என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோகித்தும் விளையாடப் போவதை பாருங்கள்.
    • அதுதான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள். இந்த தொடரோடு இருவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில் கோலியும், ரோகித்தும் விளையாடும் கடைசி ஆட்டத்தை தவறவிடாதீர்கள் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாடின் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியும், ரோகித்தும் விளையாடப் போவதை பாருங்கள். அதுதான் அவர்களின் கடைசி ஆட்டம் என நினைக்கிறேன். அதனால் அந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள். தற்போது கில் கேப்டனாக உள்ளதால், ரோகித் சர்மா எந்த அழுத்தமும் இன்றி அடித்து ஆடுவார்.

    என பிராட் ஹாடின் கூறினார்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக அதனேஸ் 41 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
    • இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக ஜான் கேம்பல் மற்றும் சந்தர்பால் களமிறங்கினார். இவர்கள் இருவரும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினர்.

    இதனை தொடர்ந்து 7-வது ஓவரில் சுழற்பந்து வீச்சை களமிறக்கினார் சுப்மன் கில். அந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசிய கேம்பல் 2-வது பந்தில் சாய் சுதர்சனின் அருமையான கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து வந்த அலிக் அதனேஸ் மற்றும் சந்தர்பால் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. 7-வது ஓவரில் முதல் விக்கெட்டை வீழ்த்திய இந்திய அணி, 2-வது விக்கெட்டை 28-வது ஓவரில் வீழ்த்தியது.

    ஜடேஜா பந்து வீச்சில் சந்தர்பால் 37 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அதனை தொடர்ந்து அதனேஸ் 41 ரன்னில் குல்தீப் யாதவ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோஸ்டன் வந்த வேகத்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.

    இதனையடுத்து ஜோடி சேர்ந்த சாய் ஹோப்- டெவின் இம்லாக் விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தினர். இதனால் 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது. இந்திய தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டும் குல்தீப் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • சுப்மன் கில் கேப்டனாக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
    • டாஸில் தோல்வியடைந்து விடுவார் என்று பும்ரா, ரன் அப்புக்கு புறப்பட்டார் என கம்பீர் சிரித்தப்படி கூறினார்.

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 518 ரன்கள் குவித்தது.

    முன்னதாக சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் 6 போட்டிகளில் டாஸை இழந்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டியில் தான் முதல் முறையாக டாஸை வென்றுள்ளார்.

    சுப்மன் கில் டாஸ் வென்றதை பின்னாடி இருந்த பார்த்த இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, ஜடேஜா, அக்ஷர் படேல், பயிற்சியாளர் மோர்னே மோர்கல் ஆகியோர் ஒருவழியா டாஸில் வெற்றி பெற்று விட்டார் என்பது போல சிரித்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வந்த கில்லுக்கு சக வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் பாராட்டினர். அப்போது கம்பீர் கில்லிடம் நீ எப்படியும் டாஸில் தோல்வியடைந்து விடுவாய் என பும்ரா பவுலிங் போடுவதற்கு ரன் அப்புக்கு ஏற்பாடு செய்ய கிளம்பினார் என சிரித்துக் கொண்டே கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

    • ஜூரல் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • சுப்மன் கில் 129 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்திருந்தது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

    உணவு இடைவேளை முடிந்து மீண்டும் இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10-வது சதம் ஆகும். அரை சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஜூரல் 44 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.

    இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை இழந்து 518 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 175, கில் 129 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளையும் ரோஸ்டன் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் கில் சதம் விளாசினார்.
    • டெஸ்ட் கிரிக்கெட்டில் 10-வது சதத்தை பதிவு செய்தார் சுப்மன் கில்.

     புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் அதிரடியாக விளையாடி 43 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 10 சதம் ஆகும்.

    இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அதிக சதங்கள் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை கில் (10 சதம்) படைத்துள்ளார். அந்த பட்டியலில் ரோகித் 9 சதங்களுடன் 2-வது இடத்திற்கு தள்ளப்பட்டார். 7 சதங்களுடன் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தில் உள்ளார்.

