மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சி பூஜை

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
மலுமிச்சம்பட்டி நாகசக்தி தியான பீடத்தில் ராகு-கேது பெயர்ச்சி பூஜை
Published on

குனியமுத்தூர்:

கோவை மலுமிச்சம்பட்டி நாகசக்தி அம்மன் தியான பீடத்தில் ராகு கேது பெயர்ச்சி சிறப்பு பூஜை நடைபெற்றது.மேலும் ராகு-கேது பகவானுக்கு 1008 மலர் அர்ச்சனை, சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ராகு-கேது பகவானை வழிபட்டனர்.

நிகழ்ச்சியில் நிலவேம்பு சித்தர் ஸ்ரீலஸ்ரீ பாபுஜி சுவாமிகள் கலந்துகொண்டு ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் குறித்து பேசியதாவது:-

ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைவதால் உலகின் பல்வேறு இடங்களில் பொருளாதார ரீதியாகவும், தொழில் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.

ராகு பகவான் மீனராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகி உள்ளதால் நீர் சம்பந்தமான ஆபத்து, புயல், பெருமழை வெள்ளம் போன்றவை இந்தாண்டு ஏற்படும். இந்தியா உலக அரங்கில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தமிழக மாணவர்கள் உலகளவில் சிறப்பு பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com