என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
    • நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.

    சிவனை தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.

    கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்து குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேகத்தினைப் பெறலாம்.


    சுத்தமான பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.

    சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.

    எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.

    சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.

    இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.

    10 ஆயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.

    தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.

    கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.


    மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.

    திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.

    பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபர சுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சொர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.

    அரிசி மாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.

    பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்க சொரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.


    தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்தில் உள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.

    சந்தனக்குழம்பினை பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.

    ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.


    ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

    தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொர்க்க போகம் கிடைக்கும்.

    மாதுளை- அரச பதவி கொடுக்கும்

    நெய்- மோட்சத்தைக் கொடுக்கும்

    அன்னம்- வயிற்று நோயை நீக்கும்

    நெல்லிக்கனி-பித்தம் நீக்கும்

    பழரசங்கள்- வறட்சியைப் போக்கும்

    நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.

    ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்தால் நன்மைகள் பல உண்டு.

    சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும். சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.

    வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.

    தேன், வியாதி களை நீக்கும்,

    கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.

    • புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும்.
    • சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    சிவராத்திரி அன்று கண் விழித்து விரதமிருந்து இறைவனை வணங்கும் போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

    விரதம் கடைப்பிடிப்போர் முதல் நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண் விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்ய வேண்டும்.

    அடுத்த நாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

    மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதம் இருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது.

    தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்த குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது.


    இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்கு செல்கிறோம்.

    சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம் உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதே இல்லை.

    சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது உணர்வுகள் வெண்ணைபோல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழி வகுக்கிறது.

    • அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.
    • இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகாசிவராத்திரி விழா வருகிற 26-ந்தேதி (புதன்கிழமை) இரவு 10 மணி முதல் மறுநாள் காலை வரை நடக்கிறது. இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு 4 கால பூஜைகள் நடைபெறுகின்றன.

    அதன்படி மீனாட்சி அம்மன் சன்னதியில் முதல் கால பூஜை 26-ந்தேதி இரவு 10 மணிக்கு தொடங்கி 10.40 மணி வரையிலும், 2-ம் கால பூஜை 11 மணிக்கு தொடங்கி 11.40 மணி வரையிலும், 3-ம் கால பூஜை 12 மணிக்கு தொடங்கி 12.40 மணி வரையிலும், 4-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கு தொடங்கி 1.40 மணி வரையிலும் நடைபெறும்.

    இதேபோல் சுவாமி சன்னதியில் முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2-ம் கால பூஜை இரவு 12 மணிக்கும், 3-ம் கால பூஜை நள்ளிரவு 1 மணிக்கும், 4-ம் கால பூஜை 2 மணிக்கும் நடைபெறும். அதை தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு அர்த்தஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடைபெற உள்ளன.

    இதேபோல் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த பழைய சொக்கநாதர் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில் உள்ளிட்ட உபகோவில்களிலும் இரவு முழுவதும் பூஜைகள் நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் அன்று இரவு முழுவதும் நடைபெறும் 4 கால பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழவகைகள், தேன், மஞ்சள் பொடி, எண்ணெய், நெய் மற்றும் இதர அபிஷேக பொருட்களை 26-ந்தேதி மாலைக்குள் மீனாட்சி கோவில் உள்துறை அலுவலகத்தில் பக்தர்கள் வழங்கலாம்.

    மேலும் மீனாட்சி அம்மன் கோவிலில் அரசு உத்தரவின்படி வடக்கு ஆடி வீதிகளில் 26-ந்தேதி மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை விடிய, விடிய ஆன்மிக இசை மற்றும் நடனம் நடைபெறுகிறது. சிவராத்திரியையொட்டி மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் இரவு முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    • சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-8 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி காலை 8.03 மணி வரை பிறகு அஷ்டமி

    நட்சத்திரம்: விசாகம் காலை 11.46 மணி வரை பிறகு அனுஷம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாள் திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை முருகப் பெருமான் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஆலங்குடி ஸ்ரீ குருபவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. சோழவந்தான் அருகல் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உறுதி

    ரிஷபம்-நன்மை

    மிதுனம்-நட்பு

    கடகம்-உதவி

    சிம்மம்-தனம்

    கன்னி-நிறைவு

    துலாம்- இன்பம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- சுகம்

    மகரம்-ஆரோக்கியம்

    கும்பம்-வெற்றி

    மீனம்-செலவு

    • இன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6-ம் கால யாக பூஜை நடைபெற்றது.
    • நாளை முதல் மண்டலாபிஷேகம் நடைபெறும்.

