என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்கிறார்.
- இதில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி பங்கேற்க உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், கடந்த ஆண்டு இறுதியில் நடந்தது.
இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ளார். அவருக்கு அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்க உள்ளார் என வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மிலேய், எல் சல்வேடார் தலைவர் நயீப் புகேல், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனரோ உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையே, பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி, நீடா அம்பானி தம்பதிக்கும் டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்காக அம்பானி தம்பதியினர் நேற்று அமெரிக்கா சென்றனர்.
இந்நிலையில், பதவியேற்பு விழாவுக்கு முன் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜே.டி.வான்ஸ் வாஷிங்டன் டிசியில் அளித்த இரவு விருந்தில் முகேஷ் அம்பானியும், நீடா அம்பானியும் பங்கேற்றனர். அப்போது டொனால்டு டிரம்பை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
இந்தச் சந்திப்பின்போது டிரம்புக்கு இருவரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தியா-அமெரிக்கா உறவு இன்னும் ஆழமாக அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாக அம்பானி தெரிவித்தார்.
- வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே போராட்டம் நடைபெற்றது.
- டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர்.
அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார்.
இந்நிலையில் டிரம்ப்பின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது பதவியேற்பை எதிர்த்து தலைநகர் வாஷிங்க்டன் டிசியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர். பீப்புள்ஸ் மார்ச் அமைப்புடன் இணைந்து சவுத் ஏஷியன் சர்வைவர்ஸ் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த போராட்டங்களை நடத்தி வருகின்றன.
வாஷிங்க்டன் டிசியில் மூன்று வெவ்வேறு பூங்காக்களில் இருந்து தொடங்கி லிங்கன் நினைவிடம் அருகே மூன்று போராட்டக்குழுவினர் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

நாங்கள் முன்கூட்டியே கீழ்ப்படியவில்லை, பாசிசத்திற்கு அடிபணியவில்லை என்பதை நிரூபிக்க விரும்புகிறோம் என்று பீப்புள்ஸ் மார்ச் தெரிவித்துள்ளது. பெண்கள் உரிமை, சமத்துவம், குடியேற்றம் போன்ற அனைத்தையும் ஆதரிக்க நாங்கள் அணி திரண்டுள்ளோம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்ப் எதிர்ப்பு போஸ்டர்களை ஒட்டியும், பதாகைகளை ஏந்தியும் அவர்கள் போரட்டம் நடத்தினர். டிரம்புக்கு ஆதரவளிக்கும் டெஸ்லா நிறுனவர் எலோன் மஸ்க் உட்பட அவருக்கு நெருங்கியவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
அவர்களில் பலர் "F**k ட்ரம்ப்!", "டிரான்ஸ் லைவ்ஸ் மேட்டர்!", "எழுந்து நில்லுங்கள், போராடுங்கள்!", "கறுப்பினப் பெண்களை நம்புங்கள்!" மற்றும் "நாங்கள் அமைதியாக இருக்க முடியாது." என்ற கோஷங்களை எழுப்பினர்.
நியூயார்க், சியாட்டில் மற்றும் சிகாகோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் போராட்டம் நடத்தப்பட்டன.
டிரம்ப் முதல்முறையாக பதவியேற்ற 2017 ஜனவரியிலும் இதே அமைப்பினர் இதேபோன்ற போராட்டத்தை நடத்தியது. நாளை டிரம்ப் பதவி ஏற்கும் வரை போராட்டங்கள் தொடரும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது.
- டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன
- ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் ஜனவரி 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.
அதன்படி டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ள நிலையில் இன்று [ஜனவரி 19] முதல் தடை அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை தாற்காலிகமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே ஆப்பிள் ஐ ஸ்டோர், கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டிக்டாக் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

ஆனால் நாளை அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டொனால்டு டிரம்ப் டிக் டாக் தடையை விரும்பவில்லை என்று தெரிகிறது.
