என் மலர்
கால்பந்து
- கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது
- இதில் பங்கேற்று உள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன.
புளோரிடா:
சா்வதேச கால்பந்து கூட்டமைப்பு சாா்பில் கிளப் அணிகளுக்கான 21-வது உலககோப்பை போட்டி அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று உள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும்.
இந்திய நேரப்படி இன்று காலை 'ஏ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் லியோனல் மெஸ்சி தலைமையிலான இண்டர்மியாமி (அமெரிக்கா)-பால்மீராஸ் (பிரே சில்) அணிகள் மோதின. இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது. இதே பிரிவில் போர்டோ (போர்ச்சுக்கல்)-அல்-அஹ்லி (எகிப்து) மோதிய ஆட்டமும் 4-4 என்ற கணக்கில் 'டிரா' ஆனது.
பால்மிராஸ், இண்டர்மியாமி அணிகள் 1 வெற்றி, 2 டிராவுடன் 4 புள்ளிகள் பெற்று முதல் இடங்களை பிடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறின.
'பி' பிரிவில் நடந்த ஆட் டத்தில் பி.எஸ்.ஜி.(பிரான்ஸ்) 2-0 என்ற கணக்கில் சியாட்டில் சவுண்டர்சையும் (அமெரிக்கா), அட்லெடிகோ மாட்ரீட் (ஸ்பெயின்) 1-0 என்ற கணக்கில் போட்டா போகோவும் (பிரேசில்) தோற்கடித்தன.
பி.எஸ்.ஜி., போடா போகோ அணிகள் 6 புள்ளிகளுடன் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. கோல்கள் அடிப்படையில் அட்லெடிகோ மாட்ரீட் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
- நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார்.
- இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார்.
லிவர்பூல்:
ஜெர்மனி கால்பந்து அணியின் இளம் நட்சத்திர வீரரான புளோரியன் விர்ட்ஸ் கிளப் போட்டிகளில் அங்குள்ள பேயர் லெவர்குசென் அணிக்காக விளையாடி வந்தார். நடுகள வீரரான அவர் அந்த கிளப் அணிக்காக 197 ஆட்டங்களில் ஆடி 57 கோல்கள் அடித்துள்ளார். அவரை இங்கிலாந்து பிரிமீயர் லீக் போட்டியில் அங்கம் வகிக்கும் முன்னணி கிளப்பான லிவர்பூல் தன்வசப்படுத்த முயற்சித்து வந்தது.
இரு கிளப் நிர்வாகத்துக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு இருக்கிறது. இதன்படி பேயர் லெவர்குசென் கிளப்பிடம் இருந்து 22 வயதான புளோரியனை ரூ.1,351 கோடிக்கு லிவர்பூல் கிளப் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் மூலம் இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை புளோரியன் பெற்றார். அத்துடன் ஒட்டுமொத்தத்தில் அதிக தொகைக்கு வசப்படுத்தப்பட்ட 4-வது வீரர் ஆவார். அவர் 5 ஆண்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- ‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின.
- இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
கிளப் அணிக்களுக்கான 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 32 அணிகளும் 8 பிரிவாக பரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.
'சி' பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் இன்டர்மிலன் இத்தாலி-உர்வா ரெட் டயமண்ட் (ஜப்பான்) அணிகள் மோதின. இதில் இன்டர்மிலன் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி பெற்ற முதல் வெற்றியாகும். முதல் ஆட்டத்தில் மான்டெரி அணியை 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. இதே பிரிவில் ரிவர் பிளேட்-மான்டெரி அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
'இ' பிரிவில் உர்வா அணி 2 தோல்வியுடன் வெளியேறியது. ரிவர் பிளேட் (அர்ஜடென்னா) இன்டர்மிலன் அணிகள் தலா 4 புள்ளிகளுடனும், மான்டெரி 2 புள்ளிகளுடனும் உள்ள கடைசி லீக் ஆட்டத்தில் இன்டர்மிலன்-ரிவர் பிளேட், மான்டெரி (மெக்சிகோ)-உர்வா அணிகள் மோதுகின்றன.
