என் மலர்
வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 23 மே 2025
- ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
- திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு வைகாசி-9 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : ஏகாதசி மாலை 6.44 மணி வரை. பிறகு துவாதசி.
நட்சத்திரம் : உத்திரட்டாதி நண்பகல் 12.25 மணி வரை. பிறகு ரேவதி.
யோகம் : சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருவிடைமதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.
ஸ்ரீபெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு, ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. பழனி ஆண்டவர் பவனி வரும் காட்சி. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சனம். திருமாலிருஞ்சோலை, ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-லாபம்
மிதுனம்-உண்மை
கடகம்-வெற்றி
சிம்மம்-தாமதம்
கன்னி-வெற்றி
துலாம்- தெளிவு
விருச்சிகம்-பக்தி
தனுசு- நற்செயல்
மகரம்-மேன்மை
கும்பம்-அமைதி
மீனம்-மகிழ்ச்சி