அதிபர் டிரம்ப் பதவியேற்றவுடன் டிக் டாக்கை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை செய்வோம். டிரம்ப் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார் என்று நம்பிக்கை உள்ளது என்று டிக் டாக் உரிமையாளரான பைட்டான்ஸ் நிறுவனமும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பதவியேற்றதும் டிரம்ப், பைட்டான்ஸ் நிறுவனம் டிக் டாக்கை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க மேலும் 90 நாட்கள் அவகாசம் வழங்குவார் என்று கூறப்படுகிறது. அல்லது வேறு வழிகளில் டிக் டாக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர ஆவண செய்வார் என்று டிரம்ப் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்.
அமெரிக்காவின் 47-வது அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. வழக்கமாக அதிபர் பதவியேற்பு விழா பாராளுமன்றம் முன்பு நடைபெறும்.
ஆனால் கடுமையான குளிர் நிலவுவதால் பாராளுமன்ற கட்டிடத்திற்கு உள்ளே ரோடுண்டா என்ற பகுதியில் விழா நடைபெறுகிறது. இதற்கிடையே டிரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சிலிருந்து வாஷிங்டனுக்கு தனி விமானத்தில் தனது மனைவி, மகனுடன் புறப்பட்டு நேற்று நள்ளிரவு சென்றடைந்தார்.
அவர் அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்க உள்ளதை குறிக்கும் வகையில், விமானத்தில் ஸ்பெஷல் மிஷன் 47 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. பதவியேற்பு விழாவின் கருப்பொருள் "நமது நீடித்த ஜனநாயகம்: ஒரு அரசியலமைப்பு வாக்குறுதி" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவிற்கு முன்னதாக பதவியில் இருந்து வெளியேறும் அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வெள்ளை மாளிகையில் டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருடன் தேநீர் அருந்துவார்கள்.
அதைத் தொடர்ந்து, பதவியேற்பு விழாவிற்காக டிரம்ப் பாராளுமன்ற கட்டிடத்திற்குச் செல்வார்.
டிரம்ப் பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்கா முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக வாஷிங்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் சிறப்பு பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். வாஷிங்டனில் டிரம்பின் ஆதரவாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குவிந்து வருகிறார்கள்.
டிரம்ப் பதவியேற்றதும் தனது முதல் நாளில் எந்த உத்தரவுகளில் கையெழுத்திடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக குடியேற்றம் தொடர்பாக புதிய உத்தரவு வெளியாகலாம்.
- 47வது அமெரிக்க அதிபராக டிரம்ப் நாளை பதவியேற்கிறார்.
- சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் நாளை [ஜனவரி 20] பதவியேற்கிறார். குடியேற்றங்கள், மற்ற நாடுகளுடனான வரிக் கொள்கைகள் உள்ளிட்டவற்றில் டிரம்ப் கடுமை காட்டி வருகிறார்.
47வது அமெரிக்க அதிபராகும் டிரம்ப்பின் அடுத்த 5 ஆண்டு பதவிக்காலம் பலருக்கு சோதனைக் காலமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் பதவியேற்று 100 நாட்களுக்குள் டிரம்ப் சீனா மற்றும் இந்தியாவுக்கு வருகை தருவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2016-20 பதவிக்காலத்தில் எந்த அமெரிக்க அதிபரும் நுழையாத வட கொரியாவுக்கே டிரம்ப் விஜயம் செய்திருந்தார். ரஷியாவுடன் இணக்கமான போக்கை கையாண்டார். அந்த வகையில் இந்த 2025-29 பதவிக்காலத்திலும் டிரம்ப் உலக அரசியலில் தாக்கம் செலுத்துவார் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அந்த வகையில் டொனால்டு டிரம்ப், தான் பதவியேற்ற பிறகு, சீனாவுக்குச் செல்ல விரும்புவதாக ஆலோசகர்களிடம் தெரிவித்திருக்கிறார் என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
சீன இறக்குமதிகள் மீது அதிக வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறி வரும் சூழலில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்குடனான உறவை வலுப்படுத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளார் என்றும் அவருடன் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க உள்ளார் என்றும் வால் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. ஒரு நாள் முன்னதாக டிரம்ப் ஜி ஜின்பிங்குடன் டெலிபோனில் உரையாடியதை அடுத்து இந்த தகவல் வந்துள்ளது.
