என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- இங்கிலாந்து வீரர்கள் அதிகம் உள்ளதால் கடைசி இடத்தை பிடிக்கும்.
- என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல.
ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆன கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி எதிர்கொள்கிறது.
இந்த நிலையில் ஆர்.சி.பி. இந்த வருடம் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை பிடிக்கும் என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஆடம் கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்
இது தொடர்பாக ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாவது:-
ஆர்சிபி அணி இந்த முறை கடைசி இடத்தை பிடிக்க வாய்புள்ளதாக நினைக்கிறேன். இதை உண்மை அடிப்படையில் கூறுகிறேன். ஏனென்றால் ஆர்சிபி அணியில் அதிக அளவிலான இங்கிலாந்து வீரர்கள் உள்ளனர்.
என்னுடைய கணிப்பு விராட் கோலிக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களுக்கு எதிரானது அல்ல. ஆர்சிபி ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன். இது நீங்கள் இதுகுறித்து ஏலம் எடுத்தவர்களின் கேட்கவேண்டும்.
இவ்வாறு கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக ரஜத் படிதார் உள்ளார். விராட் கோலி நட்சத்திர வீரராக உள்ளார். இங்கிலாந்தை சேர்ந்த லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெத்தேல், பில் சால்ட் ஆகியோர் அணியில் உள்ளனர்.
ஆர்சிபி அணி விவரம்:-
பேட்ஸ்மேன்கள்
ரஜத் படிதார், விராட் கோலி, பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, தேவ்தத் படிக்கல், ஸ்வாஸ்திக் சிகாரா.
ஆல்-ரவுண்டர்கள்
லிவிங்ஸ்டன், குருணால் பாண்ட்யா, ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு, மனோஜ் பாண்டேஜ், ஜேக்கப் பெத்தேல்.
பந்து வீச்சாளர்கள்
ஜோஷ் ஹேசில்வுட், ரஷிக் தார், சுயாஷ் சர்மா, புவனேஸ்வர் குமார், நுவன் துசாரா, லுங்கி நிகிடி, அபிநந்தன் சிங், மோகித் ரதீ, யாஷ் தயால்.
கடந்த சீசனில் ஆர்சிபி 4-வது இடத்தை பிடித்தது, பிளேஆஃப் சுற்று எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியடைந்தது.
- எச்சில் பயன்படுத்தி பந்தின் ஒரு பக்கத்தை பளபளப்பாக வைத்திருக்க முடியும்.
- அப்படி பளபளப்பாக வைத்திருந்தால் பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகி பேட்ஸ்மேன்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.
ஐபிஎல் கிரிக்கெட் 2025 சீசனில் சில மாற்றங்களை பிசிசிஐ கொண்டு வந்துள்ளது அதில் ஒன்று வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை பளபளப்பாக்க எச்சில் பயன்படுத்தலாம். மற்றொன்று இரவு நேர ஆட்டத்தின் இரண்டாவது பாதி ஆட்டத்தின்போது மற்றொரு புதுப்பந்து பயன்படுத்தலாம் என்பது.
எச்சில் பயன்படுத்துவதால் பந்தின் ஒரு பக்கத்தை எப்போதும் பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம் இது ரிவர்ஸ் ஸ்விங் ஆக மிகவும் உதவியாக இருக்கும். இதனால் வேகப்பந்து வீச்சாளர்கள் டெத் ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங்கை பயன்படுத்தி விக்கெட் வீழ்த்த முடியும்.
இந்த நிலையில் வருண் சக்ரவர்த்தி இது குறித்து கூறியதாவது:-
எச்சில் பயன்படுத்துவதால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் மாறுபாடு கொடுக்கும் என நான் நினைக்கவில்லை. பனிப்பொழிவு காரணமாக பந்து மாற்றப்பட்டால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
11ஆவது, 12ஆவது ஓவர்களில் பந்து மாற்றப்படும்போது அப்போது சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசி கொண்டு இருப்பார்கள். பந்து ஈரமாக இருக்காது. பந்து ஈரமாகாது. இதனால் அது சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
இவ்வாறு வருண் சக்ரவர்த்தி தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின்போது முகமது ஷமி, பந்துவீச்சாளர் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என ஐசிசி-க்கு கோரிக்கை வைத்திருந்தார். அப்படி அனுமதித்தால் பந்து தொடர்ந்து பளபளப்பாக இருக்கும். ரிவர்ஷ் ஸ்விங் ஆகி ஆட்டத்தில் சுவாரசியத்தை கொடுக்கும் எனக் கூறியிருந்தார். இதேபோல் முகமது சிராஜ் எச்சில் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று ஆதரவான கருத்து தெரிவித்திருந்தார்.
