என் மலர்
இலங்கை
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதல் நாள் முடிவில் வங்கதேசம் 220 ரன்கள் எடுத்துள்ளது.
கொழும்பு:
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சமனில் முடிந்தது.
இந்நிலையில் இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்புவில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேசம் முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஷட்மன் இஸ்லாம் 41 ரன்னில் அவுட்டானார். முஷ்பிகுர் ரஹீம் 35 ரன்னும், லிட்டன் தாஸ் 34 ரன்னும், மெஹிதி ஹசன் 31 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
வெளிச்சம் போதாமையால் முதல் நாள் ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.
இறுதியில், முதல் நாள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்துள்ளது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, விஷ்வா பெர்னாண்டோ, சோனல் தினுஷா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- வங்கதேச அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்தது.
- இலங்கை அணியின் தரிந்து ரத்னநாயக 3 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்து 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
கமிந்து மெண்டிஸ் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்,
வங்கதேசம் அணி சார்பில் நயீம் ஹாசன் 5 விக்கெட்டும், ஹசன் மஹ்முது 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 285 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹொசைன் சான்டோ மீண்டும் சதமடித்தார். ஷட்மான் இஸ்லாம் அரை சதமடித்து 76 ரன்கள் எடுத்தார். முஷ்பிகுர் ரஹ்மான் 49 ரன்னில் அவுட்டானார்.
296 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. 4 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து, காலே டெஸ்ட் டிராவில் முடிந்தது.
ஆட்ட நாயகனாக வங்கதேசத்தின் ஹொசைன் ஷாண்டோ அறிவிக்கப்பட்டார். இலங்கையில் ஏஞ்சலோ மேத்யூஸ் இந்த டெஸ்ட் போட்டியுடன் ஓய்வுபெற்றார்.
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்கள் குவித்தது.
- இலங்கை அணியின் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட் வீழ்த்தினார்.
காலே:
வங்கதேச அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 வடிவிலான தொடர்களிலும் விளையாட உள்ளது. முதலில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகள் விளையாடுகின்றன.
முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வங்கதேச அணி முதலில் களமிறங்கியது. கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 148 ரன்னும், முஷ்பிகுர் ரஹீம் 163 ரன்னும், லிட்டன் தாஸ் 90 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 495 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இலங்கை அணி சார்பில் அசிதா பெர்னாண்டோ 4 விக்கெட்டும், மிலன் பிரியநாத் ரத்நாயக்க, தரிந்து ரத்நாயக்க தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இலங்கை அணி முதல் இன்னிங்சில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பதும் நிசங்கா பொறுப்புடன் ஆடி சதம் கடந்தார். இரட்டை சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 187 ரன்னில் அவுட்டானார். தினேஷ் சண்டிமால் அரை சதம் கடந்து 54 ரன்னில் வெளியேறினார்.
ஏஞ்சலோ மேத்யூஸ் 39 ரன்னும், லஹிடு உதரா 29 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 4 விக்கெட் இழப்புக்கு 368 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு நாட்கள் உள்ள நிலையில் இந்தப் போட்டி டிராவில் முடியவே வாய்ப்பு உள்ளது என ரசிகர்கள் கருதுகின்றனர்.
- 2019ஆம் ஆண்டு இலங்கையில் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது.
- உளவுத்துறை எச்சரித்த நிலையிலும், தாக்குதலை தடுக்க தவறிவிட்டதாக உயர் அதிகாரிகள் மீது குற்ற்ச்சாட்டு.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. தற்கொலைப் படைகள் மூலம் தேவாலயங்கள், முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 270 பேர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
உளவுத்துறை எச்சரித்தும், தாக்குதலை அரசு தடுக்க தவறிவிட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை முடிவில் அப்போதை அதிபர் சிறிசேனா புலனாய்வுத்துறை இயக்குனர் நிலந்தா ஜெயவர்தனே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி 661 பேருக்கு 8.8 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டதாக அட்டார்னி ஜெனரலுக்கான துறை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
குண்டுவெடிப்புகள் குறித்து விசாரணை நடத்த சிறிசேனா ஒரு குழுவை நியமித்தார். இந்த குழு தாக்குதல் குறித்த முன்கூட்டியே உளவுத்துறை அறிக்கைகளை புறக்கணித்ததாக சிறிசேனா மீது குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.
- இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இலங்கையில் நடைபெற்ற மகளிர் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்பில் ஆர். பிரேமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், இந்திய அணி 97 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்றது.
டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்தது. இந்திய இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் ஸ்மிருதி மந்தனா சதம் அடித்து விளாசினார்.
வெறும் 101 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என 116 ரன்கள் எடுத்தார். மந்தனாவுடன் இணைந்து, ஹர்லீன் தியோல் (47), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (41), ஜெமிமா ரோட்ரிக்ஸ் (44) ரன்கள் குவித்தனர்.
343 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய இலங்கை அணி, இந்திய பந்து வீச்சாளர்களின் தாக்குதலைத் சமாளிக்க முடியாமல் திணறியது.
அந்த அணியில் கேப்டன் சாமரி அதபத்லு (51 ரன்கள்) மற்றும் நிலக்ஷிகா சில்வா (48 ரன்கள்) மட்டுமே குறிப்பிடத்தக்க வகையில் ஸ்கோர் செய்தனர். இந்திய வீராங்கனை சினேகா ராணா 9.2 ஓவர்கள் பந்து வீசி, 38 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தினார். அமன்ஜோத் கவுர் மூன்று விக்கெட்டுகளையும், ஸ்ரீ சரணி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இறுதியில் இலங்கை அணி 48.2 ஓவர்களில் 245 ரங்களில் சுருண்டது.
இறுதிப் போட்டியில் அபார சதம் அடித்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஸ்மிருதி மந்தனா, 'ஆட்ட நாயகி' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சினேகா ராணா, 'தொடரின் சிறந்த வீராங்கனை' விருதை வென்றார். இதற்கிடையில், இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்த பெண்கள் கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா மூன்றாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார்.
- விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்.
- விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கை நுவரெலியா என்ற பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் நோக்கிச் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது, மலைப் பகுதியான நுவரெலியா-கம்பளை சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென மலையிலிருந்து 100 அடி பள்ளத்துக்குள் கவிழ்ந்து விழுந்தது.
இதில் பயணிகள் பலர் சம்பவ இடத்திலேயே 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், விபத்தில் சிக்கி காயமடைந்த 20 பேரில், பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவிப்பு.
- பிரதமருடன் அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பின்னர், வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி தான் மேற்கொண்டு வரும் பயணம், சந்திப்புகள் குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், பிரதமர் மோடி இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார். அப்போது, அரவிந்த டி சில்வா, ஜெய சூர்யா, தர்மசேனா உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் இருந்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர், " 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதை எண்ணி பெருமகிழ்வடைகின்றேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்!" என்றார்.
- ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன்.
- ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைக்கிறேன்.
புனிதமான ராமநவமி நாளில் தமிழ்நாட்டில் எனது சகோதர, சகோதரிகளை சந்திப்பதை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன் என பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு தனது வருகை குறித்து பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியதாவது:-
நாளை, ஏப்ரல் 6-ம் தேதி, புனிதமான ராம நவமி நாளில், தமிழ்நாட்டின் எனது சகோதர சகோதரிகளை சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.
புதிய பாம்பன் ரெயில் பாலம் திறந்து வைக்க உள்ளேன். ஸ்ரீ அருள்மிகு ராமநாதசுவாமி ஆலயத்தில் நான் பிரார்த்தனை நடத்தவுள்ளேன். ரூ 8,300 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளும் தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டவும் உள்ளேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
- கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
இலங்கையில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதை வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.
தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இலங்கை அதிபருடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:
* மீனவர்கள் பிரச்சனையை இலங்கை அரசு மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும்.
* கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள், அவர்களின் படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
* கைது செய்து சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.
- இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
இன்று காலை தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும்.
வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
இதையடுத்து இலங்கை நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி அந்நாட்டின் அதிபர் அனுர குமார திசநாயக கவுரவித்தார்.
பிரதமர் மோடிக்கு இலங்கை நாட்டின் உயரிய விருதான மித்ரா விபூஷணா விருது வழங்கப்பட்டது. அந்த விருதை மோடிக்கு அதிபர் அனுர குமார திச நாயகே அணிவித்தார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது:
* இது எனது 4-வது இலங்கை வருகை. எனது கடைசி வருகை ஒரு முக்கியமான காலகட்டத்தில் நிகழ்ந்தது. அந்த நேரத்தில், இலங்கை எழுச்சி பெற்று வலுவாக உயரும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
* இலங்கை மீண்டும் முன்னேற்றப் பாதையில் செல்வதைக் கண்டு நான் இன்று மகிழ்ச்சியடைகிறேன். உண்மையான அண்டை நாடாக இலங்கையுடன் நின்றது எனக்கு பெருமை அளிக்கிறது.
* 2019 பயங்கரவாதத் தாக்குதலாக இருந்தாலும் சரி, கோவிட் தொற்றுநோயாக இருந்தாலும் சரி, சமீபத்திய நிதி நெருக்கடியாக இருந்தாலும் சரி, நாங்கள் எப்போதும் இலங்கை மக்களுடன் உறுதுணையாக இருந்து வருகிறோம்.
* கடினமான காலங்களில் இந்தியா - இலங்கை இணைந்து செயல்பட்டது.
* இலங்கைவாழ் மக்களின் தைரியத்தை நான் பாராட்டுகிறேன்.
* இலங்கை தனது வீழ்ச்சியில் இருந்து வலுவாக எழுந்து வரும்.
* இலங்கை வாழ் தமிழர்களுக்கு 10,000 வீடுகள் கட்டி தரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
- இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
பிரதமர் மோடி, தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு சுற்றுப்பயணத்தை கடந்த 3-ந்தேதி தொடங்கினார்.
முதலில் தாய்லாந்துக்கு சென்றடைந்த அவர், பிம்ஸ்டெக் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மேலும் உறுப்பு நாட்டு தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி விமானம் மூலம் நேற்று இரவு இலங்கைக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடியை பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை வெளிவிவகாரத்துறை மந்திரி விஜித ஹேரத் தலைமையிலான உயர் நிலைக்குழு வரவேற்றது.
பின்னர் தலைநகர் கொழும்புவில் உள்ள தாஜ்சமுத்ரா நட்சத்திர விடுதியில் தங்கினார். அப்போது அங்கு அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
இதுதொடர்பாக மோடி தனது எக்ஸ் வலை தள பக்கத்தில் கூறும்போது, கொழும்பில் உள்ள இந்திய சமூகத்தினர் எனக்கு வழங்கிய ரம்மியமான வரவேற்புக்கு மழை கூட தடையாக இருக்கவில்லை. அவர்களது அன்பான அரவணைப்பு மற்றும் உற்சாகத்தினால் நான் மிகுந்த நெகிழ்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
மோடியை வரவேற்கும் வகையில் சாலைகளில் பிரமாண்ட விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே கடந்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும், இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடங்கி வைக்கவும் பிரதமர் மோடி இலங்கை பயணத்தை மேற்கொண்டார்.
இன்று காலை 9 மணியளவில் தலைநகர் கொழும்புவில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு முப்படைகளின் சம்பிரதாய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதை பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார். பீரங்கி குண்டுகள் முழங்கவும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இலங்கைக்கு வருகை தரும் ஒரு தலைவருக்கு முப்படை வரவேற்பு அளிப்பது இது முதல் முறையாகும். இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, பிரதமர் மோடியை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் இலங்கை அதிபர் ஒரு சம்பிரதாய வரவேற்புடன் வரவேற்றார்.