தொடர்ந்து டிரம்ப் இந்தியாவுக்குச் செல்லக்கூடிய சாத்தியம் குறித்து ஆலோசகர்களுடன் பேசியதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர் என்று வால் ஸ்ட்ரீட் குறிப்பிடுகிறது
தகவலின்படி, கடந்த மாதம் கிறிஸ்துமஸை ஒட்டி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் வாஷிங்டன் டிசிக்கு வருகை தந்தபோது பேச்சுவார்த்தைகள் நடித்துள்ளன.
டிரம்பின் இந்தியா வருகை இந்த வருடம் ஏப்ரல் தொடக்கத்தில் அல்லது ஆண்டின் பிற்பகுதியில் இருக்கலாம் என்று வால் ஸ்ட்ரீட் அறிக்கை கூறுகிறது. இந்த வசந்த காலத்தில் வெள்ளை மாளிகை கூட்டத்திற்குப் பிரதமர் நரேந்திர மோடியை டிரம்ப் அழைக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
- டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.
- நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாள் கொண்டாடினார்
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை. மேலும் வரும் ஜனவரி 20 ஆம் தேதி நடக்கும் டிரம்ப் அதிபராக பதவியேற்கும் விழாவிலும் ஒபாமாவுடன் மிச்செல் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டது.

இதன் விளைவாகவே விவாகரத்து வதந்திகள் வலுப்பெற்றன. இந்நிலையில் மிச்செல்லின் பிறந்தநாளுக்கு தனது எக்ஸ் பதிவில் உருக்கமாக வாழ்த்து தெரிவித்து வதந்திகளுக்கு ஒபாமா முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நேற்று [ஜனவரி 17] மிச்செல் பிறந்தநாளை முன்னிட்டு ஒபாமா வெளியிட்டுள்ள பதிவில்,
"என் வாழ்க்கையின் அன்பான @MichelleObama. உனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
நீ வீட்டின் ஒவ்வொரு அறையையும் அரவணைப்பு, அறிவு, சந்தோஷம் மற்றும் கருணையால் நிரப்புகிறாய். உன்னுடன் வாழ்க்கையின் சாகசங்களைச் சேர்ந்து செய்ய முடிந்ததால் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்கிறேன். உன்னை நேசிக்கிறேன்!" என்று பதிவிட்டுள்ளார். இருவரும் சேர்ந்து உணவருந்தும் புகைப்படத்தையும் ஒபாமா பகிர்ந்துள்ளார்.
- பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும்.
- பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
உலகளவில் மிகவும் பொதுவான புற்றுநோய்களில் ஒன்று சிறுநீர்ப்பை புற்றுநோய். இது ஆண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் 4-வது மிகவும் பொதுவான புற்றுநோயாகும். இது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.
பல சந்தர்ப்பங்களில், சிகிச்சை அளிக்க அதிக செலவு ஆகிறது. பாதிக்கப்பட்டவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகிச்சை பெற வேண்டியிருக்கும். சில சந்தர்ப்பங்களில், நோய் கடுமையானதாகி மரணம் ஏற்படுகிறது.

அசாதாரண செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியால் இந்தப் பிரச்சனை எழுகிறது. எனவே, பாதிப்பை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியம்.
டோனி ஹண்டர் தலைமையிலான அமெரிக்காவின் சால்க் நிறுவனத்தின் விஞ்ஞானிகள் இதில் தீவிர கவனம் செலுத்தினர். இது குறித்து புதிய ஆராய்ச்சி செய்தனர்.