    ராம்ஜிநகர்:

    முருகப்பெருமானின் 7-ம் படை வீடு என்ற பெருமைக்குரியதும், அருணகிரிநாதருக்கு முருகன் அருளியது என்ற சிறப்புக்குரியதுமாக திகழ்கிறது வயலூர் சுப்பிர மணியசுவாமி கோவில்.

    பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக திருப்பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து கடந்த ஆண்டு ரூ.5 கோடியில் திருப்பணிகள் தொடங்கின. இந்த பணிகள் நிறை வடைந்ததை தொடர்ந்து இன்று (புதன்கிழமை) கும்பாபிஷேகம் கோலா கலமாக நடைபெற்றது. இதற்கானயாக பூஜைகள் கடந்த 14-ந்தேதி (வெள்ளி க்கிழமை) விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கின.

    தொடர்ந்து யஜமான சங்கல்பம், புண்யா ஹவாசனம், பஞ்சகவ்யம், தேவதா அனுக்ஞை மற்றும் மஹா கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், தன பூஜை, கஜ பூஜை, கோ பூஜை உள்ளிட்டவை நடை பெற்றன.

    மறுநாள் (சனிக்கிழமை) மிருத்ஸங்கிர ஹணம் பூஜை நடந்தது. 16-ந்தேதி மாலை முதற்கால பூஜை, இரவு பூர்ணாஹூதி, தீபாராதனை ஆகியவை நடந்தன. நேற்று முன்தினம் காலை 2-ம் கால யாக பூஜை, மாலை 3-ம் கால யாக பூஜை நடந்தன.

    நேற்று காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு 5-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு 6-ம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை 7.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது.

    இதை தொடர்ந்து காலை 9.15 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் கொண்டு சகல விமானங்கள். ராஜகோபுரங்கள், கும்பாபிஷேகமும், காலை 9.50 மணிக்குள் மூலாலய மஹா கும்பாபிஷேகமும் கோலாகலமாக நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க நடத்தினர்.


    அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, வயலூரா.. வயலூரா என விண்ணதிர கோஷம் எழுப்பினர். கும்பாபிஷேக விழாவில் பழனியாண்டி எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வாரியார் சுவாமிகளின் மாணவி தேசமங்கையர்கரசி கும்பாபிஷேக வர்ணனை ஆற்றினார். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பகல் 12.15 மணிக்கு மஹா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பாகம் பல்வேறு பக்தர்கள் சார்பாகவும் ஆங்காகாங்கே அன்னதானம் வழங்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் வயலூர் சாலை முழுவதும் கடும் நெருக்கடியாக காணப்பட்டது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம், இரவு 9 மணிக்கு சுவாமி திரு வீதி எழுந்தருளல் ஆகியவை நடக்கின்றன. நாளை முதல் மண்டலாபிஷேகம் தொடங்குகிறது.

    கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர் கல்யாணி, ஸ்ரீரங்கம் ஆர்டிஓ சீனிவாசன், நிர்வாக அதிகாரி அருண் பாண்டியன், அறநிலையத் துறை அலுவலர்கள், கோயில் அறங் காவலர் குழு, திருப்பணிகள் குழுவினர் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்கள் தரிசனம் செய்ய் வசதியாக தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வயலூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    • சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி.
    • சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறியுள்ளன.

    * சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

    * சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவும்.

    * 'சிவாயநம' என்று சிந்திப்போர்க்கு அபாயம் ஒரு போதும் இல்லை.

    * 'மகா' என்றால் பாவத்தில் இருந்து விடுபடுவது என்றும் பொருள் படும். சிவராத்திரி விரதம் நிச்சயம் பெரிய பாவங்களைப்போக்கும்.

    * ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுருட்டப்பள்ளியில் மட்டுமே சயன கோலத்தில் ஈசன் உள்ளார். சிவராத்திரி தினத்தன்று அங்கு ஈசனை வெள்ளி அங்கியில் தரிசனம் செய்யலாம்.

    * எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.


