என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
    • தங்க சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.

    அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர். இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர்.

    பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள் கூறும்போது, "டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும்.

    டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்" என்றனர்.

    • 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது.
    • அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டார்.

    அமெரிக்க தேசிய பூங்காக்களில் உள்ள கறுப்பின அடிமை முறை, அடிமைகள் வணிகம், பழங்குடியினர் தொடர்பான பல புகைப்படங்கள் மற்றும் கண்காட்சிப் பொருட்களை நீக்குமாறு அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

    குறிப்பாக 1863-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட "The Scourged Back" என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படம் நீக்கப்பட உள்ளது. இது, பிரம்பால் அடிக்கப்பட்ட ஒரு அடிமையின் முதுகில் உள்ள காயங்களை காட்டும் புகைப்படம்.

    அமெரிக்காவையும் அதன் தலைவர்களையும் இழிவுபடுத்தும் எந்தவொரு சித்தாந்தத்தையும் பிரதிபலிக்கும் கண்காட்சி பொருட்களை நீக்க வேண்டும் என்று டிரம்ப் நிர்வாக உத்தரவை செயல்படுத்த நாடு முழுவதும் உள்ள பூங்காங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    "ஒரு சிறந்த நாடு அதன் வரலாற்றை மறைக்காது. நல்ல மற்றும் கெட்ட விஷயங்கள் இரண்டிலிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும்" என்று வரலாற்றாசிரியர்கள் இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

    • தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது
    • முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    அமெரிக்க செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் மீது 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) இழப்பீடு கேட்டு அவதூறு வழக்குத் தொடரப்போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார் .

    டிரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில், "நமது நாட்டின் வரலாற்றில் மிக மோசமான மற்றும் ஊழல் நிறைந்த செய்தித்தாள்களில் ஒன்றான தி நியூயார்க் டைம்ஸ் மீது நான் 15 பில்லியன் டாலர் அவதூறு வழக்கைத் தாக்கல் செய்கிறேன். அது தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு உண்மையான ஊதுகுழலாக மாறிவிட்டது" என்று தெரிவித்தார்.

    "நியூயார்க் டைம்ஸ் நீண்ட காலமாக என்னைப் பொய் சொல்லி அவதூறு செய்ய முடிந்தது. இது மீண்டும் நடக்காது. புளோரிடாவில் வழக்குத் தொடரப்படுகிறது" என்று அவர் கூறினார்.

    முன்னதாக ஏபிசி நியூஸ் மற்றும் சிபிஎஸ் உள்ளிட்ட அமெரிக்க ஊடக நிறுவனங்களுக்கு எதிராக டிரம்ப் இதேபோன்ற பல வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளார்.

    இந்த நிறுவனங்கள் பின்னர் டிரம்புடன் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு கண்டன. வரவிருக்கும் டிரம்ப் நூலகத்திற்கு $15 மில்லியன் நன்கொடையாக வழங்குவதற்க ஏபிசி முன்வந்ததால் அதற்கு ஈடாக தனது வழக்கை டிரம்ப் கைவிட்டார்.  

    • ஆர்டினரி பீப்பிள் படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருது பெற்றார்.
    • ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார்.

    லாஸ் ஏஞ்சல்ஸ்:

    பிரபல ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான ராபர்ட் ரெட்போர்டு (89). இவர் 1981-ம் ஆண்டு ஆர்டினரி பீப்பிள் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்றார்.

    மேலும், இவர் சுற்றுச்சூழல் ஆர்வலருமாக இருந்து வந்தார். இவரது இறப்பை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ராபர்ட் ரெட்போர்ட் செப்டம்பர் 16, 2025 அன்று உட்டா மலைகளில் உள்ள சன்டான்ஸில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவர் நேசித்த இடம், அவர் நேசித்தவர்களால் சூழப்பட்டது. அவரை மிகவும் மிஸ் செய்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரைப்படத் தயாரிப்புக் கலையின் மீதான அவரது ஆர்வம் ஒரு லாப நோக்கற்ற நிறுவனமான சன்டான்ஸ் நிறுவனத்தை உருவாக்க வழிவகுத்தது.