கொரோனா தொற்று ஏற்படும்போது முன்னெச்சரிக்கை காரணமாக எச்சில் பயன்படுத்த ஐசிசி இடைக்கால தடை விதித்திருந்தது. பின்னர் 2022 ஆம் ஆண்டு ஐசிசி அதற்கு நிரந்தர தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து பிசிசிஐ-யும் அந்த விதிமுறையை பயன்படுத்தி வந்தது. இந்த நிலையில்தான் தற்போது 2025 சீசனுக்காக அந்த தடையை நீக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- 10 வாரங்கள் நாட்டின் பல்வேறு நகரங்களில் Fan park அமைக்கப்படுகிறது.
- தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.
ஐ.பி.எல். 2025 டி20 கிரிக்கெட் சீசன் நாளை தொடங்குகிறது. மார்ச் 22-ந்தேதி (நாளை) முதல் மே 25-ந்தேதி வரை சுமார் 10 வாரங்கள் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. ஒவ்வொரு வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் மைதானங்களில் சென்று போட்டியை பார்த்து ரசிக்க முடியாத ரசிகர்களுக்கு, மைதானத்தில் போட்டியை பார்த்து ரசிக்கும் அளவிற்கு உற்சாகத்துடன் போட்டியை ரசிக்க வைக்கும் முயற்சியாக கடந்த 2015ஆம் ஆண்டு ஐபிஎல் நிர்வாகம் "Fan Park" என்பதை அறிமுகப்படுத்தியது.
ஒவ்வொரு வாரமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் இந்த "Fan park" அமைக்கப்படும். இங்கு ராட்சத திரை அமைக்கப்பட்டு போட்டி ஒளிபரப்பப்படும். அதோடு மியூசிக், பொழுது போக்கு, சிறுவர்கள் விளையாடுவதற்கான இடம், உணவுக் கடைகள் அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த முயற்சி வெற்றிபெற்று ரசிகர்கள் அதிக அளவில் "Fan park" வருகை தந்து போட்டியை ரசிக்க தொடங்கினர். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனால் ஐபிஎல் நிர்வாகம் "Fan park" அமைக்கும் இடங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. ஆந்திர பிரதேச மாநிலம் காக்கிநாடா, நாகலாந்து மாநிலம் திமாபூர், புதுச்சேரியில் உள்ள காரைக்கால், மேற்கு வங்கத்தில் மன்பும் (புருலியா), ஹரியானாவில் உள்ள ரோக்தத், அருணாச்சால பிரதேச மாநிலத்தில் உள்ள தின்சுகியா ஆகிய இடங்களில் முதன்முறையாக "Fan Park" அமைக்கிறது.
தமிழகத்தில் கோவை, நெல்லை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் அமைக்கப்பட உள்ளது.
இந்திய முழுவதும் Fan Park அமைக்கப்படவுள்ள நகரங்கள் விவரம்:-
முதல் வாரம் (மார்ச் 22 மற்றும் மார்ச் 23)
மார்ச் 22- கொல்கத்தா- ஆர்பிசி
மார்ச் 23- ஐதராபாத்- ராஜஸ்தான், சிஎஸ்கே- மும்பை
தமிழ்நாடு- கோவை
அரியானா- ரோத்தக்
ராஜஸ்தான்- பிகானெர்
சிக்கிம்- கங்டோக்
கேரளா- கொச்சின்
2-வது வாரம் (மார்ச் 29 மற்றும் மார்ச் 30)
மார்ச் 29- குஜராத்- மும்பை
மார்ச் 30- டெல்லி- ஐதராபாத், ராஜஸ்தான்- சிஎஸ்கே
தமிழ்நாடு- திருநெல்வேலி
மத்திய பிரதேசம்- குவாலியர்
ராஜஸ்தான்- ஜோத்பூர்