இதில் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பதற்கான புதிய அணுகுமுறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நோய் தாக்குதலுக்கான சில இலக்குகள் அடையாளம் காணப்பட்டன.

கொழுப்பை குறைக்க தற்போது பயன்படுத்தப்படும் ஸ்டேடின் வகை மருந்துகளில் ஒரு பரிசோதனை மருந்தை சேர்ப்பதன் மூலம் உருவாக்கப்பட்ட கலவையால் இந்த வகை புற்றுநோயைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் தெரிய வந்தது. இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.
- 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
- 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
கடந்த நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் வரும் திங்கள்கிழமை [ஜனவரி 20] பதவியேற்க உள்ளார்.
எனவே தற்போதைய அதிபர் ஜோ பைடன் [82 வயது] தனது அதிகாரத்தை முடிந்தவரை பயன்படுத்தி முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார்.
குற்ற வழக்கில் சிக்கிய தனது மகன் ஹண்டர் பைடனுக்கு பொது மன்னிப்பு வழங்கியது, ரஷியா மீது கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி கொடுத்தது உள்ளிட்டவை அதில் அடங்கும். இந்நிலையில் பதவிக்காலத்தின் இறுதி நாட்களில் இருக்கும் ஜோ பைடன் நேற்று [வெள்ளிக்கிழமை] ஒரே நாளில் 2500 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வன்முறையற்ற சாதாரண போதைப் பொருள் குற்றங்களுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட சுமாா் 2,500 பேருக்கு தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோ பைடன் பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். அமெரிக்க வரலாற்றிலேயே ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது இதுவே முதல் முறை.
வன்முறையில் ஈடுபடாதபோதிலும் மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதாக பைடன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
முன்னதாக அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் 37 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து கடந்த மாதம் ஜோ பைடன் உத்தரவிட்டிருந்தார்.
அவர்கள் செய்த கொலை கண்டிக்கத்தக்கதாக இருப்பினும் மத்திய அளவில் மரண தண்டனை விதிக்கப்படுவது தவறு என்பதால் அவா்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாக பைடன் கூறினாா்.
கடந்த 2003 முதல் மத்திய நீதிமன்றதனால் விதிக்கப்படும் மரண தண்டனைகள் நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் 2016 இல் பதவியேற்ற டொனால்டு டிரம்ப் மீண்டும் அதை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

வரும் ஜனவரி 20 முதல் டொனால்டு டிரம்ப் அதிபராக உள்ளார் என்பதால் அவரிடம் இருந்து மரண தண்டனை கைதிகளை பாதுகாக்க ஜோ பைடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டாா்.
- திங்கட்கிழமை கடும் குளிர் நிலவும் என அறிவிறுத்தல்.
- இதனால் டொனால்டு டிரம்ப் பதவி ஏற்பு விழா உள்அரங்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். அவர் நாளை மறுதினம் (ஜனவரி 20-ந்தேதி) அதிபராக பதவியேற்க உள்ளார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. இந்திய அரசு சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விழாவில் பங்கேற்க உள்ளார். பல்வேறு நாட்டு தலைவர்கள் இந்த பதவி ஏற்பு விழாவில் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.
இந்நிலையில் பதவியேற்பு விழா குறித்து டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஜனவரி 20-ந்தேி கடுமையான குளிர் நிலவும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வானிலை முன்னறிவிப்பை கருத்தில் கொண்டு பதவியேற்பு விழா வரும் ஜனவரி 20-ந்தேதி மதியம் 3 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) உள்அரங்கத்தில் (Capitol Rotunda) நடக்கிறது.
எந்த வகையிலும் மக்கள் காயப்படுவதை நான் பார்க்க விரும்பவில்லை. பல்லாயிரக்கணக்கான பாதுகாப்பு வீரர்கள், பாதுகாப்புப்பணியில் ஈடுபடுத்தப்படும் குதிரைகள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஜனவரி 20-ந்தேதி பல மணி நேரம் வெளியில் இருப்பது ஆபத்தான நிலைமையாகும். எந்தவொரு நிகழ்விலும் நீங்கள் வர முடிவு செய்தால், பாதுகாப்பு ஆடைகளை அணியுங்கள்.
