்த உலகத்தில் இன்னொரு மொழி தெரிந்தால் என்ன? குழந்தைகள் படிக்கிறேன் என்று சொல்கிறார்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?

    படிப்பு என்றாலே உங்களுக்கு பிரச்சனை தான். தி.மு.க.விற்கும், திராவிட மாடலுக்கும் படிப்பு என்றாலே பிரச்சனை தான்.

    படிப்பில் நீங்கள் ஏன் பிரச்சனை செய்கிறீர்கள். குழந்தைகள் படிக்க விரும்புகிறார்கள், பெற்றோர் படிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.

    கேந்திரிய வித்யாலயாவில் இந்தி சொல்லிக்கொடுப்பத்தால் அங்கு சேர்க்கிறோம் என்று சொல்கின்ற பெற்றோர் இருக்கிறார்கள்.

    நாங்கள் இந்தியை திணிக்கவில்லை. இந்தியை திணிக்கிறோம் என்ற திணிப்பை நீங்கள் தான் கொடுக்கிறீர்கள்.

    இன்னொரு மொழியை அரசு பள்ளி மாணவர்கள் படிப்பதை இறுமாப்புடன் இவர்கள் மறுக்கிறார்கள்.

    சாமானிய மக்களை படிங்கள் என்று சொல்வது ஆணவமா? சாமானிய மக்களை நாங்கள் படிக்க விடமாட்டோம் என்று சொல்வது ஆணவமா?

    இந்த அரசாங்கம் தான் ஆணவத்தோடு செயல்படுகிறது. இதை பா.ஜ.க. கட்சி தெளிவாக எடுத்துச்சொல்வோம்.

    முதலமைச்சர் ஸ்டாலின் ஆக்டிங்கில் இருக்கிறாரா, ஷூட்டிங்கில் இருக்கிறாரா என்று தெரியவில்லை.

    ஆக்டிங், ஷூட்டிங் செய்தால் தான் மக்களை அணுக முடியும் என்ற நிலைப்பாட்டை அவர்கள் எடுத்து இருக்கிறார்கள்.

    பா.ஜ.க. 2026-ஐ நோக்கி பலமாக வெற்றி நடைபோடுகிறோம்.

    வாய்ப்புகளை அரசு பள்ளி மாணவர்களுக்கு கொடுங்கள். வேலைவாய்ப்பை மற்ற குழந்தைகளுக்கு, சாமானிய மக்களுக்கு ஏற்படுத்த ஒரு மொழியை கற்றுக்கொள்வதற்கு அவர்களுக்கு ஆற்றல் இருக்கிறது. கற்றுக்கொடுக்க கல்வித்துறை இருக்கிறது. உங்களுக்கு என்ன பிரச்சனை.

    மாணவர்களின் கல்வியை பாதிப்பது மத்திய அரசு கிடையாது, தர்மேந்திர பிரதான் கிடையாது.

    மாணவர்களின் கல்வியை பாதிப்பது அன்பில் மகேஷ், மு.க.ஸ்டாலின் என்று கூறினார்.

    • இன்று சுபமுகூர்த்த தினம்.
    • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-5 (திங்கட்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: பஞ்சமி மறுநாள் விடியற்காலை 4.06 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம்: சித்திரை (முழுவதும்)

    யோகம்: அமிர்த, சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

    இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருஇந்த ளூர் ஸ்ரீ பரிமள ரங்கநாதருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவதிருப்பதி சந்திர பகவானுக்குரிய நத்தம் ஸ்ரீ வரகுணமங்கை சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் கோவிலில் காலை திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பெருமை

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-செலவு

    கடகம்-வரவு

    சிம்மம்-நன்மை

    கன்னி-சுகம்

    துலாம்- நிறைவு

    விருச்சிகம்-வெற்றி

    தனுசு- ஆதரவு

    மகரம்-அமைதி

    கும்பம்-புகழ்

    மீனம்-ஊக்கம்

    • தியாகபிரம்மா ஆராதனை.
    • குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-3 (சனிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை நள்ளிரவு 12.01 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: உத்திரம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு அஸ்தம்