அசாம்- தின்சுகியா
கேரளா- பாலக்காடு
3-வது வாரம் (ஏப்ரல் 5 மற்றும் ஏப்ரல் 6)
ஏப்ரல் 5- சிஎஸ்கே- டெல்லி, பஞ்சாப்- ராஜஸ்தான்
ஏப்ரல் 6- கொல்கத்தா- லக்னோ, ஐதராபாத்- குஜராத்
தமிழ்நாடு- மதுரை
உத்தர பிரதேசம்- மதுரா
குஜராத்- ராஜ்கோட்
நாகலாந்து- திமாபூர்
தெலுங்கானா- நிஜாமாபாத்
4-வது வாரம் (ஏப்ரல் 12 மற்றும் ஏப்ரல் 13)
உத்தர பிரதேசம்- மீரட்
குஜராத்- நடியாட்
திரிபுரா- அகர்தாலா
மகாராஷ்டிரா- நாக்பூர்
கர்நாடகா- மைசூரு
5-வது வாரம் (ஏப்ரல் 19 மற்றும் ஏப்ரல் 20)
ஏப்ரல் 19- குஜராத்- டெல்லி, ராஜஸ்தான்- லக்னோ
ஏப்ரல் 20- பஞ்சாப்- ஆர்சிபி, மும்பை- சிஎஸ்கே
புதுச்சேரி- காரைக்கால்
பஞ்சாப்- பதிண்டா
குஜராத்- சூரத்
அசாம்- தேஸ்பூர்
மகாராஷ்டிரா- சோலாப்பூர்
6-வது வாரம் (ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27)
பஞ்சாப்- அமிர்தசரஸ்
மத்திய பிரதேசம்- போபால்
மேற்கு வங்கம்- ராய்கஞ்ச்
மகாராஷ்டிரா- கோலாபூர்
கர்நாடகா- தும்கூர்
7-வது வாரம் (மே 3 மற்றும் மே 4)
மே 3- ஆர்சிபி- சிஎஸ்கே
மே 4- கொல்கத்தா- ராஜஸ்தான், பஞ்சாப்- லக்னோ
தமிழ்நாடு- திருச்சி
இமாச்சல பிரதேசம்- ஹமிர்பூர்
ராஜஸ்தான்- கோட்டா
பீகார்- முசாபர்பூர்
கர்நாடகா- பெலகாவி
8-வது வாரம் (மே 10 மற்றும் மே 11)
இமாச்சல பிரதேசம்- ஜபால்பூர்
ஜார்க்கண்ட்- தன்பாத்
மகாராஷ்டிரா- ரத்னகிரி
ஆந்திர பிரதேசம்- விஜயவாடா
9-வது வாரம் (மே 17 மற்றும் மே 18)
உத்தர பிரதேசம்- ஆக்ரா
சத்தீஸ்கர்- பிலாய்
மேற்கு வங்கம்- மன்பும் (புருலியா)
கர்நாடகா- மங்களூரு
தெலுங்கானா- வாரங்கல்
10-வது வாரம் (மே 23 மற்றும் மே 24)
உத்தர பிரதேசம்- காசிபூர்
ஒடிசா- ரூர்கேலா
ஜார்க்கண்ட்- ஜாம்ஷெட்பூர்
கோவா- கோவா
ஆந்திர பிரதேசம்- காக்கிநாடா
இரண்டு போட்டிகளில் நடைபெறும் நாட்கள் மதியம் 1.30 மணிக்கும், ஒரு போட்டி நடைபெறும் நாட்கள் 4 மணிக்கும் Fan Park தொடங்கும். நுழைவுக் கட்டணம் கிடையாது. ஆனால் பொழுதுப்போக்கு, உணவு போன்றவற்றிக்கு ரசிகர்கள் பணம் செலுத்த வேண்டும்.
- ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகிய நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் வேகப்பந்து வீச்சில் முன்னணியில் இருக்க வாய்ப்புள்ளது.
பேட்ஸ்மேன்கள்
ருதுராஜ் கெய்க்வாட், எம்.எஸ். தோனி, டேவன் கான்வே, ராகுல் திரிபாதி, ஷெய்க் ரஷீத், வான்ஸ் பெடி, அந்த்ரே சித்தார்த்
ஆல்-ரவுண்டர்கள்
ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், விஜய் சங்கர், சாம் கர்ரன், அன்ஷுல் காம்போஜ், தீபக் ஹூடா, ஜேமி ஓவர்டன், கம்லேஷ் நகர்கோட்டி, ராமகிருஷ்ணா கோஷ், ரவீந்திரா ஜடேஜா, ஷிவம் துபே
பந்து வீச்சாளர்கள்
கலீல் அகமது, நூர் அகமது, முகேஷ் சவுத்ரி, குர்ஜாப்நீட் சிங், நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், மதீஷா பதிரனா.