    * ஒரு வருடம் சிவராத்திரி விரதம் இருப்பது என்பது நூறு அசுவமேத யாகம் செய்த பலனும், பல தடவை கங்கா ஸ்நானம் செய்த பலனும் தரவல்லது.

    * கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தெட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    * கருட புராணம், கந்தபுராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களில் சிவராத்திரி மகிமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

    * கஸ்தூரி, கோரோசனை, குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் ஆகிய நறுமணப்பொருட்களை கலந்து தயாரிக்கும் சந்தனக்காப்பு அலங்காரம் தான் சிவபெருமானுக்கு மிகவும் பொருத்தமான வழிபாடாக கருதப்படுகிறது.

    * சனிபிரதோஷ தினத்தன்று வரும் சிவராத்திரிக்கு 'கவுரிசங்கரமண மகாசிவராத்திரி' என்று பெயர். அந்த சிவராத்திரியில் கணவன்- மனைவி இருவரும் சேர்ந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.

    * சிவபெருமானுக்கு சூரியன், சந்திரன், அக்னி ஆகியோர் 3 கண்களாக உள்ளனர். சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

    * சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ…. என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

    * சிவராத்திரி அன்று ஒவ்வொரு ஜாம பூஜையின்போது சிவபுராணத்தை வாசிப்பது மிகுந்த நன்மை தரும். சிவராத்திரி இரவில் திருமுறை ஓதுவது மிக சிறப்பானது.


    * சிவராத்திரி தினத்தன்று 1.ஸ்ரீபவாய நம, 2.ஸ்ரீசர்வாய நம, 3.ஸ்ரீபசுபதயே நம, 4.ஸ்ரீருத்ராய நம, 5. ஸ்ரீஉக்ராய நம, 6.ஸ்ரீமகாதேவாய நம, 7.ஸ்ரீபீமாய நம, 8.ஸ்ரீஈசாராய நம என்ற 8 பெயர்களை சிவராத்திரியன்று ஜெபிப்பது நல்லது.

    * சிவராத்திரி தினத்தன்று கோவிலுக்கு சென்று சிவதரிசனம் செய்வது கூடுதல் பலன்கனைத் தரும். சிவராத்திரி தினத்தன்று சிவபுராணம், தேவாரம் மற்றும் திருமுறைகள் படிப்பது மிகவும் நல்லது.

    * சிவராத்திரி தினத்தன்று நமது உடம்பில் உள்ள ஜீவ ஆத்மா எழும்பி பரமாத்மாவோடு இணைவதற்கு முயற்சி செய்யும். எனவே ஒவ்வொரு மாதம் சிவராத்திரி தினத்தன்றும் ஈசனை வழிபடுவது மிகுந்த புண்ணியத்தை தரும்.

    * சிவராத்திரி தினத்தன்று நமது முதுகுத் தண்டு நேராகவே இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் ஜீவ சக்தியை எழுப்ப முடியும். எனவே தான் சிவராத்திரி தினத்தன்று தரையில் முதுகு படும்படி படுக்கக் கூடாது என்ற எண்ணத்தில்தான் சிவராத்திரி கண்விழிக்கச் சொல்கிறார்கள்.

    * சிவராத்திரி தினத்தன்று மாலை சூரியன் மறைந்ததில் இருந்து மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை சிவ பூஜை செய்பவர்களுக்கு எல்லா பாக்கியங்களும் கிடைக்கும்.

    * சிவராத்திரி தினத்தன்று விடிய, விடிய கண் விழித்து இருக்க இயலாதவர்கள் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரையாவது கண் விழித்து தரிசனம் செய்வது நல்லது.

    * சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

    * சிவராத்திரி தினத்திற்கு மிகப்பெரிய துதிகள், புராண பாடல்கள் பாட வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. ஓம் நமசிவாய எனும் பஞ்சாட்சர மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருந்தால் போதுமானது.

    * சிவராத்திரி தினத்தின் சிறப்பையும் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் பத்துக்கும் மேற்பட்ட புராணங்கள் தெளிவாக கூறி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    * சிவராத்திரி நான்கு கால பூஜைகளில் விடியற்காலையில் நடைபெறும் நான்காம் கால பூஜையில் பங்கேற்று வழிபாடு செய்தால் எண்ணற்ற நல்ல பலன்களை பெற முடியும் புராதன நுல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    * சிவராத்திரி பூஜையை வீட்டிலும் செய்யலாம். சிவபெருமான் படத்துக்கு பிச்சி பூ, செண்பக பூ, தாமரை பூ தூவி வழிபடலாம். வில்வம் தவறாமல் சூட்ட வேண்டும். மாதுளை பழத்தை நெய்வேத்தியமாக படைக்கலாம். இப்படி வழிபட்டால் அசுவதமேத யாகம் செய்த புண்ணியம் கிடைக்கும்.