எப் பிரிவில் பிரேசிலின் புளுமென்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் உல்சான் அணியை (கொரியா) வீழ்த்தியது.
இேத பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் டார்ட்மெண்ட் (ஜெர்மனி) 4-3 என்ற கோல் கணக்கில் மாமெலோடி தென் ஆப்பிரிக்கா அணியை தோற்கடித்தது.
புளுமென்சி, டார்ட்மென்ட் தலா 4 புள்ளிகளும், மாமெலோடி 3 புள்ளியுடன் உள்ள உல்சான் அணி வெளியேற்றப்பட்டது.
- பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இன்று தொடங்கியது.
- லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் ‘ஏ’) அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர்.
பிபா உலக கோப்பைக்கான கிளப் கால்பந்து போட்டி அமெரிக்காவில் உள்ள புளோரிடாவில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை தொடங்கியது. இதில் 32 கிளப்புகள் பங்கேற்கின்றன.
நட்சத்திர வீரரான லியோனல் மெஸ்சியின் இண்டர்மியாமி-அல்-அஹ்லி (குரூப் 'ஏ') அணிகள் முதல் ஆட்டத்தில் விளையாடினர். இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இண்டர்மியாமி வெற்றி முடியாமல் டிரா செய்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மெஸ்சி உள்ளிட்ட இண்டர்மியாமி வீரர்கள் அடித்த கோல் வாய்ப்பை அல் அஹ்லி கோல்கீப்பர் தடுத்து விட்டார்.
இன்று இரவு 9.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பேயன்-ஆக்லார்ப் சிட்டி அணிகள் மோதுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் பி.எஸ்.ஜி. அட்லெடிகோ மார்ட்ரீட் அணிகளும் அதிகாலை 3.30 மணிக்கு போர்ட்போ-பால்மிராஸ் அணிகளும் காலை 7.30 மணிக்கு பாடோ போர்சோ-சியாட்டில் சவுண்டர்ஸ் அணிகளும் மோதுகின்றன.
- புளோரியன் விர்ட்ஸ் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்.
- பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார்.
இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் விளையாடும் முன்னணி அணிகளில் ஒன்று லிவர்பூல். இந்த அணி ஜெர்மனியை சேர்ந்த அட்டாக் மிட்பீல்டர் புளோரியன் விர்ட்ஸை 157 மில்லியன் டாலர் கொடுத்து வாங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தற்போது புளோரியன் விர்ட்ஸ் பேயர் லெவர்குசன் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணிக்கு டிரான்ஸ்பர் கட்டணமாக இந்த தொகையை செலுத்த இருக்கிறது லிவர்பூல். இதன் மூலும் 100 மில்லியன் பவுண்ட்ஸ்க்கும் அதிகமான விலைக்கு டிரான்ஸ்பர் ஆன வீரர்கள் பட்டியலில் புளோரியன் விர்ட்ஸ் இணைய இருக்கிறார்.
செல்சி அணி என்சோ பெர்னாண்டஸை கடந்த 2023-ல் 106.7 பவுண்ட்ஸ்க்கு ஒப்பந்தம் செய்தது. பின்னர் 115 மில்லியன் பவுண்ட்ஸ்க்கு மொய்சஸ் கெய்சிடோவை ஒப்பந்தம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
- 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
மெக்சிகோ நகரின் அஸ்டெகா மைதானம் 2026 கால்பந்து உலகக் கோப்பைக்காக நவீனப்படுத்தப்பட்டு மார்ச் 26, 2026 அன்று மீண்டும் திறக்கப்பட உள்ளது.
மேம்பட்ட காற்றோட்டம் உள்ளிட்ட அமைப்புடன் கூடிய புதிய ஹைபிரிட் ஆடுகளம் அமைக்கப்படுகிறது.
மைதானத்தில் புதிய லாக்கர் அறைகள் கட்டப்படுகின்றன. லிஃப்ட், விருந்தோம்பல் பகுதிகள், பெரிய LED திரைகள், மேம்படுத்தப்பட்ட ஓய்வறைகள், CCTV கண்காணிப்பு மற்றும் புதிய ஒலி அமைப்பு ஆகியவை நிறுவப்பட உள்ளன.