தொடக்க பேட்ஸ்மேன்கள்
ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்புள்ளது. ரச்சின் ரவீந்திரா சமீபத்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் அபாரமாக விளையாடி தொடர் நாயகன் விருது வென்றார். கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை. இதனால் இந்த ஜோடியை சிஎஸ்கே மாற்றாது. ஒருவேளை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் டேவன் கான்வே களம் இறக்கப்படலாம்.
மிடில் ஆர்டர் வரிசை
ஷிவம் துபே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கக்கூடிய வீரராக உள்ளனர். ஷெய்க் ரஷீத், வான்ஷ் பெடி, அந்த்ரே சித்தார்த் ஆகியோருக்கு மிகப்பெரிய அளவில் அனுபவம் கிடையாது. இதனால் அணி நிர்வாகம் சில போட்டிகளில் களம் இறக்கி பரிசோதித்து பார்க்குமா? என்பது சந்தேகம்தான்.
ஆல்-ரவுண்டர்களான விஜய் சங்கர், ஜடேஜா, அஸ்வின், சாம் கர்ரன் மிடில் ஆர்டர் வரிசையில் கைக்கொடுக்க உள்ளனர். எம்.எஸ். டோனி கடைசி நேரத்தில் களமிறங்கி ரசிகர்களுக்கு விருந்து படைப்பார்.
வேகப்பந்து வீச்சு
கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி, மதீஷா பதிரனா, சாம் கர்ரன் ஆகியோர் முதன்மை வகிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை பதிரனாவுக்கு விளையாட முடியாத நிலை ஏற்பட்டால் நாதன் எல்லீஸ் அல்லது ஓவர்டன் சேர்க்கப்படலாம். அதேபோல் கலீல் அகமது, முகேஷ் சவுத்ரி சிறப்பாக விளையாடவில்லை என்றால் குர்ஜாப்நீட் சீங், அன்ஷுல் கம்போஜ், ராமகிருஷ்ணா கோஷ், கம்லேஷ் நகர்கோட்டி விளையாட வாய்ப்புள்ளது. தேவைப்பட்டால் ஷிவம் துபேயை மிதவேக பந்து வீச்சாளராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.

சுழற்பந்து வீச்சாளர்கள்
ஜடேஜா, அஸ்வின், நூர் அகமது ஆகியோர் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்கள். இவர்களுடன் ஷ்ரேயாஸ் கோபால், தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா ஆகியோர் உள்ளார். தீபக் ஹூடா, ரச்சின் ரவிந்திரா இருவரை பேட்டிங் உடன் பந்து வீச்சுக்கும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.

வெளிநாட்டு வீரர்கள்
டேவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், ஜேமி ஓவர்ட்டன், நூர் அகமது, நாதன் எல்லிஸ், பதிரனா ஆகிய வெளிநாட்டு வீரர்கள் உள்ளனர். இவர்களில் ரவீந்திரா, பதிரானா, நூர் அகமது, சாம் கர்ரன் ஆடும் லெவனில் விளையாட வாய்ப்புள்ளது.
- பாகிஸ்தான் தொடக்க ஜோடி 5.5 ஓவரில் 74 ரன்கள் விளாசியது.
- ஹசன் நவாஸ் 45 பந்தில் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ரன்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.
பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.

பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். அடுத்து கேப்டன் சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.
ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது. 8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைக் கடந்தது. ஹசன் நவாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 150 ரன்னையும், 15.5 ஓவரில் 200 ரன்னையும் கடந்தது. இதற்கிடையே சல்மான் ஆகா 30 பந்தில் அரைசதம் விளாசினார்.
15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹசன் நவாஸ் சதம் அடித்தார். 44 பந்தில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் (4 ஓவர்) 54 ரன்களும், பென் சியர்ஸ் (4 ஓவர்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
ஜேக்கப் டஃபி 3 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 2 ஓவரில் 23 ரன்களும், இஷ் சோதி 2 ஓவில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
- ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது.