    * சிவராத்திரி விரதம் இருந்தால் விஷ்ணு சக்ராதயுத்தத்துடன் லட்சுமியையும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.

    * சிவராத்திரி விரதம் இருந்து வழிபட்டால் துளிஅளவு அன்பு உள்ளம் இல்லாதவர்களுக்கு கூட ஈசனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

    * சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மறுநாள் காலையில் அவசியம் அன்னதானம் செய்ய வேண்டும். அதுவும் சூரியன் உதித்த 2 1/2 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும் என்பது ஐதீகமாகும்.

    * சிவராத்திரி விரதம் மன அமைதியைத் தரும். சிவராத்திரியன்று 4 கால பூஜைக்கு தேவையான பொருட்களை சிவாலயங்களுக்கு பக்தர்கள் வாங்கிக் கொடுக்கலாம்.

    * சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

    * சிவராத்திரியன்று இரண்டாம் கால பூஜை நேரத்தில் (இரவு 11 மணி முதல் 12.30 மணி வரை) கிரிவலம் வந்தால் மனதில் நினைத்த காரியம் வெகு விரைவில் முடியும். பிறவி இல்லா பேரின்பம் கிடைக்கும்.

    * சிவராத்திரியன்று கலச பூஜையுடன் லிங்கமும் வைத்து வழிபடுவது கூடுதல் பலன்களைத் தரும்.

    * சிவராத்திரியன்று திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

    * சிவனை அதிகாலையில் வணங்கினால் நோய்கள் தீரும். பகலில் வணங்கினால் விருப்பங்கள் நிறைவேறும். இரவில் வணங்கினால் மோட்சம் கிடைக்கும். மூன்று வேளையும் வணங்கினால் யாகங்கள் செய்வதால் உண்டாகும் பலன் கிடைக்கும்.

    * சிவாலயங்களில் நந்தியை வழிபடும் போது தொடாமல் குனிந்து வணங்க வேண்டும்.

    * சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

    * தர்ப்பையில் லிங்கம் செய்து வழிபட்டால், அது சிவபூஜையின் ஆயிரம் மடங்கு பலனைத்தரும்.

    * திங்கட்கிழமை வரும் சிவராத்திரிக்கு யோக சிவராத்திரி என்று பெயர்.


    * திருவதிகை தலத்தில் உள்ள வீராட்டானேஸ்வரரை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால் ஆணவம், கர்மம், மாயை ஆகிய மூன்றும் நீங்கும்.

    * திருவைகாவூர் ஈசனை சிவராத்திரி தினத்தன்று வழிபட்டால், மரண பயம் நீங்கும்.

    * பண்டரிபுரத்தில் உள்ள பாண்டு ரங்கன் 'சங்கர – நாராயண' வடிவம் என்பார்கள். பாண்டுரங்கன் தலையில் கிரீடத்துக்கு பதில் 'பாண லிங்கம்' இடம் பெற்றுள்ளது. சிவராத்திரி தினத்தன்று பாண்டுரங்கனுக்கு நிவேதனம் செய்வதில்லை. அவரும் அன்று சிவராத்திரி விரதம் இருப்பதாக சொல்கிறார்கள்.

    * பொதுவாக பகல் பொழுதை சிவனுக்கும், இரவு பொழுதை அம்பிகைக்கும் உரியதாக சொல்வார்கள். ஆனால் இரவு முழுவதும் அம்பிகை விழித்திருந்து பூஜை செய்து அந்த இரவை சிவனுக்கு அர்ப்பணித்ததால் அது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    * மகா சிவராத்திரி தினத்தன்று அபிஷேகத்துக்கு உரிய பொருட்களை வாங்கி ஆலயத்துக்கு கொடுப்பவர்கள் பரமானந்த நிலையை அடைவார்கள் என்பது ஐதீகம்.

    * மகாசிவராத்திரி தினத்தன்று திருவண்ணாமலையில் லட்ச தீபம் ஏற்றப்படும். அதை காண்பது சிறப்பானது.