மேலும் மைதானத்தின் இருக்கைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இந்த மைதானத்தில் 2026 உலகக் கோப்பையின் தொடக்க ஆட்டம் உட்பட ஐந்து போட்டிகள் நடத்தும்.
இந்த புதுப்பித்தல்கள் அஸ்டெகா மைதானத்தை உலகத் தரம் வாய்ந்த மைதானமாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026 உலக கோப்பை கால்பந்து போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது.
- இந்த தொடரில் 48 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. 2022-ம் ஆண்டு போட்டியை விட 16 அணிகள் கூடுதலாகும்.
போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.
ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன.
நேற்று நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் மூலம் 5 முறை சாம்பியனான பிரேசில், ஈக்வடார், ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகள் உலககோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றன.
தென் அமெரிக்காவுக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் பிரேசில்-பராகுவே அணிகள் மோதின. இந்த ஆட்டம் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லோ நகரில் நடந்தது. இதில் பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பராகுவேயை வீழ்த்தியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பிரேசில் அணிக்காகவின் சியஸ் ஜூனியர் கோல் அடித்தார்.
இந்த வெற்றி மூலம் பிரேசில் அணி 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 23-வது முறையாக உலக கோப்பை போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஈக்வடார்-பெரு அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி 'டிரா' ஆனது. இதன் மூலம் ஈக்வடார் அணியும் 25 புள்ளிகளுடன் உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. அந்த அணி 5-வது தடவையாக முன் னேறி இருக்கிறது.
மற்ற ஆட்டங்களில் பொலிவியா 2-0 என்ற கோல் கணக்கில் சிலியையும் ,உருகுவே 2-0 என்ற கணக் கில் வெனிசுலாவையும் தோற்கடித்தன. அர்ஜென்டினா-கொலம்பியா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் 'டிரா' ஆனது.
ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலியா-சவுதி அரேபியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் அந்த அணி 'சி' பிரிவில் 2-வது இடத்தை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றது. ஆஸ்திரேலியா 7-வது முறையாக உலக கோப்பையில் விளையாட உள்ளது.
- முதல் பாதியில் ஸ்பெயின் 2 - 1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
- 69வது நிமிடத்தில் ரொனால்டோ ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார்.
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஸ்பெயின்- போர்ச்சுகல் அணிகள் மோதின.
வலுவான ஸ்பெயின் அணி பட்டம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டம் வென்று சாதித்தது.
ஆட்டத்தின் 21-வது நிமிடத்தில் ஸ்பெயின் முதல் கோலை பதிவு செய்தது. மார்ட்டின் ஜூபி மெண்டி இந்த கோலை அடித்தார். போர்ச்சுகல் வீரர் நுனோ மென்டிஸ் 26-வது நிமிடத்தில் பதில் கோல் அடித்து சமன் செய்தார். 45-வது நிமிடத்தில் மைக் கேல் ஒயர்சபல் ஸ்பெயின் அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் 2-1 என்ற கணக் கில் முன்னிலை பெற்றது.
61-வது நிமிடத்தில் போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ கோல் அடித்து சமன்செய்தார். சர்வதேச அளவில் அவரது 138-வது கோலாகும். இதன் மூலம் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமன் ஆனது. கூடுதல் நேரத்திலும் வெற்றிக்கான கோலை இரு அணிகளாலும் அடிக்க முடியவில்லை.
இதை தொடர்ந்து சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் வகையில் பெனால்டி ஷூட்-அவுட் கடைபிடிக்கப்பட்டது. இதில் 5 வாய்ப்புகளிலும் போர்ச்சுக்கல் கோல் அடித்தது. ஸ்பெயின் அணி 3 கோல்களை பதிவு செய்தது. இதனால் போர்ச்சுக்கல் 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி 2-வது முறையாக இந்த பட்டத்தை வென்றது.
- இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின.
