என் மலர்
ஆன்மிகம்
- தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும்.
- 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சென்னை:
கிறிஸ்வர்களின் தவக்காலம் சாம்பல் புதன் கிழமையில் இருந்து தொடங்கி இயேசு உயிர்த்தெழுந்த பண்டிகையான ஈஸ்டர் வரை கடை பிடிக்கப்படுகிறது. இந்த காலத்தை இலையுதிர் காலம் என்றும் கூறுவது உண்டு.
பாவத்தில் இருந்து விடுதலைப் பெற்று மீண்டும் நம்மை சீரமைத்து கொள்ளக் கூடிய காலமாக இந்த தவக்காலம் ஒவ்வொரு கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் முக்கியமாக கருதப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) சாம்பல் புதனை யொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. நாளையில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்படும் புனித வெள்ளி வரை கிறிஸ்தவர்கள் உபவாசம் இருந்து எளிய முறையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்பார்கள்.
கத்தோலிக்க திருச்சபையில் நாளை நடைபெறும் சாம்பல் புதன் ஆராதனையில் சிலுவையை எரித்த சாம்பலை பூசி வழிபாடுவார்கள். இந்த சிறப்பு ஆராதனை நாளை காலையில் நடைபெறும்.
தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) பெந்தேகோஸ்து, இ.சி.ஐ., லுத்தரன், மெத்தடிஸ்ட் உள்ளிட்ட பிற திருச்சபைகளில் சாம்பல் புதன் ஆராதனை நாளை மாலை நடைபெறும்.
தவக்காலத்தில் பெண்கள் தலையில் பூ வைப்பதை தவிர்ப்பார்கள். அசைவ உணவு உள்ளிட்ட ஆடம்பர செலவினங்களை தவிர்த்து அவற்றை ஏழைகளுக்கு உதவிடும் வகையில் காணிக்கையாக ஆலயத்திற்கு செலுத்துவார்கள்.
தவக்கலத்தில் வருகின்ற 7 வெள்ளிக்கிழமைகளும் சிறப்பு தினமாக கருதப்படும். ஒவ்வொரு வாரமும் சிறப்பு வழிபாடு நடைபெறும். அனைத்து திருச்சபைகளிலும் வெள்ளிக்கிழமை மாலை இந்த வழிபாடு நடைபெறும். இதில் குடும்பத்துடன் கிறிஸ்தவர்கள் பங்கேற்பார்கள்.
அதனைத் தொடர்ந்து ஏப்ரல் மாதம் 13-ந்தேதி குருத்தோலை ஞாயிறு, 18-ந்தேதி பெரிய வெள்ளி, 20-ந்தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
- கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும்.
- கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும்
அகிலத்திரட்டில் 16-வது நாள் திரு ஏடு வாசிப்பில், பகவதி திருக்கல்யாணம் பாகத்தில் கலி அழிவது எப்போது என்பதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதன்படி, கலியன் யாராலும் வெல்லக் கூடாத வரம் பெற்று, அவன் தன் பெண்ணோடு (கலிச்சி) உகத்திற்கு செல்லும்போது, ரோம ரிஷி என்பவன், சிவனிடம் கேட்டான். "ஈஸ்வரரே, இந்த கலியன் இத்தனை வரம் பெற்று செல்கிறானே, எப்போது இவன் முடிவாகுவான்" என்று, அதற்கு சிவன் அளித்த பதிலை, மஹா விஷ்ணு, பகவதி திருக்கல்யாண பகுதியில், பகவதி அம்மையை சாந்தப் படுத்துவதற்கு சொல்லுவது போல அய்யா, நமக்குதெளிவாக தெரியப்படுத்துகிறார்.
அதில், கலியன் மாள்கின்ற போது, இனத்துக்கு இனம் பகையாகும், சிவ நினைவு இந்த தேசத்திலே செல்லாது, கொலை, களவு , கோள்கள் மிகுந்திருக்கும், தலைஞான வேதத்தை மக்கள் கைவிடுவர், நேர்மைக்கு காலம் நெகிழ்ந்துதான் இருக்கும், போருக்குத்தான் எல்லோரும் கருத்தாய் இருப்பார்.