- ஆனால் மோஹ்சின் கான், மயங்க் யாதவ் காயத்தால் அவதிப்பட்டு வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
கே.எல். ராகுல் கேப்டன் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு டெல்லி அணி கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட்-ஐ அதிக விலைக்கு ஏலம் எடுத்து கேப்டனாக நியமித்துள்ளது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்
பேட்ஸ்மேன்கள்
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், ஏய்டன் மார்கிராம், ஆர்யன் ஜுயல், ஹிம்மத் சிங், மேத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன்
ஆல்ரவுண்டர்
மிட்செல் மார்ஷ், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, யுவராஜ் சவுத்ரி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், அர்ஷின் குல்கர்னி, ஆயுஷ் படோனி

பந்து வீச்சாளர்கள்
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், எம். சித்தார்த், திக்வேஷ் சிங், ஆகாஷ் சிங், ஷமர் ஜோசப், பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், மோஹ்சின் கான், ரவி பிஷ்னோய்
தொடக்க பேட்ஸ்மேன்கள்
மார்கிராம், பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் உள்ளனர். இதில் பிரீட்ஸ்கே, மிட்செல் மார்ஷ் ஆகியோர் சில போட்டிகளில் களம் இறங்கலாம். ஒருவேளை இந்த ஜோடி ஏற்படவில்லை என்றால் மாற்றப்படலாம். மிட்செல் மார்ஷ் காயத்தில் இருந்து தற்போதுதான் மீண்டு வந்துள்ளார். இதனால் பேட்டிங் மட்டுமே செய்ய வாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்பேக்ட் பிளேயராக பயன்படுத்த வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டர் வரிசை
ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், நிக்கோலஸ் பூரன், அப்துல் சமாத், மார்கிராம், ஆயுஷ் படோனி என வலுவான மிடில் ஆர்டர் வரிசையை கொண்டுள்ளது. தொடக்கம் சிறப்பாக அமைந்தால் ரிஷப் பண்ட், டேவிட் மில்லர், பூரன் வாணவேடிக்கையை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

வேகப்பந்து வீச்சு
ஆவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் என இந்தியாவின் அதிவேக வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. ஆனால் இந்த நான்கு பேரும் காயத்தால் அவதிப்பட்டு வருவதால் விளையாடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
இந்த நான்கு பேரையும் தவிர்த்து ஷமர் ஜோசப், அர்ஷின் குல்கர்னி (ஆல்-ரவுண்டர்), பிரின்ஸ் யாதவ், ஆகாஷ் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் (ஆல்-ரவுண்டர்) ஆகியோர் உள்ளனர். தற்போது மோஹ்சின் கானுக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் அணியில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எந்தெந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் லக்னோ அணி செல்லும் என்பது ஒன்றிரண்டு போட்டிகளுக்குப் பின்னர்தான் தெரியவரும்.

சுழற்பந்து வீச்சாளர்
ரவி பிஷ்னோய், அப்துல் சமாத், ஷபாஸ் அகமது, ஆயுஷ் படோனி, எம். சித்தார்த், திக்வேஷ் சிங் உள்ளனர். இதனால் ரவி பிஷ்னோய், ஷபாஸ் அகமது, எம். சித்தார்த் முன்னிலை வகிப்பார்கள். தேவை என்றால் மார்கிராமை பயன்படுத்தி கொள்ள வாய்ப்புள்ளது. ஒருவேளை இவர்கள் கைக்கொடுக்கப்படவில்லை என்றால், அடுத்தக்கட்ட முயற்சிக்கு செல்லலாம்.
வெளிநாட்டு வீரர்கள்
டேவிட் மில்லர், மார்கிராம், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், ஷமர் ஜோசப் ஆகியோர் வெளிநாட்டு வீரர்கள் ஆவார்கள்.
இவர்களில் டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஒருவேளை வேகப்பந்து வீச்சுக்கு முக்கியத்தும் தேவைப்பட்டால் மார்ஷ் நீக்கப்பட்டு டேவிட் மில்லர், மெத்யூ பிரீட்ஸ்கே, நிக்கோலஸ் பூரன் களம் இறங்கலாம். பிரீட்ஸ்கேவுக்குப் பதிலாக இம்பேக் பிளேயராக ஷமர் ஜோசப் சேர்க்கப்படலாம்.
அவேஷ் கான், ஆகாஷ் தீப், மோஹ்சின் கான், மயங்க் யாதவ் ஆகியோர் காயத்தால் அவதிப்படுவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு. தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்டிங் வரிசை மிகப் பலமானதாக உள்ளது.
- நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார்.
- சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார்.
ஐபிஎல் தொடர் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இதன் தொடக்க போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதுகின்றனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தமிழக வீரர் அஸ்வின் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். அவர் சென்னை அணியிடன் இணைந்து தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் 1-வது தெருவிற்கு 'ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை' என பெயர் சூட்ட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.கார்த்திக் என்பவரின் கோரிக்கையை ஏற்று, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது.
- இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- ஆர்சிபி அணிகள் மோதுகிறது.
ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் இந்தப் போட்டி ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு அணியிலும் வீரர்கள் ஏலம் முறையில் எடுக்கப்பட்டது, பல நாட்டு வீரர்கள் ஒரு அணியில் இணைந்து ஆடியது ஆகியவற்றின் காரணமாக இந்தப் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. கோடிக்கணக்கில் பணம் புரண்டதால் இந்தப் போட்டி வர்த்தக ரீதியாக நடத்தப்பட்டது. அதே நேரத்தில் ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்காகவும் அமைந்தது.
இதுவரை 17 ஐ.பி.எல். போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அதிகபட்சமாக தலா 5 முறை ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் தலா ஒரு தடவையும் சாம்பியன் பட்டம் பெற்று உள்ளன.
18-வது ஐ.பி.எல். திருவிழா நாளை (சனிக்கிழமை) கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. மே 25 வரை இந்த போட்டி நடக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் ( வரிசை 1) நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2), ராஜஸ்தான் ராயல்ஸ் (3), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (4), பஞ்சாப் கிங்ஸ் (5) ஆகியவையும், பி பிரிவில் மும்பை இந்தியன்ஸ் (1), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (2), குஜராத் டைட்டன்ஸ் (3), டெல்லி கேப்பிடல்ஸ்(4), லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (5) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதே நேரத்தில் அடுத்த பிரிவில் உள்ள ஒரு அணியுடன் மட்டும் வரிசைப்படி 2 தடவை விளையாட வேண்டும். மற்ற 4 அணிகளுடன் தலா ஒரு முறை ஆட வேண்டும். உதாரணத்திற்கு சி. எஸ்.கே. அடுத்த பிரிவில் உள்ள மும்பையுடன் மட்டும் 2 போட்டியில் ஆடும். ஒவ்வொரு அணியும் 14 ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது.
லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும். பிளே ஆப் சுற்றில் 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். 3-வது, 4-வது இடங்களை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டர் போட்டியில் மோதும். இதில் தோற்கும் அணி வெளியேற்றப்படும். வெற்றி பெறும் அணி 'குவாலிபையர் 1' ஆட்டத்தில் தோற்கும் அணியுடன் 'குவாலிபையர் 2' போட்டியில் விளையாடும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதி போட்டிக்குள் நுழையும்.
மே 18- ந் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிகிறது. பிளே ஆப் சுற்று மே 20- ந் தேதி தொடங்குகிறது. அன்று 'குவாலிபையர் 1' போட்டியும், மறுநாள் 21-ந் தேதி எலிமினேட்டர் ஆட்டமும் ஐதராபாத்தில் நடக்கிறது. குவாலிபையர் 2 ஆட்டம் 23- ந் தேதியும், இறுதிப்போட்டி மே 25- ந் தேதியும் நடைபெறுகிறது.
58 நாட்கள் லீக் ஆட்டங்கள் நடைபெறும். இதில் 12 நாட்களில் மட்டும் 2 போட்டிகள் நடைபெறும். மற்ற தினங்களில் ஒரே ஒரு ஆட்டம் நடைபெறும்.
நாளை இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் -ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.
ஏற்கனவே வென்ற அணி ஐ.பி.எல். கோப்பையை வெல்லுமா? புதிய அணி சாம்பியன் பட்டம் பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் சிறப்பாக விளையாடி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியும் 6-வது பட்டத்துக்காக காத்திருக்கிறது. பெங்களூர், பஞ்சாப், டெல்லி, லக்னோ அணிகள் இந்த முறையாவது கோப்பையை வென்று விட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளன. ஐ.பி.எல். போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் ஜியோ ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த சீசனின் முதல் போட்டியான கொல்கத்தா - பெங்களூரு ஆட்டம் மழை காரணமாக ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் போட்டி நடைபெறும் அன்றைய தினம் கொல்கத்தாவில் மழை பெய்ய 70-90 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக வானிலை அறிக்கைகள் கூறுகின்றன. இதன் காரணமாக இந்த போட்டி பெருமளவில் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் அன்றைய தினம் அந்த பகுதிக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மறுநாளான ஞாயிற்றுக்கிழமையும் அந்த பகுதிக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்ட படி போட்டி நடைபெறுமா? என்ற அச்சம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
- குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது.
- ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது.
திருவனந்தபுரம்:
கிரிக்கெட் போட்டிகளில் அனைவரும் விரும்பி பார்க்கும் போட்டியாக ஐ.பி.எல். உள்ளது. 20 ஓவர் போட்டியாக நடத்தப்படும் இந்த போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு அணி வீரர்கள் கலந்துகொண்டு விளையாடுகிறார்கள்.
