என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • 2-வது டெஸ்டில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது.
    • ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    பிர்மிங்காம்:

    இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, பர்மிங்காமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டது. சாய் சுதர்சன், பும்ரா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    இதன்மூலம் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் என இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

    இந்நிலையில் குல்தீப் யாதவ் இல்லாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணி தங்களின் சிறந்த இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடுகிறதா என்பது எனக்குத் தெரியவில்லை. இங்கிலாந்து முதலில் பீல்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது. இதுவே இந்தியாவுக்கு வெற்றி பெற சிறந்த வாய்ப்பு என்று நான் நினைக்கிறேன். இந்திய அணி ரன்களைக் குவித்தால், அது வெற்றியைத் தரும் என்று நம்புகிறேன்.

    பிட்ச்சில் சிறிது சுழற்சி இருக்கும் நிலையில், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படாதது எனக்கு சற்று குழப்பமாக உள்ளது.

    என்று கங்குலி கூறினார்.

    • பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
    • பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.

    இது தொடர்பாக ஸ்டெய்ன் தனது எக்ஸ் பதிவில், "போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். எனக்கு இது குழப்பமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

    • வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அவுட்டானார்.
    • 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள U19 இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 பலநாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஜூன் 27 முதல் ஜூலை 7 வரை 5வது ஒருநாள் போட்டிகள் நடைபெறுகிறது.

    அவ்வகையில் நேற்று U19 இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டி நடைபெற்றது.

    மழை காரணமாக போட்டி 40 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது.

    இதனையடுத்து 269 என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியால் 34.3 ஓவர்களில் 274 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வைபவ் சூர்யவன்ஷி 31 பந்துகளில் 86 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    இதன்மூலம் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

    இப்போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 20 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்மூலம், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் குறைந்த பந்துகளில் (20) அரைசதம் விளாசிய 2வது இந்தியர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி படைத்துள்ளார்.

    இதற்கு முன் 2016ல் நேபாளத்திற்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட்18 பந்துகளில் அரை சதம் விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் இப்போட்டியில் 9 சிக்ஸர்களை வைபவ் சூர்யவன்ஷி அடித்தார். இதன்மூலம் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஒருநாள் போட்டியில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

    • கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    • பாம்பு புகுந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

    இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 77 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இப்போட்டியின்போது கொழும்பு மைதானத்திற்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. பின்னர் மைதானத்தில் இருந்து பாம்பு அகற்றப்பட்டதும் மீண்டும் ஆட்டம் நடைபெற்றது.

    • 2 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
    • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 310 ரன்கள் அடித்துள்ளது. கேப்டன் சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். கில் 114 ரன்களுடனும் ஜடேஜா 41 ரன்களுடனும் அவுட்டாகாமல் களத்தில் உள்ளனர்.

    ரோகித் ஓய்வுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்ற சுப்மன் கில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலேயே சதம் விளாசி அசத்தியுள்ளார்.

    இதன்மொல்லாம் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்று முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் சதம் அடித்த 4 ஆவது இந்திய கேப்டன் என்ற பெருமையை கில்பெற்றுள்ளார். இதற்கு முன்பு, விஜய் ஹசாரே, சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

    SENA நாடுகளுடன் இதற்கு முன் விளையாடிய 29 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் கூட அடிக்காத கில், கேப்டனாக விளையாடிய மூன்றே இன்னிங்ஸ்களில் 2 சதங்களை விளாசியுள்ளார். இது அவருக்கு 7வது டெஸ்ட் சதமாகும்.

    • திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.
    • அஸ்வின் அரைசதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

    இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி களமிறங்கியது.

    தொடக்க வீரராக களமிறங்கிய அஸ்வின் அரைசதம் கடந்து 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் ஷிவம் சிங் 16 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

    16.4 ஓவர்களில் திண்டுக்கல் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. எனவே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திண்டுக்கல் அணி திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 

    • வங்கதேச தரப்பில் டான்சித் ஹசன், ஜாகர் அலி ஆகியோர் அரை சதம் அடித்தனர்.
    • இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சரித் அசலங்கா அசத்தினார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதனையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக பர்வேஸ் ஹொசைன் எமோன்- டான்சித் ஹசன் களமிறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் எமோன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 23, லிட்டன் தாஸ் 0, டோஹித் ஹிரிடோய் 1, ஹசன் மிராஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.

    ஒரு முனையில் விக்கெட் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டான்சித் ஹசன் அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 62 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனர்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஜாகர் அலி மட்டும் தனி ஆளாக போராடினார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    • திருச்சி தரப்பில் வசிம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    டிஎன்பிஎல் தொடரின் இன்றிரவு எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    அதன்படி திருச்சி அணியின் தொடக்க வீரர்களாக வசிம் அகமது மற்றும் ஜெயராமன் சுரேஷ் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பவர்பிளேயில் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஜெயராமன் சுரேஷ் 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்த வந்த கவுசிக்9, சஞ்சய் யாதவ் 1, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராஜ்குமார் 0 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வசிம் 41 பந்தில் 36 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார்.

    இதனை அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இதனால் திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் எடுத்தது.

    திண்டுக்கல் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் பெரியசாமி, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    • இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார்.
    • வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    கொழும்பு:

    வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

    இதையடுத்து இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.

    அதன்படி இலங்கை அணியின் தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா மற்றும் நிஷான் மதுஷ்கா களமிறங்கினர். இதில் மதுஷ்கா 6 ரன்னிலும், பதும் நிசாங்கா ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர்.

    அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர். இதில் குசல் மெண்டிஸ் 45 ரன், ஜனித் லியானகே 29 ரன், ரத்னநாயகே 22 ரன், வனிந்து ஹசரங்கா 22 ரன், காமிந்து மெண்டிஸ் ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய சரித் அசலங்கா சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை தரப்பில் சரித் அசலங்கா 106 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.

    • வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
    • இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.

    இந்நிலையில் பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளனர்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.

    போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.

    லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.

    என ரவி சாஸ்திரி கூறினார்.

    • எலிமினேட்டர் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன.
    • இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும்.

    டிஎன்பிஎல் குவாலிபையர் 1 போட்டியில் புள்ளி பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த அணிகளான சேப்பாக் சூப்பர் கில்லீசும், திருப்பூர் தமிழன்சும் மோதின. இப்போட்டியில் வெற்றி பெற்று திருப்பூர் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    இந்நிலையில், இன்றிரவு நடக்கும் எலிமினேட்டர் போட்டியில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இப்போட்டியில் வெல்லும் அணி, 4-ந்தேதி நடக்கும் குவாலிபையர் 2 போட்டியில் முன்னாள் சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதும். அப்போட்டியில் வெற்றி பெற்று அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெய்ஸ்வால் 62 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
    • இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

    இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

    அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேஎல் ராகுல்- ஜெய்ஸ்வால் களமிறங்கினர். தொடக்கம் முதலே தடுமாறிய கேஎல் ராகுல் 26 பந்துகள் சந்தித்து 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து ஜெய்ஸ்வாலுடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதிரடியாக விளையாடி ஜெய்ஸ்வால் பவுண்டரி விளாசி தனது அரை சதத்தை பதிவு செய்தார்.

    முதல் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளைக்கு 2 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் பந்தில் கருண் நாயர் ஆட்டமிழந்தார். அவர் 50 பந்தில் 31 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.

    இதனால் முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்துள்ளது. ஜெய்ஸ்வால் 62 ரன்களுடனும் சுப்மன் கில் 1 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து தரப்பில் கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

    ×