அதாவது நிதானம் இருக்காது, கடல் கோபம் கொண்டெழுந்து சில இடங்களையே காவு கொள்ளும், மழை மறையும், காற்றானது நோய் காற்றாக வீசும், கீழ் எண்ணம் கொண்டவர்கள் மேல் நோக்க எண்ணம் கொண்டவர்களை வேலை கொள்வர், மனு நீதம் குன்றும், நியம் தப்பி நாட்டை அரசாள்வார்கள், பிராயம் வரும் முன்னே பெண்கள் தன் நிலை அழிவார்கள். அப்போது தெய்வ மடவார்கள் எல்லாம் தேசத்திலே வருவார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
- ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று போதிக்கிறது.
- மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ ரகசிய நூல்.
''ஒப்பரொருவர் எழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே
அப்பாநாதன் எழுதி வைத்த அகிலத்திரட்டம் மானையிதே''
அய்யா வைகுண்டசாமியின் தனது 5-வது சீடராகிய சகாதேவன் சீடர் என்றழைக்கப்படும் அரிகோபால சீடர் மூலமாக அருளப்பட்டது தான் அய்யா வழி மக்களால் தங்களுடைய வேத ஆகமம் என்று போற்றப்படும் அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.
இதற்கு முந்தைய 6 யுகங்களில் நடந்தது என்ன? தற்போதைய கலியுகத்தில் என்னென்ன நடக்கும்? அடுத்து வருகின்ற தர்மயுகத்தில் நல்வாழ்வு எப்படி இருக்கும் என்று 3 காலங்களையும் கூறுவதால் உலக ஜாதகம் என்றும் போற்றப்படுகிறது.
அகிலத்திரட்டு அம்மானையானது சமயங்களையும், மொழிகளையும், இனங்களையும், கலாச்சாரங்களையும் கடந்து உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எவ்வாறு தர்மநெறியில் வாழ வேண்டும் என்று மனுதர்மத்தை போதிக்கின்றது.
நீ பெரிது, நான் பெரிது என்று தலைகணம் பிடித்து ஆடுகின்ற உலகிலே உனக்கும் மேலே பெரியவன் நான் (இறைசக்தி) இருக்கிறேன் என்று கூறுவது மட்டுமல்லாமல் மனிதனுக்கும், இறைவனுக்குமான பந்தத்தை கூறும் தேவ (தெய்வ) ரகசிய நூலாக கருதப்படுகிறது.
படித்தால் வாசிக்க கேட்டால், மனிதனுடைய பூர்வஜென்ம கர்மவினைகளையும் தீர்க்கக்கூடிய இம்மையிலும், மறுமையிலும் எண்ணங்களற்ற (கவலையற்ற) நல்வாழ்வு அருளக்கூடிய புனித நூலாக கருதப்படுகிறது.
கொல்லம் ஆண்டு 1016, கார்த்திகை மாதம் 27-ந்தேதி வெள்ளிக்கிழமை இரவு தென்தாமரைக்குளத்தில் அரிக்கோபாலன் சீடர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அய்யா வைகுண்டர் அவர் அருகிலே சென்று எழுப்பி (பெரியபுராணத்தை எழுதுவதற்கு சேக்கிழாருக்கு சிவபெருமான் அடியெடுத்து கொடுத்தது போல) ஏரனியும் என்கின்ற முதல் வார்த்தையை அடியெடுத்து கொடுத்து, அகிலத்திரட்டம்மானை எழுத அருள்பாலித்தார்.
எழுத படிக்க தெரியாத அகிகோபால சீடரால் பின்னை கட்டி ஓலைச்சுவடியில் 14 நாட்களுக்குள் எழுதி முடிக்கப்பட்டது. தினமும் இரவு தென்தாமரைக்குளத்தில் அரிகோபால சீடரால் எழுதப்படும் ஏடு, மறுநாள் மாலை பொழுதில் சாமிதோப்பு திருத்தலத்தின் (தற்போது வடக்கு வாசல் எனப்படும்) தவத்தலத்தில் அய்யாவின் முன்பு அரிக்கோபால சீடரால் வாசிக்கப்பட்டது.
இவ்வாறாக தினமும் வாசிக்கப்பட்டபோது, ஒருநாள் அரிக்கோல சீடரால் வாசிக்க இயலாமல் தேம்பி அழ ஆரம்பித்தார். இதனை பார்த்த மற்ற சீடர்கள் அரிகோபால சீடர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தார்கள்.
அப்போது அரிகோபாலன் சீடர் அய்யா நம்மை விட்டு வைகுண்டம் சென்று விடுவாராம் என்று கூறினார். அதை கேட்ட மற்ற சீடர்கள் அய்யாவிடம் என்னய்யா இது நீங்கள் எங்களை விட்டுவிட்டு வைகுண்டம் செல்வீர்களா? என்று வேதனையுடன் கேட்டார்கள்.