    ரெட்போர்ட் ஒரு அர்ப்பணிப்புள்ள சுற்றுச்சூழல் ஆர்வலராகவும் இருந்தார். உட்டாவுக்குச் சென்று மாநிலத்தின் இயற்கை நிலப்பரப்பையும் அமெரிக்க மேற்குப் பகுதியையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்கா.
    • மக்காச் சோளம் இறக்குமதி செய்ய மறுத்தால், அமெரிக்கா சந்தையை அணுகுவது கடினமாகிவிடும்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவரத்தினம் முதல் விவசாய பொருட்கள் வரை குறைவான வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்.

    தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. அதேவேளையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த அளவிலான வரி மட்டுமே விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

    விவசாய பொருட்களில் சமரசம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பண்ணை விவசாயம். அமெரிக்காவில் இருந்து வரி இல்லாமல் இந்தியாவில் விவசாயிகள் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் இந்தியா கவனமாக செயல்பட்டு வருகிறது.

    இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. இருந்த போதிலும் இந்தியா மவுனம் காத்து வந்தது. இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்போம் என இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. அப்போதும் இந்தியா அடி பணியவில்லை. இதனால் கூடுதலா 25 சதவீதம் வரி விதித்தது.

    இப்படி இந்தியாவுக்கு நெருக்கொடுத்து வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என அமெரிக்கா துடிக்கிறது. ஆனால், இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உள்ளது.

    இதற்கிடையே சீனா மற்றும் ரஷியா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையை தொடங்க ஆவலாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். நாளை டெல்லியில் பேச்சுவார்ததை நடத்தப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக லுட்னிக் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியா 1.4 பில்லியன் மக்களை கொண்டுள்ளதாக பெருமை பேசுகிறது. 1.4 பில்லியன் மக்களும் ஏன் ஒரு புஷல் (25.4 கிலோ) அமெரிக்க சோளத்தை வாங்க முடியாது?. அவங்க எல்லாத்தையும் நமக்கு விக்கிறாங்க. நம்ம சோளத்தை வாங்க மாட்டாங்கன்னு சொல்றது உங்களுக்குப் புரியலயா?. எல்லாத்துக்கும் வரி விதிக்கிறாங்க.

    உங்கள் வரிகளைக் குறைக்கவும், நாங்கள் உங்களை நடத்தும் விதத்தில் எங்களை நடத்தவும் என டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பல வருடங்களாக செய்த தவறைச் சரி செய்யவும், சரிசெய்யும் வரை வேறு வழியில் செல்லவும் (வரி விதிப்பை அமல்படுத்துவது) டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

    நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது உலகின் மிகப்பெரிய நுகர்வோன அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் டிரம்பின் மாடல்.

    இவ்வாறு லுட்னிக் தெரிவித்துள்ளார்.

    • தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி நாளை டெல்லி வருகிறார்.
    • Fast-track வர்த்தக பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீடடர் நவோராவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவை வரி மகாராஜா எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருக்கிறேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருதரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தைக்கான பணிகளி வளர்ந்து கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நாளை இந்தியா- அமெரிக்கா இடையிலான் Fast-Track பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை இந்தியாவுக்கான பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் "இந்தியா- அமெரிக்கா fast-track வர்த்த பேச்சுவார்தை நடத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நாளை ஒருநாள் பயணமாக வர்த்தக ஒப்பந்த ஆலோசனைக்காக இந்தியா வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

    • ஹைதியில் 4 ஆண்டுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது.
    • இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    நியூயார்க்:

    கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் நடந்து வருகிறது. இந்த மோதலில் லட்சக்கணக்கானவர்கள் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே, அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் புகுந்து சரமாரி தாக்குதலில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் வீடுகள் மற்றும் குடிசைகளுக்கு தீவைக்கப்பட்டது. இந்த கோர சம்பவத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐ.நா. அமைப்பின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விரைவில் உள்நாட்டு மோதலை கட்டுப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

    • போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது.
    • சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என இந்தியா, சீனாவுக்கு டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்து வந்தார். இரண்டு நாடுகளும் டிரம்ப் மிரட்டலுக்க செவி சாய்க்கவில்லை. இதனால் இந்திய பொருட்களுக்கு எதிராக 25 சதவீதம் கூடுதல் வரி விதிப்பை அமல்படுத்தினார். அதேவேளையில் சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்காமல் இருந்தார்.

    ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் இந்திய பொருட்களுக்கு வரி விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிலையில் நேட்டோ நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும் என நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேட்டோ நாடுகள் எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால், உக்ரைன்- ரஷியா போர் முடிவுக்கு வரும் என நம்புவதாக தெரிவித்துள்ளார். மேலும், நேட்டோ நாடுகள் சீனாவுக்கு 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கப்படும் என மிரட்டல் விடுத்துள்ளார்.

    மேலும், "போரில் வெற்றி பெறுவதற்கான நேட்டோவின் அர்ப்பணிப்பு 100 சதவீதத்திற்கும் மிகக் குறைவாக உள்ளது. கூட்டணியின் சில உறுப்பினர்கள் ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவது அதிர்ச்சியூட்டுகிறது. இது ரஷிய மீதான உங்கள் பேச்சுவார்த்தை நிலைப்பாட்டையும் பேரம் பேசும் சக்தியையும் பெரிதும் பலவீனப்படுத்துகிறது" என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

    சீனா, இந்தியாவைத் தவிர்த்து துருக்கி ரஷியாவிடம் இருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது. துருக்கியை தவிர்த்து நேட்டோ அமைப்பில் உள்ள 32 நாடுகளில் ஹங்கேரி, ஸ்லோவாகியா நாடுகளும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குகின்றன.

    • நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது.
    • இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

    இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் நகரத்திற்கு வந்தால், அவரை கைது செய்ய உத்தரவிடுவேன் என நியூயார்க் மேயர் தேர்தலில் போட்டியிடும் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

    நவம்பர் 4 ஆம் தேதி நியூயார்க் நகரில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் மம்தானிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக, அமெரிக்க வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது சர்வதேச நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் உள்ளது, ஆகவே அவரை கைது செய்யவேண்டும் என்று மம்தானி தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சீன வீரர்கள் நடத்திய தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.
    • இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் நடந்த ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    ஜூன் 15, 2020இல் எல்லைப்பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    இந்திய வீரர்களும் பதில் தாக்குதல் நடத்தினர். இதன் பின் இரு நாட்டு உறவுகளிலும் விரிசல், அண்மையில் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடியின் சீன பயணத்தின் மூலம் சரியானது.

    இந்நிலையில் 5 வருடங்களுக்கு முன் நடந்த தாக்குதலில் இந்திய வீரர்களை உயிருடன் உருகச் செய்யும் மிகவும் ஆபத்தான மின்காந்த ஆயுதத்தை சீனா பயன்படுத்தியதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசுக் கட்சி செனட்டர் பில் ஹாகெர்டி பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

    டென்னசி மாகாண செனட்டர் பில் ஹாகெர்டி பேசுகையில், "சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நீண்ட காலமாக மனக்கசப்புகளும் அவநம்பிக்கையும் உள்ளன.

    சரியாக ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, சீனாவும் இந்தியாவும் ஒரு சர்ச்சைக்குரிய எல்லையில் சண்டையிட்டுக் கொண்டிருந்தன, அப்போது சீனா இந்திய வீரர்களை உருக்க ஒரு மின்காந்த ஆயுதத்தைப் பயன்படுத்தியது" என்று தெரிவித்தார்.

    பெயரை குறிப்பிடவில்லை எனினும், இது 2020 இல் நடந்த கால்வான் பள்ளத்தாக்கு மோதல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று அவர் மறைமுகமாகக் கூறினார். 

    • காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
    • முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை இந்தியா தவிர்த்து வந்தது.

    அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் காசா போருக்கு தீர்வு காணும் நியூயார்க் பிரகடனம் மீது நேற்று வாக்கெடுப்பு நடைபெற்றது.

    இந்த பிரகடனத்திற்கு 142 நாடுகள் ஆதரவாகவும், 10 நாடுகள் மட்டுமே எதிராகவும் வாக்களித்தன, 12 நாடுகள் வாக்களிப்பில் இருந்து விலகின.

    இஸ்ரேலை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் முந்தைய தீர்மானங்களில் வாக்களிப்பதை தவிர்த்து வந்த இந்தியா, இந்த நியூயார்க் தீர்மானத்தில், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக மாற்றுவதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

    பல தசாப்தங்களாக, இந்தியா இரு நாடுகள் தீர்வை ஆதரித்து பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க எப்போதும் முயற்சித்து வருகிறது.

    ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான போக்கை கடைபிடித்து வந்தது.

    இந்நிலையில் தற்போது பாலஸ்தீன சுதந்திரத்திற்கு வாக்களித்து இஸ்ரேலை இந்தியா அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

    நியூயார்க் பிரகடனம் சொல்வது என்ன?

    பாலஸ்தீனப் பிரச்சினைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு-நாடு தீர்வை செயல்படுத்துதல் குறித்த நியூயார்க் பிரகடனம்' என்ற தலைப்பிலான இந்த முன்மொழிவு, பிரான்ஸ் மற்றும் சவுதி அரேபியாவால் முன்வைக்கப்பட்டது.

    காசாவில் போரை முடிவுக்குக் கொண்டுவர கூட்டு முயற்சிகள் அவசியம் என்றும், இரு நாடுகள் பார்முலாவின் மூலம் மட்டுமே நியாயமான, நீடித்த தீர்வு சாத்தியமாகும் என்று நியூயார்க் பிரகடனம் கூறுகிறது.

    அதேநேரம், இந்தப் பிரகடனம், அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதல்களை கண்டிக்கிறது.

    ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து, காசாவில் அதிகாரத்தைக் கைவிட்டு, அதன் ஆயுதங்களை பாலஸ்தீன அதிகாரசபையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பிரகடனம் கோருகிறது.

    2023 முதல் காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 64,750 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பகுதியினர் பெண்கள் மற்றும் குழந்தைகளே என்று ஐநா மதிப்பிட்டுள்ளது. மேலும் இஸ்ரேலால் உருவாக்கப்பட்ட பட்டினியால் கடந்த மாதங்களில் நூற்றுக்காணோர் உயிரிழந்துள்ளனர். 

    • இது அரிதான நிகழ்வு. விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் கொண்டது என்கிறது நாசா.
    • சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை எனப்படுகிறது.

    வாஷிங்டன்:

    நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் சூரியனில் ஒரு பெரிய பட்டாம்பூச்சி வடிவ கொரோனல் துளையை புகைப்படம் எடுத்துள்ளது.

    நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தின்படி, சூரியனின் வளிமண்டலத்தில் 5,00,000 கிலோமீட்டர் அகலமுள்ள ஒரு பட்டாம்பூச்சி வடிவ துளை தோன்றியுள்ளது. இந்த உருவாக்கம் செப்டம்பர் 11 அன்று புகைப்படம் எடுக்கப்பட்டது.

    இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வு அதன் அசாதாரண வடிவம் மற்றும் விண்வெளி வானிலையை பாதிக்கும் திறன் ஆகியவற்றால் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சூரியனின் வெளிப்புற அடுக்குகளில் இந்த திறப்பு கொரோனல் துளை என அழைக்கப்படுகிறது. இப்பகுதிகளில், சூரியனின் காந்தப்புலங்கள் திறந்து, சூரியக் காற்று விண்வெளியில் தப்பிச்செல்ல அனுமதிக்கிறது. அந்தத் துளையிலிருந்து வரும் சூரியக் காற்று செப்டம்பர் 14-ம் தேதிக்குள் பூமியை அடையும், இது புவி காந்த புயல்களை ஏற்படுத்தக் கூடும் என நாசா தெரிவித்துள்ளது.

    ×