search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balamurugan Temple"

    • திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது.
    • ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    புதுச்சேரி:

    திருச்சிற்றம்பலம் ஊராட்சிக்குட்பட்ட நாவற்குளத்தில் பிரசித்தி பெற்ற பாலமுருகன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரப் பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    ஏப்ரல் 5-ந் தேதி நடை பெறவுள்ள பங்குனி உத்திர திருவிழாவையொட்டி நாவற்குளம் பாலமுருகன் கோவிலில் கிராம பொதுக்கூட்டம் நடந்தது.

    ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடந்த கிராம பொதுக்கூட்டத்தில் பாலமுருகன் கோவில் புதிய நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

    கவுரவத் தலைவர் ரத்தினம், தலைவர் சொக்கலிங்கம், துணைத் தலைவர் பாண்டியன், பொருளாளர் கலியன், துணைப் பொருளாளர் பாஸ்கரன், செயலாளர்கள் முருகன், சீனிவாசன், பழனி, குமார், வினோத், துணைச் செயலாளர் பாபு,

    கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஜானகி ராமன், நாராயணன், ராஜா, மணி, கோபால், நவநீத், சாரதி, சுந்தர், சிவப்பிர காசம், ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகி களின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். புதிய கோவில் நிர்வாகிகளுக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.

    • விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.
    • விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.

    குன்னத்தூர்:

    குன்னத்தூர் விநாயகர் கடை வீதி பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று மாலை மகா கணபதி வழிபாடு, மகா கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், தன பூஜை, கோ பூஜை, பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இன்று காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, பூஜைகள், நாடி சந்தானம், மகா பூர்ணாகுதி, தீபாராதனை, கலசங்கள் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 8.15 மணிக்கு மேல் கோபுர விமான கலசம் கும்பாபிஷேகம் தொடர்ந்து விநாயகர், மூலவர், பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும், நவகிரகம் , இடும்பன் ஆகிய தெய்வங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    தொடர்ந்து தசதானம், தசா தரிசனம், மகா அபிஷேகம், பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் பரம்பரை தர்ம கர்த்தா செய்திருந்தனர்.

    • கீழக்கரை வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தட்டான் தோப்பு தெருவில் உள்ள வழிகாட்டி பாலமுருகன் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா 10 நாட்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    மூலவர் வழிகாட்டி பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. இதைத் தொடர்ந்து அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் பரணி தீபத்தில் இருந்து தீபம் எடுக்கப்பட்டு கோவில் மேல் தளத்தில் உள்ள 40 அடி உயர பீடத்தில் எண்ணெய் கொப்பரையில் 50 கிலோ நெய் மற்றும் திரி வைத்து கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    பாலமுருகன் 3 முறை கோவிலின் வெளிப்பி ரகார வீதியில் வலம் வந்தார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான இந்து நாடார் உறவின் முறை, இந்து நாடார் இளைஞர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

    ×