அப்போது அய்யா அரிக்கோபாலனை பார்த்து கோபமுற்று பிரம்பால் அடித்து உன்னை ஏட்டினை வாசிக்கத்தானே சொன்னேன். உன்னை யார் பொருள் கூற கொன்னது என்றார்.
இதனால் மிகவும் மனது நொந்த அரிக்கோபாலன் சீடர் உள்ளதை சொன்னால் ஊருக்கு ஆகாது என்று புலம்பியபடி எங்கே செல்வது என்று தெரியாமல் அய்யாவால் அவருடைய தாயார் என்று அடையாளம் காட்டப்பட்ட ஸப்த மாதர்களில் ஒருவரான அரிமடவை பிறந்த ஊராகிய பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள கச்சேரி தளவாய்புரத்துக்கு கால்நடையாகவே வந்து சேர்ந்து ஒரு வீட்டின் திண்ணையிலே அமர்ந்திருந்தார்.
அதிகாலை பொழுதிலே காட்டுக்கு வெளிப்புறம் செல்வதற்காக சென்ற 2 பேர் இவரை பார்த்து யாரப்பா இங்கே முக்காடு போட்டு அமர்ந்திருப்பது? என்று வினவினார்.
இவருடைய முகத்தை பார்த்ததும் அளவற்ற ஆனந்தம் கொண்டு சாமிதோப்பிலே இருந்து சீடர் அய்யா வந்திருக்கிறார்கள் என்று அவரை உபசரித்து தற்போது கச்சேரி தளவாய்புரம் பாஞ்சாலங்குறிச்சி பதி அமைந்திருக்கின்ற இடத்திலே அந்த காலத்தில் மாட்டு தொழுவம் இருந்தது.
அதற்கு அருகிலே சீடர் தங்குவதற்கு வசதி செய்து கொடுத்திருக்கிறார்கள் அவ்வூர் மக்கள். அங்கே இருந்த போது அரிகோபாலன் சீடர் மீண்டும் விட்ட இடத்தில் இருந்து எழுத ஆரம்பித்தார்.
அவ்வாறு எழுதியதை பாஞ்சாலங்குறிச்சி அரசவையில் கச்சேரி செய்பவர்களிடம் வாசித்து காண்பித்தார். அவர்கள் ஒன்றுமே புரியவில்லை என்றதால் அய்யாவின் அருளால் மீண்டும் ஓலைச்சுவடியில் முதலில் இருந்து அகிலத்திரட்டு அம்மானையை எழுதினார்.
(இதில் திரேதாயுகம், கிரேதாயும் யுகம், பத்திரமாகாளி சான்றோர்களை வளர்ப்பது ஆகியவை விரிவாக கூறப்பட்டுள்ளது.) இதன் பிரதியே சாமிதோப்பில் 1965-ம்ஆண்டு பூஜிதகுரு சென்திசை வென்ற பெருமாளால் வெளியிடப்பட்டது.
இதன் பிரதியே 2010-ம்ஆண்டு கொட்டங்காடு ஏடு என்று வெளியிடப்பட்டது. இவ்வாறாக அய்யா தந்த ஏடு இரண்டு, ஒன்று தென்தாமரைகுளம் ஏடு இரண்டாவது பாஞ்சாலங்குறிச்சி ஏடு ஆகும்.
- வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை “தவ வாசல்” என்றும் அழைப்பார்.
- திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு.
அய்யா வைகுண்ட பரம்பொருள் 6 வருடம் தவம் இருந்த புண்ணிய இடம் வடக்கு வாசல்....
தலைமைப்பதியாக திகழும் சாமிதோப்பில் அமைந்துள்ள முத்திரிகிணற்றில் பதமிட்டு வழிபட்ட பக்தர்கள் வடக்கு வாசலுக்கு வருவார்கள். வந்ததும் அய்யாவை வழிபடுவர். அய்யா வைகுண்டர் வடக்கு வாசலில் தவம் புரிந்ததால் இதனை "தவ வாசல்" என்றும் அழைப்பார்.

சாமிதோப்பில் தற்போது வடக்கு வாசலாக இருக்கும் இடத்தில் வைகுண்ட அய்யா ஆறு ஆண்டுகள் தவம் புரிந்தார். தவம் புரிவதற்காக மூன்றுக்கு மூன்று சதுர அடி அகலம், கழுத்தளவு உள்ள பள்ளத்தில் வடக்கு முகமாக நின்று முதல் இரு ஆண்டுகள் தவத்தை மேற்கொண்டார்.