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    தியாகபிரம்மா ஆராதனை. குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை. ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் புறப்பாடு. திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவி லில் ஸ்ரீ வரதராஜ மூலவர் கோவில்களில் திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன அலங்கார சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பக்தி

    ரிஷபம்-லாபம்

    மிதுனம்-களிப்பு

    கடகம்-யோகம்

    சிம்மம்-ஆர்வம்

    கன்னி-சுகம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஆதரவு

    தனுசு- தாமதம்

    மகரம்-வரவு

    கும்பம்-உயர்வு

    மீனம்-பயணம்

    • ரூ.2.70 கோடிக்கு பஞ்சாமிர்தம் விற்பனை.
    • அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி.

    பழனி:

    பழனியில் பிரசித்தி பெற்ற தைப்பூச திருவிழா கடந்த 5-ந் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி, வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, யானை, தந்த சப்பரம், தோலுக்கிணியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம் மற்றும் வெள்ளி தேரோட்டமும், செவ்வாய்கிழமை மாலை தைப்பூச தேரோட்டமும் நடைபெற்றது. தேரோட்டம் நிறைவடைந்த நிலையிலும் பழனி கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் நகரத்தார் காவடி குழுவினர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று தங்கள் காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    நேற்று இரவு 9ம் நாள் நிகழ்ச்சியாக துறையூர் மண்டபத்தில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாராசாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

    10ம் நாள் நிகழ்ச்சியாக இன்று தெப்ப தேேராட்டத்துடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. பெரியநாயகி அம்மன் கோவில் அருகில் உள்ள தெப்பத்தில் இன்று இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்ப தேரில் வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமாரசாமி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார்.

    அதன் பின்பு இரவு கொடியிறக்கம் நடத்தப்பட்டு திருவிழா நிறைவு பெறுகிறது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 நாட்களில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வரை சாமி தரிசனம் செய்தனர். தேவஸ்தானம் சார்பில் விற்பனை செய்யப்பட்ட அபிஷேக பஞ்சாமிர்தத்தை அதிக அளவில் பக்தர்கள் வாங்கிச் சென்றனர்.

    3 நாட்களில் மட்டும் 4 லட்சத்தி 26 ஆயிராயிரத்தி 858 பஞ்சாமிர்த டப்பாக்கள் விற்பனையாகி உள்ளது. இதன் மூலம் ரூ.2 கோடியே 70 லட்சத்தி 13 ஆயிரத்தி 890 வருவாய் கிடைத்துள்ளது.

    தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனி நகரில் இலவச பஸ்கள் இயக்கப்பட்டன. பல்வேறு ஊர்களில் இருந்து பழனிக்கு சிறப்பு பஸ்களும், பழனியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விழாக்கால பஸ்களும் இயக்கப்பட்டன. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.40 லட்சம் வரை வருவாய் கிடைத்துள்ளது. 

    • கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடப்பது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த மாதம் 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் மற்றும் அம்மன் திருவீதி உலா நடந்தது.

    முக்கிய நிகழ்ச்சியான மயான கொள்ளை நிகழ்ச்சி கடந்த 11-ந் தேதி நள்ளிரவு ஆழியாற்றங்கரையில் நடந்தது. இதில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

    நேற்று சித்திரை தேர் வடம் பிடித்தல், அம்மன் திருவீதி உலா நடந்தது.

    பின்னர், 11 அடி அகலமும், 54 அடி நீளமும் கொண்ட குண்டம் மைதானம் தயார் செய்யப்பட்டது. இரவு 10 மணிக்கு அங்கு வாண வேடிக்கையுடன் 15 டன் விறகுகள் கொண்டு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பூக்குழியில் பல்வேறு வகையான மலர்களும் தூவப்பட்டன.

    குண்டம் நிகழ்ச்சி காரணமாக கோவில் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்டு, மின்னொளியில் ஜொலித்தது.

    சிகர நிகழ்ச்சியான குண்டம் திருவிழா இன்று நடந்தது. குண்டம் திருவிழாவையொட்டி இன்று அதிகாலையிலேயே லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டு இருந்தனர்.

    குண்டம் இறங்க காப்பு கட்டியிருந்த பக்தர்களும் குண்டம் இறங்குவதற்கு தயாராக இருந்தனர்.