    * யார் ஒருவர் சிவராத்திரி விரதத்தை மனப்பூர்வமாக கடைபிடிக்கிறார்களோ அவர்களது ஆயுள் நீடிக்கும். பிறவிப் பயனை மிக எளிதாக அடையலாம்.

    * வில்வத்தில் லட்சுமி இருப்பது போல தாமரை மலரில் சிவபெருமான் வீற்றிருக்கிறார்.

    • பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.
    • மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரி திருவிழா மற்றும் ஆடித்திருக்கல்யாண திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான மாசி மகா சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை 10.45 மணி அளவில் சுவாமி சன்னதி எதிரே நந்தி மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. கொடிமர மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாளுக்கும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. விழாவில் 2-ம் நாளான இன்று(புதன்கிழமை) காலை சுவாமி-அம்பாள் தங்க கேடயத்திலும், இரவில் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் தங்க காமதேனு வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    3-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு சுவாமி-அம்பாள் தங்க கேடயத்தில் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து காலை 6 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி கிளி வாகனத்திலும் கெந்த மாதன பர்வதம் (ராமர் பாதம்) மண்டகப்படிக்கு செல்கிறார்கள். அங்கு பல்வேறு பூஜைகள் நடைபெறுகின்றன.

    இதை முன்னிட்டு, கோவில் நடையானது நாளை அதிகாலை 3.30 மணிக்கு திறக்கப்பட்டு 4.30 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து, மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் காலை 6 மணிக்கு மேல் கோவில் நடையானது சாத்தப்பட்டு இரவு வரையிலும் கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகளில் நீராடவும் சாமி தரிசனம் செய்யவும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

    திருவிழாவின், 9-ம் நாளான வருகிற 26-ந்தேதி சிவராத்திரி அன்று சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

    10-ம் நாளான வருகிற 27-ந்தேதி அன்று சாமி- அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 1-ந் தேதி அன்று சண்டிகேசுவரர் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை.
    • திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-7 (புதன்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சப்தமி (முழுவதும்)

    நட்சத்திரம்: சுவாதி காலை 9.27 மணி வரை பிறகு விசாகம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமநாதபுரம் செட்டித் தெரு ஸ்ரீ முத்தாலம்மன் பவனி வரும் காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும் அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் உலா. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் தெப்ப உற்சவம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி புளியங்குடி மூலவர் ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர், வேதாரண்யம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் அபிஷேகம். மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-நிறைவு

    மிதுனம்-தனம்

    கடகம்-பயணம்

    சிம்மம்-போட்டி

    கன்னி-சிறப்பு

    துலாம்- பெருமை

    விருச்சிகம்-செலவு

    தனுசு- சுபம்

    மகரம்-நட்பு

    கும்பம்-உண்மை

    மீனம்-ஆதரவு

    • அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும்.
    • செம்புலிங்க அய்யனார் சுயம்புவாக தோன்றியவர்.

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் இயற்கை எழில் கொஞ்சும் காடுகள் சூழ்ந்த இடத்தில் செம்புலிங்க அய்யனார் கோவில் அமைந்துள்ளது. பல லட்சம் மக்களுக்கு குலதெய்வமாகவும், இஷ்ட தெய்வமாகவும் விளங்குபவர், இங்கு அருள்பாலிக்கும் செம்புலிங்க அய்யனார்.

    இவர் சுயம்புவாக தோன்றியவர். சிற்பிகளால் செதுக்கப்படாமல், இறைவனின் பேரருளால், ஒரு கல்லில் தானாகவே தோன்றும் தெய்வ உருவத்தை 'சுயம்பு' என்று போற்றி வணங்குவார்கள்.


    இவ்வாலயத்தில் மூலவராக அருளும் பூரணி - புஷ்கலாம்பாள் சமேத செம்புலிங்க அய்யனார் கிழக்கு திசை நோக்கி காட்சி தருகிறார். முதனை கிராமத்து மக்களின் வழிபாட்டு தெய்வமாக விளங்கும் இவர் வேட்டைக்குச் செல்லும்போதும், திருவிழா காலங்களில் நடைபெறும் வீதி உலா நிகழ்ச்சியின் போதும், ஒவ்வொரு பக்தர்களின் இல்லங்களையும் தேடி வந்து அருள்பாலிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    இந்த வீதி உலாவின்போது செம்புலிங்க அய்யனார், யானை மீது ஏறி மேள - தாளம் முழங்க, அரோகரா கோஷங்களுடன் சல்லடம் கட்டி, வில்-அம்பு, கேடயம், சக்கரம் போன்ற ஆயுதங்களுடன் தீவட்டி சுடர் தகதகப்பில் வலம் வருவார்.