அத்தவத்தின்போது நீரை மட்டுமே உணவாக அய்யா வைகுண்டர் உட்கொண்டார்.
அடுத்த 2 ஆண்டுகள் தவம், அந்த பள்ளத்தை மூடி அதன் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து வடக்கு முகமாக தவத்தை மேற்கொண்டார். அத்தவத்தின்போது பாலையும் பழத்தையும் அய்யா வைகுண்டர் உணவாக உட்கொண்டார்.
மூன்றாவது இரண்டாண்டு தவம் என்பது காவி துணி விரித்த ஆறுகால் உள்ள பனைநார் கட்டிலில் வடக்கு பார்த்து தவத்தை மேற்கொண்டார்.
இப்படி அய்யா வைகுண்டர் தவங்களை மேற்கொண்டாலும் மக்களுக்கு போதனைகளையும் எடுத்து அருளினார். இதன் காரணமாக அய்யா வைகுண்டர் பதிகளில் வடக்குவாசல் அமைக்கப்படுகின்றன.
தலைமைபதியாம் சாமிதோப்பில் அமைந்துள்ள வடக்குவாசலில் அய்யா வைகுண்டர் சாந்த சொரூபமாக தவம் இருந்தார். அதனால் இங்கு பக்தர்கள் அமைதியாக "அய்யா சிவ சிவ அரகர அரகரா'' என்று வழிபடுகின்றனர்.
வடக்கு வாசலில் அய்யாவின் இருக்கையும், தூண்டா மணி விளக்கும், நிலை கண்ணாடியும், திருமண்ணும் வைக்கப்பட்டிருக்கும். பக்தர்கள் நிலை கண்ணாடியை பார்த்து வழிபடுதல் வேண்டும். இதற்கு காரணம் "உன்னிலும் அய்யா நான் இருக்கிறேன்'' என்ற உயர்ந்த கொள்கையாகும்.

நிலை கண்ணாடியை வழிபட்ட பின்னர், அங்கு வைக்கப் பட்டிருக்கும் திருமண்ணை பக்தர்கள் தங்கள் நெற்றியில் இடவேண்டும். இந்த திருமண் அப்பகுதியில் பக்தர்கள் மிதித்து காலடி பட்ட மண். அந்த திருமண்ணுக்கு பல மகிமை உண்டு.
இந்த திருமண்ணுக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. மகாபாரதத்தில் கண்ணனாக வந்த அய்யா வைகுண்டர் ஒரு சமயம் தன் பக்தர்களின் காலடி மண்ணை எடுத்து அதை தனக்கு தானே தூவி அர்ச்சித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பக்தர்களின் காலடி மண்ணுக்கு உரிய மிக மகிமை அன்றே வெளிப்படுத்தப்பட்டது.
பக்தர்களின் நோய்களை குணப்படுத்தும் மகத்துவம் உடையது. தலைமைபதியின் வடக்குவாசலின் முகப்பில் தற்போது எழுப்பப்பட்டுள்ள கோபுரம் பார்ப்பதற்கு கம்பீரமாகவும் அழகாகவும் இருக்கிறது.
" நம்பி பிடிதிடுங்கோ அய்யா சிவ சிவ அரகரா அரகரா " பக்தர்கள் வடக்கு வாசலில் வழிபட்டு, அங்கு வைக்கப்பட்டிருக்கும் திருமண்ணை நெற்றியில் இடுபவர்களுக்கு, அய்யா வைகுண்டர் நோய்கள், நொம்பலங்கள், கவலைகள் போன்றவற்றை நீக்குகிறார்.
பக்தர்களின் வாழ்வில் மேன்மையும், புகழையும் பெற அய்யா வைகுண்டர் அருளுகிறார். அங்கு வழிபடும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள்.
உடல்நலமும் உளநலமும் தரவல்லது வடக்குவாசல். அங்கு வழிபடும் பக்தர்களுக்கு, அய்யா வைகுண்டர் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். பல சிறப்புகளை உடைய வடக்கு வாசலில் தர்மங்களும் நடைபெறுகிறது. வடக்கு வாசலை வழிபட்டு பல சிறப்புகளையும் நன்மைகளையும் பெறலாம்.
- உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு
- அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது.