நமது மக்களின் பகிரப்பட்ட எதிர்காலம் மற்றும் பரஸ்பர செழிப்புக்கான கூட்டாண்மையை வளர்ப்பதற்கான இருதரப்பு விவாதங்கள் நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திர சதுக்கத்தில் ஒரு வெளிநாட்டுத் தலைவருக்கு இதுபோன்ற வரவேற்பு அளிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே உடன் இருந்தார். வரவேற்பு முடிந்ததும் மோடிக்கு இலங்கை பிரதமர், மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே அறிமுகம் செய்து வைத்தார்.
அதன்பின் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களை பிரதமர் மோடி, இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.
திரிகோணமலையின் சம்பூரில் இந்தியா உதவியுடன் செயல்படுத்தப்படும் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத் திட்டம், தம்புள்ள என்ற இடத்தில் 5 ஆயிரம் மெட்ரிக் டன் வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப் படுத்தக்கூடிய குளிர்பதன வசதித் திட்டம், இலங்கை முழுவதும் உள்ள சுமார் 5 ஆயிரம் மத வழிபாட்டுத் தலங்களின் மேற்கூரைகளில் சூரிய மின் தகடுகளை நிறுவும் திட்டம் ஆகியவற்றை நாட்டுக்கு அர்ப்பணித்தனர்.
பின்னர் இலங்கை அதிபரின் செயலகத்தில் பிரதமர் மோடி-இலங்கை அதிபர் அனுர குமாரதிச நாயகே இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து இரு தலைவர்கள் முன்னிலையில் இரு நாட்டு மந்திரிகள், அதிகாரிகள் கொண்ட உயர் நிலைக் குழு பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன்முடிவில் ராணுவம் உள்பட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு முக்கிய சிறப்பம்சமாக கருதப்படுகிறது. இது இந்தியா-இலங்கை ராணுவ உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிப்பதாக உள்ளது. இரு நாடுகள் இடையே முதல் முறையாக ராணுவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன் பின்னர் தாஜ் சமுத்ரா நட்சத்திர தங்கும் விடுதியில் பிரதமர் மோடியை இலங்கைப் பிரதமர், வெளியுறவு மந்திரி மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்கள். இன்று மாலை அமைதி காப்புப் படையின் நினைவிடத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, உயிர்த் தியாகம் செய்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இதையடுத்து, அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு இரவு விருந்து அளிக்கப்படுகிறது.
நாளையும் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்கிறார். நாளை காலை கொழும்பில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அனுராதபுரத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கு பிரதமர் மோடியும் அதிபர் அனுரா குமார திசாநாயகேவும் செல்கிறார்கள்.
அங்கிருந்து சாலை மார்க்கமாக ஜெயஸ்ரீ மகாபோதி ஆலயத்துக்குச் சென்று வழிபடுகின்றனர். பின்னர், காலை 10 மணியளவில் அனுராதபுரம் ரெயில் நிலையத்தில் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள மஹவ-ஓமந்தை ரெயில் பாதை திறப்பு மற்றும் மஹவ-அனுராதபுரம் ரெயில் சமிக்கை வசதியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த இரண்டும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டங்களாகும்.
இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற அனுரா குமார திசநாயகே தனது முதல் அரசு முறை வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்கு வந்தார். தற்போது அவரது தலைமையில் அரசு அமைந்த பிறகு முதல் வெளிநாட்டு தலைவராக பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டு உள்ளார்.
இலங்கையில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் தன்னை நிலைநிறுத்த சீனா விரும்பும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து இலங்கைக்கு செல்வது இது 4-வது முறையாகும். கடைசியாக 2019-ம் ஆண்டு இலங்கைக்கு சென்றிருந்தார்.
- தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.
- மீனவர்களின் படகுகளையும் சிறைபிடித்தனர்.
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஒவ்வொரு முறையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை செய்வதோடு அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது.
அந்த வகையில், மீன்பிடிக்க கடலுக்குள் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை 11 மீனவர்கள் கைது செய்தது. மேலும், மீனவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்தது.
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மட்டுமின்றி தமிழக மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.