    இந்த கோவிலின் பின்புறம் வடக்கு திசை நோக்கி செல்லியம்மன் சன்னிதி தனியாக அமைந்துள்ளது. குழந்தை இல்லாத தம்பதிகள் இங்கே மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்வதுடன், தொட்டில் கட்டி வணங்கினால், செல்லியம்மன் மழலை செல்வத்தை வழங்கி குறையை தீர்த்து வைப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


    சபரிமலை தர்ம சாஸ்தாவிற்கு கருப்பு சாமியும், கருப்பண்ணசாமியும் காவல் தெய்வங்களாக விளங்குவது போல, செம்புலிங்க அய்யனாருக்கு உத்தண்டி வீரன், அகோர வீரபத்திரர், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் ஆகிய சாமிகள் காவல் தெய்வங்களாக விளங்கி அருள்பாலிக்கின்றனர்.

    செம்புலிங்க அய்யனாருக்கு பிரதான காவல் வீரனாக விளங்கும் உத்தண்டி வீரனுக்கு கிழக்கு திசை நோக்கி தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. தெற்கு திசையில் உள்ள வாசல் வழியாக சென்று தான் உள்ளே இருக்கும் உத்தண்டி வீரன், கொப்பாட்டி அம்மனை வணங்க முடியும்.

    துரைராஜ கம்பீர உத்தண்டி மகா வீரரான இவர், சிவப்பு நிற குதிரை மீது அமர்ந்து வில்-அம்பு, கேடயம், வேல் போன்ற 18 ஆயுதங்கள் தாங்கி, முறுக்கிய மீசையுடன் பட்டாடை அணிந்து பாதத்தில் சிலம்பு பூட்டி கிடுகிடு தப்பட்டை மத்தள வாத்தியங்கள், வீணை இசை முழங்க அய்யனாருக்கு முன்பாக, காவலாக பவனி வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர். இவரை வணங்குவதால் எதிரிகளால் சூழப்படும் தடைகள் அகலும். வேண்டும் வரங்கள் வேண்டிய உடனேயே கிடைக்கும். மனதிற்கு தைரியம் அதிகரிக்கும்.


    அறிவாற்றல் தரும் அகோர வீரபத்திரர்:

    மற்றொரு காவல் தெய்வமான அகோர வீரபத்திரர் தெற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவரை வணங்குவதால் ஞானம் கிடைக்கும். அறிவாற்றல் பெருகும். தடைகள் அகலும். தோஷங்கள் நீங்கும்.

    இதேபோல கருப்பண்ணசாமி கருப்பழகியுடன் மேற்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். இவர் மாந்திரீகத்தால் ஏற்படும் தீமைகளை சரி செய்து, தன்னை வணங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறார்.


    பொம்மி சமேதரான மதுரை வீரன், புலி வாகனத்தில் கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் காட்சி தருகிறார். முப்பூசை படையின் போது பலி கொடுப்பதற்கான உத்தரவை இவரே வழங்குவதாக கூறப்படுகிறது.

    தமக்கு வீரன், கிழக்கு திசை நோக்கி தனி மண்டபத்தில் தமக்கையை கையில் வைத்து காட்சி தருகிறார். இவர் செம்புலிங்க அய்யனார் பவனி வரும்போதும், வேட்டைக்கு செல்லும்போதும் கிடுகிடுதப் பட்டை முழங்கி முன்னே செல்வார்.

    இத்தகைய சிறப்புமிக்க இந்த செம்புலிங்க அய்யனார் சுவாமிக்கு தைப்பூசத்தன்று சித்தர் ஏரியில் வேல் மூழ்குதல் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு திரண்டு வந்து வேல் மூழ்குதல் காட்சியை கண்டுகளிப்பார்கள்.