    மேலும் ஒரு காலண்டர் ஆண்டில் 5 சதங்கள் விளாசிய இந்திய கேப்டன்கள் வரிசையில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார். அந்த பட்டியலில் சுப்மன் கில் 5 சதங்களுடன் 3 - வது இடத்தில் உள்ளார். விராட் கோலி 2017-ம் ஆண்டிலும் 2018-ம் ஆண்டிலும் 5 சதங்கள் விளாசி முதல் இரண்டு இடங்களில் உள்ளார். இவர் 2016 -ம் ஆண்டில் 4 சதங்கள் விளாசியிருந்தார்.

    சச்சின் டெண்டுல்கர் 1997-ம் ஆண்டு இந்திய கேப்டனாக 4 சதங்கள் அடித்திருந்தார். அவர் சாதனையை கில் முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர்.
    • வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.

    அடுத்து வந்த நிதிஷ் குமார், கில்லுடன் ஜோடி சேர்ந்தார். நிதிஷ் குமார் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். அவ்வபோது பவுண்டரியும் சிகருமாக பறக்க விட்டார். மறுபக்கம் பொறுப்புடன் விளையாடிய கேப்டன் கில் அரை சதம் அடித்து அசத்தினார்.

    அதிரடியாக விளையாடி அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிதிஷ் குமார் 43 ரன்னில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து ஜூரல் களமிறங்கினார். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இதனால் 2-ம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 427 ரன்கள் குவித்துள்ளது. சுப்மன் கில் 75 ரன்னுடனும் ஜூரல் 30 பந்தில் 7 ரன்கள் எடுத்தும் விளையாடி வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜோமல் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

    • ஜெய்ஸ்வால் ரன் அவுட் ஆவது போல ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மாவும் ரன் அவுட் ஆவார்.
    • ரோகித் சர்மா ரன் அவுட் ஆகும் வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதலில் விளையாடிய இந்திய நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.

    ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள். இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    இதேபோல ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரிலேயே இதுபோன்ற ஒரு ரன் அவுட் ஆகும். அதில் எதிர் திசையில் கில்தான் இருப்பார். ரோகித் சர்மா பந்து அடித்து விட்டு வா என கூறி ஓடி வருவார். ஆனால் கில் அதனை கவனிக்காமல் பந்து செல்லும் திசையை பார்த்து அப்படியே நின்று விடுவார். அதற்குள் ரோகித் எதிர் திசைக்கே வந்து ரன் அவுட் முறையில் வெளியேறுவார்.

    அதே போல் இந்த முறையும் ஜெய்ஸ்வாலின் கால் என்ன என்பதை கவனிக்காமல் பந்து எங்கு செல்கிறது என்பதை பார்த்து கொண்டிருப்பார். இதனை வைத்து ரசிகர்கள் பலர் பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    ஸ்டைக்கர் கால் செய்த பிறகு நான் ஸ்டைக்கரில் இருக்கும் வீரர் அவரைதான் பார்க்க வேண்டும் அவருடைய கால் என்ன சொல்கிறார்கள் என கவனிக்க வேண்டும் என்பது பல ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. அப்படி பார்த்தால் கில் செய்வது தவறு என ஒரு தரப்பு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

    ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் ஆகிய இருவரின் ரன் அவுட் விஷயத்தில் கில் செய்தது தவறு என்றும் ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடிப்பதில் கில்லுக்கு விருப்பம் இல்லை எனவும் ஒரு தரப்பு ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

    ரோகித் சர்மா சம்பவத்தில் கில் மீது தான் தவறு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ஜெய்ஸ்வால் ரன் அவுட்டில் இருவரின் மீதும் தவறு இருப்பதாக நடுநிலையில் இருக்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

    • ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார்.
    • 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் 175 ரன்னை எடுத்தார்.

    புதுடெல்லி:

    இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நேற்று தொடங்கியது.

    முதலில் விளையாடிய இந்தியா நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன் எடுத்து இருந்தது.

    ஜெய்ஸ்வால் சதம் அடித்தார். தமிழக வீரர் சாய் சுதர்ஷன் (87 ரன்) சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். ஜெய்ஸ்வால் 173 ரன்னுடனும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. ஜெய்ஸ்வாலும், சுப்மன் கில்லும் தொடர்ந்து விளையாடினார்கள்.

    இரட்டை சதம் அடிப்பார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் 175 ரன்னில் ரன் அவுட் ஆனார். 1 ரன்னுக்கு ஆசைப்பட்டு இரட்டை சதத்தை கோட்டைவிட்டார்.