அய்யா வைகுண்டரின் அவதார தினம் ஆண்டுதோறும் மாசி 20-ந்தேதி (இன்று) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் மாசி 19-ந்தேதி அய்யா விஞ்சை பெற்ற திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள பதியில் இருந்தும், சிறையில் அடைக்கப்பட்ட திருவனந்தபுரத்தில் இருந்தும் வாகன பேரணி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.
அய்யா வைகுண்டரின் அவதார தினத்தன்று நாகர்கோவில் நாகராஜா திடலில் இருந்து சாமிதோப்பிற்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் ஊர்வலம் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடந்து வருகிறது.
ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் அய்யாவின் தாரக மந்திரமான `அய்யா சிவ சிவ சிவசிவ அரகரா அரகரா' என்ற மந்திரத்தை சொல்லியவரே வருவார்கள்.
அய்யா வழியில் உருவ வழிபாடு கிடையாது. கண்ணாடியில் நாம் உருவத்தை காண வேண்டும். அதுதான் உனக்கு தெய்வம் என்கின்ற அய்யாவின் சீரிய கோட்பாட்டின்படி தலைமை பதி உள்ளிட்ட அனைத்து பதிகள் மற்றும் நிழல் தாங்கல்களிலும் நிலைக்கண்ணாடி நிலை நிறுத்தப்பட்டிருக்கும்.
அகிலத்திரட்டு அம்மானை நூல் அய்யா வைகுண்டரின் அருள் நூல்களில் ஒன்றாகும். அகிலம் என்றால் உலகம். உலகத்தில் உள்ள அத்தனையையும் திரட்டி உருவாக்கி தொகுக்கப்பட்டிருப்பதே அகிலத்திரட்டு அம்மானை ஆகும்.
அய்யா வைகுண்டருக்கு 22 வயதாக இருக்கும் போது திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. எந்த வைத்தியராலும் அவரை குணப்படுத்த முடியவில்லை. இதையடுத்து அய்யா வைகுண்டரின் பெற்றோர் கனவில் 'விஷ்ணு' தோன்றினார். மகனை திருச்செந்தூருக்கு அழைத்து வருமாறு கூறி மறைந்தார்.
இதையடுத்து அய்யா வைகுண்டரை திருச்செந்தூருக்கு அழைத்து சென்றனர். 1833-ம் ஆண்டு மார்ச் மாதம் (கொல்லம் ஆண்டு 18 மாசி மாதம்) அப்படியே கடலுக்குள் சென்று மாயமாக மறைந்து போனார். பெற்றோர் மகனை தேடி கரையில் காத்திருந்தனர்.
3-வது நாள் திடீரென கடலின் ஒரு பகுதி இரண்டாக பிரிந்து வழிவிட உள்ளிருந்து மகாவிஷ்ணுவின் 10-வது அவதாரமாக அய்யா வைகுண்டர் வெளிப்பட்டார்.
- சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.
- திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-20 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை.
திதி: பஞ்சமி இரவு 8.14 மணி வரை. பிறகு சஷ்டி.
நட்சத்திரம்: அசுவினி காலை 8.57 மணி வரை. பிறகு பரணி.
யோகம்: சித்தயோகம்.
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்க கேடயம் சப்பரத்தில் பவனி. நத்தம் ஸ்ரீமாரியம்மன் காப்புக்கட்டு விழா. கோவை ஸ்ரீகோனியம்மனுக்கு திருக்கல்யாணம். குடந்தை ஸ்ரீசக்கரபாணிப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். வெள்ளி இந்திர விமானத்தில் பவனி. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீகுமுதவல்லித் தாயார் சமேத ஸ்ரீவைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருநறையூர் ஸ்ரீசித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை. ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீமணவாள மாமுனிகள் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தெளிவு
ரிஷபம்-கவனம்
மிதுனம்-உழைப்பு
கடகம்-தாமதம்
சிம்மம்-பரிவு
கன்னி-பாசம்
துலாம்- நலம்
விருச்சிகம்- நிறைவு
தனுசு- வரவு
மகரம்-லாபம்
கும்பம்-பக்தி
மீனம்-பண்பு
- பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
- தேரோட்டம் நாளை மாலை நடக்கிறது.
மேல்மலையனூர்:
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசிப்பெருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 2-ம் நாள் மயானக்கொள்ளை விழா விமரிசையாக நடந்தது.