மிகவும் குளிரான காலநிலை காரணமாக பதவியேற்பு உரையை உள் அரங்கத்தில் நடத்த உத்தரவிட்டு உள்ளேன். பல்வேறு உயரதிகாரிகள் மற்றும் விருந்தினர்கள் அரங்கிற்கு அழைத்து வரப்படுவார்கள். இது அனைவருக்கும் மிகவும் அழகான அனுபவமாக இருக்கும்.
இவ்வாறு டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
40 வருடங்களுக்கு பிறகு அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் உள்அரங்கில் பதவி ஏற்க உள்ளார். வழக்கமாக கேபிட்டலில் வெளிப்புறத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் அதிபர் பதவி ஏற்பு விழா நடைபெறும். தற்போது கடும் குளிர் காரணமாக மாற்றப்பட்டுள்ளது.
- காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தார் ஆண்டனி பிளிங்கன்.
- இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர்கள் சந்திப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளராக ஆண்டனி பிளிங்கன் உள்ளார். நாளைமறுதினம் டொனால்டு டிரம்ப் அதிபராக பதவி ஏற்க உள்ளார். இதற்கிடையே இஸ்ரேல்- காசா போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், பல்வேறு விசயங்கள் தொடர்பாகவும் ஆண்டனி பிளிங்கன் செய்தியாளர்களை சந்தித்தார். இதுதான் அவருடைய கடைசி செய்தியாளர் சந்திப்பாக இருக்கலாம். ஆனால் ஆண்டனி பளிங்கனுக்கு தனது கடைசி செய்தியாளர்கள் சந்திப்பு சிறப்பாக அமையவில்லை. அவரை செய்தியாளர் விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பின்போது சாம் ஹுசைனி என்ற செய்தியாளர் "சர்வதேச நீதிமன்றத்தில் காசாவில இஸ்ரேல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி வருகிறார்கள். இந்த செயல்முறைக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என நீங்கள் சொல்கிறீர்களா?.
நான் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். நீங்கள் என்னை காயப்படுத்துகிறீர்கள். இதைத்தான் பத்திரிகை சுதந்திரம் என அழைக்கிறீர்களா?. என்னை தவறாக கையாள்வதை நிறுத்துங்கள் என்றார். உடனே பாதுகாவலர்கள் அந்த பத்திரிகையாளர்களை குண்டுகட்டாக வெளியேற்றினர்.
அப்போது நீங்கள் கிரிமினல். நீங்கள் ஏன் சர்வதேச நீதிமன்றத்தில் இல்லை?. சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவிற்கு தண்டனை வழங்கியுள்ளது என கூச்சலிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மற்றொரு செய்தியாளர் கடந்த மே மாதம் ஒப்பந்தம் ஏற்பட்டபோது ஏன் தொடர்ந்து குண்டுகளை வீசினீர்கள். இனப்படுகொலைக்காக விதிமுறை அடிப்படையிலான உத்தரவுகளை ஏன் தியாகம் செய்தீரு்கள்? என் நண்பர்களை படுகொலை செய்ய ஏன் அனுமதித்தீர்கள். ஏன் அவர்களின் வீடுகள் அழிக்கப்பட்டன? என கேள்வி எழுப்பினார்.
- டிக்டாக் செயலி விற்பனைக்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது.
- இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை மேற்கோள் காட்டி சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலியை அடுத்த 270 நாட்களுக்குள் விற்பனை செய்வதற்கு அவகாசம் வழங்கும் சட்டத்தை கடந்த ஏப்ரல் மாதம் இயற்றினார்.