    போட்டி தொடங்கிய 2-வது ஓவரிலேயே அவர் பெவிலியன் திரும்பினார். 258 பந்துகளில் 22 பவுண்டரியுடன் ஜெய்ஸ்வால் இந்த ரன்னை எடுத்தார். அவர் ரன் அவுட் ஆனது மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அவர் தொடர்ந்து பேட்டிங் செய்திருந்தால் முச்சதம் அடிக்கும் வாய்ப்பு கூட பிரகாசமாக இருந்தது. அதனையும் அவர் தவறவிட்டார் என்றே சொல்லலாம்.

    4-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில்லுடன் நிதிஷ் குமார் ரெட்டி ஜோடி சேர்ந்தார். 96.1-வது ஓவரில் இந்திய அணி 350 ரன்னை தொட்டது.

    • ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது.
    • இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.

    துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர். இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என கட்டளை பிறப்பித்துள்ளார். இது குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் வட்டாரங்கள் கூறுகையில், 'ஆசிய கோப்பை துபாயில் உள்ள ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் உள்ளது. ஆசிய கோப்பையை தன்னுடைய அனுமதியின்றி எங்கும் எடுத்துச் செல்லக்கூடாது. யாரிடமும் வழங்கக்கூடாது என்று தலைவர் மொசின் நக்வி தெளிவாக தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற்ற இந்திய அணிக்கு அல்லது இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திடம் எப்போது கோப்பையை வழங்கினாலும் நான் தான் வழங்குவேன் என்று உறுதிபட தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பையை தனது கையால் வழங்க வேண்டும் என்பதில் மொசின் நக்வியும், அவரிடம் இருந்து வாங்கக்கூடாது என்பதில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகமும் பிடிவாதமாக இருப்பதால் ஆசிய கோப்பை விவகாரத்தில் இப்போதைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை' என்றனர்.

    • மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா, இலங்கையில் நடந்து வருகிறது.
    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது.

    கவுகாத்தி:

    மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

    அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 227 ரன்கள் எடுத்தது. சோபி டெவைன் 63 ரன்னும், புரூக் ஹாலிடே 69 ரன்னும், மேடி க்ரீன் 25 ரன்னும் எடுத்தனர்.

    வங்கதேசம் சார்பில் ரெபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. நியூசிலாந்து அணியினரின் துல்லிய பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தது. அதிகபட்சமாக பாஹிமா கதுன் 34 ரன்னும், ரெபேயா கான் 25 ரன்னும் எடுத்தனர்.

    இறுதியில், வங்கதேசம் 39.5 ஓவரில் 127 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து நடப்பு தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    நியூசிலாந்து சார்பில் ஜெஸ் கெர், லீ தகுகு தலா 3 விக்கெட்டும், ரோஸ்மேரி 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இடம் பிடித்துள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, இதனையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வெள்ளை பந்து தொடரில் விளையாட உள்ளது.

    முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது.

    இந்த தொடருக்கான இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். இதனால் இந்த தொடரை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

    இந்நிலையில் இந்த தொடருக்காக இந்திய அணி வீரர் ரோகித் சர்மா, மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் தனது வலை பயிற்சியை தொடங்கி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 173 ரன்கள் குவித்தார்.
    • இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 318 ரன்கள் குவித்தது.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 318 ரன்கள் குவித்தது. ஜெய்ஸ்வால் 173 ரன்களுடனும் கில் 20 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

    இந்த போட்டியில் 150 ரன்களுக்கு மேல் குவித்ததன் மூலம் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனை பட்டியலில் ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் 23 வயதிற்குள் அதிகமுறை 150+ ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் டான் பிராட்மேனுக்கு அடுத்த வீரராக ஜெய்ஸ்வால் இணைந்துள்ளார்.

    8 முறை 150+ ரன்கள் அடித்து முதலிடத்தில் பிராட்மேன் நீடிக்கும் நிலையில், 2-வது வீரராக 5 முறை அடித்து ஜெய்ஸ்வால் நீடிக்கிறார்.

    இந்த பட்டியலில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் 4 சதங்களுடன் 5-வது இடத்தில் உள்ளார்.

    ×