விழாவின் 5-வது நாளான நேற் று தீமிதி திருவிழா நடைபெற் றது. இதை யொட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கருவறை யில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம், தேன், பன்னீர் உள்ளிட்ட பலவிதமான பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.
உற்சவர் அம்மனை பிற்பகல் 2 மணியளவில் பல்லக்கில் பூசாரிகள் அக்னி குளத்திற்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிம்ம வாகனத்தில் அமர்த்தினர். பின்பு பம்பை , மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று மாலை 4 மணியளவில் அக்னி குண்டம் முன்பு அம்மன் எழுந்தருளினார்.
தொடர்ந்து பூசாரிகள் அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்பு அம்மனுக்கும், அக்னி குண்டத்திற்கும் தீபாராதனை காட்டிய உடன் தீக்குழிக்குள் பூ உருண்டையை உருட்டிவிட்டு தலைமை பூசாரி மற்றும் பூசாரிகள் தீக்குழிக்குள் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக நின்று தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சில பக்தர்கள் இரும்பு கொக்கிகளை முதுகில் அலகு குத்தி லாரி, வேன் ஆகியவற்றை இழுத்தும், அந்தரத்தில் தொங்கியவாறு பறவை க் காவடி எடுத்தும் அம்மனுக்கு மாலை அணிவித்து தீபாராதனை காட்டியும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இரவில் அன்ன வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழுத்தலைவர் மதியழகன் பூசாரி, அறங்காவலர்கள் சுரேஷ் பூசாரி, ஏழுமலை பூசாரி, பச்சையப்பன் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி மற்றும் கோவில் பணியாளர்கள், ஏழு வம்சாவழியை சேர்ந்த மீனவ முறை பூசாரிகள் குடும்பத்தினர் செய்திருந்தனர். மேல்மலையனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினதா தலைமையில் ஏராளமான போலீசாரும், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் பரஞ்ஜோதி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
விழாவின் 6-வது நாளான இன்று (திங்கட்கிழமை) காலை தங்கநிற மரப்பல்லக்கிலும், இரவு வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடக்கிறது.
- மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மகாமக குளத்தின் வடகரையில் பிரசித்தி பெற்ற காசி விசாலாட்சி அம்பாள் உடனுறை காசிவிசுவநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது.
நவக்கன்னிகள் தலமாக போற்றப்படும் இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக பஞ்சமுர்த்திகள் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மஞ்சள், பால், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் கொடிமரத்திற்கு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர், நந்தி பெருமான் உருவம் வரையப்பட்ட கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து, விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் சுவாமி-அம்பாள் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற உள்ளது.
விழாவின் முக்கிய நிகழ்வான வெண்ணைத்தாழி பல்லக்கில் சுவாமி வீதிஉலா வருகிற 10-ந்தேதியும், 11-ந்தேதி தேரோட்டமும், 12-ந்தேதி மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 12-ந்தேதி நடக்கிறது.
- கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் மாசி பெரும் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாலையில் கொடி பட்டம் வீதியுலா நடைபெற்றது. இன்று காலையில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30-க்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், நடைபெற்றது. காலை 5.20 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
கொடியேற்ற நிகழ்ச்சியில் கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, திருவாவடுதுறை ஆதீனம் சங்கரலிங்கம் தம்பிரான் சுவாமிகள், ஏரல் சேர்மன் சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் செங்குழி ரமேஷ், நகர செயலாளர் வாள் சுடலை, கவுன்சிலர் ரேவதி கோமதிநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
5-ம் திருவிழா 7-ந்தேதி இரவு 7.30 மணிக்கு குடை வருவாயில் தீபாராதனையும், 7-ம் திருவிழாவான 9-ந்தேதி காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவையும், காலை 9மணிக்கு சுவாமி சண்முகர் வெற்றி வேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறார்.
அங்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி மாலை 4.20 மணிக்கு சுவாமி சண்முகர், சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10-ம் திருவிழா 12-ந்தேதி நடக்கிறது. அன்று காலை 7 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு கோலத்துடன் 8 வீதிகளிலும் உலா வந்து பின்னர் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
- நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
- ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
(1) பெரிய கோவில்
(2) பெரிய பெருமாள்
(3) பெரிய பிராட்டியார்
(4) பெரிய கருடன்
(5) பெரியவசரம்
(6) பெரிய திருமதில்
(7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்
ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள்
(1) ஸ்ரீதேவி
(2) பூதேவி
(3) துலுக்க நாச்சியார்
(4) சேரகுலவல்லி நாச்சியார்
(5) கமலவல்லி நாச்சியார்
(6) கோதை நாச்சியார்
(7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார்.