அவ்வாறு விற்பனை செய்யாவிட்டால் ஆப்பிள் மற்றும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து டிக்டாக் செயலியை அகற்ற உத்தரவிடப்படும் என அந்தச் சட்டத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தச் சட்டத்திற்கு தடை கோரி பைட்டான்ஸ் நிறுவனம் கடந்த மே மாதம் வாஷிங்டன் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தது. அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து பைட்டான்ஸ் நிறுவனம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அந்த மனுவில், ஜனவரி 19-ம் தேதிக்குள் டிக்டாக் செயலியை விற்க வேண்டும் என்ற சட்டத்தால் அமெரிக்க மக்களிடம் மிகவும் பிரபலமாகியுள்ள டிக்டாக் செயலி தடை செய்யப்படுமானால், அந்தச் செயலியை பயன்படுத்தி வரும் மக்களின் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த மனுவை கடந்த மாதம் 18-ம் தேதி சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
இந்நிலையில், டிக்டாக்கை அதன் சீன தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் வரும் 19-ம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க வேண்டும். இல்லையெனில் டிக்டாக்கைத் தடை செய்யப்படும் என அமெரிக்க உச்சநீதிமன்றம் உறுதிபட தெரிவித்தது.
தேசிய பாதுகாப்புக்கான வெளிப்படையான ஆபத்து முதல் திருத்த உரிமைகள் தொடர்பான கவலைகளைவிட அதிகமாக உள்ளது எனவும் தீர்ப்பளித்ததுடன், டிக் டாக் தொடர்ந்த மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
டிக்டாக் செயலிக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 17 கோடி கணக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
- அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயன்ற இந்திய இளைஞருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
மே 22, 2023 அன்று வாடகை டிரக்கை மூலம் வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாய் வர்ஷித் கந்துலா [20 வயது] முயற்சி செய்தார்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்க அரசை கவிழ்த்து ஹிட்லரின் நாஜி சர்வாதிகாரத்தை நிறுவுவதே அவரின் நோக்கமாக இருந்துள்ளது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, சட்டப்பூர்வ அமெரிக்க நிரந்தரக் குடியுரிமை பெற்ற சாய், தெலுங்கானாவின் சந்தாநகரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று மிசோரி நகரின் செயின்ட் லூயிஸில் இருந்து வாஷிங்டன் டிசிக்கு வணிக விமானத்தில் பயணித்து, மாலை 5:20 மணிக்கு டல்லஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய சாய், மாலை 6:30 மணிக்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்தார்.
இரவு 9:35 மணிக்கு, ஹெச் ஸ்ட்ரீட் சந்திப்பில் உள்ள வெள்ளை மாளிகை மற்றும் ஜனாதிபதி பூங்காவை சுற்றிய தடுப்புகளில் சாய் அந்த டிரக்கை மோதியுள்ளார்.
டிரக் இரண்டு முறை உலோகத் தடுப்புகள் மீது மோதியதால், புகைபிடித்துள்ளது. விபத்தைத் தொடர்ந்து, சாய், வாகனத்தை விட்டு வெளியேறி, தனது பையில் இருந்து நாஜி ஸ்வஸ்திகா கொடியை வெளியில் எடுத்து, வெள்ளை மாளிகைக்கு முன்னால் காட்டியுள்ளார். அங்கு விரைந்த போலீஸ் அவரை கைது செய்தது.

சாய், வெள்ளை மாளிகையைத் தாக்கி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற நினைத்தது நீதித்துறையின் விசாரணையில் தெரியவந்தது.
நாஜி சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒரு சர்வாதிகாரத்தை நிறுவ, தேவைப்பட்டால் அமெரிக்க ஜனாதிபதியையும் மற்றவர்களையும் படுகொலை செய்ய அவர் திட்டமிட்டார் என்றும் மே 22 சம்பவத்திற்கு பல வாரங்களுக்கு முன்னதாகவே சாய் இந்தத் தாக்குதலை திட்டமிட்டதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சாய், விசாரணையின்போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். எனவே சாய்க்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி Dabney L. Friedrich 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தற்போது தீர்ப்பளித்துள்ளார்.