பேட்டிங்கில் அனைத்து அணிகளுமே அதிரடி காட்டுவதால், கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐ.பி.எல். போட்டி பெரும் விருந்தாக இருக்கிறது. 18-வது ஐ.பி.எல். போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை(22-ந்தேதி) தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.
சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் உள்ளிட்ட பல நகரங்களில் போட்டிகள் நடக்கின்றன. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பதற்காக அனைத்து அணிகளும் போட்டி நடக்கும் நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறார்கள்.
போட்டியில் பங்கேற்கும் நேரம் மிகக் குறைவு என்றாலும், பயணிக்கும் தூரம் மற்றும் நேரம் மிகவும் அதிகமாக இருக்கிறது. அதில் அதிக தூரம் பயணிக்கும் அணியாக பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இருக்கிறது.
சுமார் 2 மாதங்கள் நடக்கும் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாட பெங்களூரு அணி பல நகரங்களுக்கு விமானத்தில் பயணிக்கிறது. அந்த அணியின் வீரர்கள் லீக் போட்டிகளில் மொத்தம் 42 மணி நேரம் விளையாடும் நிலையில், அந்த அணியின் வீரர்கள் மொத்தம் 17,048 கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
நாளை முதல் போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா சென்றுள்ள அந்த அணி வீரர்கள், நாட்டின் தெற்கில் உள்ள சென்னைக்கு வருகிறார்கள். பெங்களூரு அணி வீரர்கள் ஒவ்வொரு போட்டிக்கும் 1,500 கிலோமீட்டர் தூரம் விமானத்தில் பயணிக்க வேண்டி உள்ளது.
ஐ.பி.எல். கோப்பையை இந்த முறையாவது வென்று விட வேண்டும் என்ற இலக்குடன் விளையாட உள்ள பெங்களூரு அணி வீரர்களுக்கு அதிக தூர பயணம் என்பது சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
அதே நேரத்தில் குறைந்த தூரம் பயணிக்கும் அணியாக சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இருக்கிறது. அந்த அணி ஐ.பி.எல். லீக் போட்டிகளில் பங்கேற்க மொத்தம் 8,536 கிலோமீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறது. இது அந்த அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
ஐதராபாத் அணி இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் 4 போட்டிகளை சொந்த மைதானமான ஐதராபாத்தில் விளையாடுகிறது. அந்த அணி வீரர்கள் முதல் வெளியூர் போட்டிக்காக 500 கிலோ மீட்டர் தூரமே விமானத்தில் பயணிக்கிறார்கள். இதேபோல் மற்ற அணிகளும் பயணிக்கும் தூரம் தொடர்பான விவரங்களும் வெளியாகி இருக்கின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் 16,184 கிலோமீட்டரும், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்கள் 14,341 கிலோமீட்டரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர்கள் 13,537 கிலோ மீட்டரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் 12,730 கிலோமீட்டரும், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் 12,702 கிலோ மீட்டரும், குஜராத் டைட் டன்ஸ் அணி வீரர்கள் 10,405 கிலோமீட்டரும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வீரர்கள் 9,747 கிலோ மீட்டரும், டெல்லி கேப்பிட் டல்ஸ் அணி வீரர்கள் 9,270 கிலோமீட்டரும் விமானத்தில் பயணிக்கிறார்கள்.
விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அப்படிப்பட்ட நிலையில் ஐ.பி.எல்.கிரிக்கெட்டில் பங்கேற்கும் அணி வீரர்கள் போட்டிகளில் விளையாட ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் விமானத்தில் பறக்க வேண்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவுக்காக 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
- ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை கொல்கத்தாவில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது. கொல்கத்தா அணியின் கேப்டனாக ரகானேவும் துணை கேப்டனாக வெங்கடேஷ் அய்யரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.
2022-ம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமான அவர் ஒரு கட்டத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் 2 ஒருநாள், 9 டி20 போட்டிகளில் விளையாடி வெங்கடேஷ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதன் காரணமாக வெங்கடேஷ் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஏதாவது ஸ்பெஷல் விஷயத்தை நிகழ்த்துவதற்கு தேவையான திறன் என்னிடம் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். ஒருவேளை அதை செய்ய முடியாமல் போனால் எனது கேரியர் முடியும் போது அதற்காக வருத்தப்படுவேன். தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றிகளில் என்னால் பங்காற்ற முடியும் என்பதும் எனக்கு தெரியும்.