    காலை 6 மணிக்கு தலைமை பூசாரி குண்டம் முன்பாக சிறப்பு பூஜைகளை நடத்தினார்.

    இதனைத் தொடர்ந்து அம்மன் அருளாளி குண்டத்தில் பூப்பந்தை முதலில் உருட்டி விட்டார். அதன் பிறகு தலைமை பூசாரி, அருளாளிகள், முறைதாரர்கள் குண்டம் இறங்கினர்.

    அவர்களை தொடர்ந்து காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் என ஒவ்வொருவராக மாசாணியம்மனை வழிபட்டபடியே குண்டம் இறங்கினர். ஆண் பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கினர்.

    ஆண் பக்தர்கள் குண்டம் இறங்கி முடிந்த பிறகு, பெண் பக்தர்கள் குண்டத்தில் பூ அள்ளிக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கென ஏராளமான பெண் பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பூ எடுத்து கொடுத்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.

    குண்டம் இறங்கும் பகுதியில் தீயணைப்பு வாகனமும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அரசு மருத்துவர்கள், நர்சுகள் அங்கு அவசர தேவைகளுக்காக பணியமர்த்தப்பட்டு இருந்தனர்.

    குண்டம் திருவிழாவை காண கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகள் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது. எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

    குண்டம் திருவிழாவை முன்னிட்டு பொள்ளாச்சி, கோவையில் இருந்து ஆனைமலைக்கு சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    மேலும் குண்டம் திருவிழா காரணமாக ஆனைமலையில் நேற்று மாலை முதலே போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

    திருவிழாவையொட்டி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நாளை காலை (சனிக்கிழமை) 7.30 மணிக்கு கொடி இறக்குதல், 10.30-க்கு மஞ்சள் நீராடுதல், இரவு 8 மணிக்கு மகா முனி பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மகா அபிஷேகம், அலங்கார பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.
    • கார்த்திகை சோமவாரம் விசேஷமானது.

    தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரக் கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொதுஆவுடையார் கோவில் உள்ளது. தவத்தில் சிறந்து விளங்கிய வான்கோபர் மற்றும் மகாகோபர் என்ற இரு முனிவர்களும், 'இறைவனைச் சென்றடைய சிறந்த வழி இல்லறமா? துறவறமா?' என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இறைவன் இத்தலத்தில் உள்ள வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளினார்.


    பின்னர் அந்த முனிவர்களிடம் 'இல்லறமோ, துறவறமோ எதுவாயினும் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றினால் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை' என பொதுவாகத் தீர்ப்பு கூறினார்.

    அதன்காரணமாகவே இத்தல இறைவன், 'பொது ஆவுடையார்' என்றும், மத்தியஸ்தம் செய்தவர் என்பதால் 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

    இக்கோவிலில் கார்த்திகை சோமவாரம் விசேஷமானது. அன்று இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன. மற்ற நாட்களில் நடை திறக்கப்படுவதில்லை.

    இறைவன் சிதம்பரத்தில் நள்ளிரவு பூஜை முடித்த பிறகு, தனது பரிவாரங்களுடன் இத்தலத்து வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி, அந்த மரத்திலேயே ஐக்கியமானார் என்கிறது தல வரலாறு. எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம்.

    இங்குள்ள தல மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது. பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.


    மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் சன்னிதியும், அருகில் திருக்குளமும் உள்ளன. அம்பாளுக்கென்று தனி சன்னிதி இல்லை. விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள புளிய மரத்தின் அடியில் அலங்கார உடையில் வான்கோபரும், துறவற உடையில் மகாகோபரும் வடக்கு நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    இந்த ஆலமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. எனவே பக்தர்களுக்கு இலையும், திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

    இக்கோவிலில் கடைசி சோமவாரத்தின் போது பட்டுக்கோட்டை மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.

    அன்றைய தினம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கம், வெள்ளி, பித்தளை ஆகியவற்றால் ஆன பொருட்கள், பணம், நெல், துவரை, உளுந்து, பயறு, எள் முதலிய நவதானியங்களையும், தேங்காய், மாங்காய், புளி, மிளகாய், காய் கறிகள் போன்ற பல்வேறு பொருட்களையும், ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளையும் காணிக்கையாகச் செலுத்தி வழிபட்டுச் செல்கின்றனர்.