    அன்றைய தினம் இந்தக் காட்சியை காண வரும் பக்தர்கள் வைத்த கோரிக்கையை செம்புலிங்க அய்யனார் உடனடியாக நிறைவேற்றுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    முள் செடிகள் வளராது:

    செம்புலிங்க அய்யனார் அருள்பாலிக்கும் இடமானது சிறிய வனப்பகுதி ஆகும். இந்த காட்டில் அரிய செடி-கொடி, பல்வேறு மூலிகைகள் நிறைந்துள்ளன. இந்தப்பகுதியை ஆண்ட மகாராஜாவும், மகாராணியும் காட்டின் உள்ளே சென்று செம்புலிங்க அய்யனாரை வழிபட வரும்போது, மகாராணியின் புடவை அப்பகுதியில் இருந்த முள் செடியில் பட்டு கிழிந்துள்ளது.

    இதனால் மனமுடைந்த மகாராணி இந்த காட்டில் முள் செடிகள் இருக்கக்கூடாது என்று சாபமிட்டார். அன்று முதல் இன்று வரை இந்த காட்டின் உள்ளே ஒரு முட்செடி கூட வளரவில்லை என்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    அமைவிடம்

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள முதனை கிராமத்தில் சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப்படும் சித்தர் ஏரியின் வலதுபுறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    • நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.
    • நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும்.

    கோவில் தோற்றம்

    நம் நாட்டின் மீது பல்வேறு படையெடுப்புகள் நடைபெற்றிருக்கின்றன. அந்த படையெடுப்புகளின் போதெல்லாம், கோவில்கள் கொள்ளையடிக்கப்பட்டு, சிதைக்கப்பட்டுள்ளன. அதற்குக் காரணம், நம் முன்னோர்கள் பொன் - பொருள்களை கோவில்களில் பாதுகாப்பாக வைத்திருந்ததும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.


    அப்படி ஒரு கோவிலை சிலர் சிதைக்க முற்பட்டபோது, மக்களின் பெரு முயற்சியால் அந்த ஆலயம் காப்பாற்றப்பட்டு, வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. அதுபற்றி இங்கே பார்க்கலாம்.

    கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, ஆற்காடு நவாப் ஆட்சி காலத்தில், 'முத்துகிருஷ்ணாபுரி' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திப்பு சுல்தான் ஆட்சி காலத்தில் இவ்வூர் வணிக இடமாகக் கருதப்பட்டது.

    கோவில்கள் மிக அதிகம். அதில் பல கோவில்கள் மிகச் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான், பரங்கிப்பேட்டையில் உள்ள விசாலாட்சி உடனாய காசி விஸ்வநாதர் கோவில்.

    இவ்வாலயம் யாரால் கட்டப்பட்டது என்பதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகள் இருக்கும் என்று அனுமானிக்கப்படுகிறது.

    இவ்வாலயம் திப்புசுல்தான் காலத்தில் இவ்வூரில் உள்ள பாப்பான்கோடி தெருவில் சிறு ஆலயமாக அமையப்பெற்று இருந்தது. சில காரணங்களால் அந்த ஆலயத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த, மன்னன் உத்தரவிட்டான். மன்னனின் உத்தரவுப்படி காவலர்கள், அந்த ஆலயத்தை அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது அப்பகுதி மக்கள், எதிர்ப்பு தெரிவித்து "எங்கள் உயிரே போனாலும் இவ்வாலயத்தை நாங்கள் அப்புறப்படுத்த விடமாட்டோம்" என்று போராடினர். இருப்பினும் ஆலயத்தை அகற்றுவதற்கான நெருக்கடி அதிகரித்ததால், ஆலயம் அதே இடத்தில் இருப்பது பாதுகாப்பு இல்லை என்று கருதிய ஊர் மக்கள், அதே ஊரில் உள்ள வண்ணாரபாளையம் என்ற இடத்தை கோவில் அமைக்க தேர்வு செய்தனர்.


    அங்கு முதலில் ஒரு கீற்றுக் கொட்டகை அமைத்து, காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சியின் திருவுருவங்களை வைத்து வழிபடத் தொடங்கினர். பின்னாளில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆலயம் கற்கோவிலாக கட்டப்பட்டதாக தல வரலாறு சொல்கிறது.

    கோவிலின் முன்னால் மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் சுதைச் சிற்பங்களாக காட்சிதர இருபுறமும் நந்திகள் அமர்ந்திருக்க வணங்கிவிட்டு உள்ளே வந்தால், கொடிமரம், நந்தி, பலிபீடம் ஆகியவை உள்ளன. மகா மண்டபத்தின் இடது பக்கம் விநாயகர், வலது பக்கம் சுப்பிரமணியர் அருள்கின்றனர்.