- இப்போட்டியில் பி.எஸ்.ஜி அணி 5 கோல்கள் அடித்து அசத்தியது.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இந்த தொடரின் இறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி. அணியும், இன்டர் மிலன் அணியும் மோதின. இப்போட்டியின் முதல் பாதியில் 2 கோல்கள் அடித்து அசத்திய பி.எஸ்.ஜி அணி இரண்டாவது பாதியில் மேலும் 3 கோல்கள் அடித்தது. கடைசி வரை போராடிய இன்டர் மிலன் அணியால் ஒரு கொல் கூட அடிக்க முடியவில்லை. இதனால் 5 - 0 என்ற கோல் கணக்கில் பி.எஸ்.ஜி அணி அபார வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
- ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இதய UEFA சாம்பியன்ஸ் லீக் நடைபெறுகிறது.
- இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் முதன்மையாக கால்பந்து தொடர் UEFA சாம்பியன்ஸ் லீக்.
இதன் அரையிறுதி போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அரையிறுதி 2 லெக் ஆட்டங்களாக நடத்தப்படும். இரு அணிகளும் தலா ஒரு முறை தங்களுடைய சொந்த மைதானத்தில் மோதும். இரண்டு போட்டிகளிலும் சேர்த்து அதிக கோல் அடிக்கும் அணி வெற்றிபெறும்.
அதன்படி முதல் அரையிறுதியில் அத்லெடிக் கிளப் அணிக்கு எதிராக 7 கோல்கள் அடித்து மான்செஸ்டர் யுனைடட் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில் போடோ/கிளிம்ட் அணிக்கு எதிராக 5 கோல்கள் அடித்து டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இறுதிப்போட்டியில் மான்செஸ்டர் யுனைடட் மற்றும் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிகள் மோதின. இப்போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் டோட்டன்ஹாம் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் ஜான்சன் அடித்த கோல் டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது
இதன்மூலம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு UEFA ஐரோப்பா லீக் கோப்பையை டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் கைப்பற்றி அசத்தியுள்ளது.
- இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
- இறுதிப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
ஜூனியர் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) இந்தியாவின் அருணாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்றது. லீக் சுற்றின் முடிவில் இந்த தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா மற்றும் வங்காளதேசம் அணிகள் தகுதி பெற்றன.
நேற்று நடந்த இறுதிப்போட்டியில் வங்காளதேச அணியை இந்தியா எதிர்கொண்டது. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனாக, பெனால்டி ஷூட் அவுட்டில் 3-4 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- 36 போட்டிகள் முடிவில் 85 புள்ளிகள் பெற்று முதலிடம்.
- ரியல் மாட்ரிட் 78 புள்ளிகள் வெற்று 2ஆவது இடத்தில் உள்ளது. முதலிடம் பிடிக்க வாய்ப்பில்லை.
ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் தொடர் லா லிகா. இதில் பார்சிலோனா, ரியல் மாட்ரிட் உள்ளிட்ட 20 முன்னணி கிளப் அணிகள் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். 38 போட்டிகளில் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி லா லிகா டைட்டிலை வெல்லும்.
2024-25 சீசனின் 36-ஆவது போட்டியில் பார்சிலோனா இன்று அதிகாலை எஸ்பான்யோல் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. லேமின் யாமல் 53ஆவது நிமிடத்திலும், ஃபெமின் லோபஸ் (90+6) கடைசி நேரத்திலும் கோல் அடித்தனர்.
இதன்மூலம் 36 போட்டிகளில் 27 வெற்றி, 4 டிரா, 5 தோல்விகள் மூலம் 85 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து லா லிகா கோப்பையை வென்றது. பார்சிலோனாவின் 28ஆவது லா லிகா கோப்பை இதுவாகும்.
ரியல் மாட்ரிட் 36 போட்டிகளில் 24 வெற்றி, தலா 6 டிரா மற்றும் தோல்வி மூலம் 78 புள்ளிகள் பெற்றுள்ளது. கடைசி இரண்டு போட்டிகளில் பார்சிலோனா தோல்வி அடைந்து, ரியல் மாட்ரிட் வெற்றி பெற்றாலும் 84 புள்ளிகள்தான் பெற முடியும். இதனால் பார்சிலோனா 2024-25 சீசன் லா லிகா டைட்டிலை வென்றுள்ளது.
பார்சிலோனா கடைசி 5 போட்டிகளில் வெற்றி பெற்றது. ரியல் மாட்ரிட் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.