    பட்டுக்கோட்டையில் இருந்து 12 கி.மீ. தூரத்தில், முத்துப்பேட்டை செல்லும் பேருந்து வழித்தடத்தில் இருக்கும், பரக் கலக்கோட்டையில் உள்ளது, இந்த பொதுஆவுடையார் திருக்கோவில்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆலய கருவறை, குகைக்குள் அமைந்துள்ளது.
    • ஆண்டுதோறும் 'பதுக்கம்மா' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுறது.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த வாராங்கல் நகரில் புகழ்பெற்றக் கோவிலாக விளங்குவது, வாராங்கல் ஸ்ரீ பத்மாட்சி மலைக்கோவில் ஆகும். அனைத்து மக்களும் வழிபடும் திருக்கோவில் இது.


    தல வரலாறு

    இக்கோவில் காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில் கி.பி. 12-ம் நூற்றாண்டில் எழுப்பப்பட்ட சமண சமய மலைக்கோவிலே, பத்மாட்சி திருக்கோவிலாகும். காக்கத்தியர்கள் சமண மதத்தில் இருந்தபோது, இக்கோவில் உருவாக்கப்பட்டது.

    இப்பகுதி முழுவதும் சமண மதத்தவர்கள் நிறைந்து வாழ்ந்து வந்தனர். இப்பகுதி 'பாசாதி' என்றே அழைக்கப்பட்டது. இக்கோவிலை 'பத்மாட்சி குட்டா' என்றும், 'அம்மா' என்றும், இப்பகுதிவாழ் மக்கள் அழைக்கின்றனர். இது பத்மாவதி தேவிக்கென அர்ப்பணிக்கப்பட்ட திருக்கோவிலாகும்.

    இதன்பிறகு காக்கத்திய மன்னர் இரண்டாம் பெத்தராஜு சைவ சமயத்தை தழுவியதால், பத்மாட்சி கோவிலாக மாற்றம் பெற்றது. அதுபோல மக்களும், சமண மதத்தின் கடுமையான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை. அதனால் மக்களும் சைவ சமயத்தை தழுவினர்.


    ஆலய அமைப்பு

    ஹனமகொண்டா மலை மீது சுமார் ஆயிரம் அடி உயரத்தில் இக்கோவில் எழிலாக காட்சி தருகிறது. மலை அடிவாரத்தில் அழகிய திருக்குளம் நீர் நிறைந்து காணப்படுகிறது. மலையேற எளிதான படிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

    இக்கோவிலின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைந்துள்ள தூண் கருங்கல்லால் ஆனது. 'அண்ணா கொண்டா தூண்' நாற்கர வடிவில் திகழ்கிறது. நான்கு பக்கத்திலும் சமண சிற்பங்கள் வடிக்கப்பட்டு உள்ளன.


    ஆலய கருவறை, குகைக்குள் அமைந்துள்ளது. அதே கருவறையில் பெரிய தீர்த்தங்கர பர்சவநாதர் திருவுருவம் உள்ளது. வலது புறம் யட்ச தரனேந்திரனும், வலதுபுறம் பத்மாவதியும் அருள்பாலிக்கின்றனர். பாறையின் புடைப்புச் சிற்பங்களாக இவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இவற்றின் திருமேனியில் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன. இது தவிர, கருவறைச் சுற்றில் சமண தீர்த்தங்கர் மற்றும் பிற சமண தெய்வங்களுக்கும் சிற்பங்கள் வடிக்கப்பட்டு, அவற்றின் மீதும் வண்ணங்கள் பூசப்பட்டு உள்ளன.

    வலம்வரும் குகைப்பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின், சிலா வடிவங்கள் காணப்படுகின்றன. மலை அடிவாரத்தில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்கள் இருக்கின்றன.


    இவ்வாலய மூலவரான அன்னை பத்மாட்சி காலையில் சிறுமி வடிவத்திலும், மதியம் இளம் பெண்ணாகவும், மாலையில் முதிய பெண் வடிவிலும் காட்சி தருகின்றார்.

    ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் கூடும் 'பதுக்கம்மா' விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த விழாவில் மலை அடிவாரத்தில் உள்ள குளத்தில் பெண் பக்தர்கள் ஏராளமான பூக்களைத் தூவி வணங்குவார்கள். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

    அமைவிடம்

    தெலுங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத் தலைநகரான வாராங்கல் நகரில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனமகொண்டா பகுதியில் அரணாகத் திகழும் மலைமீது இக்கோவில் அமைந்துள்ளது. ஐதராபாத் நகரில் இருந்து 141 கி.மீ. தொலைவில் உள்ளது, வாராங்கல்.

    • திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
    • திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-2 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: துவிதியை இரவு 10.21 மணி வரை. பிறகு திருதியை

    நட்சத்திரம்: பூரம் இரவு 11.41 மணி வரை. பிறகு உத்திரம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் மாலை 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சனம். மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர். படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீ பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. இருக்கண்குடி ஸ்ரீ மாரியம்மன் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆரோக்கியம்

    ரிஷபம்-சிறப்பு

    மிதுனம்-கண்ணியம்

    கடகம்-சுகம்

    சிம்மம்-செலவு

    கன்னி-நன்மை

    துலாம்- ஆசை

    விருச்சிகம்-ஊக்கம்

    தனுசு- பயிற்சி

    மகரம்-வெற்றி

    கும்பம்-நிம்மதி

    மீனம்-யோகம்

    • 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது.
    • 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பிரசித்தி பெற்றது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை பக்தர்களுக்கு காட்சியளிக்கும் அத்திவரதர் இங்குள்ள ஆனந்தசஸட குளத்தில் தான் உள்ளார். இந்த குளம் ஆண்டுக்கு நான்கு முறை மட்டுமே திறக்கப்படும்.

    இந்த முறை 3 நாட்கள் தெப்ப உற்சவத்திற்காக திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வரதராஜ பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் என மொத்தம் 3 நாட்கள் தெப்ப உற்சவ விழா விமரிசையாக நடைபெற உள்ளது. முதல் நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி மற்றும் தாயாருடன் வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    முதல் நாள் என்பதால் மூன்று சுற்றுகள் தெப்பம் சுற்றிவந்தது. 2-வது நாளான இன்று 5 சுற்றுகள், 3-வது நாளான நாளை 9 சுற்றுக்கள் குளத்தை தெப்பம் சுற்றி வரும்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்த கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து உள்ளனர். 

    • நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு நெய் தீபம் ஏற்றலாம்.
    • கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடுவது நல்லது.

    மனிதனாக பிறந்த எல்லோருக்கும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு மன சஞ்சலம் அல்லது மனதளவில் ஏதாவது ஒரு கஷ்டம் இருந்து கொண்டே இருக்கும். அந்த கஷ்டத்தை ஒரு சில வழிபாட்டு முறைகளின் மூலம் விரட்டி விடலாம்.

    1.வெள்ளிக்கிழமைகளில் நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட கணவன்- மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

    2. இரண்டு சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை காலை (10.30-12.00) ராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி, தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ஒற்றுமையாக, அன்னியோன்யமாக வாழ்வார்கள்.


    3. குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம்.

    4. கொடிய கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், மற்ற கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும் வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும்.

    5. ஸ்ரீநரசிம்மரின் எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல், திருஷ்டி திருமண தடை விலகி நன்மை பெறலாம்.


    6. ஆலய திரி சூலத்தில் குங்குமம் இட்டு, எலுமிச்சை பழம் குத்தி வழிபட, திருஷ்டி, செய்வினை தோஷம் நீங்கும்.

    7. வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கு எட்டாத உயரத்தில் வைத்து இருந்தால்,ஏதும் பூதகண சேஷ்டைகள் இருந்தால் நின்று விடும்.

    8. சக்கரத்தாழ்வார் சந்நிதியில் நெய்தீபம் ஏற்றி12 முறை, 48 நாட்கள் சுற்றி வழிபட தொழில், வழக்குசாதகமாதல், பில்லி, சூனியம்,ஏவல்நீங்கும். 21செவ்வாய்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றிவழிபட கொடுத்த கடன் வசூல் ஆகும்.