    கோவிலில் தெற்கு முகம் நோக்கி நான்கு திருக்கரங்களோடு விசாலாட்சி அம்மன் தனிச் சன்னதியில் காட்சியளிக்கிறார். அர்த்த மண்டபத்தின் உள்ளே சூரியன் -சந்திரன் இருவரும் காசி விஸ்வநாதரை வணங்கியபடி எழுந்தருள, கருவறையில் காசி விஸ்வநாதர் கிழக்கு திசை நோக்கி வட்ட பீடத்தில் பாண லிங்கமாய் அற்புதமாய் காட்சி தருகிறார்.

    பீடத்தின் அடியில் மூல எந்திரம் அமைப்பது வழக்கம். ஆனால் இங்கு நவ சக்திகள் அடங்கிய ஒன்பது எந்திரங்கள் அமைத்து அதன் மீது பீடம் அமைந்துள்ளது.

    கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா உள்ளனர். தவிர பிரகாரத்தில் சித்தி கணபதி, வள்ளி - தெய்வானை உடனாய சுப்பிரமணியர், ஆறு முகங்களுடன் அருள்கிறார். மேலும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், அஷ்டபுஜ துர்க்கை, பைரவர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராஜர், பஞ்சமூர்த்தி என அனைத்து தெய்வங்களுக்கும் தனித்தனி சன்னிதி அமைந்துள்ளது.

    இவ்வாலயத்தில் 21 வெள்ளிக்கிழமைகள் தொடர்ச்சியாக காசி விஸ்வநாதரையும், விசாலாட்சி அம்மனையும் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப்பெறும். குழந்தை வரம் கேட்பவர்கள், இறைவனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து வழிபடுகிறார்கள்.

    குழந்தை பாக்கியம் கிடைத்ததும் சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் அரளிப்பூ மாலை சூட்டி இறைவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும்.

    அமைவிடம்

    கடலூர் - சிதம்பரம் இரு மார்க்கத்தில் இருந்தும் பரங்கிப்பேட்டைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. கடலூரில் இருந்து சுமார் 33 கிலோமீட்டர் தொலைவிலும், சிதம்பரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

    • 21-ந்தேதி திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.
    • 24-ந்தேதி சர்வ ஏகாதசி.

    13-ந்தேதி (செவ்வாய்)

    * கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.

    * சுவாமிமலை முருகப்பெருமானுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    19-ந்தேதி (புதன்)

    * ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்பாள் வெள்ளி காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.

    * ராமநாதபுரம் செட்டிதெரு முத்தாலம்மன் பவனி வரும் காட்சி.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.

    * சமநோக்கு நான்.

    20-ந்தேதி (வியாழன்)

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்.

    * ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி பூத வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    21-ந்தேதி (வெள்ளி)

    * திருத்தணி முருகன் கிளி வாகன சேவை.

    * சங்கரன்கோவில் கோமதியம் மன் தங்கப் பாவாடை

    * சமநோக்கு நாள்.

    22-ந்தேதி (சனி)

    * ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் வெள்ளி யானை வாகனத்தில் பவனி.

    * வேதாரண்யம் சிவபெருமான் விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.

    * சமநோக்கு நாள்.

    23-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    24-ந்தேதி (திங்கள்)

    * சர்வ ஏகாதசி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.

    * ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    • கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா.
    • முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு மாசி-6 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி நாளை காலை 6.13 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: சித்திரை காலை 6.57 மணி வரை பிறகு சுவாதி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். கோவை ஸ்ரீ கோனியம்மன் பூச்சாற்று விழா. ராமநாதபுரம் செட்டித்தெரு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவம் ஆரம்பம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ பெரியாழ்வார் புறப்பாடு. ராமேஸ்வரம் ஸ்ரீ ராமநாதர் உற்சவம் ஆரம்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோ வில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. திருநறை யூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. திருவேல்வேலி சமீபம் 3-ம் நவ திருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சன அலங்கார சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-புகழ்

    ரிஷபம்-சுபம்

    மிதுனம்-ஜெயம்

    கடகம்-நன்மை

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-ஆக்கம்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- நிறைவு

    மகரம்-போட்டி

    கும்பம்-நற்செய்தி

    மீனம்-நலம்

    ×