என்னால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் விளையாட முடியும். அதை என்னால் செய்ய முடியுமேயானால் அதற்கான முயற்சிகளை எடுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. வாய்ப்பு கிடைத்தால் என்னுடைய அனைத்தையும் நான் கொடுக்க விரும்புகிறேன்.
என்று வெங்கடேஷ் கூறினார்.
இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் வெங்கடேஷ் ஐயர் பெரியளவில் அசத்தியதாக தெரியவில்லை. இதற்கிடையே நித்திஷ் ரெட்டி சவாலான ஆஸ்திரேலிய மண்ணில் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டராக சமீபத்தில் அசத்தினார். எனவே வெங்கடேஷ் ஐயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.
- பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது.
- இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நாளை (22-ம் தேதி) தொடங்க உள்ளது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
இதனையொட்டி 10 அணிகளின் கேப்டன்களுடன் பி.சி.சி.ஐ. ஆலோசனை கூட்டம் மும்பையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பந்தின் மீது எச்சிலை தேய்ப்பதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. அத்துடன் இம்பேக்ட் வீரர் விதிமுறை இன்னும் 2 ஆண்டுகள் (2027-ம் ஆண்டு வரை) தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் நடப்பு சீசனில் புதிய விதி ஒன்றும் அமல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, இரவு நேர ஆட்டங்களில் 2-வது இன்னிங்சின்போது பனிப்பொழிவின் தாக்கத்தால் பந்து ஈரமாகி விடுகிறது. ஈரமான பந்தை பவுலர்களால் சரியாக பிடித்து துல்லியமாக வீச முடிவதில்லை. இதனால் பேட்ஸ்மேன்கள் எளிதில் ரன்குவித்து விடுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு இந்த ஐ.பி.எல்.-ல் இரண்டு பந்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது 2-வது இன்னிங்சில் 10-வது ஓவருக்கு பிறகு பந்து வீசும் அணியின் கேப்டன் பந்து அதிகம் ஈரமாகி விட்டதாக நினைத்தால் நடுவரிடம் புதிய பந்து கேட்கலாம். பனியின் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை நடுவர் ஆராய்ந்து, அதற்கு ஏற்ப பந்தை மாற்றுவது குறித்து முடிவு செய்வார். இந்த புதிய விதி நடப்பு சீசனில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன்.
- இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
இத்தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் யாரும் எதிர்பாராத வகையில் முகமது சிராஜுக்கு இடம் கிடைக்கவில்லை.
சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே, புதிய பந்தையும் பழைய பந்தையும் கொண்டு பந்து வீசக்கூடிய ஒருவரை தேர்வுசெய்ய நாங்கள் விரும்பினோம். அதனால்தான், அர்ஷ்தீப் சிங்கிறு நாங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளோம். அதேசமயம் சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக பேட்டி ஒன்றில் பேசிய முகமது சிராஜ், "அணியின் தேர்வு என் கையில் இல்லை. என் கைகளில் ஒரு கிரிக்கெட் பந்து மட்டுமே இருக்கிறது, அதை வைத்து என்னால் முடிந்ததைச் செய்ய விரும்பினேன். நான் என் செயல்திறனில் கவனம் செலுத்த விரும்புவதால், தேர்வு பற்றி யோசித்து என் மீது அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை. நான் சில வருடங்களாக விளையாடி வருகிறேன். பொதுவாக, எங்களுக்கு அவ்வளவு ஓய்வு கிடைப்பதில்லை.
ஆனால் இப்போது எனக்கு சிறிது ஓய்வு கிடைத்ததால், எனது உடற்தகுதி மற்றும் பந்துவீச்சுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டேன். புதிய மற்றும் பழைய பந்துகளில் எப்படி பந்து வீசுவது என்பதில் நான் மிகவும் கடினமாக உழைத்துள்ளேன். மேலும் எனது மெதுவான பந்துகள் மற்றும் யார்க்கர்களில் வேலை செய்ய விரும்பினேன். இந்த முறை நான் அந்த பகுதிகளில் அதிகம் வேலை செய்துள்ளேன். இந்த ஐபிஎல்லில் விஷயங்கள் எனக்கு எப்படி அமையும் என்பதைப் பார்ப்போம்.
என்று தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐபிஎல் தொடரில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட முகமது சிராஜ் ரூ.12.25 கோடிக்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