    9. கொடுத்த கடன் வசூல் ஆக பைரவர் சந்நிதியில் தொடர்ந்து 8 செவ்வாய் கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி சகஸ்ர நாம அர்ச்சனை செய்ய வேண்டும்.

    10. ஜாதகப்படிசனிபகவானின்பாதிப்புகுறைய,திங்கட்கிழமை களில் சிவபெருமானுக்கு,பால் அபிசேகம் செய்து, அர்ச்சனை செய்ய வேண்டும். சனிக் கிழமைகளில் சனி பகவான் சந்நிதியில்தேங்காய் உடைத்து, இரண்டு மூடிகளிலும்நல்லெண்ணெய் ஊற்றி, எள்ளு முடிச்சு தீபம் ஏற்றவும்.சிவன் கோவிலில் கால பைரவரையும்,விஷ்ணு கோவிலில் சக்கரத்தாழ்வாரை யும்வழிபட செய்வினை தோஷம் நெருங்காது.

    11. சிவன் கோவில் வன்னி மரம், வில்வ மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளைக் கூற,நல்ல பலன் கிடைக்கும். தீர்ப்புகள் சாதகம் ஆகும். இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ள தாக ஒரு ஐதீகம் உண்டு.

    12. பிரதோஷகாலத்தில், ரிஷபா ரூட மூர்த்தியாய்,மகேசனை தேவியுடன் வழிபடுவோர் 1000 அஸ்வமேத யாகங்களை செய்த பலனை பெறுவார்கள். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டப் படும் தீபாரதனையை பார்த்தால்எல்லா நோய்களும், வறுமையும் நீங்கும்.

    13. மாதாமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.

    14. கலியுகத்தில் காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4.30-6.00 மணிக்குள் துர்க்கை க்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனை கள் நிறைவேறும்.


    15. வெள்ளிக்கிழமை காலை 10.30-12.00 இராகு காலத்தில் துர்க்கைக்கு தாமரை தண்டு திரி போட்டு நெய்விளக்கு ஏற்றி வழிபட,தெய்வ குற்றம்,குடும்ப சாபம் நீங்கும். ஹஸ்த நட்சத்திரத்தன்று துர்க்கைக்குசிகப்பு பட்டு துணி சாற்றி, சிகப்பு தாமரையை பாதத்தில் வைத்து 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சாற்றி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை நெற்றியில் வைத்து வர உடனே திருமணம் நடைபெறும்.

    16. சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.

    17. இரட்டைப் பிள்ளையாருக்கு ரோகிணி நட்சத்திரத்தன்று சந்தனக் காப்பு செய்து வழிபட கடன் பிரச்சனை தீரும்.

    18. செவ்வாய்க்கு அதிபதியான முருகப்பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபடமூன்று மாதத்தில் வேலை கிடைக்கும்.

    19. விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரத்தன்று முருகனுக்கு வேலில் எலுமிச்சை சொருகி அர்ச்சனை செய்யவும்.

    20. ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி,வில்வம் உள்ள இடத்தில் இருந்து சுமார் 10கி.மி தூரத்திற்கு செய்வினை அணுகாது.

    21. பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

    22. புத்திர பாக்கியம் இல்லாதோர் 6 தேய்பிறை அஷ்டமிகளி ல் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.

    23. வியாழக்கிழமைகளில் ஒரு நேரம் விரதம் இருந்து மாலையில் ஆலய தட்சணா மூர்த்திக்கு தொடர்ந்து நெய்விளக்கு ஏற்றி வர ,விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

    24. பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சந்நிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபடசர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

    25. வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுத்தல், பூஜை நடக்காமலிருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவுதல், அனாதைப் பிணங்களின் தகனத்திற்கு உதவுதல்- ஆகிய மூன்றும் செய்தால் அசுவமேத யாகம் செய்ததற்குச் சமம்.

    26. தொழில் தடை, கணவன்- மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, -என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன் களைத் தரும்.

    27. எத்தகைய கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழைத் தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.

    ×