(1) விருப்பன் திருநாள்
(2) வசந்த உத்சவம்
(3) விஜயதசமி
(4) வேடுபரி
(5) பூபதி திருநாள்
(6) பாரிவேட்டை
(7) ஆதி பிரம்மோத்சவம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆடி
(4) புரட்டாசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார்.
(1) சித்திரை
(2) வைகாசி
(3) ஆவணி
(4) ஐப்பசி
(5) தை
(6) மாசி
(7) பங்குனி.
ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும். இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும்.
(1) கோடை உத்சவம்
(2) வசந்த உத்சவம்
(3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை
(4) நவராத்ரி
(5) ஊஞ்சல் உத்சவம்
(6) அத்யயநோத்சவம்
(7) பங்குனி உத்திரம்.
பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள்.
(1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார்
(2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார்
(3) குலசேகர ஆழ்வார்
(4) திருப்பாணாழ்வார்
(5) தொண்டரடிபொடி ஆழ்வார்
(6) திருமழிசை ஆழ்வார்
(7) பெரியாழ்வார், ஆண்டாள்
இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார். பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன.
(1) நாழிகேட்டான் கோபுரம்
(2) ஆர்யபடால் கோபுரம்
(3) கார்த்திகை கோபுரம்
(4) ரெங்கா ரெங்கா கோபுரம்
(5) தெற்கு கட்டை கோபுரம்-I
(6) தெற்கு கட்டை கோபுரம்-II
(7) ராஜகோபுரம்.
ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம்
(2) சங்கராந்தி
(3) பாரிவேட்டை
(4) அத்யயநோத்சவம்
(5) பவித்ரா உத்சவம்
(6) உஞ்சல் உத்சவம்
(7) கோடை உத்சவம்.
ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும்.
(1) பூச்சாண்டி சேவை
(2) கற்பூர படியேற்ற சேவை
(3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை
(4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம்
(5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை
(6) தாயார் திருவடி சேவை
(7) ஜாலி சாலி அலங்காரம்.
திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார்.
(1) நவராத்ரி மண்டபம்
(2) கருத்துரை மண்டபம்
(3) சங்கராந்தி மண்டபம்
(4) பாரிவேட்டை மண்டபம்
(5) சேஷராயர் மண்டபம்
(6) சேர்த்தி மண்டபம்
(7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்
திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.
திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது.
(1) ராமானுஜர்
(2) பிள்ளை லோகாச்சாரியார்
(3) திருக்கச்சி நம்பி
(4) கூரத்தாழ்வான்
(5) வேதாந்த தேசிகர்
(6) நாதமுனி
(7) பெரியவாச்சான் பிள்ளை

சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார்.
(1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம்
(2) வசந்த உற்சவம் வைகாசி மாதம்,
(3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம்,
(4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம்,
(5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம்,
(6) பூபதி திருநாள் தை மாதம்,
(7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.
நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள்
(1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை
(2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை
(3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை
(4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை
(5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை
(6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை
(7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை
மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.
கற்பக விருட்சம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், சிம்ம வாகனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாகனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.
- கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது.
- காலை 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
திருச்செந்தூர்:
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி பெரும் திருவிழா விமர்சையாக நடைபெறும்.
இந்த ஆண்டுக்கான மாசி பெரும் திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கொடி யேற்றத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா நடக்கிறது. நாளை (3-ந்தேதி) கொடியேற்றம் நடக்கிறது.
இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் கும்ப லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் திருவிழாவான 4-ந்தேதி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. 4.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாரானை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி புறப்பாடு நடக்கிறது.
3,4,5,6-ம் திருவிழா நாட்களில் கோவில் நடை காலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வருபம், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
5-ம் திருவிழா அன்று இரவு 7.30 மணிக்கு மேல் குடைவருவாயில் தீபாராதனை நடக்கிறது.
6-ம் திருவிழா அன்று காலை 7 மணிக்கு சுவாமி கோ ரதத்தில் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது. அன்று இரவு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் எந்திர விமானத்திலும் எழுந்தருளி வீதியுலா நடக்கிறது.
7-ம்திருவிழாவான 9-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.1.30 மணிக்கு விஸ்வருப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் உருகு சட்ட சேவையும், காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து பிள்ளையன் கட்டளை மண்டபம் வந்து சேர்கிறது.
காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 4.20 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிகப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு ராக்கால அபிஷேகம் நடக்கிறது.
8,10,11,12-ம் ஆகிய திருவிழா நாட்களில் கோவில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது
8-ம் திருவிழாவான 10-ந்தேதி மதியம் 12 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது. 9-ம் திருவிழா அன்று சுவாமி சண்முகர் கோவிலில் சேர்க்கையை பொறுத்து பூஜை நேரங்கள் மாறுபடும்.
10-ம்திருவிழாவான 12-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் தேரோட்டம் நடக்கிறது.
11-ம் திருவிழாவான 13-ந்தேதி தெப்பத்திருவிழா நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு மேல் சுவாமி குமரவிடங்க பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி 11 முறை தெப்பத்தில் சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
12-ம் திருவிழாவான 14-ந்தேதி மாலை 4.30 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் எட்டு வீதிகளிலும் உலா வந்து வடக்கு ரத வீதியில் உள்ள 14 ஊர் செங்குந்த முதலியார் திருவிழா மண்டபம் வந்து அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் ஆகி சுவாமி, அம்பாள் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோவில் சேர்தல் நடைபெற்று விழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர்.
- தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன.
* நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊர் சிதலைப்பதி, செதில்பதி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசிலாறு பாய்கிறது. ராமரும் லட்சுமணரும் தம் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்த இடம் இது என்கிறது தலபுராணம்.
* சீதை இலங்கையில் அசோக வனத்தில் வாடிக் கொண்டிருந்தபோது அவளை மீட்டு வர வேண்டுமே எனக் கவலைப்பட்டார் ராமர். இடையில் உள்ள கடலை எப்படிக் கடப்பது என்று விபீஷணரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி தர்ப்பப் புல்லைப் பரப்பி, அதன்மீது படுத்த நிலையில் வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர். ராமபிரான் தவமிருந்த இத்தலமே தர்ப்பசயனம் எனும் திருத்தலமாகும்.

* கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் காட்டிற்குச் சென்றான். அரசுரிமையை இழந்தான். வனவாசத்தின்போது சீதையையும் பிரிந்தான். ராமன் சந்தித்த சோதனைகள் ஏராளம். இதனால் ராமனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. பின்னர் மனச்சோர்வும் கலக்கமும் நீங்கி இலங்கை செல்ல பாலம் கட்டி, ராவணனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினான். இதற்குக் காரணம் ராமபிரான் அம்பிகையை வேண்டி கடைப்பிடித்த நவராத்திரி விரதத்தின் பலன்தான் என்கிறார் சூத மகரிஷி.
* ஸ்ரீராமநவமியன்று பக்தர்கள் தம் சக்திக்குத் தகுந்தபடி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை யாரேனும் ஒருவருக்கு தானமாகத் தருவது நல்லது. ஸ்ரீராமர் வழிபாடும், வரலாறும், பெருமைகளும் எங்கும் பரவவேண்டும் என்பது இவ்வகை தானத்தின் நோக்கம். சிலர் விசிறிகளை தானமாகத் தருகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும், எப்போதும் அடிமைத் தொழில் புரியவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற ஓர் அடையாளம் விசிறி. அஷ்ட மங்கலப் பொருள்களில் விசிறியும் ஒன்று. ஸ்ரீராமரை வழிபட்டால் எங்கும் மங்கலம் பொங்கித் தங்கும் என்பதை விசிறி புலப்படுத்துகிறது.
* மதுரை மீனாட்சி கோவில், கூடலழகர் கோவில், திருவாதவூர்க் கோவில்களில் இசைத்தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரே தூணில் 22 சங்கீதத் தண்டுகள் உள்ளன. அவைகளில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேசுவரர் மங்களாம்பிகா சன்னிதியில் உள்ள தூண்களில் கற்களாலான சங்கிலி உள்ளன. சிம்மத்தின் வாயில் உள்ள ஒரு கல்பந்து சுழலும் வகையில் அமைந்துள்ளது. இது போன்ற அற்புதங்களை வடித்த சிற்பிகளின் கைவண்ணம் பிரமிக்க வைப்பவை.
* நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம், தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார், இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கோசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
* சீதா-ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது'' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான்.
ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, "வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்கிறேன்'' என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது'' என்றார். அந்தப் பாதுகைகள்தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது.






